என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "thiruppathi"
- ஒவ்வொரு நாளும் இரவில் ஏகாந்தசேவை நடைபெறுகிறது.
- பழங்கள், பாதாம் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் இரவில் ஏகாந்தசேவை நடைபெறுகிறது.
இந்த ஏகாந்த சேவைக்காக போக ஸ்ரீநிவாசனை வெல்வெட் விரித்த மெத்தையில் வைத்து, வெள்ளிச் சங்கிலிகள் இணைத்த ஊஞ்சல் கட்டிலில் சயனிக்கச் செய்கின்றனர்.
சயன மண்டபத்திலேநடைபெறும் இச்சேவையின்போது முக்கியஸ்தர்கள் மாத்திரமே உடனிருக்கிறார்கள்.
பெருமாளுக்கு வழக்கமான நைவேத்தியங்களைச் செய்யும்போது அவற்றை வகுளாதேவி பார்வையிடுகிறார்.
அவருக்கும் அம்மவாரி பாயசம் படைக்கப்பெறுகிறது.
பழங்கள், பாதாம் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.
கி.பி. 1513-ம் ஆண்டில் விஜயநகரப் பேரரசை ஆண்ட கிருஷ்ண தேவராயர் இத்திருக்கோவிலுக்கு ஏராளமான
தங்க, வைர நகை களைக் காணிக்கையாக வழங்கி உள்ளார்.
மீண்டும் கி.பி. 1517ம் ஆண்டில் ஏராளமான தங்க அணிகலன்களை வழங்கினார்.
அச்சமயம் இவரது இரண்டு தேவியர்கள் இரண்டு தங்கக் கிண்ணங்களை பெருமாள் கோவிலுக்கு காணிக்கையாக அளித்திருக்கிறார்கள்.
அந்த பொற்கிண்ணங்களில்தான் ஏகாந்த சேவையின்போது வெங்கடேசப் பெருமாளுக்கு பால் வழங்கப் பெறுகின்றது.
மேலே கண்ட நித்திய சேவைகள் ஒவ்வொரு நாளும் நடை பெறும் சேவைகள் ஆகும்.
- தர்பார் சேவைக்குப் பின்னர் பெருமாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறுகிறது.
- அஷ்டோத்திர அர்ச்சனை நிறைவானதும் பெருமாளுக்கு நைவேத்தியம் படைக்கப் பெறுகிறது.
தர்பார் சேவைக்குப் பின்னர் பெருமாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறுகிறது.
உலகம் செழிப்பாகவும், நிம்மதியாகவும் இருக்க அவருக்கு 1008 நாமாக்களைக் கூறி அர்ச்சனை நடைபெறுகிறது.
இந்த சேவையின்போது அர்ச்சனை செய்ய விரும்பும் பக்தர்களும் கலந்து கொள்ளலாம்.
பின்னர் சுத்தி என்று அழைக்கப்பெறும் நைவேத்தியம் சுவாமிக்கு படைக்கப்படுகிறது.
அரிசியினால் பக்குவமான உணவு வகைகளை நைவேத்தியம் செய்கின்றார்கள்.
இந்த சுத்தி சேவைக்காலத்தில் பிரதான நைவேத்தியம் படையல் செய்யப்படும்போது, மண்டபத்தில் உள்ள இரண்டு திருமாமணிகளை அடித்து ஓசை எழுப்புகிறார்கள்.
அது ஏழு மலைகளிலும் எதிரொலித்து, கேட்பவர்களின் நெஞ்சில் பக்தி உணர்வையும், பகவானின் மீது பிரேமையையும் கிளர்ந்தெழச் செய்கிறது.
இதுவே கோவிலில் ஒலிக்கும் முதலாவது மணியாகும்.
சாத்துமறை சேவையின்போது வைஷ்ணவர்கள் திவ்யப் பிரபந்தத்திலிருந்து ஒரு பகுதியை வாசிக்கிறார்கள்.
பின்னர் சம்பூரண அலங்கார ரூபிதராய், பெருமாள் பொதுமக்களின் பார்வைக்குக் காட்சியளிக்கத் தொடங்குகிறார்.
பெருமாள் இவ்விதம் பக்தர்களுக்கு தரிசனம் தந்த பின்னர் பூஜைகள் நடைபெறுகின்றன.
108 அர்ச்சனை நடைபெறுகிறது.
அந்த அஷ்டோத்திர அர்ச்சனை நிறைவானதும் பெருமாளுக்கு நைவேத்தியம் படைக்கப் பெறுகிறது.
இந்த சேவையின்போது சேவார்த்திகள் தவிர வேறு யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை.
- திருப்பதி கோவிலில் ஒவ்வொரு நாளும் சுப்ரபாதத்துடன் தான் பொழுது தொடங்குகிறது.
- இந்தக் கணக்கைப் பார்த்த பின்னர் பெருமாள் கருவறைக்குச் சென்று விடுகிறார்.
திருப்பதி கோவிலில் ஒவ்வொரு நாளும் சுப்ரபாதத்துடன் தான் பொழுது தொடங்குகிறது.
அரிதுயில் கொண்டிருக்கும் போக ஸ்ரீநிவாசரை பள்ளியறையில் அர்ச்சகர்கள் தீப ஒளியேற்றி தங்கக் கதவுகளை மூடிக் கொண்டு சுப்ரபாதம் பாடித் துயில் எழுப்புகிறார்கள்.
அவருக்கு ஆரத்தி எடுத்து, பாலும் வெண்ணையும் நிவேதனம் செய்கிறார்கள்.
சமஸ்கிருதத்தில் உள்ள சுலோகங்களைப் பாடிய பிறகு கதவுகள் திறக்கப் பெறுகின்றன.
இந்த சுப்ரபாதம் அதிகாலை 3.15 மணிக்கு முடிவடைகிறது.
அதன் பின்னர், வெங்கடேச பெருமான் பக்ததர்களுக்கு விஸ்வரூப சேவை சாதிக்கிறார்.
விஸ்வரூப சேவைக்குப் பிறகு பெருமாளின் கர்ப்ப கிருகத்திலிருந்து முந்தைய தினத்தில் அணிவிக்கப்பட்ட மலர்மாலைகள் அகற்றப்படுகின்றன. இதையே தோமல சேவை என்கிறார்கள்.
தோமல சேவையின்போது போக ஸ்ரீநிவாசருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.
பின்பு ஆகாய கங்கையிலிருந்து கொண்டு வரப்படும் தீர்த்தத்திலிருந்து பெருமாளுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.
இந்தத் தீர்த்தம் கி.பி. 10-ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமலை நம்பியின் வழித் தோன்றல்களால் கொண்டு வரப்படுகிறது.
மூலவருக்கு பாதுகாபிஷேகம் மட்டுமே செய்து, பின்னர் மணம் நிறைந்த மலர்களாலும், பூமாலைகளாலும் அலங்காரம் செய்கின்றனர்.
தோமல சேவைக்குப் பின்னர் 'கொலுவூ' என்ற தர்பார் நடைபெறுகிறது.
இதன் போது தங்கக் கதவுகளைத் திறந்து, அந்த அறையிலிருந்து ஸ்ரீநிவாசமூர்த்தியை வெளியே அழைத்துக் கொண்டு வருகிறார்கள்.
வெள்ளிக்குடை பிடித்து, வெள்ளிச் சிம்மாசனத்தில் அமர்த்தி, ஸ்ரீநிவாசனை திருமாமணி மண்டபத்தில் கொலு வீற்றிருக்கச் செய்கின்றனர்.
பெருமாளின் முன்னிலையிலே சேவார்ததிகளால் அன்றைய திதி, வார, நட்சத்திர, யோக, கரணம் பற்றிய
விவரங்களும், முந்தைய நாள் வரவு செலவுக் கணக்குகளும் அவரது திருமுன் படிக்கப்படுகின்றன.
பின்பு வரவு வந்த பண நோட்டுகளும், நகைகளும், நாணயங்களும் அவர் முன்பு பிரித்து வைக்கப்படுகின்றன.
இந்தக் கணக்கைப் பார்த்த பின்னர் பெருமாள் கருவறைக்குச் சென்று விடுகிறார்.
- வேங்கடவன் எப்போதுமே தங்க, வைர நகைகள் ஜொலிக்க அற்புதமாகக் காட்சியளிக்கிறார்.
- குமரிமுனையில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி 7அடி உயரத்தில் உருவாக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏழுமலையானின் வலது மார்பில் பெரிய பிராட்டியான திருமகள் அமர்ந்த கோலமும், இடது மார்பில் பத்மாவதித்தாயார் அமர்ந்துள்ள கோலமும் இடம் பெற்றுள்ளன.
இவ்விரண்டு தாய்மார்களும் தாமரை மலரின் மீது அமர்ந்த கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கின்றனர்.
இவர்கள் தங்களது இரண்டு கரங்களில் தாமரை மொட்டுகளை கையில் ஏந்திய கோலத்துடனும்,
கீழே நீட்டிய ஒரு கரத்திலிருந்து பொன்னை வாரி வழங்கியபடியும், இன்னொரு கரத்தில் அமுதகலசமும்
கொண்டவர்களாகக் காட்சியளிக்கின்றனர்.
வேங்கடவன் எப்போதுமே தங்க, வைர நகைகள் ஜொலிக்க அற்புதமாகக் காட்சியளிக்கிறார்.
அழகிய கிரீடம், உடல் முழுக்கத் தங்க நகைகளின் அணிவகுப்பு! உலகிலேயே அதிக அளவு தங்க அணிகலன்களுடன் அபாரமாகக் காட்சியளிக்கும் கடவுள் வேங்கடவன் மாத்திரமே.
மேரு பச்சை என்னும் மூன்று அங்குல விட்டம் கொண்ட பச்சைக்கல் பதிக்கப்பெற்ற கிரீடம் முதல், வைரமுடி,
முதலை வடிவத்தில் காதணிகள், தோளில், வைர தங்க அணிகள், வைரம் பதித்த மகரகண்டி தங்க துளசிமாலை,
நூற்று எட்டு லக்குமி உருவம் பதிக்கப்பெற்ற தங்கக்காசு, வேங்கடேஸ்வர சகஸ்ரநாமம் வரையப் பெற்ற
தங்கக் கவசம் பூணப்பெற்ற சாளக்கிராம மாலை தங்கத்தால் ஆன பாதகவசம், தசாவதாரம் பதிக்கப்பட்ட
இடுப்புப்பட்டை, இடுப்பில் தொங்கும் தங்கத்தால் ஆன ஆயுதம், வங்கியைப் போன்ற காலணித் தண்டை
இப்படி பல்வேறு வகையான அணிகலன்கள் இவருக்கு மாத்திரமே உலகில் உள்ளது.
இத்தகைய கோலத்தில் தினந்தினம் பக்தர்களுக்கு அருட்கடாட்சம் வழங்குகிறார் திருவேங்கடவன்.
அக்காலத்திய மன்னர்கள் ஏராளமான பொன் நகைகளை வேங்கடவனுக்கு அள்ளித் தந்துள்ளனர்.
அதையடுத்து பத்மாவதி தாயாரின் திரவுருவம் பதித்த தங்கப் பதக்கத்தை ராமானுஜர் செய்து,
ஏழுமலையானின் கழுத்தில் அணிவித்ததாக வேங்கடேச இதிகாச மாலை கூறுகிறது.
இதே அமைப்பில் இன்னொரு ஏழுமலையான் சிலையை உருவாக்குவது என்பது இயலாத காரியம்.
திருமலை தேவஸ்தானம் சார்பில் உருவாகும் கிளை ஆலயங்களில் இத்தகைய சிலையை நிறுவது இயலாது.
திருப்பதியில் உள்ள வெங்கடாஜலபதி சிலைபோல் உருவாக்கப்பட்டாலும் அளவு குறைவாகவே சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
குமரிமுனையில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி 7அடி உயரத்தில் உருவாக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
- பெருமாளின் கையிலுள்ள சக்கரம் சுகபோகங்கள் சுழலும் தத்துவத்தை குறிக்கிறது.
- திருமலை திருப்பதியில் உள்ள ஏழுமலையானின் சிலை பிரமாண்டமான அமைப்பு கொண்டதாகும்.
திருமலை திருப்பதியில் உள்ள ஏழுமலையானின் சிலை பிரமாண்டமான அமைப்பு கொண்டதாகும்.
9 அடி உயரத்துடன் அழகாக காட்சி அளிக்கும் ஏழுமலையானை எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பே வராது.
அதிலும் அவருக்கு அனைத்து நகைகளையும் அணிவித்து அலங்காரம் செய்த பிறகு பார்த்தால் பரவசமாக இருக்கும்.
திருமலை தெய்வம் வேங்கடாஜலபதிக்கு, உச்சி முதல் பாதம் வரை அங்கம் முழுக்க ஆபரணங்கள், தண்டை,
பாடகம், சூரிய கடாரி, நாகாபரணம், கர்ணபத்திரம், திருநெற்றிப் பட்டம், காசுமாலை என
அங்கமெல்லாம் தங்கம் அணிந்து அழகே உருவாகக் காட்சி அளிக்கிறார்.
கமல பீடத்தின் மீது பாதம் ஊன்றி, நவரத்னங்களாலான அணிகள் பூண்டு, சுவர்ண மகுடம் தரித்து
மகர குண்டலங்கள் செவி அணி ஆக, மகர கண்டி, நாகாபரணம் 108 லட்சுமிகள் பொறித்த மாலை,
தங்கப்பூணூல் தரித்து ஏழுமலையான் நமக்கு அருள்பாலிக்கிறார்.
பத்து ஆழ்வார்களின் மங்களாசாசனம் ஏற்று ஷேத்ரய்யா, தியாகய்யா, புரந்தர தாசர், அன்னமாச்சார்யா சாகித்ய
கர்த்தாக்களின் சங்கீதம் கேட்டு மலையே குனிய நின்று கொண்டு இருக்கிறார் வேங்கடவன்.
கண்களையே மறைத்துவிடும் திருமண் என்ற நாமம் அணிவிக்கப்படுகிறது.
இதில் முழுப்பங்கு பச்சைக் கற்பூரம்.
இதைச் சாத்துவது வெள்ளிக்கிழமை, வேங்கடமுடையானுக்கு அபிஷேகமும், வெள்ளிக்கிழமையில்தான் நடத்தப்படுகிறது.
இதிலும் ஒரு வினோதம் உள்ளது.
அபிஷேகப் பொருட்களில் மஞ்சளும் இடம் பெறும்.
இத்தகைய சிறப்புகள் கொண்ட ஏழுமலையான் சிலை முதலில் இரண்டு கரத்துடன்தான் இருந்தது என்றும்,
பின்னர் உடையவர் ராமானுஜர் வேண்டுதல் செய்தபடி பெருமாள் சங்கு சக்கரங்களை ஏந்திய இரண்டு கரங்களுடன்
நான்கு கரத்தவராக சேவை சாதித்ததாகவும் சொல்கிறார்கள்.
பெருமாளின் கையிலுள்ள சக்கரம் சுகபோகங்கள் சுழலும் தத்துவத்தை குறிக்கிறது.
இந்த சக்கரம் அவரது வலது கையில் இருக்கிறது.
இடது கையில் உள்ளது சங்கு.
அதர்மத்தை அழித்து எழும் சங்கின் ஒலி இதன் தத்துவமாகும்.
- துளசியால் அர்ச்சனை செய்வது அவசியம். பின் தூபதீபம் காட்ட வேண்டும்.
- மாலையிலும் மாவிளக்கு ஏற்றி வெங்கடேசப் பெருமாளை வழிபட வேண்டும்.
புரட்டாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் புனித நாளாகக் கருதப்படுகிறது.
அன்று வழிபாடு எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?
காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு நீராடி நெற்றியில் மதச் சின்னத்தை அணிய வேண்டும்.
சுத்தமாக ஆடை அணிந்திருத்தல் அவசியம்.
பூஜை அறையில் வெங்கடாஜல பதியின் உருவப்படம் அல்லது உருவச்சிலையை வைத்து முன்னே அமர வேண்டும்.
விளக்கை ஏற்றி, படத்திலும், விளக்கிலும் அலமேலு மங்கையுடன் கூடிய வெங்கடாஜலபதியை வணங்க வேண்டும்.
துளசியால் அர்ச்சனை செய்வது அவசியம். பின் தூபதீபம் காட்ட வேண்டும்.
பால், பழம், பாயாசம், கற்கண்டு, பொங்கல் ஆகியவற்றை நிவேதனப் பொருட்களாக படைக்க வேண்டும்.
வெங்கடாஜலபதியின் மகிமை பற்றிய நூல்களைப் படித்து "ஓம் நமோ நாராயணா'' என்ற மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும்.
இதே போல் மாலையிலும் வழிபாடு செய்ய வேண்டும்.
அன்று மாவிளக்கு ஏற்றி வெங்கடேசப் பெருமாளை வழிபட வேண்டும்.
மாவினாலேயே விளக்கு போல செய்து அதில் நெய்விட்டு தீபம் ஏற்றி வெங்கடேசப் பெருமானை வழிபடுவது காலம், காலமாக நடந்து வருகிறது.
வெங்கடேசப் பெருமானின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி வெங்கடேச அஷ்டகம் சொல்லி பூஜை செய்ய வேண்டும்.
மாவிளக்கு ஏற்றி வைத்த பிறகு அந்த விளக்கு தணியும் போது கற்பூரம் ஏற்றி ஆரத்தி எடுக்க வேண்டும்.
- சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு.
- மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும்.
திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம்.
இயன்றவர்கள் திருப்பதிக்கே சென்று வேங்கடவனை வணங்கலாம்.
இல்லையேல் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருவப்படத்தை வைத்தும் கும்பிடலாம்.
புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லி பூஜை செய்ய வேண்டும்.
சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு.
துளசி இலைகளால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது.
மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து,
மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும்.
பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.
- புரட்டாசி மாதத்தில் தான் கன்னியில் சூரியன் வந்து அமர்கிறார்.
- புதனுக்கு வெகு நட்பு கிரகமாக சனி பகவான் உள்ளார்.
பெருமாளுடைய அம்சம் என்று சொல்லக்கூடிய கிரகம் புதன்.
அந்த புதனுடைய வீடு கன்னி.
இந்தக் கன்னியில்தான் புதன் ஆட்சியும் அடைகிறார், உச்சமும் அடைகிறார்.
ஒரு கிரகம் ஒரே வீட்டில் ஆட்சியடைவதும், உச்சமடைவதும் மிகவும் அரிதான ஒரு விஷயம்.
அந்தப் பெருமை கன்னிக்கு உண்டு.
பெருமாளுடைய அம்சமாக கருதக்கூடிய புதனுடைய வீடு கன்னி.
புரட்டாசி மாதத்தில் தான் கன்னியில் சூரியன் வந்து அமர்கிறார்.
ஆகவே தான் இந்த மாதத்தில் திருமாலுக்கு வேண்டிய பஜனைகள், பிரம்மோற்சவங்கள் என்று அனைத்தும் நடைபெறுகிறது.
எனவே, புதனின் அம்சமாக பெருமாள் இருப்பதால் புரட்டாசி மாதத்தை பெருமாளுக்கான மாதமாகக் குறிப்பிடுகிறார்கள்.
புதனுக்கு வெகு நட்பு கிரகமாக சனி பகவான் உள்ளார்.
அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக் கூடிய சனிக்கிழமைகள் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
- புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்தால் குல தெய்வ அருள் கிடைக்கும்.
- இந்த துதியை சொல்ல, சொல்ல சகல செல்வங்களும் உங்களுக்கு வந்து சேரும்.
புரட்டாசி சனிக்கிழமையன்று நாம் பெருமாளை வழிபடும் போது, ''திருவேங்கடமலையில் வாசம் செய்யும் சீனிவாசப் பெருமாளே நமஸ்காரம்.
அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களை எல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம்!
மகாலட்சுமி வசிக்கும் அழகான மார்பை உடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம் போல நன்மைகளை பொழிபவரே, சீனிவாசா உமக்கு நமஸ்காரம்!''
என்று மனம் உருக சொல்லி வழிபட வேண்டும்.
இந்த துதியை சொல்ல, சொல்ல சகல செல்வங்களும் உங்களுக்கு வந்து சேரும்.
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்தால் குல தெய்வ அருள் கிடைக்கும்.
புரட்டாசி மாதம் சங்கட ஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகரை நினைத்து விரதம் கடைபிடித்தால் சுகபோக வாழ்வு கிடைக்கும்.
கடவுளுக்கு காணிக்கை மற்றும் நேர்த்திக்கடன்கள் செலுத்த புரட்டாசி மாதமே சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.
- இந்த நாட்களில் விநாயகரை வழிபட்டால் அவரது அருளை முழுமையாகப் பெறலாம்.
- புரட்டாசியில் பெருமாளுக்கு இணையாக சிவ பெருமானுக்கும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
புரட்டாசியில் சனிக்கிழமை விரதம் தவிர அனந்த விரதம், ஏகாதசி விரதம் உள்பட ஏராளமான விரதங்கள் உள்ளன.
புரட்டாசியில் பெருமாளுக்கு இணையாக சிவ பெருமானுக்கும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
அதோடு லலிதா சஷ்டி விரதம், உமா மகேஸ்வரி விரதம், கேதார கவுரி விரதம்
ஆகியவையும் அம்பாளுக்கு உகந்த புண்ணிய தினங்களாகும்.
புரட்டாசியில் வரும் தூர்வாஷ்டமி விரதம், ஜேஷ்டா விரதம் ஆகிய இரு விரதங்களும் விநாயகப் பெருமானுக்கு உரியவையாகும்.
இந்த நாட்களில் விநாயகரை வழிபட்டால் அவரது அருளை முழுமையாகப் பெறலாம்.
இவை மட்டுமின்றி முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த மகாளயபட்சமும் புரட்டாசி மாதம்தான் வருகிறது.
மகாளயபட்ச நாட்களில் முன்னோருக்கு உரிய தர்ப்பணம் கொடுத்தால் பித்ருக்களின் ஆசியை முழுமையாக பெற முடியும்.
- ஏழுமலையானை தரிசிப்பது பேருந்து வசதி இல்லாத அந்த காலத்திலேயே இருந்தது.
- புரட்டாசி மாதம் சனிக்கிழமை விரதம் மிக, மிக சக்தி வாய்ந்தது.
புரட்டாசி மாத சனிக்கிழமையில் விரதம் இருந்து, மஞ்சள் ஆடை உடுத்தி, பாத யாத்திரையாக திருப்பதிக்கு சென்று
ஏழுமலையானை தரிசிப்பது பேருந்து வசதி இல்லாத அந்த காலத்திலேயே இருந்தது.
சகல வசதிகளும் உள்ள இந்த நாள்களிலும் தொடர்வது தான் வேங்கடவனின் மகிமைக்கு சான்று.
குறிப்பாக புரட்டாசி என்றதுமே அனைவருக்கும் முதலில் திருப்பதி ஏழு மலையான் வழிபாடுதான் நினைவுக்கு வரும்.
அதனால் தான் புரட்டாசி மாதத்தை "பெருமாள் மாதம்" என்று சொல்கிறார்கள்.
புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் மிக, மிக சக்தி வாய்ந்தது.
புண்ணியத்தை இரட்டிப்பாக்கி தர வல்லது.
எனவே பெருமாள் பக்தர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் வழிபாடு செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
- சிவபெருமான், விஷ்ணு, அம்மன், விநாயகர் வழிபாடு புரட்டாசியில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
- புரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது.
புரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது.
சிவபெருமான், விஷ்ணு, அம்மன், விநாயகர் வழிபாடு புரட்டாசியில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
இத்தகைய சிறப்புடைய புரட்டாசியில் பெருமாளை வழிபட்டால் ஏழுமலையானிடம் இருந்து அதிக அருளையும்,
பலனையும் பெற முடியும் என்பது பக்தர்களிடம் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
பக்தர்களின் படையெடுப்பு காரணமாக இந்த மாதம் முழுக்க திருப்பதிமலை எங்கும்
"ஏடுகுண்டலவாடா, வெங்கட்ரமணா, கோவிந்தா கோவிந்தா!" என்ற பக்தி கோஷம் திருப்பதி மலை முழுக்க எதிரொலிக்கும்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் இது இரட்டிப்பாக இருக்கும்.
புரட்டாசி சனிக்கிழமைக்கு இருக்கும் தனித்துவமும் மகத்துவமே இதற்கு காரணமாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்