என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    புரட்டாசி திருப்பதி ஏழுமலையான் வழிபாடு
    X

    புரட்டாசி திருப்பதி ஏழுமலையான் வழிபாடு

    • ஏழுமலையானை தரிசிப்பது பேருந்து வசதி இல்லாத அந்த காலத்திலேயே இருந்தது.
    • புரட்டாசி மாதம் சனிக்கிழமை விரதம் மிக, மிக சக்தி வாய்ந்தது.

    புரட்டாசி மாத சனிக்கிழமையில் விரதம் இருந்து, மஞ்சள் ஆடை உடுத்தி, பாத யாத்திரையாக திருப்பதிக்கு சென்று

    ஏழுமலையானை தரிசிப்பது பேருந்து வசதி இல்லாத அந்த காலத்திலேயே இருந்தது.

    சகல வசதிகளும் உள்ள இந்த நாள்களிலும் தொடர்வது தான் வேங்கடவனின் மகிமைக்கு சான்று.

    குறிப்பாக புரட்டாசி என்றதுமே அனைவருக்கும் முதலில் திருப்பதி ஏழு மலையான் வழிபாடுதான் நினைவுக்கு வரும்.

    அதனால் தான் புரட்டாசி மாதத்தை "பெருமாள் மாதம்" என்று சொல்கிறார்கள்.

    புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் மிக, மிக சக்தி வாய்ந்தது.

    புண்ணியத்தை இரட்டிப்பாக்கி தர வல்லது.

    எனவே பெருமாள் பக்தர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் வழிபாடு செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    Next Story
    ×