search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vidharth"

    • அருள் செழியன் ’குய்கோ’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.
    • இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    எ.எஸ்.டி பிலிம்ஸ் எல்.எல்.பி வழங்கும் திரைப்படம் 'குய்கோ'. இதில் கதையின் நாயகர்களாக விதார்த் மற்றும் யோகி பாபு நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் இளவரசு, முத்துகுமார், பிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.


    விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'ஆண்டவன் கட்டளை' படத்தின் கதாசிரியர் அருள் செழியன், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 'குய்கோ' படம் வெளியானதை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு காட்சி ஒளிபரப்பப்பட்டது.

    இப்படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள் யோகி பாபு மற்றும் விதார்த் ஆகியோர் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாகவும், இயக்குனர் அருள் செழியனின் கதையும் அதை உருவாக்கிய விதமும் ரசிக்கும் படி இருப்பதாகவும், பொதுமக்களின் வாழ்வியலை அழகாக சொல்லி இருப்பதாகவும் பாராட்டி இருக்கிறார்கள்.


    மேலும் படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் தங்களது பணியை சிறப்பாக செய்து இருப்பதாகவும் கூறினார்கள். எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் வெளியாகி இருக்கும் 'குய்கோ' படத்தை பத்திரிகையாளர்கள் பாராட்டி இருப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்து இருக்கிறது.

    குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக 'குய்கோ' அமைந்து இருப்பது படக்குழுவினருக்கு பெரிய பலமாக அமைந்து இருக்கிறது. பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இப்படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ராம் பாண்டியன் படத்தொகுப்பை கவனித்து இருக்கிறார்.

    • விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'இறுகப்பற்று'.
    • இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார்.

    இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'இறுகப்பற்று'. இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பொடன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார்.


    கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்ய, மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. கணவன் - மனைவி உறவை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.



    • விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'இறுகப்பற்று'.
    • இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார்.

    இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'இறுகப்பற்று'. இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார்.



    கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்ய, மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், 'இறுகப்பற்று' படத்தின் முதல் பாடலான 'பிரியாதிரு'பாடல் வெளியாகியுள்ளது. யுவன் குரலில் வெளியாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.




    • விக்ரம் பிரபு மற்றும் விதார்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'இறுகப்பற்று'.
    • இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார்.

    இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'இறுகப்பற்று'. இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார். கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்ய, மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.


    இறுகப்பற்று போஸ்டர்

    இந்நிலையில், 'இறுகப்பற்று' திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடல் வருகிற 31-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனை விக்ரம் பிரபு தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


    • நடிகர் விதார்த் தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    பிரபல இயக்குனர்களான பி.வாசு, தங்கர் பச்சான் ஆகியோரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய சகோ கணேசன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் விதார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப், த்ரிகுண், ஜான்விஜய், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஸ்வேதா டோரத்தி, ராதா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    ட்ரெண்டிங் எண்டர்டெயிண்மெண்ட் மற்றும் வைட் ஹார்ஸ் ஸ்டுடியோ சார்பில் கே.சசிகுமார் தயாரிக்கும் இப்படத்திற்கு சூப்பர் சிங்கர் புகழ் அஜீஸ் இசையமைக்கிறார். என்.எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.


    ஒரு கொலையில் தொடர்புடைய நான்கு பேரின் சூழலை ஹைபர்லிங்காக இணைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மர்டர் மிஸ்டரி கலந்த கிரைம் த்ரில்லராக உருவாகும் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    • விதார்த் தற்போது கதாநாயகனாக நடிக்கும் படம் லாந்தர்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

    நடிகர் விதார்த் தற்போது 'லாந்தர்' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை முண்டாசுப்பட்டி, ராட்சசன், கட்டா குஸ்தி படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய சாஜி சலீம் இயக்குகிறார். இவரின் முதல் படமான 'விடியும் வரை காத்திரு' இறுதிக்கட்டப் பணிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் சுவேதா டோரத்தி, விபின், சஹானா கவுடா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை தொழிலதிபர் பத்ரி, எம் சினிமா சார்பில் தயாரிக்கிறார்.


    லாந்தர்

    லாந்தர்

    இந்நிலையில் லாந்தர் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என் எதிர்பாக்கப்படுகிறது. 

    • இயக்குனர் திருமலை பாலுச்சாமி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘சமரன்’.
    • இப்படத்தில் சரத்குமார் -விதார்த் இணைந்து நடித்து வருகின்றனர்.

    தனித்துவமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதன் மூலம் நடிகர்கள் சரத்குமார் மற்றும் விதார்த் ஆகியோர் தங்களது சிறந்த நடிப்புத்திறன் மற்றும் பன்முகத்தன்மையை பல படங்களில் நிரூபித்துள்ளனர். இவர்கள் இருவரும் தற்போது அறிமுக இயக்குனர் திருமலை பாலுச்சாமி இயக்கத்தில் 'சமரன்' படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள்.


    சமரன்

    மேலும், இந்த படத்தில் மலையாள நடிகர் ஆர். நந்தா, சிங்கம் புலி, விஜய் டிவி புகழ் ஜார்ஜ், மலையாள நடிகர் சித்திக், கும்கி அஸ்வின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். எம் 360 (M360°) ஸ்டுடியோஸ் சார்பில் ரோஷ் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு வேத் சங்கர் சுகவனம் இசையமைக்க குமார் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார்.

    ஒரு இராணுவ அதிகாரி மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரியைச் சுற்றி சுழலும் ஒரு அதிரடி-சஸ்பென்ஸ் கதையே 'சமரன்' திரைப்படம். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் மணலி, காட்டுப்பாக்கம், மீனம்பாக்கம், வளசரவாக்கம், கிண்டி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டு வந்தது.


    சமரன்

    இந்நிலையில், 'சமரன்' திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவுபெற்றுள்ளது. மேலும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

    ரவி முருகையா இயக்கத்தில் விதார்த், ஜானவிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ஆயிரம் பொற்காசுகள் படம் கோடை விடுமுறையில் திரைக்கு வர இருக்கிறது. #AayiramPorkasugal #Vidharth
    ஈரமான ரோஜாவே, அலெக்சாண்டர் உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கியவர் கேயார். தயாரிப்பாளராகவும், வினியோகஸ்தராகவும் அனுபவம் கொண்ட கேயார் தனது கேஆர் இன்போடெயின்மெண்ட் சார்பில் அடுத்து வெளியிடும் படம் ஆயிரம் பொற்காசுகள். 

    அறிமுக இயக்குனர் ரவி முருகையா இயக்கத்தில் “மைனா” விதார்த், “பருத்தி வீரன்” சரவணன், ஜானவிகா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கிறது. மேலும் இப்படத்தில் வெற்றிவேல் ராஜா, ஹலோ கந்தசாமி, ஜார்ஜ் மரியான், பாரதி கண்ணன், செம்மலர் அன்னம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.



    ஜோஹன் இசையமைக்க, பானுமுருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி கேயார் கூறும்போது ‘இது முழுக்க முழுக்க நகைச்சுவையை அடிப்படையாக கொண்ட கதை. தொடக்கம் முதல் கடைசி காட்சி வரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். கழிப்பறை தோண்ட சென்ற இடத்தில் விதார்த், சரவணன் கூட்டணிக்கு ஒரு புதையல் கிடைக்கிறது. அந்த செய்தி ஊர் முழுக்க பரவி ஊரே பங்கு கேட்கிறது.

    அதன் பிறகு என்ன ஆகிறது என்பதே கதை. கிராமத்து மக்களின் பசுமையான வாழ்வியலையும், அன்றாட நிகழ்வுகளையும் பிண்ணனியாக கொண்டு உருவாகியுள்ளது, குடும்ப பொழுதுபோக்கு படம் என்பதால் கோடை காலத்தில் வெளியிட உள்ளோம்’ என்றார். #AayiramPorkasugal #Vidharth

    ராஜன் மாதவ் இயக்கத்தில் விதார்த், அஜ்மல், காயத்ரி, ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியாகி இருக்கும் `சித்திரம் பேசுதடி 2' படத்தின் விமர்சனம். #ChithiramPesudhadi2 #ChithiramPesudhadi2Review #Vidharth #Ajmal
    ராதிகா ஆப்தேவின் கணவர் மிகவும் செல்வந்தர். இவருடன் பிசினஸ் பார்ட்னராக இருக்கும் சுப்பு பஞ்சு, ரவுடிகளான விதார்த், அசோக் மூலம் அவரை கொலை முயற்சிக்கிறார். அப்படி கொலை செய்யும் நேரத்தில் காயத்ரியின் காதலர் அதை பார்த்து விடுகிறார். விதார்த் மற்றும் அசோக் இருவரையும் போலீசில் காட்டிக் கொடுக்க நினைக்கிறார்.

    காதலருக்காக காத்திருக்கும் காயத்ரியின் பையை, பிக்பாக்கெட் திருடர்களான நிவாஸ், பிளேடு சங்கர் இருவரும் திருடி சென்று விடுகிறார்கள். பையை இழந்த காயத்ரி, காதலரிடம் எனக்கு அந்த பை வேண்டும். அது இருந்தால் தான் வீட்டிற்கு செல்ல முடியும் என்று கூறுகிறார். மேலும் இந்த பிரச்சனையால் இவர்கள் காதலில் பிளவு ஏற்படுகிறது. இதனால், பையை கண்டுபிடிக்க நிவாஸ், பிளேடு சங்கரை தேடுகிறார்.



    தங்களை காட்டிக் கொடுக்க நினைக்கும் காயத்ரியின் காதலரை கொலை செய்ய அசோக் தேடுகிறார். காயங்களுடன் உயிர் தப்பிக்கும் ராதிகா ஆப்தேவின் கணவரையும் கொல்ல திட்டமிடுகிறார்கள். இதற்கிடையில் பிசினஸ் பிரச்சனையில் இருக்கும் அஜ்மலுக்கு அதிக பணம் தேவைப்படுகிறது. அரசியல்வாதி அழகம் பெருமாள் சிக்கியிருக்கும் வீடியோ ஒன்றை அஜ்மலுக்கு கொடுக்கிறார் ராமன். ஆடுகளம் நரேன், காயத்ரியின் தந்தை, நிவாஸ், ஆகியோர் கூட்டாக சேர்ந்து சுப்பு பஞ்சுவை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள்.

    இறுதியில் விதார்த், அசோக் இருவரும் ராதிகா ஆப்தேவின் கணவர், காயத்ரியின் காதலர் இருவரையும் கொன்றார்களா? காயத்ரி தன்னுடைய காதலனுடன் இணைந்தாரா? காயத்ரியின் காதலர், விதார்த், அசோக்கை போலீசில் சிக்க வைத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    உலா என்ற பெயரில் உருவான இப்படம் ‘சித்திரம் பேசுதடி 2’ என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. விதார்த், அசோக், அஜ்மல், நிவாஸ், பிளேடு சங்கர், ராதிகா ஆப்தே, காயத்ரி, சுப்பு பஞ்சு, அழகம் பெருமாள், ஆடுகளம் நரேன் என அனுபவம் வாய்ந்த நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

    கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக ராதிகா ஆப்தே, விதார்த் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஒரு பாடலுக்கு சிறப்பாக நடனம் ஆடி சென்றிருக்கிறார் டிவைன் பிராவோ.



    வித்தியாசமான கதைக்களத்துடன் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ராஜன் மாதவ். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு கதை வைத்து அதை ஒரு புள்ளியில் இணைய வைத்திருக்கிறார். ஆனால், படம் பார்ப்பவர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. இடியாப்பம் சிக்கல் போல் தோன்றுகிறது. சொல்ல வந்ததை தெளிவாக சொல்லியிருந்தால் ரசித்திருக்கலாம். திரைக்கதை வலுவில்லாமல் நகர்கிறது. நட்சத்திரங்களை சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார்.

    பத்மேஷ் மார்த்தாண்டனின் ஒளிப்பதிவு ஓரளவிற்கு ரசிக்க வைத்திருக்கிறது. சாஜன் மாதவ்வின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘சித்திரம் பேசுதடி 2’ அதிகம் பேசவில்லை. #ChithiramPesudhadi2 #ChithiramPesudhadi2Review #Vidharth #Ajmal #Gayathrie #RadhikaApte

    ராஜீஷ் பாலா இயக்கத்தில் விதார்த் - சாந்தினி தமிழரசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `வண்டி' படத்தின் விமர்சனம். #VandiReview #Vidharth #ChandiniTamilarasan
    விதார்த், கிஷோர், ஸ்ரீராம் கார்த்திக் மூன்று பேரும் சாந்தினி வீட்டிற்கு அருகில் ஒன்றாக வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு தேவையான உதவிகளை அவ்வப்போது செய்து கொடுக்கிறார் சாந்தினியின் அப்பா. விதார்த்தும், சாந்தினியும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் விதார்த் ஒரு பிரச்சனையில் சிக்குகிறார். அந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேலை ஒன்றில் சேர முடிவு செய்கிறார். வண்டி இருந்தால் தான் வேலை கிடைக்கும் என்ற நிர்பந்தத்துக்கு தள்ளப்படுப்படும் விதார்த் எப்படியாவது அந்த வேலையை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில், பைக் ஸ்டாண்ட்டில் பணிபுரியும் ஸ்ரீராம் மூலம், ஒரு வண்டியை வாங்கிக் கொண்டு போகிறார். 



    தான் ஓட்டிச் செல்வது திருட்டு வண்டி என்பதை அறியாமல் போலீசில் சிக்கிக் கொள்ளும் விதார்த்துக்கு, அந்த வண்டியால் பல்வேறு பிரச்சனைகள் வருகிறது.

    இவ்வாறாக வண்டியின் மூலம் வரும் பிரச்சனைகளில் இருந்து விதார்த் எப்படி தப்பிக்கிறார்? சாந்தினியுடன் இணைந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் விதார்த் இந்த படத்திலும் ஒரு நாயகனுக்கு உண்டான அலட்டல் இல்லாமல், இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சாந்தினியும் பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் சாதாரண பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஸ்ரீராம் கார்த்திக், கிஷோர் குமார், ஜான் விஜய், அருள்தாஸ், விஜித் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றனர்.

    படத்தின் கதையில் கவனம் செலுத்தியிருக்கும் இயக்குநர் ராஜீஷ் பாலா, திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். தேவையில்லாத காட்சிகளும், வசனங்களும் படத்தின் வேகத்திற்கு தடையாக அமைந்துள்ளன. தேவையில்லாத இடங்களை கத்தரித்து, படத்தொகுப்பிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

    சுராஜ் கே குரூப்பின் பின்னணி இசை ஓரளவுக்கு பலம் தான். ராகேஷ் நாராயணன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. 

    மொத்தத்தில் `வண்டி' வேகமில்லை. #VandiReview #Vidharth #ChandiniTamilarasan

    ரஜீஷ்பாலா இயக்கத்தில் விதார்த் - சாந்தினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வண்டி’ படத்தின் முன்னோட்டம். #Vandi #Vidharth #ChandiniTamilarasan
    ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹாசீர் தயாரிக்கும் படம் ‘வண்டி’.

    விதார்த் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாந்தினி நடித்திருக்கிறார். ஸ்ரீராம் கார்த்திக், கிஷோர் குமார், ஜான் விஜய், அருள்தாஸ், சாமிநாதன், மதன்பாப், சூப்பர் குட் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். 

    ஒளிப்பதிவு - ராகேஷ் நாராயணன், இசை - சூரஜ் எஸ் குரூப், படத்தொகுப்பு - ரிசால் ஜெய்னி, கலை - மோகன மகேந்திரன், பாடல்கள் - சினேகன், சங்கீத், நடனம் - தினேஷ், ஜாய் மதி, சண்டை பயிற்சி - சிறுத்தை கணேஷ், வசனம் - அரசு வி. ரஜீஷ்பாலா, தயாரிப்பு - ஹஷீர். எழுத்து - இயக்கம்- ரஜீஷ்பாலா.



    படம் பற்றி இயக்குநர் பேசும் போது...

    காணாமல் போன தன்னோட சைக்கிளைத் தேடும் குடும்பஸ்தன் தொலைந்து போன சைக்கிளால் என்ன ஆனான், என்பதை `பை சைக்கிள் தீவ்ஸ்’ என்ற படத்தை பார்த்து உலகமே வியந்தது.

    அதே போல் ஒரு இளைஞன் தன்னோட அப்பாவின் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் சேர்த்து ஒரு பல்சர் பைக்கை வாங்குகிறான். அது நாள் வரை வெறுமெனே பார்த்து வந்த பெண் காதலிக்க தொடங்குகிறாள். வாழ்க்கை சந்தோ‌ஷமாக போய்க் கொண்டிருக்கும் போது அந்த பைக் காணாமல் போகிறது. அந்த பைக்கால் அவன் என்ன ஆனான் என்பதை ‘பொல்லாதவன்’ படத்தின் மூலம் பார்த்தோம். தற்போது, ‘வண்டி’ படத்தில் எமஹா ஆர்எக்ஸ் 135 என்ற பைக் படத்தின் முக்கிய பாத்திரமாக வருகிறது. அதுவும் மூன்று தளங்களில் நடக்கும் கதையில் இந்த பைக் மூன்று பரிமாணத்தில் தோன்றுகிறது. கதையில் பைக்கே பிரதானமாக வருவதால் படத்தின் தலைப்பு ‘வண்டி’ என்று ஆகி இருக்கிறது” என்றார். #Vandi #Vidharth #ChandiniTamilarasan

    ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா - விதார்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் `காற்றின் மொழி' படத்தின் விமர்சனம். #KaatrinMozhiReview #Jyothika #Vidharth
    நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த விதார்த் - ஜோதிகா வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். விதார்த் ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். குறைவான சம்பளம் என்றாலும் மனநிம்மதியுடன் குடும்பத்தை நடத்தி வருகிறார்கள்.

    ஜோதிகாவுக்கு இரு அக்காள்கள், 12-ஆம் வகுப்பில் தோல்வியடைந்ததால், ஜோதிகாவை இருவரும் மட்டம் தட்டி வருகிறார்கள். இதற்கிடையே தனது திறமையை நிரூபிக்க ஏதாவது மேடை கிடைக்காதா என்று எதிர்பார்த்து வருகிறார் ஜோதிகா. இந்த நிலையில் ஹலோ எப்.எம். நடத்தும் நிகழ்ச்சியில் பரிசு வெல்லும் ஜோதிகா, எப்.எம்.-ல் ஆர்.ஜே.,வாகும் முயற்சியில் இறங்குகிறார். குரல் தேர்வு முடிந்து எப்.எம்.-ல் வேலைக்கும் சேர்கிறார். ஜோதிகாவுக்கு இரவு நேர நிகழ்ச்சிகள் ஒதுக்கப்படுகிறது. இதனால் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியவில்லை.



    மனைவியுடன் நேரத்தை செலவிட முடியவில்லை என்று விதார்த் வருத்தப்படுகிறார். இதனால் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்படுகிறது. இது இவர்களது குடும்பத்தில் என்னென்ன பிரச்சனைகளை உருவாக்குகிறது? எப்.எம்-க்கும் போன் செய்யும் பலரது பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் ஜோதிகா, தனது குடும்ப பிரச்சனையை எப்படி சமாளித்தார்? ஆர்.ஜே. வேலையில் தொடர்ந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை ஜோதிகா தனது அழகான நடிப்பின் மூலம் ரசிகர்களை கட்டிப் போடுகிறார். தனது தனித்துவமான முகபாவனை, பேச்சின் மூலம் படத்தின் காட்சிகளை நகர்த்துகிறார்.



    ஜோதிகாவுடன் வரும் காட்சிகளில் விதார்த் போட்டிபோட்டு நடித்திருக்கிறார். காட்சிக்கு ஏற்ப மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு சில காட்சிகளில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்திருக்கிறார். 

    லக்‌ஷ்மி மஞ்சு, மனோபாலா, இளங்கோ குமரவேல் என அனைத்து கதாபாத்திரங்களும் படத்தோடு ஒன்றி நடித்திருக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறிய கதாபாத்திரம் என்றாலும் அதை சிறப்பாக நடித்திருக்கிறார். சிம்பு, யோகி பாபு சிறப்பு தோற்றத்தில் வருகின்றனர்.



    சாதாரண திரைக்கதையில் சென்டிமெண்ட் காட்சிகளை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ராதா மோகன். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் வேலைக்கு செல்வதும், அதனால் அவரது குடும்பத்தில் ஏற்படும் மனஸ்தாபங்களையும் அன்பு, காதல், காமெடி என அனைத்து கலந்த கலவையான தனது பாணியில் கொடுத்திருக்கிறார். சின்ன சின்ன கதாபாத்திரங்களையும் சிறப்பாக செதுக்கி ரசிக்க வைத்திருக்கிறார். படத்தில் கதையின் போக்குக்கு ஏற்ப விதார்த்தை காட்டிய இயக்குநர், தொடக்கம் முதல் இறுதிவரை ஜோதிகாவை ஒரே மாதிரியாக காட்டியிருக்கிறார். ஜோதிகாவின் உடை, அலங்காரத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். படம் முழுக்க வசதியான வீட்டுப் பெண்ணாகவே வலம் வருகிறார்.

    ஏ.எச்.காஷிப் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவில் காட்சிகள் அருமையாக வந்திருக்கின்றன.

    மொத்தத்தில் `காற்றின் மொழி' இனிமை. #KaatrinMozhiReview #Jyothika #Vidharth

    ×