search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் உள்பட3 பேர் தற்கொலை
    X

    இளம்பெண் உள்பட3 பேர் தற்கொலை

    • இளம்பெண் உள்பட3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இதுகுறித்து அவரது தந்தை சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை சபாஷ்புரத்தை சேர்ந்தவர் ராமன். இவரது மகள் ஹரினி(18). இவருக்கு வலிப்பு நோய் இருந்தது. இதனால் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகவில்லை. இதனால் விரக்தியில் இருந்த அவர் சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ராமன் அளித்த புகாரின்பேரில் திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் மாரீஸ்வரன்(24). மில் தொழிலாளி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1 1/2 வயதில் குழந்தை உள்ளது. மாரீஸ்வரனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரது மனைவி குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் விரக்தியில் இருந்த மாரீஸ்வரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாயார் மகாலட்சுமி அளித்த புகாரின்பேரில் ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அருகே உள்ள பள்ளபட்டியை சேர்ந்த செந்தில்குமார்(23). அச்சகத்தில் வேலை பார்த்தார். இவருக்கு சில ஆண்டுகளாக உடல்நலம் பாதித்து இருந்துள்ளார். இதனால் சரியாக தூக்கம் இல்லாமல் அவதிபட்டுள்ளார். இதனால் விரக்தியடைந்த செந்தில்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×