search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vimal"

    மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் விமல் நடிக்கும் புதிய படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானவர் அவருடன் நடித்து வருகிறார்.
    பசங்க, களவாணி படங்களில் நடித்து பலருடைய கவனத்தை ஈர்த்தவர் விமல். இவர் நடிப்பில் இறுதியாக கன்னிராசி என்ற படம் திரைக்கு வந்தது. தற்போது புதிய படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் விமல்.

    மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கும் இந்த புதிய படத்தை உதய் புரோடக்சன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிச்சர்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கிறது. குடும்ப உறவுகளையும் மையமாக வைத்து உருவாகியுள்ள புதிய படத்தில் நடிகர் விமலின் சகோதரியாக அனிதா சம்பத் நடிக்கிறார். இவர் கடந்த பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    விமல்
    விமல் - பால சரவணன் - அனிதா சம்பத்

    தன் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க போராடும் ஒரு அண்ணனின் வாழ்வை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விமலுடன் பாண்டியராஜன், வத்சன், வீரமணி, ஆடுகளம் நரேன், பாலசரவணன், தீபா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
    சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘களவாணி 2’ படத்தின் டிரைலரை அருண் விஜய் வெளியிட்டுள்ளார். #Kalavani2Trailer
    கடந்த 2010-ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘களவாணி’.  சற்குணம் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக ஓவியா நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம்தான் ஓவியா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    நடிகர் விமலின் திரையுலக வாழ்க்கையை புதிய பாதைக்கு திருப்பிய ‘களவாணி’ படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகியுள்ளது. இதில் விமலுக்கு ஜோடியாக ஓவியா நடிக்கிறார். மேலும் சூரி, கஞ்சா கருப்பு, சரண்யா பொன்வண்ணன், இளவரசு என முதல் பாகத்தில் நடித்த பலரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.



    இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை நடிகர் அருண் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அரசியல் கலந்த இந்த டிரைலர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    முத்துக்குமரன் இயக்கத்தில் விமல், வரலட்சுமி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கன்னிராசி’ படக்குழுவினர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். #Kannirasi
    விமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கன்னிராசி’. இதில் இவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கிறார். மேலும் இப்படத்தில் பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர், ஷகிலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். முத்துக்குமரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

    விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் தணிக்கையில் 'யு' சான்றிதழ் பெற்றிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.



    இதையடுத்து விரைவில் படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Kannirasi
    தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் விமல், மது போதையில் புதுமுக நடிகரை தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #Vimal
    பெங்களூரை சேர்ந்தவர் புதுமுக நடிகர் அபிஷேக். இவர் விருகம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி ‘அவன் அவள் அது’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    நேற்று அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் அமர்ந்து அபிஷேக் போனில் பேசிக் கொண்டிந்தார். அப்போது அங்கு வந்த நடிகர் விமல் மற்றும் 4 பேர் சேர்ந்து அபிஷேக்கிடம் தகராறு செய்து கையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நடிகர் அபிஷேக்கின் நெற்றி, கண், கை, கால் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அபிஷேக் சிகிச்சை பெற்றார்.



    இது தொடர்பாக அபிஷேக் விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதில் மது போதையில் இருந்த நடிகர் விமல், அவரது ஆட்களும் என்னை தாக்கினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய 2 சட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விமல் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அவர் கைது செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது. 
    இவனுக்கு எங்கையோ மச்சம் இருக்கும் படத்தை தொடர்ந்து விமல், அடுத்ததாக புரோக்கர் படத்தில் நடிக்க இருக்கிறார். #Vimal #Diana #Broker
    சதா நடித்த டார்ச் லைட் படத்தை இயக்கியவர் அப்துல் மஜித். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‘தி புரோக்கர்’. இந்தப் படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக அண்ணாதுரை படத்தில் நடித்த டயானா சாம்பிகா நடிக்கிறார்.

    அப்துல் மஜித் இயக்கிய டார்ச் லைட் திரைப்படம் பாலியல் தொழிலாளிகளை மையமாகக் கொண்டு உருவாகி இருந்தது. ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த அளவு ரசிகர்களிடையே வரவேற்பு பெறவில்லை.

    எனவே இந்தப் படத்தை அவர் பெரிதும் எதிர்பார்த்துள்ளார். புரோக்கர் தொழிலை மையமாகக் கொண்டு தயாராகிவரும் இந்தப் படத்தில் விமல் புரோக்கராக நடிக்கிறார். அனைத்துத் தொழில்களிலும் புரோக்கரின் பணி முக்கியமாக இருப்பதை காமெடி கலந்து இந்தப் படத்தில் கூறுகின்றனர்.



    தற்போது இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் மேலும் பதினைந்து நாள்கள் சென்னையில் படப்பிடிப்பு நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்தப் படத்தில் யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, ஆனந்த்ராஜ் என பெரிய காமெடி பட்டாளமே இணைந்துள்ளது.
    கூத்துப்பட்டறையின் நிறுவனர் முத்துசாமியின் மறைவுக்கு நடிகர்கள் விமல், விதார்த், பசுபதி, சோம சுந்தரம் உள்ளிட்ட பலர் குத்தாட்டம் ஆடி இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். #NaMuthuSwamy
    கூத்துப்பட்டறையின் தந்தை என்று சினிமா பிரபலங்களால் அழைக்கப்படும் ந.முத்துசாமி நேற்று (24.10.18) காலமானார். தற்போது சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் பலர் இவர் பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள்.

    நாசர், பசுபதி, விஜய் சேதுபதி, விமல், பாபிம் சின்ஹா, சோம சுந்தரம், உட்பட பலர் இவரது கூத்துப்பட்டறையில் சேர்ந்து பயிற்சி பெற்றவர்கள். 

    நேற்றைய தினம் அவர், மறைந்த செய்தி வெளியானதும் அனைத்து நடிகர்களும் முத்துசாமியின் இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். நடிகர் கமல்ஹாசன் அவருக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். 



    இவரது இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்றது. இதில் நடிகர்கள் விமல், பசுபதி, விதார்த் உள்ளிட்ட பலர் குத்தாட்டம் ஆடி அவருக்கு கலை அஞ்சலி செலுத்தினார்கள். நடு ரோட்டில் நடிகர்கள் ஆவேசமாக நடனமாடிய வீடியோ காண்போரையும் கண்கலங்க வைத்துள்ளது.
    களவாணி படம் மூலம் புகழ் பெற்ற, விமலையும், காமெடி நடிகர் சிங்கம்புலியையும் நடிகை பூர்ணா, ஒரு படத்திற்காக துரத்தி வருகிறார். #Vimal #Poorna
    சாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரிக்கும் படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’. இதில் விமல் கதாநாயகனாகவும், நாயகியாக ஆஷ்னா சவேரியும் நடிக்கிறார்கள். மேலும் ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலீஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார்.

    இப்படத்தை ஏ.ஆர்.முகேஷ் இயக்குகிறார். இப்படம் குறித்து அவர் கூறும்போது, ‘வெற்றிவேல் ராஜாவின் மருந்துக் கடையில் வேலை பார்க்கும் விமல், சிங்கம்புலி இருவரும் அதிகப் படியான வருமானத்திற்காக சின்ன சின்ன திருட்டுக்களை செய்பவர்கள். 



    ஆனந்தராஜுக்கு சொந்தமான விலை மதிப்பில்லாத ஒரு கடத்தல் பொருள் ஒன்று விமல், சிங்கம்புலி கோஷ்டியிடம் மாட்டிக் கொள்ள அவர்களை ஆனந்தராஜ் குரூப் துரத்த, வழக்கு விசாரணைக்காக போலீஸ் அதிகாரி மன்சூரலிகான், பூர்ணா கோஷ்டி துரத்த, தன் கடையில் கை வைத்து விட்டார்கள் என்று அவர்களை பிடித்தே தீருவது என்று வெற்றிவேல் ராஜா குரூப் துரத்த, ஒரே துரத்தல் மயம் தான். இதை கிளாமர் ஹூயூமர் என்று கலந்து கட்டி இருக்கோம்’ என்றார்.
    ‘களவாணி 2’ படத்தில் இடம் பெறும் ஒரு பாடல் காட்சிக்காக விமலும் ஓவியாவும் பழமையான வீட்டை சுற்றி சுற்றி வருகிறார்கள். #Vimal #Oviya #Kalavani2
    விமல் - ஓவியா கூட்டணியில் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘களவாணி’. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் ‘களவாணி 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. 

    சமீபத்தில் இந்த ஜோடி நடித்த 'ஒட்டாரம் பண்ணாத' என்ற பாடல் தஞ்சாவூர் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் படமாக்கப்பட்டது. யூடியூபில் 2.5 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு சாதனை புரிந்துள்ளது. இயக்குனர் சற்குணம் மற்றும் படக்குழுவினர் இந்த பாடலை ஒரு பழமையான வீட்டின் பின்னணியில் எடுக்க திட்டமிட்டனர். இதற்காக கலை இயக்குனர் குணசேகரன், நிஜத்தை பிரதிபலிப்பது போன்ற ஒரு பழமையான வீட்டை வடிவமைத்துள்ளார். இந்த படத்தின் மிக முக்கியமான அம்சமாக இது இருக்கும் என்று கருதப்படுகிறது.

    இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகளில் இருக்கும் களவாணி 2 படத்தின் மொத்த படப்பிடிப்பும் ஜூன் 22ஆம் தேதி முடிய இருக்கிறது. எப்போதும் உத்வேகத்துடன் படத்தை முடிப்பதில் கவனத்தோடு இருக்கும் இயக்குனர் சற்குணம், மிக கடுமையாக இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார். 



    ஏறக்குறைய முதல் பாகத்தில் நடித்த அத்தனை நடிகர்களும், அதே கதாபாத்திரத்தில் இந்த படத்திலும் நடித்திருக்கிறார்கள். ஆயினும் நடிகர் சூரி இந்த படத்தில் நடிக்கவில்லை, ஆர்ஜே விக்னேஷ் நாயகன் விமலின் நெருங்கிய நண்பராக நடிக்கிறார்.
    ×