search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊறுகாய்"

    • சப்பாத்தி மாவு மீது எண்ணெய் தடவி பிரிட்ஜில் வைத்தால் மாவு நிறம் மாறாமல் இருக்கும்.
    • முட்டை கெட்டுப்போகாமல் இருக்க லேசாக எண்ணெய் தடவி வைக்கலாம்.

    * சப்பாத்தி மாவு பிசையும் போது சிறிது அதில் கொஞ்சம் மக்காச்சோள மாவு சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக வரும்.

    * பால் பாயசம் செய்யும்போது பாதாம் பருப்பை அரைத்து அதில் சேர்த்தால் பாயசம் சுவையாக இருக்கும்.

    * வெண்டைக்காயை எண்ணெய்யில் வதக்க வேண்டும். அப்படி செய்தால் அதில் இருக்கும் பிசுபிசுப்பு தன்மை நீங்கி விடும். அதன் பின்பு குழம்பில் சேர்த்தால் வழுவழுப்பு இருக்காது. குழம்பும் ருசியாக இருக்கும்.

    * சப்பாத்தி மாவு மீது எண்ணெய் தடவி பிரிட்ஜில் வைத்தால் மாவு நிறம் கெடாமல் இருக்கும்.

    * முட்டையை வேக வைக்கும் பொழுது சில துளிகள் கடலை எண்ணெய், கல் உப்பு சேர்த்தால் எளிதில் வேகும்.

    * கொதிக்கும் தண்ணீரை ஊற்றி பாதாமை ஊற வைத்தால் அதன் தோல் எளிதாக உரிந்து வரும்.

    * ஊறுகாயில் சிறிதளவு வினிகர் சேர்த்தால் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்.

    * இட்லி மாவுடன் சிறிதளவு கடலை மாவு சேர்த்து தோசை ஊற்றினால் தோசை மொறுமொறுவென்றும், பொன்னிறமாகவும் இருக்கும்.

    * மழைக்காலங்களில் உப்பில் நீர் சேராமல் இருக்க, பிளாஸ்டிக் சீட் மீது உப்பை கொட்டி, காற்றுபுகாதவாறு கட்டி வைத்தால் போதும்.

    * புளி குழம்பு தயாரிக்கும்போது சிறிதளவு வெந்தயம் சேர்த்து தாளித்தால் சுவையாக இருக்கும்.

    * முட்டை கெட்டுப் போகாமல் இருக்க அதன் மீது லேசாக எண்ணெய் தடவி வைக்கலாம்.

    * முருங்கைக்காயை துண்டுகளாக நறுக்கி காற்று புகாத கவர் அல்லது டப்பாவில் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் வாடாமல் அப்படியே இருக்கும்.

    * வாழைப்பூ சுத்தம் செய்யும்போது கையில் சிறிது நல்லெண்ணெய் தடவிக் கொண்டால் கையில் கறை ஒட்டாது.

    * காரக்குழம்பில் காரம் அதிகமானால் சிறிது வெல்லம் சேர்த்தால் போதும். காரத்தின் வீரியம் குறைந்துவிடும்.

    * சோறு ஒட்டாமலும் உதிரியாகவும் இருக்க, அரிசி ஊற வைக்கும்போது சில ஐஸ் கட்டிகள் சேர்த்து ஊறவைத்தால் சாதம் உதிரியாக வரும்.

    * கறிவேப்பிலை வாடாமலும், நிறம் மாறாமலும் இருக்க, தண்ணீரில் அலசி உலர வைத்து, பின்னர் காற்று புகாத டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாள் வரை கெட்டுப் போகாது.

    * மெதுவடை மொறு மொறு வென்று இருக்க, உளுத்தம் பருப்புடன் கொஞ்சம் பச்சரிசி சேர்த்து ஊற வைத்து அரைத்தால் நன்றாக இருக்கும்.

    * கீரை சமைக்கும்போது சிறிதளவு எண்ணெய் சேர்த்து வேக வைத்தால் கீரையின் நிறம் மாறாது.

    * பருப்பு வேக வைக்கும்போது நெய் சேர்த்து சமைத்தால் சாம்பார் மிகவும் ருசியாக இருக்கும்.

    * வீட்டில் எறும்பு புற்று இருந்தால் அங்கு கொஞ்சம் பெருங்காயத்தூளை தூவி விட்டால் எறும்புத்தொல்லை இருக்காது.

    * துண்களில் எண்ணெய் கறையோ கிரீஸ் கறையோ பட்டுவிட்டால் அதில் சிறிதளவு நீலகிரித்தைலம் விட்டு கழுவினால் அந்த கறை போய்விடும்.

    * ஃப்ரஷர் குக்கரை உபயோகபடுத்தாத நேரங்களில் அவற்றை மூடி வைக்க கூடாது.

    * வெங்காயம் நறுக்குவதற்கு முன் கத்தியை சூடு செய்துவிட்டு நறுக்கினால் கண்களில் எரிச்சல் இருக்காது.

    * அதிகம் கனமுள்ள கல்லை தோசைக்கும், கனம் அதிகம் இல்லாத கல்லை சப்பாத்திக்கும் பயன்படுத்த வேண்டும்.

    * சாதம் வடிக்கும் போது சிறிது குழைந்து விட்டால் உடனே சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்தால் குழையாமல் இருக்கும்.

    * கேழ்வரகை ஊறவைத்து அரைத்து பால் எடுத்து அல்வா போன்று செய்யலாம். அதிக ருசியும், ஆரோக்கியமும் இருக்கும்.

    * உப்பு ஜடியில் தண்ணீர் வடிவதை தடுக்க அதில் புளித்துண்டை ஜாடியில் போட்டு வைத்தால் நீர் தன்மையை புளி எடுத்துவிடும்.

    * அதிகப்படியாக வாங்கி வைத்துள்ள எண்ணெய்யில் பச்சைமிளகாயை போட்டு வைத்தால் எண்ணெய் கசடு தங்காது.

    * சாம்பார் மணக்க, வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் கடைசியில் சேர்த்தால் சாம்பார் மணமாக இருக்கும்.

    * வெந்தயக்கீரை சமைக்கும் போது சிறிது வெல்லம் கலந்து சமைத்தால் கசப்பு தன்மை இருக்காது.

    * வாழைக்காயை நறுக்கும்போது சிறிதளவு உப்புத்தூளை கைகளில் தேய்த்துக்கொண்டால் கறைபிடிக்காது, பிசுபிசுப்பு நீங்கும்.

    * கறிவேப்பிலை செடி நன்றாக வளர புளித்த மோரை ஊற்றலாம்.

    * பாகற்காய் குழம்பு வைக்கும்போது அதில் ஒரு காரட் சேர்த்து செய்தால் கசப்பே தெரியாது.

    • எலுமிச்சை, மாங்காய், பூண்டு, இஞ்சி ஊறுகாய் சாப்பிட்டு இருப்பீங்க.
    • இன்று மீனை வைத்து ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    மீன் - 1/2 கிலோ ( முள் இல்லாத மீன்)

    மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 4 மேஜைக்கரண்டி

    வெந்தயப்பொடி - 1 மேஜைக்கரண்டி

    பூண்டு - 1

    இஞ்சி - ஒரு சிறிய துண்டு

    வினிகர் - 1/2 கப்

    உப்பு - தேவையான அளவு

    கடுகு - 1 மேஜைக்கரண்டி

    கறிவேப்பில்லை - சிறிது

    நல்லெண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    மீனை நன்றாக சுத்தம் செய்து சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    இஞ்சி, பூண்டு இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீனை நன்றாக கழுவி ஈரத்தன்மை போனதும் அதன் மேல் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி உப்பு சேர்த்து எல்லா இடங்களிலும் படும்படி நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்திருக்கும் மீன் துண்டுகளை போட்டு வறுத்து தனியே வைக்கவும்.

    மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு கிளறவும்.

    பின்னர் அதனுடன் மிளகாய் பொடி, வெந்தயப்பொடி, உப்பு சேர்த்து கிளறி அதனுடன் வறுத்து வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.

    5 நிமிடம் ஆனதும் அதில் அரை கப் வினிகர் சேர்த்து 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.

    இந்த கலவை நன்கு ஆறியதும் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும்.

    சுவையான மீன் ஊறுகாய் ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • புளிச்சக்கீரையில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று புளிச்சக்கீரையில் ஊறுகாய் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    புளிச்சக்கீரை - 4 கட்டு,

    வெந்தயம் - 1 டீஸ்பூன்,

    தனியா - 1 டீஸ்பூன்,

    பச்சை மிளகாய் - 4,

    கடுகு உளுந்தம்பருப்பு - 3 டீஸ்பூன்,

    எள் - 3 டீஸ்பூன்,

    சீரகம் - 1 டீஸ்பூன்,

    வற்றல் மிளகாய் - 4 அல்லது 5,

    எண்ணெய், உப்பு - சுவைக்கேற்ப

    செய்முறை

    புளிச்சக்கீரை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு புளிச்சக் கீரையை போட்டு வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் வெந்தயம், தனியா, எள், சீரகம், பச்சை மிளகாய் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து வதக்கி, ஆறியவுடன் அரைக்கவும்.

    மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயைச் சேர்த்து தாளித்த பின்னர் அரைத்த கோங்குரா பேஸ்ட்டை இதனுடன் சேர்த்து வதக்கினால் சுவையான கோங்குரா ஊறுகாய் ரெடியாகிவிடும்.

    இதை இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பாரம்பரிய தொழிலாக ஊறுகாய் தயாரிப்பு நடந்து வருகிறது.
    • சில ஆண்களின் பெயருக்கு அடைமொழியாக ஊறுகாய் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

    திருப்பதி:

    ஊறுகாய் என்ற வார்த்தையை கேட்கும் போதே நம் வாயில் எச்சில் ஊற தொடங்குகிறது.

    தென்னிந்திய உணவைப் பொறுத்தவரை காரசாரமான ஊறுகாய் இல்லாமல் நிறைவடைவதில்லை.

    ஊறுகாய் தயாரிப்பு குடிசைத் தொழிலாக பல இடங்களில் செய்யப்படுகிறது. ஆனால் ஒரு கிராமம் முழுவதும் 70 ஆண்டுகளுக்கு மேலாக ஊறுகாய் மட்டுமே தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அந்த கிராமத்தை ஊறுகாய் கிராமம் என்று அழைக்கின்றனர்.

    ஆந்திரமாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள உசுலுமறு கிராமம். இங்கு பாரம்பரிய தொழிலாக ஊறுகாய் தயாரிப்பு நடந்து வருகிறது. இந்த கிராமத்திற்குள் நுழையும்போதே ஊறுகாய் வாசனை துளைக்கிறது.

    அந்த அளவுக்கு ஒவ்வொரு வீட்டிலும் ஊறுகாய் தயாரிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. மாங்காய் ஊறுகாய் எலுமிச்சை இஞ்சி, புளி, பச்சை மிளகாய் மற்றும் நெல்லிக்காய் என ஒவ்வொருவரும் தனித்தனியாக ஊறுகாய்களை தயார் செய்து வருகின்றனர்.

    இங்குள்ள சில ஆண்களின் பெயருக்கு அடைமொழியாக ஊறுகாய் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

    கோதாவரி ஆற்றின் துணை நதியான வசிஷ்டா கரையில் இந்த கிராமம் அமைந்துள்ளதால் அங்கு ஊறுகாய்க்கு தேவையான அனைத்து மாங்காய் எலுமிச்சை போன்றவை கிடைக்கின்றன.

    இதே போல கிழக்கு கோதாவரி மாவட்டத்தில்

    அங்கம்பாலம் மற்றும் நற்கடிபள்ளி ஆகிய கிராமங்களில் வீட்டுக்கு வீடு ஊறுகாய் தயாரிப்பு நடந்து வருகிறது.

    ஆந்திர மாநிலத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக பிளாஸ்டிக் பைகளிலும், ஆந்திராவுக்கு வெளியேயும் பிற நாடுகளுக்கு மண் ஜாடிகளிலும் ஊறு காய்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    இந்த குடிசைத் தொழில் ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருவாயை அளிக்கிறது. இதனை 70 ஆண்டுகளுக்கு மேலாக செய்து வருவதாக அந்த கிராம மக்கள் தெரிவித்தனர்.

    • வாரத்தில் இருமுறை கோவக்காய் சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள், மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
    • கோவக்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது.

    தேவையான பொருட்கள்:

    கோவக்காய் - 500 கிராம்

    கடுகு - 2 தேக்கரண்டி

    சீரகம் - 2 தேக்கரண்டி

    வெந்தயம் - 2 தேக்கரண்டி

    புளி - ஒரு எலுமிச்சம்பழம் அளவு

    காய்ந்த மிளகாய் - 50 கிராம்

    பெருங்காயத்தூள் - ½ தேக்கரண்டி

    இஞ்சி - சிறிய துண்டு

    பூண்டு - 10 பல்

    நல்லெண்ணெய் - தேவையான அளவு

    கல் உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    கோவக்காயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.

    புளியை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் கலந்து ஊறவைக்கவும். அடுப்பில் அடிகனமான வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றாமல் வெந்தயம், சீரகம், கடுகு ஆகியவற்றை தனித்தனியாக மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுக்கவும்.

    பின்னர் அவற்றுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, உப்பு மற்றும் 2 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.

    அடுப்பில் அடிகனமான வாணலியை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், நீளவாக்கில் நறுக்கிய கோவக்காய்களை போட்டு நன்றாக வதக்கியபின் இறக்கவும்.

    மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் அரைத்த மசாலா சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.

    பின்னர் பெருங்காயத்தூள் மற்றும் வதக்கிய கோவக்காய்களை சேர்த்துக் கிளறவும்.

    அதன் பிறகு ஊற வைத்த புளிக்கரைசலை அதில் ஊற்றவும் (புளிக்கு மாற்றாக எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்க்கலாம்).

    10 முதல் 15 நிமிடங்கள் வாணலியை மூடி வைத்து மிதமான தீயில் கோவக்காய்களை வேக வைக்கவும்.

    இந்தக் கலவை ஊறுகாய் பதத்துக்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

    இப்போது 'கோவக்காய் ஊறுகாய்' தயார்.

    இது ஆறியதும் கண்ணாடி ஜாடியில் போட்டு பயன்படுத்தவும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • நார்த்த‌ங்காயை எ‌ந்த வடிவ‌த்‌திலாவது உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர ர‌த்த‌ம் சு‌த்தமடையு‌ம்.
    • மலச்சிக்கல், சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது நார்த்தங்காய்.

    தேவையான பொருட்கள் :

    நார்த்தங்காய் - 5,

    வெல்லம் - 250 கிராம்,

    பச்சை மிளகாய் - 4,

    தனி மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,

    கடுகு - கால் டீஸ்பூன்,,

    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,

    எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    * நார்த்தங்காயின் தோல், கொட்டைகளை நீக்கி, சுளைகளை எடுத்து பொடியாக நறுக்கவும்.

    * ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும்.

    * கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்த பின்னர் ப.மிளகாய், நார்த்தங்காய் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்.

    * வடிகட்டி வைத்த வெல்லத்தை சேர்க்கவும்.

    * எல்லாம் சேர்ந்து நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் அடுப்பிலிருந்து இறக்கவும்.

    * அவ்வளவு தான் சூப்பரான நார்த்தங்காய் பச்சடி ரெடி.

    * நன்றாக ஆறியதும் காற்று போகாத டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • நீரிழிவு நோய் உள்ளவர்கள் எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
    • ஊறுகாயில் மிக அதிகமான அளவு சோடியம் இருக்கிறது.

    உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. குறிப்பாக உலகிலேயே அதிக அளவு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியாவில்தான் உள்ளனர் என்பது அடுத்த அதிர்ச்சி செய்தி…

    இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், இரத்தத்தில் உள்ள நீரிழிவு நோயின் அளவு அதிகமாக இருப்பது தான். நீரிழிவு நோய் உள்ளவர்கள் எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

    ஊறுகாயில் மிகக் குறைந்த அளவு கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட் இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் எப்போதாவது ஒருமுறை ஊறுகாய் சாப்பிடலாம். இதில் மிக அதிகமான அளவு சோடியம் இருக்கிறது. ஒரு ஊறுகாயில் கிட்டத்தட்ட 57 மில்லி கிராம் சோடியம் இருக்கிறது. இது ரத்த கொதிப்பை அதிகரிப்பது மட்டுமில்லாமல் பக்கவாதம், இருதய நோய் போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்பையும் அதிகரிக்கிறது.

    ஊறுகாயில் உள்ள அதிகமான அளவு சோடியம் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்திற்கு வேலைப்பளுவை அதிகப்படுத்துகிறது. மேலும் அதிகமான அளவு சோடியம் சில சமயம் வயிறு புற்றுநோய் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளதாக ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    அதிகமான அளவு சோடியம் எலும்பில் உள்ள கால்சியத்தை வெளியேற செய்து எலும்புப்புரை (ஆஸ்டியோபோரோசிஸ்) ஏற்படுத்தி எலும்பின் அடர்த்தியை இழக்கச் செய்து எலும்பு முறிவை ஏற்படுத்தலாம்.

    அதனால் கலோரிகள், கார்போஹைட்ரேட் குறைவாக இருந்தாலும் அதிகமான அளவு சோடியம் இதில் இருப்பதால் ஊறுகாயை நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. எப்போதாவது ஒருமுறை சேர்த்துக் கொள்ளலாம்.

    உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம்.

    நீரிழிவு நோயாளிகள் ஒருசில உணவுகளை சாப்பிடுவதன் மூலம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவில் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • செரிமானக் கோளாறை நீக்கும்.
    • சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.

    குஜராத் மாநிலத்தில் பாரம்பரிய முறையில் இனிப்பு, புளிப்பு, உப்பு மற்றும் காரம் என நான்கு சுவையையும் ஒன்றாகக் கலந்து தயாரிக்கப்படுவது 'நெல்லி சுண்டா'. ஊறுகாயைக் குறிக்கும் சொல் 'சுண்டா'. 'நெல்லி சுண்டா' நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    தேவையான பொருட்கள்:

    பெரிய நெல்லிக்காய் - 7

    வெல்லம் - 100 கிராம்

    மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

    மிளகுத்தூள் - ½ தேக்கரண்டி

    மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி

    பெருங்காயத்தூள் - ¼ தேக்கரண்டி

    சீரகத்தூள் - ½ தேக்கரண்டி

    இஞ்சி - 2 அங்குலத் துண்டு

    உப்பு - ½ தேக்கரண்டி

    எலுமிச்சம் பழச்சாறு - 1 தேக்கரண்டி

    தண்ணீர் - தேவையான அளவு

    செய்முறை:

    நெல்லிக்காயை நன்றாக சுத்தம் செய்து இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் 20 நிமிடங்கள் வேகவைக்கவும். பின்பு அதை ஆறவைத்து விதைகளை நீக்கி துருவிக் கொள்ளவும்.

    அடி கனமான பாத்திரத்தில், நெல்லிக்காய் துருவலுடன் வெல்லம் சேர்த்து மிதமான தீயில் கிளறவும்.

    வெல்லம் கரைந்த பிறகு அதில் இஞ்சி விழுது, மிளகுத்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நெல்லிக்காய் பொன்னிறமாக மாறும் வரை அடிப்பிடிக்கவிடாமல் கிளறவும்.

    பின்னர் அந்தக் கலவையில் பெருங்காயத்தூள் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பை அணைக்கவும்.

    இப்போது சுவையான 'நெல்லி சுண்டா' தயார்.

    இதைக் கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தி தினமும் சிறிது சாப்பிட்டு வரலாம்.

    • கேரட் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது.
    • ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்க உதவுகிறது.

    தேவையான பொருட்கள்:

    கேரட் - கால் கிலோ

    எலுமிச்சை பழம் - ஐந்து

    பச்சை மிளகாய் - பத்து

    பெருங்காயம் - அரை டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - ஒரு தேகரண்டி

    கடுகு - ஒரு தேகரண்டி

    உப்பு - தேவைகேற்ப

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் கேரட் துருவல், பச்சை மிளகாய், எலுமிச்சை பழம் சாறு, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளித்து கொட்டி கிளறி பரிமாறவும்.

    சூப்பரான கேரட் ஊறுகாய் ரெடி.

    • ஊறுகாய் பிரியர்களுக்கு வித்தியாசமான சுவை கொண்ட சிக்கன் ஊறுகாய் செய்து கொடுக்கலாம்.
    • பாரம்பரிய ஊறுகாயைப் போல பதப்படுத்தும் செயல்முறை இதற்குத் தேவையில்லை.

    பண்டையகாலம் முதலே, ஊறுகாய் நமது உணவுமுறையில் முக்கிய இடம் பிடித்து வருகிறது. சிறு அளவு ஊறுகாய், முழு உணவுக்கும் புது சுவை சேர்த்துவிடும். எலுமிச்சை, மாங்காய், பூண்டு, நார்த்தங்காய் ஆகிய ஊறுகாய்களை ருசித்து சலித்தவர்களுக்கு, வித்தியாசமான சுவை கொண்ட 'சிக்கன் ஊறுகாய்' செய்து கொடுக்கலாம். மற்ற பாரம்பரிய ஊறுகாயைப் போல பதப்படுத்தும் செயல்முறை இதற்குத் தேவையில்லை. அசைவ பிரியர்களுக்கு பிடிக்கும் 'சிக்கன் ஊறுகாய்' செய்முறை இதோ...

    பொரிப்பதற்குத் தேவையானவை:

    எலும்பு நீக்கப்பட்ட கோழிக்கறி - 500 கிராம்

    மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி

    மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

    இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக் கரண்டி

    எண்ணெய் - தேவையான அளவு

    மசாலா தயாரிக்கத் தேவையானவை:

    எண்ணெய் - 2 மேசைக் கரண்டி

    இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக் கரண்டி

    மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி

    மிளகாய்த்தூள் - ¼ கப்

    கடுகுத்தூள் - 1 மேசைக் கரண்டி

    வெந்தயத்தூள் - ¼ தேக்கரண்டி

    எலுமிச்சம்பழம் - அரை மூடி

    தாளிப்பதற்குத் தேவையானவை:

    எண்ணெய் - 2 மேசைக் கரண்டி

    வெந்தயம் - 1 தேக்கரண்டி

    காய்ந்த மிளகாய் - 5

    கறிவேப்பிலை - 10

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    பெரிய பாத்திரத்தில், சுத்தம் செய்த கோழிக்கறி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு, நன்றாகக் கலந்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

    வாணலியில் பொரிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். ஊறவைத்த கோழிக்கறியை சிறிது சிறிதாக அதில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாகவும், மிருதுவாகவும் மாறும் வரை பொரித்தெடுக்கவும்.

    மற்றொரு வாணலியில், மசாலா தயாரிக்கத் தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றி சூடுபடுத்தவும்.

    பின்பு அதில் இஞ்சிப் பூண்டு விழுதைப் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

    அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கடுகுத்தூள் மற்றும் வெந்தயத்தூள் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.

    இந்த மசாலா கலவையுடன் வறுத்த சிக்கனைச் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    மற்றொரு வாணலியில் தாளிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், வெந்தயம், காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.

    பின்பு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து அடுப்பை அணைக்கவும்.

    இந்த தாளிப்பைச் சிக்கனுடன் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.

    பிறகு, அதை சூடு தணியும் வரை ஆறவைக்கவும்.

    பின்பு இந்த சிக்கன் ஊறுகாயில் எலுமிச்சம்பழச் சாற்றைப் பிழிந்து, பரிமாறுங்கள்.

    ×