என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Veg Recipes"
- குழந்தைகளுக்கு பள்ளிக்கு இந்த ரெசிபியை கொடுத்தனுப்பலாம்.
- இந்த சாட் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
முறுக்கு - தேவையான அளவு
கேரட் - 1
பீட்ரூட் - 1
வெங்காயம் - 1
எலுமிச்சம் பழச்சாறு - 1 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - 1 கட்டு
தேங்காய் - 1 துண்டு
பொட்டுக்கடலை - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 5
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், கேரட், பீட்ரூட் ஆகியவற்றை பொடிதாக நறுக்கிக்கொள்ளவும்.
அவற்றுடன் எலுமிச்சம் பழச்சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.
இந்த கலவையை அரை மணி நேரத்துக்கு அப்படியே மூடி வைக்கவும்.
ஒரு மிக்சி ஜாரில் கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், தேங்காய், பொட்டுக்கடலை, உப்பு ஆகியவற்றை போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக சட்னி பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முறுக்கை பொடியாக நொறுக்கிப் போடவும்.
அதனுடன் 2 தேக்கரண்டி சாலட் கலவை (கலந்து வைத்த காய்கறி), 1 தேக்கரண்டி சட்னி சேர்த்து நன்றாகக் கிளறினால் சுவையான 'முறுக்கு காய்கறி சாட் ' ரெடி.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இந்த ஸ்நாக்ஸ் சத்தானது சுவையானது.
- இந்த ரெசிபி செய்ய அதிக நேரம் ஆகாது.
தேவையான பொருட்கள் :
மைதா மாவு - 200 கிராம்,
ஏதாவது ஒரு கீரை - ஒரு கைப்பிடி அளவு,
வெங்காயம் - 2,
ப.மிளகாய் - 3
கோஸ் துருவல் - 4 டீஸ்பூன்,
கேரட் துருவல் - 2 டீஸ்பூன்,
உருளைக்கிழங்கு - 2,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,
கரம் மசாலாத்தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
மைதா மாவுடன் சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து அரை மணிநேரம் மூடி வைக்கவும்.
கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்துக்கொள்ளவும்.
ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், ப.மிளகாய், கீரை, கோஸ் துருவல், கேரட் துருவல் ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
வதக்கிய கீரை மற்றும் காய்களுடன், மசித்த உருளைக்கிழங்கு, கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துப் பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
மைதா மாவை, சின்ன உருண்டைகளாக உருட்டி, சிறிய வடிவில் இட்டு உள்ளே கீரை - வெஜிடபிள் உருண்டைகளை வைத்து சமோசா வடிவில் மூடவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்த சமோசாக்களை போட்டு பொரித்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான கீரை வெஜிடபிள் சமோசா ரெடி.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- காய்கறிகளை சாப்பிடாத குழந்தைகளுக்கு இதை செய்து கொடுக்கலாம்.
- இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ரவை - 1 கப்
பெரிய வெங்காயம்- 1
தக்காளி - 1
கேரட்- 1
பச்சைப்பட்டாணி- கால் கப்
உருளைக்கிழங்கு - 1
முட்டைக்கோஸ்- துருவியது கால் கப்
இஞ்சி- சிறிய துண்டு
பச்சை மிளகாய்- 2
மிளகாய் வற்றல்- 2
உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் - தேவையான அளவு
கொத்தமல்லி- அலங்கரிக்க
தாளிக்க:
நெய் அல்லது எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு- 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு- 1 டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 இணுக்கு
செய்முறை:
* தக்காளி, வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி, காய்கறிகள், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வெறும் கடாயில் ரவையை போட்டு சிவக்க வறுக்கவும்.
* பச்சை பட்டாணியை வேக வைத் கொள்ளவும்.
* 1 கப் ரவைக்கு 1 1/2 கப் தண்ணீரை வேக வைக்க வேண்டும், அதற்கு 1 1/2 கப் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும்.
* வாணலியில் எண்ணெயிட்டு சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் இஞ்சி, ப.மிளகாய், காய்ந்த மிளகாய், வெங்காயத்தை வதக்க வேண்டும்.
* பிறகு காய்கறிகளைச் சேர்த்து வதக்கின பிறகு கடைசியாகத் தக்காளியைச் சேர்க்க வேண்டும். தக்காளி சீக்கிரம் வதங்கி விடும் என்பதால் இறுதியில் சேர்த்தால் போதும்.
* அடுத்து அதில் கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி வேக விடவும்.
* அடுத்து அதில் உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்த்து வேக விடவும்.
* காய் வெந்தவுடன் வறுத்த ரவையைக் கொதிக்கும் கலவையுடன் கொட்டிக் கொண்டே கிளற வேண்டும்(இல்லையென்றால் அடி பிடித்து விடும்).
* ரவை வெந்து எண்ணெயிடும் போது ஒட்டாமல் வரும், அப்போது கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.
* இப்போது சூப்பரான காய்கறி ரவா உப்புமா ரெடி.
* பத்து நிமிடங்களில் தயார் செய்து விடக் கூடிய எளிய சுவை மிகுந்த சிற்றுண்டி வகை இது.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இந்த ரெசிபி அனைவருக்கும் பிடிக்கும்.
- இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மசாலா தூள் அரைக்க
தனியா - 4 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
கடலை பருப்பு - 4 டீஸ்பூன்
வேர்க்கடலை - 2 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 10
பூண்டு - 4 பற்கள் நீளவாக்கில் நறுக்கியது
எள்ளு - 2 தேக்கரண்டி
கொப்பரை தேங்காய் துருவியது - அரை கப்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
ஸ்டஃப்டு கத்தரிக்காய் செய்ய
கத்திரிக்காய் - 1 கிலோ
மிளகாய் தூள் - 4 டீஸபூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
அரைத்த மசாலா பொடி - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
* கத்திரிக்காயை நன்றாக கழுவி நீளவாக்கில் 4 பாகமாக நறுக்கி வைக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தனியா, சீரகம், கடலை பருப்பு, வேர்க்கடலை, காய்ந்த மிளகாய் சேர்த்து மிதமான தீயில் வறுத்து கொள்ளவும்.
* மசாலா பொன்னிறமாக மாறியதும் அதில் நீளவாக்கில் நறுக்கிய பூண்டு மற்றும் எள்ளு சேர்த்து வறுக்கவும்.
* பிறகு கொப்பரை தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து, நன்கு ஆற வைத்து ஆறியதும் தூளாக அரைத்து கொள்ளவும்.
* உப்பு, மிளகாய் துள், அரைத்த மசாலா தூள் சேர்த்து நன்றாக கலந்து அதை கத்திரிக்காயில் உள்ளே வைத்து மூடவும். இவ்வாறு அனைத்து கத்திக்காயிலும் செய்யவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பிறகு கத்தரிக்காவை போட்டு வதக்கவும்.
* அடுத்து ஒரு சிட்டிகை உப்பு மற்றும் அரைத்த மசாலாவை சேர்த்து கடாயை மூடி 5 நிமிடம் வேகவிடவும்.
* கத்தரிக்காயை திருப்பி விட்டு மூடி 5 நிமிடம் வேகவிடவும்.
* 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து இறக்கினால் செட்டிநாடு ஸ்டைல் ஸ்டஃப்டு கத்தரிக்காய் தயார்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- மூளையின் செல்கள் வளர்ச்சிக்கு வல்லாரைக்கீரை பெரிதும் உதவும்.
- இந்த இந்த துவையல் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வல்லாரைக்கீரை - ஒரு கப்,
பூண்டு - 2 பல்,
தேங்காய் துருவல் - கால் கப்,
காய்ந்த மிளகாய் - 5,
எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
வல்லாரைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வல்லாரைக்கீரை, பூண்டு, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி ஆறவைத்து ஆறியதும் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.
அரைத்த விழுதில் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.
இப்போது சத்தான சுவையான வல்லாரை துவையல் ரெடி.
குறிப்பு: ஞாபக சக்தி, உடல் வலிமை, மூளையின் செல்கள் வளர்ச்சிக்கு வல்லாரைக்கீரை பெரிதும் உதவும். புளி சேர்க்காமல் இதை சமைக்க வேண்டும். அப்போதுதான் இதன் முழு பலனும் கிட்டும்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- கீரை சாப்பிடாத குழந்தைகளும் இந்த ஸ்நாக்ஸை விரும்பி சாப்பிடுவார்கள்.
- இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஏதாவது ஒரு கீரை - 1 கட்டு
கடலை மாவு - 2 கப்
அரிசி மாவு - 4 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - சிறு துண்டு
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை :
கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முந்திரிப்பருப்பு, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றுடன் இஞ்சி, பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு, சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
இத்துடன் சுத்தம் செய்து வைத்துள்ள கீரையை சேர்த்து பக்கோடா மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.
தண்ணீர் சேர்த்து பிசிறினாற்போல் உதிரியாக தயாரிக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் 2 டீஸ்பூன் எடுத்து பக்கோடா மாவில் விட்டு பிசிறி கொள்ளவும்.
எண்ணெய் காய்ந்ததும் மாவை சிறிது சிறிதாக கிள்ளிப்போட்டு எடுக்கவும்.
இப்போது சூப்பரான கீரை பக்கோடா ரெடி.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- வரகரிசி உணவுகளை சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.
- கொள்ளு அதிக புரதச்சத்து நிறைந்தது.
தேவையான பொருட்கள்:
வரகு அரிசி - 200 கிராம்
கொள்ளு - 50 கிராம்
சீரகம் - 2 டீஸ்பூன்
மிளகு - 15
நெய் - 3 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - ஒன்று
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கொள்ளுப் பயறை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
வரகரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சியுடன் பச்சை மிளகாய் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்தெடுக்கவும்.
குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், மிளகு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும்.
அதனுடன் இஞ்சி - பச்சை மிளகாய் விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
அதனுடன் கொள்ளு, வரகு சேர்த்து குக்கரை மூடி ஆறு விசில்விட்டு இறக்கவும்.
குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
சத்தான சுவையான வரகு அரிசி கொள்ளு பொங்கல் ரெடி.
குறிப்பு: விரும்பினால் முந்திரி சேர்க்கலாம். சாதாரண அரிசியைவிட சிறுதானியங்கள் இறுகும் தன்மையுடையதால் தண்ணீர் அதிகமாகச் சேர்க்கவும்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- டயட்டில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் இது.
- குழந்தைகளுக்கு சத்தானது இந்த ஸ்நாக்ஸ்.
தேவையான பொருட்கள்
பீட்ரூட் - 2,
பெரிய உருளைக்கிழங்கு - 1,
கொண்டைக் கடலை - 1 கப்,
வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 2,
இஞ்சி - சிறிய துண்டு,
கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சோம்பு - தலா 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிது.
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
செய்முறை
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.
கொண்டைக் கடலையை 8 மணிநேரம் ஊற வைத்து குழையாமல் பதமாக வேகவைக்கவும்.
ப.மிளகாய், கொத்தமல்லித்தழை, இஞ்சி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பீட்ரூட்டை தோல் நீக்கி துருவி கடாயில் போட்டு லேசாக வதக்கவும்.
மிக்சியில் கொண்டைக்கடலையை கரகரப்பாக அரைத்து அதனுடன் வதக்கிய பீட்ரூட்டை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த பீட்ரூட் கலவை, மசித்த உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய ப.மிளகாய், கொத்தமல்லித்தழை, இஞ்சி, வெங்காயம், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சோம்பு , உப்பு சேர்த்து நன்றாக கெட்டியாகப் பிசைந்து விருப்பமான வடிவத்தில் செய்து கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த டிக்கிகளை வைத்து மேலே சிறிது எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து, விரும்பினால் மேலே முந்திரி பதித்து, சாட் மசாலா தூவி பரிமாறவும்.
இப்போது சூப்பரான பீட்ரூட் சென்னா டிக்கி ரெடி.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- புளிச்சக்கீரையில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று புளிச்சக்கீரையில் ஊறுகாய் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
புளிச்சக்கீரை - 4 கட்டு,
வெந்தயம் - 1 டீஸ்பூன்,
தனியா - 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 4,
கடுகு உளுந்தம்பருப்பு - 3 டீஸ்பூன்,
எள் - 3 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
வற்றல் மிளகாய் - 4 அல்லது 5,
எண்ணெய், உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை
புளிச்சக்கீரை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு புளிச்சக் கீரையை போட்டு வதக்க வேண்டும்.
அடுத்து அதில் வெந்தயம், தனியா, எள், சீரகம், பச்சை மிளகாய் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து வதக்கி, ஆறியவுடன் அரைக்கவும்.
மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயைச் சேர்த்து தாளித்த பின்னர் அரைத்த கோங்குரா பேஸ்ட்டை இதனுடன் சேர்த்து வதக்கினால் சுவையான கோங்குரா ஊறுகாய் ரெடியாகிவிடும்.
இதை இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- புளிச்சக்கீரயில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து நிறைந்தது.
- இந்த கீரை சாப்பிட்டால் மலச்சிக்கல் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.
தேவையான பொருட்கள்
புளிச்சக்கீரை - 2 கப்,
தனியா தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் மற்றும் உப்பு - தேவையான அளவு,
வேர்க்கடலைத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்,
சர்க்கரை மற்றும் பெருங்காயம் - 1 சிட்டிகை,
கடுகு உளுந்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்.
செய்முறை
புளிச்சக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பை போட்டுத் தாளிக்க வேண்டும்.
அதில் தனியா மற்றும் மிளகாய் தூளைச் சேர்க்கவும்.
அதன்பின் அதோடு புளிச்சக்கீரையைப் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
அடுத்து அதில் சிறிதளவு பெருங்காயம், சீனி, உப்பு சுவைக்கேற்ப சேர்க்க வேண்டும்.
புளிச்சக்கீரை நன்றாக வதக்கியதும் ஆறிய வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்தால் சுவையான கோங்குரா சட்னி ரெடியாகிவிடும்.
இந்தச் சட்னியை இட்லி, தோசையோடு சேர்த்து சாப்பிடலாம்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- பலாக்காய் வைத்து சமைக்கும் ரெசிபி இது.
- சப்பாத்தி, சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
பலாக்காய் - 1 சிறியது
பிரியாணி இலை - 2
காய்ந்த மிளகாய் - 3
மிளகு - 1 டீஸ்பூன் (லேசாக இடித்தது)
பெருங்காயம் - ½ டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது
சின்ன வெங்காயம் - ½ கிலோ
பூண்டு - 20 பல்
இஞ்சி - 3 அங்குலத் துண்டு
எண்ணெய் - தேவையான அளவு
இளஞ்சூடான தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலாவுக்கு:
கருப்பு ஏலக்காய் - 2
பச்சை ஏலக்காய் - 3
ஜாதிக்காய் - 1
ஜாதிபத்திரி - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
கிராம்பு - 10
கல்பாசி - 2 கிராம்
பட்டை - 1
அன்னாசி பூ - 1
செய்முறை:
கரம் மசாலா தயாரிப்பதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்களுடன் உப்பு சேர்த்து அரைத்துப் பொடியாக்கிக்கொள்ளவும்.
பலாக்காயை மேல்தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். இதனால், பலாக்காயில் உள்ள பிசுபிசுப்பு குறையும், காய் கருத்துப் போகாமல் இருக்கும்.
இஞ்சி மற்றும் 10 பல் பூண்டை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, பெருங்காயம், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின்பு சின்ன வெங்காயம், பலாக்காய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி வாணலியை மூடி வைக்கவும்.
10 நிமிடங்கள் கழித்து வாணலியைத் திறந்து, இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கிளறவும்.
3 நிமிடங்களுக்குப் பிறகு 200 மில்லி இளஞ்சூடான தண்ணீரைச் சேர்த்துக் கிளறி, வாணலியை மூடி வைக்கவும்.
பத்து நிமிடங்களுக்குப் பின்னர், தோலுடன் கூடிய 10 பல் பூண்டு, அரைத்த கரம் மசாலா, கருப்பு மிளகு, காய்ந்த வற்றல், மிளகாய்த் தூள், மல்லித்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
இப்போது 300 மில்லி இளஞ்சூடான தண்ணீரைச் சேர்த்து அதிகமான தீயில் 8 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும்.
பின்பு குறைந்த அளவு தீயில் 25 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து, அவ்வப்போது கிளறி விடவும்.
கலவையில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் நிலையில், அடுப்பை அணைத்து நன்றாகக் கிளறி இறக்கவும். சுவையான கதல் மசாலா தயார்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- புடலங்காயில் கூட்டு, பொரியல் செய்து சாப்பிட்டிருப்பீர்கள்.
- இன்று புடலங்காயில் சூப்பரான பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
புடலங்காய் - 1
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/2 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
புடலங்காயின் தோலை நீக்கிவிட்டு, அதனை வட்ட வட்டமாக வெட்டி, அதனுள் உள்ள விதைகளை நீக்கி விட வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெட்டி வைத்த புடலங்காயை பஜ்ஜி மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், புடலங்காய் பஜ்ஜி ரெடி!!!
கொத்தமல்லி அல்லது தக்காளி சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவிது.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்