search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமணம் செய்ய பிடிக்காததால் இளம்பெண் தற்கொலை
    X

    திருமணம் செய்ய பிடிக்காததால் இளம்பெண் தற்கொலை

    • திருமணம் செய்ய பிடிக்காததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள கீழஉரப்பனூரை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் அபிராமி (வயது18). கல்லூரிக்கு விண்ணப்பித்து இருந்தார். அபிராமிக்கு அவரது பெற்றோர் சொந்தத்தில் மாப்பிள்ளை தேடி திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். படிப்பை தொடர விரும்பிய அபிராமி திருமணத்தில் நாட்டம் இல்லாமல் இருந்தார்.

    பெற்றோர் அவரை திருமணம் செய்ய வற்புறுத்தி வந்தனர். இதில் விரக்கதியடைந்த அபிராமி வீட்டில் எலிமருந்தை குடித்து மயங்கினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசுமருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபிராமி பரிதாபமாக உயிரிழந்தார். திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    Next Story
    ×