என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 332511
நீங்கள் தேடியது "முக ஸ்டாலின்"
முதலமைச்சரின் நடத்தையால்,வெட்கப்படுகிறேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை:
சென்னையில் நேற்று பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைவரையும் உள்ளடக்கிய தமிழகத்தின் வளர்ச்சியே திராவிட மாடல் ஆட்சி என தெரிவித்தார்.
மேலும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், கச்சத் தீவை மீட்டுத் தர வேண்டும், தமிழக திட்டங்களுக்கு நிதி பங்களிப்பதை உயர்த்தி வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு கோரிக்கை விடுத்தார். அதுவே உண்மையான கூட்டாட்சியாக அமையும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
நரேந்திர மோடி பிரதமராக வந்திருப்பது பாஜக நிகழ்ச்சிக்காக அல்ல.
பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதலமைச்சர் அரசியல் செய்துள்ளார்.
எங்கள் முதல்வர் கருணை காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, இந்தியாவின் ஒரு சாதாரண குடிமகனாகவும், பெருமை வாய்ந்த தமிழனாகவும், தமிழக முதலமைச்சரின் மோசமான நடத்தையால் நான் வெட்கப்படுகிறேன்.
கச்சத்தீவு பற்றி பேச விரும்பினாலும், 1974ல் இந்திரா காந்தியினால் இலங்கைக்கு இந்த தீவை பரிசாக வழங்கியதை முதலமைச்சர் மறந்து விட்டார். ஏன் இந்த திடீர் விழிப்பு? 1974 முதல் திமுகவும் காங்கிரஸும் கூட்டணி அமைத்து மக்களை சூறையாடின.
ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகள் எப்பொழுதும் ஒருமித்த கருத்துடன் எடுக்கப்பட்டவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கடந்த ஓராண்டில் ஜிஎஸ்டி வருவாய் கணிசமாக அதிகரித்து, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் பயனடைகின்றன.
கூட்டாட்சி முறையைப் பற்றி தொடர்ந்து பேசுகிறார், ஆனால் ஜி.எஸ்.டி.
கவுன்சிலை அவமதிக்கிறார், இது கூட்டாட்சியின் எடுத்துக்காட்டு.
கூட்டாக உருவாக்கப்பட்ட சூத்திரத்தின்படி நிலுவைத் தொகை செலுத்தப்படுகிறது. முதல்வர் அவரது விருப்பங்கள் மட்டுமே முக்கியம் என்று நினைக்கிறார். திமுக எப்போதாவது உண்மைகளை கவனிக்கிறதா? அவர்களுக்கு அரசியலில் மட்டுமே ஆர்வம்.
இவ்வாறு தமது டுவிட்டர் பதிவில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்...
குடும்ப அடிப்படையிலான அரசியல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி- பிரதமர் மோடி
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
