என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Veg Recipes"
- உடல் பருமனைக் குறைக்க பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும்.
- கொத்தமல்லி வயிற்றில் ஏற்படும் தொல்லைகளுக்கு தீர்வு தரும்.
தேவையான பொருட்கள் :
பச்சைப் பயறு - 100 கிராம்
பச்சரிசி - ஒரு கைப்பிடி அளவு
கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
சீரகம் - 2 சிட்டிகை
பச்சை மிளகாய் - ஒன்று
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பச்சைப் பயறு, பச்சரிசியை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
கொத்தமல்லியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
ஊறவைத்த அரிசி, பயிருடன் கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், உப்பு, சீரகம் சேர்த்து மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த மாவை தோசை மாவைக் காட்டிலும் சிறிது தண்ணீர் அதிகம் சேர்த்துக் கரைக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவைத் தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் சிவந்ததும் எடுக்கவும்.
இப்போது சத்தான சுவையான பச்சைப் பயறு கொத்தமல்லி பெசரட் ரெடி.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- வீட்டில் மீந்து போன இட்லி மாவைக் கொண்டு குணுக்கு செய்யலாம்.
- இந்த குணுக்கு போண்டா போன்று இருக்கும்.
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு - 1 பெரிய கப்
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
சமையல் சோடா - 1 சிட்டிகை
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)
செய்முறை:
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் இட்லி மாவு, மைதா சேர்த்து, அத்துடன் வேண்டுமானால் சிறிது தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து அதில் சமையல் சோடா, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, மாவில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு சிறு கரண்டியில் மாவை எடுத்து, எண்ணெயில் ஊற்றி பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் குணுக்கு ரெடி!!!
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இஞ்சி வயிற்றில் தங்கியுள்ள கொழுப்பைக் கரைக்கும்.
- இஞ்சி துவையல் சாப்பிட மலச்சிக்கல், மார்பு வலி தீரும்.
தேவையான பொருட்கள்
இஞ்சி - 250 கிராம்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 7
காய்ந்த மிளகாய் - 6
புளி - 2 துண்டு
வெல்லம் - 1 துண்டு
துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி இலை - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
தாளிக்க
உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
பெருங்காய தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பில்லை - சிறிதளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* இஞ்சி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்
* கடாயில் இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் , புளி துண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
* வெங்காயம் பாதி வதங்கியதும், இதில் தேங்காய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
* இதில் உப்பு சேர்த்து கிளறி, ஆறவிடவும்.
* ஆறிய கலவையை, மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
* தாளிப்பு கரண்டியில், எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காய தூள் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து தாளித்து சட்னி மேல் ஊற்றவும்.
* இப்போது சுவையான இஞ்சி சட்னி தயார்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இதை கொடுக்கலாம்.
- குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்நாக்ஸ் இது.
தேவையான பொருட்கள்
பிரெட் டோஸ்ட் செய்ய
பிரெட் துண்டுகள் - 5
எண்ணெய் - 3 தேக்கரண்டி
சில்லி பிரெட் செய்ய
பூண்டு - 5 பல்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1
குடைமிளகாய் - 1
வெங்காயத்தாள் வெங்காயம் - 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லி இலை -சிறிதளவு
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
வினிகர் - 1 தேக்கரண்டி
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
மிளகாய் விழுது - 1 மேசைக்கரண்டி
தக்காளி கெட்சப் - 2 மேசைக்கரண்டி
சோளமாவு - 1 1/2 தேக்கரண்டி
தண்ணீர் - 1/4 கப்
வெங்காயத்தாள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 தேக்கரண்டி
செய்முறை:
வெங்காயம், பூண்டு, ப.மிளகாய், இஞ்சி, குடைமிளகாய், வெங்காயத்தாள்,கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சில்லி பேஸ்ட் செய்ய மிளகாயை தண்ணீரில் வேகவைத்து, ஆறவிட்டு நன்கு விழுதாக அரைக்கவும்.
பிரெட்டின் ஓரங்களை வெட்டி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
ஒரு பானில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பிரெட்டை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக டோஸ்ட் செய்யவும்.
ஒரு பானில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பிறகு நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
பின்பு உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து விடவும்.
அடுப்பை குறைந்த தீயில் வைத்து வினிகர், சோயா சாஸ், அரைத்த மிளகாய் விழுது, தக்காளி கெட்சப் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பிறகு நறுக்கிய வெங்காயத்தாள் வெங்காயம் சேர்த்து கலந்த பின்னர் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
சோளமாவு, தண்ணீர் இரண்டையும் சேர்த்து கட்டியின்றி கரைத்து கடாயில் சேர்க்கவும்.
அடுத்து டோஸ்ட் செய்த பிரெட்டை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
இறுதியாக நறுக்கிய வெங்காயத்தாள், கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு உடனே பரிமாறவும்.
காரமான சில்லி பிரெட் தயார்!
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இட்லி சாப்பிடாத குழந்தைகளும் இதை விரும்புவார்கள்.
- இந்த ரெசிபியை 10 நிமிடத்தில் செய்து விடலாம்.
தேவையான பொருட்கள் :
இட்லி - 8
நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1/2 டீஸ்பூன்
ப.மிளகாய் - 3
வேர்க்கடலை - சிறிதளவு
முந்திரி - 10
சின்ன வெங்காயம் - 50 கிராம்
கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
இட்லியை நன்கு உதிரி உதிரியாக உதிர்த்து வைக்கவும்.
வெங்காயம், கொத்தமல்லி தழை, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின்னர் வேர்க்கடலை, முந்திரி சேர்த்து பொன்னிறமாக மாறியதும் நறுக்கிய சின்ன வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.
வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு சாம்பார் பொடி மற்றும் மிளகுப்பொடி சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள்.
அடுத்து அதில் உதிர்த்து வைத்திருக்கும் இட்லியை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து உதிரி உதிரியாக வரும் வரை கிளறவும்.
உதிரியாக வந்தவுடன் கடைசியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.
அவ்வளவுதான் இட்லி உப்புமா ரெடி... சுட சுட பரிமாறுங்கள்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- மீதமாகிய சப்பாத்தியை வைத்து ‘கப் பீட்சா’ செய்யலாம்.
- இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சப்பாத்தி - 4
எண்ணெய் - 2 கப்
மொசரில்லா சீஸ் (துருவியது) - 1 கப்
சில்லி பிளேக்ஸ் - 2 டீஸ்பூன்
பீட்சா சாஸ் - 4 டீஸ்பூன்
ஓரிகானோ - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
ஆலிவ் பழம் - 5
குடைமிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 2 டீஸ்பூன்
வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 2 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு நீண்ட எவர்சில்வர் டம்ளரின் வெளிப்பகுதி முழுவதும் சிறிதளவு எண்ணெய் தடவி, அதன் மேல் சப்பாத்தியை நூல் கொண்டு கட்டுங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் டம்ளரை அதில் போட்டு, சப்பாத்தி பொன்னிறமாக மாறும்வரை பொரித்து எடுங்கள்.
சூடு ஆறிய பிறகு டம்ளரில் இருந்து சப்பாத்தியை பிரித்து எடுக்கலாம்.
கிண்ணம் போல இருக்கும் சப்பாத்தியின் உள்ளே சீஸ், குடைமிளகாய், வெங்காயம், பீட்சா சாஸ் என ஒவ்வொன்றாக நிரப்பவும்.
அதன்மேல் மிளகுத்தூள், சில்லி பிளேக்ஸ், ஓரிகானோ ஆகியவற்றைத் தூவி ஆலிவ் பழம் கொண்டு அலங்கரிக்கவும்.
அடுப்பில் தவாவை வைத்து சூடானதும், தயார் செய்த சப்பாத்தியை அதன் மேல் வைத்து மூடி 15 நிமிடங்கள் வரை 'பேக்' செய்தால் 'கப் பீட்சா' தயார்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- கல்லீரல் கோளாறுகளுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக்.
- இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்க செய்யும்.
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 1 கப் (துருவியது)
கெட்டி தயிர் - 2 கப்
பூண்டு - 2 பல்
காய்ந்த புதினா இலைகள் - 1½ டேபிள் ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 1½ டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை:
பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு அகன்ற கிண்ணத்தில் பூண்டு, ஒரு டேபிள் ஸ்பூன் காய்ந்த புதினா இலைகள், ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய், பீட்ரூட் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.
இதை 5 நிமிடங்களுக்கு அப்படியே மூடி வைக்கவும்.
பின்னர் இந்தக் கலவையுடன் கெட்டி தயிர் சேர்த்து நன்றாகக் கலந்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
ஒரு மணி நேரம் கழித்து வெளியே எடுத்து, அதன் மேலே ஆலிவ் எண்ணெய் மற்றும் காய்ந்த புதினா இலைகள் தூவி பரிமாறவும்.
சூப்பரான பீட்ரூட் டிப் ரெடி.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- ஒட்ஸ் சாப்பிடுவதால் டைப்2 நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.
- ஓட்ஸில் கெட்ட கொழுப்பை கரைக்கக்கூடிய வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளது.
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - 1 கப்
தண்ணீர் - 1 1/2 கப்
அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - சிறிய துண்டு
கேரட் - 1
முட்டைகோஸ் - சிறிய துண்டு
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - 1 தேக்கரண்டி
நெய் - தேவையான அளவு
செய்முறை:
* கேரட், முட்டைகோஸை துருவிக்கொள்ளவும்.
* வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஓட்ஸில் தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊற வைத்த பின்னர் மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
* அரைத்த ஓட்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, துருவிய கேரட், துருவிய முட்டைகோஸ்,
சீரகம், மஞ்சள் தூள், உப்பு, அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
* பின்பு நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
* பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் மாவை ஊற்றி 5 நிமிடம் வேகவிடவும். ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி விட்டு 5 நிமிடம் வேகவிடவும்.
* இப்போது சத்தான சுவையான ஓட்ஸ் குழிப்பணியாரம் தயார்!
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இந்த சட்னி இட்லி, தோசைக்கு சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
- இந்த சட்னி 4-6 மணிநேரம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய் - 1 கப்
உளுத்தம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 2
புளி - 2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவைக்கு ஏற்ப
தாளிக்க
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை
செய்முறை:
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் துருவிய தேங்காய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.
* தேங்காய் பொன்னிறமானதும், வரமிளகாய், புளி சேர்த்து 2 நிமிடம் வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* வறுத்த பொருட்கள் ஆறியதும் மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கேற்ப உப்பு மற்றும் தேவையான அளவு நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைக்க வேண்டும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து பரிமாறவும்.
* இப்போது சுவையான தேங்காய் புளி சட்னி தயார்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இந்த போண்டாவை டீ, காபியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
- இந்த போண்டா செய்ய 15 நிமிடங்களே போதுமானது.
தேவையான பொருட்கள்
மைதா மாவு - 1 கப்
பெரிய வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 3
சோம்பு - 1 ஸ்பூன்
தனி மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கடலை மாவு - 4 ஸ்பூன்
அரிசி மாவு - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை
வெங்காயத்தை தோல் நீக்கி நீளமாக மெலிதாக நறுக்கிக் கொள்ளவும்.
கறிவேப்பிலை, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு இதனுடன் உப்பு, மிளகாய் தூள், ப.மிளகாய், கறிவேப்பிலை, சோம்பு போட்டு நன்றாக கலந்து இந்த கலவையை 10 நிமிடம் மூடி வைக்கவும்.
10 நிமிடம் கழித்து பார்த்தால் வெங்காயம் மிருதுவாகி இருக்கும். இப்போது மைதா மாவு, கடலை மாவு, அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கலக்கவும். மாவு உருண்டை பிடிக்கிற அளவு பக்குவமாக இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை சிறிய உருண்டைகளாக உங்களுக்கு பிடித்த வடிவில் உருட்டி போட்டு அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேக வைத்து எடுக்கவும்.
இப்போது சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் டீக்கடை வெங்காய போண்டா ரெடி.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இந்த இட்லி உடல் சூட்டைத் தணிக்கும் அருமருந்து.
- இன்று இந்த இட்லி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி - ஒரு கிலோ
உளுந்து - கால் கிலோ
வெந்தயம் -
இளநீர் - தேவையான அளவு
உப்பு - சிறிதளவு.
செய்முறை
இட்லி அரிசி, வெந்தயத்தை நன்றாக கழுவி 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
உளுந்தை தனியாக 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
அரிசி, வெந்தயத்தை கிரைண்டரில் போட்டு அரைக்கும்போது தண்ணீருக்குப் பதிலாக இளநீர் சேர்த்து அரைக்க வேண்டும்.
அதேபோல் உளுந்து அரைக்கும் போது தண்ணீருக்கு பதிலாக இளநீர் சேர்த்து அரைத்து சேர்க்கவும்.
அரைத்த இரண்டு மாவையும் ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, இளநீரைச் சேர்த்து கரைத்து புளிக்க வைத்து விட்டு, பின்பு இட்லிகளைச் சுட்டெடுக்கவும்.
சூப்பரான இளநீர் இட்லி தயார்!!!
உண்பதற்கு இனிப்பாக இருக்கும் இந்த இட்லி, வெயிலின் சூட்டைத் தணிக்கும் அருமருந்து.
கவனத்தில் கொள்ள வேண்டியவை..
இட்லி மாவு அரைக்கும் போது, மாவில் கைபடாமல் கரண்டியைப் பயன்படுத்தி அரைப்பது நல்லது. அப்போது தான் சீக்கிரம் புளிப்பது, நீண்ட நேரத்துக்குப் பிறகு புளிப்பது போன்ற பிரச்னை களைத் தவிர்க்க முடியும்.
அலுமினியம், ஈயம் பூசப்பட்ட பித்தளைப் பாத்திரம் போன்ற பாத்திரங்களில் மாவை வைத்தால் சீக்கிரம் புளித்து போக வாய்ப்புள்ளது. அதனால், எவர்சில்வர் பாத்திரத்தில் வைப்பது நல்லது.
அடுப்புக்குப் பக்கத்தில் மாவை வைத்துப் பயன்படுத்து வதைத் தவிர்க்க வேண்டும். காரணம் சூட்டில் மாவு சீக்கிரம் புளித்து விடும். இட்லியின் ருசி அதன் புளிப்புத் தன்மையில் தான் இருக்கு. புளிப்பு சரியான அளவில் இருந்தால் தான் இட்லி ருசி நன்றாக இருக்கும்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- வாரத்தில் இருமுறை கோவக்காய் சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள், மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
- கோவக்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது.
தேவையான பொருட்கள்:
கோவக்காய் - 500 கிராம்
கடுகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
வெந்தயம் - 2 தேக்கரண்டி
புளி - ஒரு எலுமிச்சம்பழம் அளவு
காய்ந்த மிளகாய் - 50 கிராம்
பெருங்காயத்தூள் - ½ தேக்கரண்டி
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 10 பல்
நல்லெண்ணெய் - தேவையான அளவு
கல் உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோவக்காயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
புளியை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் கலந்து ஊறவைக்கவும். அடுப்பில் அடிகனமான வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றாமல் வெந்தயம், சீரகம், கடுகு ஆகியவற்றை தனித்தனியாக மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுக்கவும்.
பின்னர் அவற்றுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, உப்பு மற்றும் 2 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் அடிகனமான வாணலியை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், நீளவாக்கில் நறுக்கிய கோவக்காய்களை போட்டு நன்றாக வதக்கியபின் இறக்கவும்.
மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் அரைத்த மசாலா சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
பின்னர் பெருங்காயத்தூள் மற்றும் வதக்கிய கோவக்காய்களை சேர்த்துக் கிளறவும்.
அதன் பிறகு ஊற வைத்த புளிக்கரைசலை அதில் ஊற்றவும் (புளிக்கு மாற்றாக எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்க்கலாம்).
10 முதல் 15 நிமிடங்கள் வாணலியை மூடி வைத்து மிதமான தீயில் கோவக்காய்களை வேக வைக்கவும்.
இந்தக் கலவை ஊறுகாய் பதத்துக்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
இப்போது 'கோவக்காய் ஊறுகாய்' தயார்.
இது ஆறியதும் கண்ணாடி ஜாடியில் போட்டு பயன்படுத்தவும்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்