search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    உலகம் செழிக்க சகஸ்ரநாம அர்ச்சனை
    X

    உலகம் செழிக்க சகஸ்ரநாம அர்ச்சனை

    • தர்பார் சேவைக்குப் பின்னர் பெருமாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறுகிறது.
    • அஷ்டோத்திர அர்ச்சனை நிறைவானதும் பெருமாளுக்கு நைவேத்தியம் படைக்கப் பெறுகிறது.

    தர்பார் சேவைக்குப் பின்னர் பெருமாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறுகிறது.

    உலகம் செழிப்பாகவும், நிம்மதியாகவும் இருக்க அவருக்கு 1008 நாமாக்களைக் கூறி அர்ச்சனை நடைபெறுகிறது.

    இந்த சேவையின்போது அர்ச்சனை செய்ய விரும்பும் பக்தர்களும் கலந்து கொள்ளலாம்.

    பின்னர் சுத்தி என்று அழைக்கப்பெறும் நைவேத்தியம் சுவாமிக்கு படைக்கப்படுகிறது.

    அரிசியினால் பக்குவமான உணவு வகைகளை நைவேத்தியம் செய்கின்றார்கள்.

    இந்த சுத்தி சேவைக்காலத்தில் பிரதான நைவேத்தியம் படையல் செய்யப்படும்போது, மண்டபத்தில் உள்ள இரண்டு திருமாமணிகளை அடித்து ஓசை எழுப்புகிறார்கள்.

    அது ஏழு மலைகளிலும் எதிரொலித்து, கேட்பவர்களின் நெஞ்சில் பக்தி உணர்வையும், பகவானின் மீது பிரேமையையும் கிளர்ந்தெழச் செய்கிறது.

    இதுவே கோவிலில் ஒலிக்கும் முதலாவது மணியாகும்.

    சாத்துமறை சேவையின்போது வைஷ்ணவர்கள் திவ்யப் பிரபந்தத்திலிருந்து ஒரு பகுதியை வாசிக்கிறார்கள்.

    பின்னர் சம்பூரண அலங்கார ரூபிதராய், பெருமாள் பொதுமக்களின் பார்வைக்குக் காட்சியளிக்கத் தொடங்குகிறார்.

    பெருமாள் இவ்விதம் பக்தர்களுக்கு தரிசனம் தந்த பின்னர் பூஜைகள் நடைபெறுகின்றன.

    108 அர்ச்சனை நடைபெறுகிறது.

    அந்த அஷ்டோத்திர அர்ச்சனை நிறைவானதும் பெருமாளுக்கு நைவேத்தியம் படைக்கப் பெறுகிறது.

    இந்த சேவையின்போது சேவார்த்திகள் தவிர வேறு யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை.

    Next Story
    ×