search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thunivu"

    • எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான திரைப்படம் ‘துணிவு’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிட்டது.


    துணிவு

    வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், அஜித்தின் டான்ஸ் மூவ்ஸ் பற்றி இயக்குனர் எச். வினோத் கூறியதாவது, "துணிவு படத்தின் முதல் பாதியில் வரும் சில நடனங்கள் அஜித் சாரே ஆடியது. பெரிய ஆங்கில் எதுவும் பார்க்கவில்லை. கேமராவை வைத்து விட்டு நீங்க ஆடுங்க சார் என்று விட்டு விட்டோம். மைக்கேல் ஜாக்சன் மூன் வாக் 'moonwalk' நடனத்தை நானும் கல்யாண் சாரும் கேட்காமலே அஜித் சார் அவராகவே ஆசைப்பட்டு ஆடினார். அந்த கதைக்கு சரியாக தேவைப்பட்டது. அதை அஜித் சார் ஈசியாக செய்து விட்டார்" என்று நெகிழ்ச்சியாக கூறினார்.

    • எச் வினோத் இயக்கத்தில் நேற்று முன்தினம் வெளியான திரைப்படம் ‘துணிவு’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிட்டது.


    விக்னேஷ் சிவன் பதிவு

    வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன் 'துணிவு' திரைப்படத்தை பார்த்து ரசிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு "திரையில் கிங்கை பார்ப்பது ரசிப்பது அலாதியானது. அனைத்து விதத்திலும் 'துணிவு' திரைப்படம் பிளாக் பஸ்டர். எச்.வினோத் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என பதிவிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

    • துணிவு - வாரிசு திரைப்படங்கள் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
    • ஜனவரி 13-ஆம் தேதி முதல் 16 -ஆம் தேதி வரை வாரிசு மற்றும் துணிவு படங்களின் அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.

    இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் மற்றும் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் வெகு விமர்சையாக நேற்று திரையரங்குகளில் வெளியானது. இரு நடிகர்களின் ரசிகர்கள் மட்டுமல்லாது பல திரைப் பிரபலங்களும் ரசிகர்களுடன் சிறப்புக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தனர்.


    வாரிசு -துணிவு

    இதைத்தொடர்ந்து ஜனவரி 13-ஆம் தேதி முதல் 16 -ஆம் தேதி வரை வாரிசு மற்றும் துணிவு படங்களின் அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல், திரையரங்க வளாகங்களில் உள்ள உயர்வான பேனர்களுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்யவும் விதிகளை மீறி அதிக கட்டணம் வசூலிப்பதற்கும் தடை விதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.


    துணிவு - வாரிசு

    இந்நிலையில், தற்போது திரையரங்க அதிபர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12, 13 மற்றும் 18-ம் தேதிகளில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களுக்கு கூடுதல் காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், 14-ம் தேதி முதல் 17 -ம் தேதி வரையி்ல் திரையரங்குகளில் 4 காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் நேற்று வெளியானது.
    • இப்படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

    விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் நேற்று வெளியானது. இந்த இரு படங்களும் ஒரே சமயத்தில் வெளியானதால் ரசிகர்கள், திரையுலகினர், சினிமா விமர்சகர்கள் என பலரின் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும் ரசிகர்கள் திரையரங்குகளில் மேள தாளம் முழங்க, கட் அவுட் வைத்து மாலை அணிவித்து தங்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். இதற்கு முன்பு விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம் திரைப்படமும் 9 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

     

    வாரிசு - துணிவு

    வாரிசு - துணிவு


    இந்நிலையில் வாரிசு-துணிவு திரைப்படங்களின் தமிழ்நாட்டில் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படங்கள் தமிழ்நாட்டில் மட்டும் வெளியான முதல் நாளில் தலா ரூ.20 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. 

    • நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • அஜித்திற்கு 9.144 மீட்டர் உயர கட் அவுட் மலேசிய சாதனை புத்தகத்தில் இடப்பிடித்தது.

    நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பட வெளியீட்டை முன்னிட்டு மலேசியாவில் அஜித்திற்கு 9.144 மீட்டர் உயர கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் நடிகர் ஒருவருக்காக வைக்கப்பட்ட மிக உயரமான கட் அவுட் இது என கூறப்படுகிறது.

     


    துணிவு படத்தின் முதல் காட்சி நேற்று காலை 8.30 மணிக்கு மலேசியாவில் உள்ள பிஜே எல்எப்எஸ் ஸ்டேட் சினிபிளக்ஸ் திரையரங்கில் திரையிடப்பட்டது. ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடிய நிலையில், திரையரங்கு முன் வைக்கப்பட்ட அஜித்தின் 30 அடி உயர கட் அவுட் மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. இதற்கான அங்கீகார சான்றிதழ் திரைப்பட விநியோகஸ்தரிடம் வழங்கப்பட்டது. துணிவு படத்தின் மலேசியா உரிமத்தை அங்குள்ள பிரபல முன்னணி நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் கைப்பற்றியுள்ளது. ரசிகர்களின் இந்த செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது.

    • எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் நேற்ற திரையரங்குகளில் வெளியானது.
    • இப்படத்தை திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிட்டது.

     

    லிங்குசாமி

    லிங்குசாமி

    வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் துணிவு படத்தை ஆனந்தம், ரன், ஜி, சண்டக்கோழி போன்ற பல படங்களை இயக்கிய லிங்குசாமி பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், துணிவு திரைப்படம் அஜித் சாரின் மங்காத்தா மற்றும் வினோத்தின் சதுரங்கவேட்டையின் கலவையாகும். அது இறுக்கமாகவும் திடமாகவும் இருந்தது. வாழ்த்துக்கள் போனிகபூர் சார் மற்றும் படக்குழுவினருக்கு. இந்த பொங்கலுக்கு மாபெரும் வெற்றியடைகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    • வாரிசு, துணிவு திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது.
    • இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியானதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    சென்னை:

    அஜித் நாயகனாக நடித்துள்ள துணிவு படத்தை எச்.வினோத்தும், விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் வாரிசு படத்தை வம்சியும் இயக்கி உள்ளனர். இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

    தமிழ்நாட்டில் துணிவு திரைப்படம் நள்ளிரவு சரியாக 1 மணிக்கும், வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணிக்கும் வெளியாகியது. இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியானதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12, 13, 14 தேதிகளில் வாரிசு, துணிவு ஆகிய திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திரைப்பட விநியோகஸ்தர்களின் கோரிக்கையை ஏற்று 12-ம் தேதி , 13-ம் தேதி மற்றும் ஜனவரி 18-ம் தேதி ஆகிய தேதிகளில் மட்டுமே வாரிசு, துணிவு திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையில் திரையரங்குகளில் 4 காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் இன்று வெளியானது.
    • இப்படத்தின் சிறப்பு காட்சியை ரசிகர்களுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பார்த்து மகிழ்ந்தார்.

    இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் மற்றும் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் வெகு விமர்சையாக இன்று திரையரங்குகளில் வெளியானது. இரு நடிகர்களின் ரசிகர்கள் மட்டுமல்லாது பல திரைப் பிரபலங்களும் ரசிகர்களுடன் சிறப்புக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தனர்.


    துணிவு - வாரிசு

    இதையடுத்து சென்னையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் ரசிகர்களுடன் வாரிசு படத்தைப் பார்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தளபதி 67 படம் குறித்து கூறியதாவது, "வாரிசு படத்தின் ரிலீஸுக்காக காத்திருந்தேன். இதன் பிறகு அப்டேட்கள் வரும்" எனக் கூறினார்.


    லோகேஷ் கனகராஜ்

    இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும், விரைவில் தளபதி 67 படத்தின் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி 67 படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

    • போக்குவரத்துக்கு இடையூறாக பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை கைகளால் தட்டி ஆரவாரம் செய்தனர்.
    • பாதுகாப்புக்கு நின்ற கோட்டை போலீசார் ரசிகர்களை கலைந்து செல்லும்படி எச்சரிக்கை விடுத்தனர்.

    நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவான துணிவு திரைப்படம் இன்று (புதன் கிழமை) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இதை முன்னிட்டு திருச்சி மாநகரில் 6 தியேட்டர்களில் இன்று அதிகாலை 1.30 மணிக்கு ரசிகர் மன்றத்தினருக்கு சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அந்த திரையரங்குகள் முன்பு இரவு 11 மணி முதல் ரசிகர்கள் திரள தொடங்கினர். திருச்சி மாரிஸ் பாலம் அருகாமையில் உள்ள தியேட்டரிலும் துணிவு திரைப்படம் நள்ளிரவு திரையிடப்பட்டது. இதையடுத்து நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் அங்கு குவிந்தனர்.

    பின்னர் அவர்கள் படம் திரையிடுவதற்கு முன்பாக நள்ளிரவு 12.30 மணி அளவில் போக்குவரத்துக்கு இடையூறாக மாரிஸ் பாலத்தில் நின்று கொண்டு அந்த வழியாக சென்ற பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை கைகளால் தட்டி ஆரவாரம் செய்தனர். மேலும் ஒரு ஆட்டோவின் மீது ஐந்துக்கும் மேற்பட்டோர் ஏறி நின்று ஆட்டம் போட்டனர். இதில் அந்த ஆட்டோ சேதம் அடைந்தது. இதற்கிடையே அந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

    சாலையின் இரு பக்கங்களிலும் பாலத்தில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்து நின்றது. அதைத்தொடர்ந்து பாதுகாப்புக்கு நின்ற கோட்டை போலீசார் ரசிகர்களை கலைந்து செல்லும்படி எச்சரிக்கை விடுத்தனர். இருந்தபோதிலும் வாண வேடிக்கைகளை நாலாபுறமும் திருப்பி விட்டு வெடிக்க செய்ததாக கூறப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கூட்டத்தை கலைக்க ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர். போலீசாரின் அதிரடியால் ரசிகர்கள் அங்கும் இங்குமாக சிதறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் திட்டமிட்டபடி நள்ளிரவு காட்சி அந்த தியேட்டரில் திரையிடப் பட்டது. இந்த போலீஸ் தடியடியில் பத்துக்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்களுக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது. மேலும் இருசக்கர வாகனங்களும் சேதம் அடைந்தன. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது.

    • விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு திரைப்படங்கள் இன்று தியேட்டர்களில் வெளியானது.
    • இதற்காக ரசிகர்கள் இரவு முதலே தியேட்டர்களில் குவித்து உற்சாகத்துடன் படத்தை வரவேற்றனர்.

    இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் மற்றும் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகை ஒட்டி இன்று அதிகாலை தியேட்டர்களில் வெளியானது. இரு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானதால் பெரும் பாரபரப்பு ஏற்பட்டது.

     


    தியேட்டர்கள் முன்பு அசம்பாவிதங்களை தடுக்க நேற்று இரவு முதல் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரு திரைப்படங்களையும் பார்க்க நேற்று இரவு முதல் ஏராளமான ரசிகர்கள் தியேட்டர் முன்பு குவிந்திருந்தனர். இதனால் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.



    துணிவு மற்றும் வாரிசு படங்கள் சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 70 தியேட்டர்களில் 50-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இன்று திரையிடப்பட்டன. துணிவு திரைப்படம் இன்று அதிகாலை 1 மணிக்கும், வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணிக்கும் தியேட்டர்களில் ரிலீசானது. இதனை ரசிகர்கள் உற்சாகமாக ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் திரைப்படங்களை ரசிகர்கள் ஆர்வத்துடன் வரவேற்றனர்.



    இந்நிலையில், சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. படம் பார்க்க வந்த ரசிகர்கள் தியேட்டர்களுக்குள் முண்டி அடித்தபடி நுழைந்தனர். அப்போது கூட்ட நெரிசலுக்கு தாக்குபிடிக்க முடியாமல் அங்கிருந்த கண்ணாடிகள் உடைந்து நொறுங்கி விழுந்தன. மேலும் 2 ரசிகர்கள் கேட்டின் மீது இருந்து கீழே குதித்ததில் கண்ணாடிகள் குத்தி ரத்த காயமடைந்தனர். இது தவிர மற்றொரு ரசிகர் கூட்ட நெரிசலில் சிக்கி காலில் பலத்த காயம் அடைந்தார். மேலும் அதிவேகத்தில் அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பியபடி மோட்டார் சைக்கிளில் சென்ற சிலரை கைது செய்த போலீசார் அவர்களின் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். 

    • உயிரிழந்த அஜித் ரசிகர் சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த 19 வயது ஆன பரத்குமார் என தெரியவந்துள்ளது.
    • விபத்து குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் இன்று முதல் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. திரைப்படத்தை காண நேற்று இரவு முதலே ரசிகர்கள் திரையரங்குகளை சூழ்ந்து கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில், சென்னையில் ரோகினி திரையரங்கில் துணிவு படம் பார்க்க வந்த அஜித் ரசிகர் ஒருவர் திரையரங்கின் முன்பு சாலையில் சென்ற லாரி மீது ஏறி நின்று நடனமாடியபோது கீழே விழுந்து உயிரிழந்தார்.

    முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    உயிரிழந்த அஜித் ரசிகர் சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த 19 வயது ஆன பரத்குமார் என தெரியவந்துள்ளது.

    விபத்து குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் தியேட்டரில் வெளியானது.
    • இதை அஜித் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

    சென்னை:

    அஜித்குமார் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள படம் துணிவு. இதில் மஞ்சு வாரியர், ஜான் கொகேன், நயனா சாய், ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், சமுத்திரக்கனி, பகவதி பெருமாள் அஜய், வீரா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

    இந்நிலையில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் உலகம் முழுவதும் துணிவு படம் இன்று வெளியானது.

    தமிழ்நாடு முழுவதும் முதல் காட்சியாக நள்ளிரவு 1 மணிக்கு தியேட்டர்களில் துணிவு திரைப்படம் வெளியாகியது. இதை அஜித் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

    ×