search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனடா"

    • காலிஸ்தான் பயங்கரவாதி கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றச்சாட்டு
    • கனடாவில் இருந்து இந்திய அதிகாரி வெளியேற்றப்பட்ட நிலையில், இந்தியா பதிலடி

    கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது என கனடா குற்றம்சாட்டியுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்திய தூதரகத்தின் உயர் அதிகாரியை வெளியேற கனடா அரசு உத்தரவிட்டது.

    கனடாவின் இந்த உத்தரவையடுத்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தியாவுக்கான கனடாவின் தூதருக்கு சம்மன் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து அவரிடம், கனடாவில் ராஜதந்திர அளவிலான மூத்த தூதரக அதிகாரி இன்னும் ஐந்து நாட்களில் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

    நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுதல், இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளில் அவர்களுடைய ஈடுபாடு ஆகியவை குறித்து தங்களது கவலையை தெரிவித்த இந்தியா, இந்த முடிவை எடுத்துள்ளது.

    • ஜூன் மாதம் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் என்பவர் கொலை செய்யப்பட்டார்
    • இவரது கொலையில் இந்திய ஏஜென்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு

    இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என காலிஸ்தான் பயங்கரவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இவர்கள் கனடா நாட்டில் அதிக அளவில் உள்ளனர். காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனடா அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    தாங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக கனடா தெரிவிக்கப்பட்ட போதிலும், அங்கு காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் அதிகரித்த வண்ணம்தான் உள்ளது.

    இதனால்தான் ஜி20 மாநாட்டின்போது, பிரதமர் மோடி- கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இடையே மகிழ்ச்சிகரமான பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.

    இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது என கனடா குற்றம்சாட்டியுள்ளது.

    இந்த நிலையில், இந்தியாவின் உயர் தூதர் அதிகாரி ஒருவரை கனடா வெளியேற்றியுள்ளது. ஏற்கனவே இந்தியா- கனடா இடையிலான ராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இது மேலும் சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

    எதிர்க்கட்சிகள் கூட்டிய பாராளுமன்ற அவசர செசனில் ''நாடுகடத்தப்பட்ட காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் கொலை செய்யப்பட்டதில் இந்திய ஏஜென்ட்-களுக்கு தொடர்பு இருப்பதாக நம்பத்தகுந்த குற்றச்சாட்டு உள்ளன.

    கனடா மண்ணில் கனடா குடியுரிமை பெற்ற ஒருவர் கொலையில் வெளிநாட்டு அரசின் தலையீடு ஏற்றுக் கொள்ள முடியாதது. இது நாட்டின் இறையாண்மையை மீறுவதாகும். இந்த விசயத்தை தெளிப்படுத்த இந்தியா ஒத்துழைக்க வேண்டும்'' என்றார்.

    கனடா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி மெலானி ஜூலி ''ஜஸ்டின் ட்ரூடோ அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று நாங்கள் இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரிகையை நாட்டில் இருந்து வெளியேற்றியுள்ளோம். அவர் இந்தியாவின் வெளிநாடு புலனாய்வு அமைப்பின், ஆராய்ச்சி மற்றும் ஆய்வு பிரிவின் (RAW) தலைவராக செயல்பட்டவர்'' என்றார்.

    • பேச்சுவார்த்தையை துவங்குவது பற்றி பின்னர் முடிவு எடுக்கப்படும்.
    • ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்.

    இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொள்வதாக கனடா அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. கனடா நாட்டின் இந்த திடீர் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்து இருக்கிறது.

    வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை துவங்குவது பற்றி இரு நாடுகள் சார்பிலும் பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொள்வதாக கனடா தரப்பில் இருந்தே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

     

    திடீரென பேச்சுவார்த்தை நிறுத்திக் கொள்வது பற்றி வேறு எந்த தகவலும் வழங்கப்படவில்லை. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அடுத்த வாரம் இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வர இருப்பதை ஒட்டி, இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பாக இந்தியா மற்றும் கனடா இடையே கிட்டத்தட்ட ஆறு முறைக்கும் அதிகமாக பேச்சுவார்த்தை நடைபெற்று இருக்கிறது. 

    • கனடாவில் 3-வது முறையாக இந்து கோவில் மீது தாக்குதல்
    • காலிஸ்தான் வாக்கெடுப்பு குறித்த போஸ்டரையும் ஒட்டி வைத்து சென்றுள்ளனர்

    இந்தியாவில் இருந்து பஞ்சாப் மாநிலத்தை பிரித்து தனி நாடாக அறிவிக்க வேண்டும் என காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தெரிவித்து வருகின்றனர். காலிஸ்தான் ஆதரவாளர்கள் உலகின் பல இடங்களில் உள்ளனர். குறிப்பாக கனடாவில் அதிக அளவில் உள்ளனர்.

    அவர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். காலிஸ்தான் செயல்பாடுகள் அதிகரித்து வருவதற்கு எதிராக இந்தியா தனது கவலையை கனடாவிடம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே இந்து கோவில்கள் கனடாவில் தாக்கப்படும் சம்பவம் நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதம் மற்றும் ஏப்ரல் மாதம் இந்து கோவில்கள் தாக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்றிரவு பிரிட்டீஷ் கொலம்பியாவில் உள்ள லட்சுமி நாராயணன் கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    அதோடு கோவில் கதவில் ஜூன் 18-ந்தேதி நடைபெற்ற கொலையில் இந்தியாவின் பங்கு குறித்து கனடா விசாரணை செய்கிறது என போஸ்டரை ஓட்டிவைத்து சென்றுள்ளனர். மேலும், காலிஸ்தான் வாக்கெடுப்பு குறித்த போஸ்டரையும் ஒட்டி வைத்துள்ளனர்.

    கனடாவின் சர்ரே பகுதியில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பான காலிஸ்தான் டைகர் படையின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். குருநானக் சீக்கியர் குருத்வாரா சாஹிப்பின் தலைவரான அவர், குருத்வாரா வளாகத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டதார்.

    இதனைத் தொடர்ந்து இந்த செயலில் அவரது ஆதரவாளர்கள் இந்த செயலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    • குர்விந்தர் கடந்த 2021-ல் கனடா சென்றுள்ளார்
    • உணவு வினியோகம் செய்து வந்த நிலையில், காருடன் கடத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்

    கனடாவில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். படிப்பதற்காகவும், படித்து முடித்தபின் அங்கேயே தங்கி வேலை பார்ப்பதற்காகவும் அங்கு செல்லும் பஞ்சாப் மாநில இளைஞர்கள் எண்ணிக்கை அதிகம்.

    இதே நோக்கத்துடன் 2021-ம் வருடம் ஜூலை மாதம் கனடா வந்தவர், இந்தியாவை சேர்ந்த குர்விந்தர் நாத் (24). இவர் உணவு வினியோக சேவையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    கனடாவின் டோரோண்டோ நகருக்கருகே ஓன்டேரியோ ஏரி கரை பகுதியில் அமைந்துள்ள நகரம் மிஸிஸாகா.

    ஜூலை 9-ம் தேதி நாத், மிஸிஸாகா பகுதியின் பிரிட்டானியா மற்றும் கிரெடிட்வியூ சாலைகளுக்கருகே அடையாளம் தெரியாத நபர்களால் குர்விந்தர் கொல்லப்பட்டார்.

    இதுகுறித்து கனடாவின் காவல்துறை தெரிவித்திருப்பதாவது:-

    இச்சம்பவத்தில் பலர் சம்பந்தபட்டிருக்கலாம் என தோன்றுகிறது. தாக்கியவர்கள் உணவுக்கான ஆர்டர் கொடுத்துள்ளனர். வழக்கமான ஆர்டர் போல் நினைத்து அதனை வழங்க நாத் வாகனத்தில் சென்றுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்தவுடன் அவரின் வாகனத்தை திருட முயற்சித்திருக்கின்றனர். அப்போது நடந்த போராட்டத்தில் அவரை பலமாக தாக்கியுள்ளனர். பிறகு அவரை அங்கேயே போட்டு விட்டு வாகனத்தை எடுத்து சென்றுள்ளனர்.

    சம்பவத்தை கண்ட பொதுமக்களின் உதவியால், அருகிலுள்ள அவசர கால சிகிச்சை மையத்தில்  குர்விந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி, ஜூலை 14-ம்தேதி உயிரிழந்தார்.

    சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் அருகே, ஓல்ட் கிரெடிட்வியூ மற்றும் ஓல்ட் டெர்ரி ரோடு அருகே திருடப்பட்ட அந்த வாகனம் நின்று கொண்டிருந்தது.

    குர்விந்தர் படுகாயம் அடைந்ததால், அவரை தாக்கியவர்கள் பதட்டத்தில் வாகனத்தை அப்படியே விட்டுவிட்டு ஓடியிருக்கலாம். தடயவியல் நிபுணர்கள் வாகனத்தை பரிசோதித்து வருகின்றனர்.

    இவ்வாறு காவல்துறை தெரிவித்திருக்கிறது.

    கனடா நாட்டிற்கான இந்திய தூதரக அலுவலக அதிகாரி சித்தார்தா நாத் கூறும்போது "இது ஒரு இதயத்தை கலங்க செய்யும் சோக நிகழ்ச்சி. அவரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்" என தெரிவித்தார்.

    இந்திய தூதரக அலுவலகத்தின் உதவியுடன் குர்விந்தரின் உடல் வருகிற 27-ம் தேதி இந்தியாவிற்கு கொண்டுவரப்படுகிறது.

    உலகின் அமைதியான நாடுகளில் ஒன்று என கருதப்பட்டு வந்த கனடாவில் இத்தகைய ஒரு துணிகர சம்பவம் நடைபெற்றிருப்பது உலகெங்கும் உள்ள இந்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

    • சிதம்பர வேல்பிரகாஷ் கனடாவில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார்.
    • ரஞ்சித்துக்கு தட்கல் முறையில் பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வீரசிகாமணி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி கோமதி. இவர்களது மகன் சிதம்பர வேல்பிரகாஷ் (வயது 28). இவருக்கு திருமணம் ஆகி இந்துமதி என்ற மனைவி, ஒரு குழந்தை உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் கனடாவில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். அங்கு தன் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3-ந்தேதி காலை பிரகாஷ் சைக்கிளில் சென்றபோது, கார் மோதி உயிரிழந்தார். பிரகாஷ் உயிரிழந்த தகவல் தெரிந்ததும் அவரது உறவினர்கள் மிகுந்த கவலை அடைந்தனர். மேலும் இறந்த பிரகாஷின் உடலை இந்தியா கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதற்கிடையே அவர் பணிபுரியும் நிறுவனம் அவருடைய சொந்தங்கள் யாராவது வந்தால் மட்டுமே விசா எடுக்க வாய்ப்புள்ளதாகவும், தொடர்ந்து அவருடைய மனைவி மற்றும் குழந்தையை அனுப்ப முடியும் என்று கூறியுள்ளது. எனவே அவரது சகோதரர் ரஞ்சித் அங்கு செல்ல தட்கல் முறையில் பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதுகுறித்து ராஜா எம்.எல்.ஏ. கூறுகையில், பிரகாஷ் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் அவரது உடலை இந்தியா கொண்டுவர முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர், அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    அமெரிக்காவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 19 குழந்தைகள் உட்பட 11 பேர் இறந்தனர்.
    ஒட்டாவா:

    கடந்த மே 25-ஆம் தேதி அன்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றுக்குள் 18 வயது இளைஞர் புகுந்து சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தி 19 சிறுவர்கள் உள்பட 21 பேரை கொன்று குவித்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த பரபரப்பு தணிவதற்குள் கனடா நாட்டின் டொரோண்டோ நகரில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளிக்கு அருகே இளைஞர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் நடமாடி கொண்டிருந்தார். இதை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த 3 தொடக்கப்பள்ளிகள் உடனடியாக மூடப்பட்டன. பின் போலீஸ் அதிகாரிகள் உடனடியாக அந்த இடைத்திற்கு விரைந்து வந்து துப்பாக்கியுடன் நடமாடிய நபரை சுற்றிவளைத்தனர். 

    பின்னர் போலீசார் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றிய கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை.
    ×