search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teenage girl"

    • இளம்பெண் உள்பட3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இதுகுறித்து அவரது தந்தை சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை சபாஷ்புரத்தை சேர்ந்தவர் ராமன். இவரது மகள் ஹரினி(18). இவருக்கு வலிப்பு நோய் இருந்தது. இதனால் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகவில்லை. இதனால் விரக்தியில் இருந்த அவர் சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ராமன் அளித்த புகாரின்பேரில் திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் மாரீஸ்வரன்(24). மில் தொழிலாளி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1 1/2 வயதில் குழந்தை உள்ளது. மாரீஸ்வரனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரது மனைவி குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் விரக்தியில் இருந்த மாரீஸ்வரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாயார் மகாலட்சுமி அளித்த புகாரின்பேரில் ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அருகே உள்ள பள்ளபட்டியை சேர்ந்த செந்தில்குமார்(23). அச்சகத்தில் வேலை பார்த்தார். இவருக்கு சில ஆண்டுகளாக உடல்நலம் பாதித்து இருந்துள்ளார். இதனால் சரியாக தூக்கம் இல்லாமல் அவதிபட்டுள்ளார். இதனால் விரக்தியடைந்த செந்தில்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவைக்கு வந்து மாயமான திருப்பூரைச் சேர்ந்த சுபஸ்ரீயாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
    • பெண் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது கொன்று உடலை கிணற்றில் வீசினார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடவள்ளி:

    கோவை ஆலாந்துறையை அடுத்த செம்மேடு அருகே ஒரு தோட்டத்தில் உள்ள கிணற்றில் இளம்பெண்ணின் உடல் கிடப்பதாக ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் வந்தது.

    தகவலின் பேரில் போலீசார் தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி இறந்து கிடந்த பெண்ணின் உடலை மீட்டனர்.

    இதையடுத்து போலீசார் அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட பெண் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு வந்து அங்கிருந்து மாயமான திருப்பூரைச் சேர்ந்த சுபஸ்ரீ என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் திருப்பூரில் இருந்து கோவைக்கு விரைந்து அது சுபஸ்ரீதான் என்பதை உறுதி செய்தனர்.

    மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே சுபஸ்ரீ தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது கொன்று உடலை கிணற்றில் வீசினார்களா என்பது குறித்து தெரிய வரும்.

    • பெண் குழந்தை பெற்றதாக கூறி இளம்பெண் வீட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்டார்.
    • இது சம்பந்தமாக வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சுந்தரி ராஜா தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன். வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் இவருக்கு ராஜபாளையம் ஆண்டத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரண்யாதேவி (வயது 24) என்பவருடன் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமண மானது.

    திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவி இருவரும் ராஜபாளையம் ஸ்ரீரங்கபாளையத்தில் வாடகை வீட்டில் குடிேயறினர். அவர்களுடன் ராஜேஷ்கண்ணனின் அக்காள் அனுராதாவும் தங்கியிருந்தார்.

    ராஜேஷ் கண்ணனுக்கு சரண்யாதேவியை விட அதிக வயது என்று கூறப்படுகிறது. அதனை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாக கூறி தனது கணவரிடம் சரண்யாதேவி கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டிருந்தது.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரண்யாதேவிக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையுடன் கணவர் வீட்டில் வசித்து வந்த நிலையில், பெண் குழந்தை பெற்றதாக கூறி சரண்யாதேவியை அவரது கணவர் மற்றும் கணவரின் அக்காள் வீட்டை விட்டு விரட்டி விட்டதாக கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து தனது குழந்தையுடன் சரண்யாதேவி தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். தன்னை வீட்டை விட்டு விரட்டியதாக கணவர் மற்றும் அவரது அக்காள் மீது ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் ராஜேஷ்கண்ணன் மற்றும் அவரது அக்காள் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமணம் செய்ய பிடிக்காததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள கீழஉரப்பனூரை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் அபிராமி (வயது18). கல்லூரிக்கு விண்ணப்பித்து இருந்தார். அபிராமிக்கு அவரது பெற்றோர் சொந்தத்தில் மாப்பிள்ளை தேடி திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். படிப்பை தொடர விரும்பிய அபிராமி திருமணத்தில் நாட்டம் இல்லாமல் இருந்தார்.

    பெற்றோர் அவரை திருமணம் செய்ய வற்புறுத்தி வந்தனர். இதில் விரக்கதியடைந்த அபிராமி வீட்டில் எலிமருந்தை குடித்து மயங்கினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசுமருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபிராமி பரிதாபமாக உயிரிழந்தார். திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ஆஸ்திரேலியாவில் படிப்பதற்காக சென்ற மவுலின் ரதோட் என்ற மாணவர், டேட்டிங் ஆப் மூலம் கிடைத்த தோழியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Australia
    கான்பெரா:

    சமூக வலைதளங்களின் ஆதிக்கம் சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. நன்மைகள் மட்டுமன்றி தீமைகளும் அதிக அளவில் சமூக வலைதளங்கள் மூலம் நிகழ்கிறது. இதனை கட்டுப்படுத்த இளைஞர்கள் சமூக வலைதளங்கள் மற்றும் அவற்றில் கிடைக்கும் நண்பர்கள் குறித்து விழிப்புணர்வுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. விழிப்புணர்வு இல்லாமல், பாதுகாப்பற்ற செயலியால் ஏற்பட்ட நட்பு, இந்திய மாணவர் ஒருவரை பலி வாங்கி உள்ளது.

    மவுலின் ரதோட் என்ற இந்திய மாணவர் படிப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அவர் சமீபத்தில் டேட்டிங் ஆப் மூலம் கிடைத்த பெண் தோழி ஜாமீ லீ என்பவரை சந்திக்க முதன்முறையாக அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.



    அப்போது சிறிதும் எதிர்பார்க்காமல், ஜாமீ லீ, மவுலின் ரதோட்டை மிக மோசமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயங்களுடன் ரதோட் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், அவரை தாக்கிய குற்றத்துக்காக ஜாமீ கைது செய்யப்பட்டார்.

    இதையடுத்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ரதோட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம் அந்த பெண் மீது கொலை வழக்கு பதியப்பட்டு, தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.

    கல்வியில் முன்னேறுவதற்காக ஆஸ்திரேலியா சென்று, தனது உயிரை விட்ட ரதோட்டை எண்ணி அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர். #Australia
    ×