search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    வைட்டமின் சி நிறைந்த நார்த்தங்காய் பச்சடி
    X

    வைட்டமின் சி நிறைந்த நார்த்தங்காய் பச்சடி

    • நார்த்த‌ங்காயை எ‌ந்த வடிவ‌த்‌திலாவது உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர ர‌த்த‌ம் சு‌த்தமடையு‌ம்.
    • மலச்சிக்கல், சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது நார்த்தங்காய்.

    தேவையான பொருட்கள் :

    நார்த்தங்காய் - 5,

    வெல்லம் - 250 கிராம்,

    பச்சை மிளகாய் - 4,

    தனி மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,

    கடுகு - கால் டீஸ்பூன்,,

    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,

    எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    * நார்த்தங்காயின் தோல், கொட்டைகளை நீக்கி, சுளைகளை எடுத்து பொடியாக நறுக்கவும்.

    * ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும்.

    * கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்த பின்னர் ப.மிளகாய், நார்த்தங்காய் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்.

    * வடிகட்டி வைத்த வெல்லத்தை சேர்க்கவும்.

    * எல்லாம் சேர்ந்து நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் அடுப்பிலிருந்து இறக்கவும்.

    * அவ்வளவு தான் சூப்பரான நார்த்தங்காய் பச்சடி ரெடி.

    * நன்றாக ஆறியதும் காற்று போகாத டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    Next Story
    ×