என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வர்த்தக ஒப்பந்தம்"

    • தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார்.
    • டிரம்பின் பதவிக்காலம் முடியும் வரை இந்தியா காத்திருக்க தயார்.

    இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஒரு ஆண்டு பேச்சு வார்த்தைக்கு பிறகு சமீபத்தில் எட்டப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியா மீதான வரியை 18 சதவீதமாக குறைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா மீது பரஸ்பரவரியை விதித்த டிரம்ப், பின்னர் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதால் அந்த வரியை 50 சதவீதமாக உயர்த்தினார்.

    இதனால் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. மேலும், வர்த்தக பேச்சுவார்த்தையிலும் முட்டுக்கட்டை உண்டானது.

    இதனால் இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் டிரம்ப் பேசி வந்தார். ஆனால், இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. இந்தநிலையில் இரு நாடுகள் இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் இந்தியாவை டிரம்ப் மிரட்ட முடியாது என்று அமெரிக்க அமைச்சரிடம் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் தெரிவித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவலை ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக டிரம்ப் உயர்த்தினார். மேலும் இந்தியாவுக்கு மிரட்டல்களை தொடர்ந்து விடுத்தார். அந்த சமயத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார்.

    இரு நாடுகள் இடையே அதிகரித்துள்ள பதற்றத்தை தணிக்க இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது. இதில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை அஜித்தோவல் சந்தித்து பேசினார்.

    அப்போது, வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் அதிபர் டிரம்ப் அல்லது அவரது மூத்த உதவியாளர்கள் இந்தியாவை மிரட்ட முடியாது என்றும் கடந்த காலத்தில் கடினமான அமெரிக்க நிர்வாகங்களை இந்தியா கையாண்டிருக்கிறது என்றும் மார்கோ ரூபியோவிடம் அஜித்தோவல் தெரிவித்தார்.

    மேலும், தேவைப்பட்டால் வர்த்தக ஒப்பந்தத்திற்காக டிரம்பின் பதவிக்காலம் முடியும் வரை இந்தியா காத்திருக்க தயாராக இருப்பதாகவும் அஜித்தோவல் தெரிவித்தார்.

    அதன்பிறகு செப்டம்பர் 16-ந்தேதி பிரதமர் மோடியிடம் டிரம்ப் தொலைபேசியில் பேசி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா, அமெரிக்கா மீதான வரிகளையும் தளர்த்தும் என்று தெரிவித்தார்.
    • 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் விவசாயத் தயாரிப்புகளை இந்தியா வாங்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

    பிரதமர் மோடியுடன் நேற்று தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அறிவித்தார்.

    ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி உறுதி அளித்ததால், இந்திய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 25 பரஸ்பர வரியை 18 சதவீதமாக குறைப்பதாக அறிவித்த டிரம்ப், இந்தியா, அமெரிக்கா மீதான வரிகளையும் தளர்த்தும் என்று தெரிவித்தார்.

    அதேநேரம், அமெரிக்காவிடமிருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் விவசாய  பொருட்களை  இந்தியா வாங்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

    மேலும் இந்தியாவுடனான ஒப்பந்தம் அமெரிக்க விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என அமெரிக்க விவசாயத்துறை செயலாளர் தெரிவித்தார். இது இந்திய விவசாயிகளைப் பாதிக்குமோ என்ற கவலை எழுந்தது.

    இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விவசாயப் பொருட்கள் இந்திய விவசாயிகளின் நலன்களை எவ்விதத்திலும் பாதிக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    அதாவது, அமெரிக்காவிலிருந்து பெரும்பாலும் பருத்தி, பாதாம், மற்றும் வால்நட்ஸ் போன்ற இந்தியாவில் தேவை அதிகமாக உள்ள பொருட்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்படும், அரிசி அல்லது கோதுமை போன்ற இந்திய விவசாயிகள் அதிகம் உற்பத்தி செய்யும் பொருட்களுக்குப் பாதிப்பு இருக்காது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.   

    • அண்டை நாடுகளை விட சிறந்த வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்கா உடன் ஏற்பட்டுள்ளது.
    • சீனாவுக்கு 37 சதவீதம், வங்கதேசத்திற்கு 20 சதவீதம், பாகிஸ்தானுக்கு 19 சதவீதம் வரி விதித்துள்ளது.

    இந்தியா- அமெரிக்கா இடையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ரஷியாவிடம் இருந்து கொள்முதல் செய்யும் கச்சா எண்ணெய் அளவை குறைப்பதாக இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. இதனால் இந்தியா மீதான 50 சதவீதம் வரி விதிப்பை 18 சதவீதமாக குறைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.

    இந்தியா- அமெரிக்கா இடையிலான ஒப்பந்தத்தை இந்திய அரசுதானே முதலில் அறிவிக்க வேண்டும். டிரம்ப் அறிவித்தது ஏன்? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

    இதற்கு பியூஷ் கோயல் பதில் அளிக்கும் வகையில் கூறியதாவது:-

    இந்தியா- அமெரிக்கா ஒப்பந்தம் குறித்து டொனால்டு டிரம்ப் அறிவித்தது ஏன்? என எதிர்க்கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பியதை பார்த்தேன். அமெரிக்கா இந்தியா மீது பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்தியது. இதனால் அது நீக்கப்பட்டதை அவர்கள் அறிவித்திருக்க வேண்டும்.

    பல தடைகள் மற்றும் பல மாத பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அண்டை நாடுகளை விட சிறந்த வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்கா உடன் ஏற்பட்டுள்ளது.

    போட்டி பொருளாதாரத்திற்கான குறைந்த வரி விதிப்பை அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனா, பாகிஸ்தான் நாடுகளை விட இந்தியாவுக்கான வரி விதிப்பு குறைவானதாகும்.

    நெருக்கடியின் கீழ் பிரதமர் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதாக ராகுல் காந்தி தெரிவிக்கிறார். அவர் மக்களை தவறாக வழி நடத்த விரும்புகிறார். இந்தியாவின் வளர்ச்சி குறித்து அவர் கவலைப்படவில்லை. ராகுல் காந்தியின் பிரச்சனைதான் என்ன?. எதிர்மறையான மனநிலையால் அவர் சாதிக்க விரும்புவது என்ன? என்பதை மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டியிருக்கும்.

    இவ்வாறு பியூஷ் கோயல் தெரிவித்தார்.

    சீனாவுக்கு 37 சதவீதம், வங்கதேசத்திற்கு 20 சதவீதம், பாகிஸ்தானுக்கு 19 சதவீதம் வரி விதித்துள்ளது.

    • பிரதமர் மோடி அமெரிக்காவுடன் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை முடித்துள்ளார்.
    • மோடிக்கும் டிரம்புக்கும் இடையிலான தனிப்பட்ட உறவின் காரணமாக ஒரு நல்ல ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளோம்.

    இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது:-

    * நமது போட்டியாளர்களை விட சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தை நாம் பெற்றுள்ளோம்:

    * இந்த ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் பேச விரும்பினேன். ஆனால் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் உருவாக்கிய விரும்பத்தகாத காட்சிகளால் என்னால் அவ்வாறு செய்ய முடியவில்லை.

    * இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ஏழைகள், மீனவர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள்.

    * பிரதமர் மோடி அமெரிக்காவுடன் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை முடித்துள்ளார்.

    * ஒட்டுமொத்த தேசமும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறது

    * பிரதமர் மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும் இடையிலான தனிப்பட்ட உறவின் காரணமாக இந்தியா அமெரிக்காவுடன் ஒரு நல்ல ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.

    * கால்நடை வளர்ப்பு, விவசாயம் மற்றும் பால்வளத் துறைகளின் நலன்களை பிரதமர் மோடி கருத்தில் கொண்டுள்ளார்.

    * அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா, முக்கியத்துவம் வாய்ந்த விவசாயம் மற்றும் பால்வளத் துறைகளின் நலன்களைப் பாதுகாத்துள்ளது

    * வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்திற்கு ஒரு நல்ல சகுனம்

    இவ்வாறு பியஷ் கோயல் தெரிவித்தார்.

    • இந்திய பொருட்கள் மீது டிரம்ப் 50 சதவீதம் கூடுதல் வரி விதித்திருந்தார்.
    • தற்போது அதை 18 சதவீதமாக குறைப்பதாக தெரிவித்துள்ளார்.

    இந்தியா- அமெரிக்கா இடையில் வர்த்தக ஒப்பந்தம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அமெரிக்கா விதித்த காலக்கெடுவிற்குள் இந்தியா ஒப்பந்தத்திற்கு முன்வரவில்லை.

    இதனால் இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 25 சதவீதம் கூடுதல் வரி விதித்தார். பின்னர், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என எச்சரித்தார். அதை மீறி வாங்கினால் இதற்கென்று தனியாக 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றார்.

    இருந்தபோதிலும் இந்தியா ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து கொண்டிருந்தது. இதனால் மொத்தமாக இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்தார் டிரம்ப்.

    இந்த நிலையில்தான் நேற்றிரவு டொனால்டு டிரம்ப், இந்திய பிரதமர் மோடியிடம் டெலிபோன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் இந்திய பொருட்களுக்கான வரியை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கிறேன் என டிரம்ப் அறிவித்தார்.

    இந்தியா- அமெரிக்கா இடையிலான ஒப்பந்தத்தை பாஜக-வினர் பாராட்டி வருகின்றனர். ஆனால், காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில் "அமெரிக்காவின் வரி விதிப்பு 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்படுவது மிக சிறந்த செய்தி. இந்தியாவின் ஏற்றுமதி இனிமேல் அதிகரிக்கும்" என்றார்.

    • இந்தியா- அமெரிக்கா இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்தார்.
    • நாட்டு நலன்கள் பேரம் பேசப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

    இந்திய பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்றிரவு டெலிபோன் மூலம் பேசினார். பின்னர் இந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

    மத்திய அரசு சார்பில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஏதும் வெளிவராத நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளிப்படையாக சமூக வலைத்தளத்தில் ஒப்பந்தம் குறித்து பதிவிட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

    இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில், இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பின்னர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.

    Zoro Hour முடிந்த பின்னர் காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், இதுகுறித்து கேள்வி எழுப்பினார். இந்தியா- அமெரிக்கா ஒப்பந்தம் குறித்த தகவல் வாஷிங்டனில் இருந்து பெறப்பட்டுள்ளது எனக் குற்றம்சாட்டினார்.

    இதற்கு ஆளுங்கட்சியின் மாநிலங்களவை தலைவரான ஜே.பி. நட்டா, எதிர்க்கட்சிகளின் விரக்தி வெளிப்படுகிறது. நல்ல விசயங்களை கூட தவறானதாக பார்க்கப்படுகிறது எனக் குற்றம் சாட்டினார்.

    மேலும், இந்தியா- அமெரிக்கா ஒப்பந்தம் தொடர்பாக விவாதம் நடத்த அரசு தயாராக இருக்கிறது என்பதை இந்த அவைக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். வர்த்தக ஒப்பந்தம் குறித்து அரசாங்கம் தானாக முன்வந்து ஒரு அறிக்கையை வெளியிடும் என்றார்.

    இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாட்டின் நலன்கள் பேரம் பேசப்பட்டுள்ளன என குரல் எழுப்பினர். அதற்கு மாநிலங்களவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய அரசு அறிக்கை தயார் செய்து கொண்டிருக்கும்போது, அதை கேட்க வேண்டும் என்றார். மேலும், விவாதத்திற்கு அரசு தயாராக இருக்கிறது. எனினும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபடுகின்றனர் என்றார்.

    தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பின்னர் வெளிநடப்பு செய்தனர்.

    • அமெரிக்காவின் விவசாய பொருட்களை வாங்குவதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
    • இந்தியாவுடனான எங்களது அற்புதமான உறவு வரும் காலங்களில் இன்னும் வலுவாக இருக்கும்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் நேற்று தொலைபேசியில் பேசியுள்ளனர்.

    இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.

    பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதையாலும், அவரது வேண்டுகோளின் படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

    இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.

    அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் அவர்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள்.

    கூடுதலாக, அமெரிக்காவின் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல பொருட்களை வாங்குவதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

    இந்தியாவுடனான எங்களது அற்புதமான உறவு வரும் காலங்களில் இன்னும் வலுவாக இருக்கும். பிரதமர் மோடியும் நானும் காரியங்களைச் சாதிக்கும் மனிதர்கள்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், அமெரிக்க விவசாயிகளுக்காக மீண்டும் ஒரு சிறப்புமிக்க ஒப்பந்தத்தை அதிபர் ட்ரம்ப் கொடுத்துள்ளதாக அமெரிக்க விவசாயத் துறை செயலாளர் புரூக் ரோலின்ஸ் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வழியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "புதிய ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய சந்தைக்கு அதிகப்படியான அமெரிக்க விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யும். இதன் மூலம் அமெரிக்காவின் கிராமப்புற பொருளாதாரம் பெரும் வளர்ச்சியடையும்.

    2024 ஆம் ஆண்டில், இந்தியாவுடனான அமெரிக்காவின் விவசாய வர்த்தக பற்றாக்குறை 1.3 பில்லியன் டாலராக இருந்தது. இந்தியாவின் வளர்ந்து வரும் மக்கள்தொகை அமெரிக்க விவசாய பொருட்களுக்கு ஒரு முக்கியமான சந்தையாகும், மேலும் இன்றைய ஒப்பந்தம் இந்தப் பற்றாக்குறை சரி செய்யப்படும்" என்று தெரிவித்தார். 

    • வர்த்தக ஒப்பந்த விவகாரம் தேசிய அரசியலில் பேசு பொருளாகி இருக்கிறது.
    • ஒப்பந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

    இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்த விவகாரம் தேசிய அரசியலில் பேசு பொருளாகி இருக்கிறது. இரு நாடுகள் இடையிலான ஒப்பந்தம் குறித்து இந்தியா அறிவிப்பதற்கு முன்பே அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியினர் இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளன.

    இந்த நிலையில், வர்த்தக ஒப்பந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். சுய நம்பிக்கை என்பது எல்லாவற்றையும் சாத்தியமாக்கும் சக்தி என்றும், அது விக்சித் பாரத் கனவை நனவாக்க உதவும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

    இது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "சுய நம்பிக்கை என்பது எல்லாவற்றையும் சாத்தியமாக்கும் ஒரு சக்தி. அதன் உதவியால் எல்லாமே சாத்தியமாகும். நாட்டு மக்களின் இந்த சக்தியே, வளர்ந்த இந்தியா என்ற கனவை நனவாக்குவதில் மிகவும் பயனுள்ளதாக அமையும்," என தெரிவித்துள்ளார்.

    • வர்த்தக ஒப்பந்தம் 'மோடியின் கோரிக்கையின் பேரில்' செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
    • இந்திய தொழில், வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகளை பாதிக்கும்.

    புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் கட்சி கவலை தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் முழு விவரங்களையும் வெளியிட வேண்டும் என்றும், இது இந்திய விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறையை எவ்வாறு பாதிக்கும் என்பதை விரிவாக விளக்க வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ x தளப் பதிவில், "போர் நிறுத்தத்தை போல, இந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் வெளியிட்டார். இந்த வர்த்தக ஒப்பந்தம் 'மோடியின் கோரிக்கையின் பேரில்' செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

    • அமெரிக்காவிற்கு எதிரான சுங்க வரி மற்றும் சுங்க வரி அல்லாத தடைகளை இந்தியா 'பூஜ்ஜியமாகக்' குறைக்கும் என்று டிரம்ப் கூறுகிறார். அமெரிக்காவிற்காக நமது சந்தையை முழுமையாக திறக்க இந்தியா ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. இது இந்திய தொழில், வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகளை பாதிக்கும்.

    • அந்த அறிக்கையில் விவசாய துறையை அமெரிக்காவிற்காக திறப்பது குறித்தும் பேசப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் உண்மையில் என்ன? நமது விவசாயிகளின் பாதுகாப்பும் நலன்களும் எவ்வாறு உறுதி செய்யப்பட்டுள்ளன?

    • மோடி அரசாங்கம் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்காமல், அதற்கு பதிலாக அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடம் இருந்து வாங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைக்கு மோடி அரசாங்கம் ஒப்புக்கொண்டதா?

    • மேலும், அமெரிக்காவிடம் இருந்து அதிக பொருட்களை வாங்குவது குறித்தும் பேசப்படுகிறது. அப்படியானால், 'மேக் இன் இந்தியா' திட்டம் என்ன ஆனது?

    இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் விவரங்களை தெரிந்துகொள்ள இந்தியாவுக்கு உரிமை உண்டு.

    மோடி அரசாங்கம் பாராளுமன்றத்தையும் ஒட்டுமொத்த நாட்டையும் நம்பிக்கையில் எடுத்துக்கொண்டு, அனைத்து விவரங்களையும் பகிர வேண்டும்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
    • அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம் இட்டனர்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் நேற்று தொலைபேசியில் பேசியுள்ளனர்.

    இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.

    பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதையாலும், அவரது வேண்டுகோளின் படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

    இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.

    அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் அவர்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள்.

    கூடுதலாக, அமெரிக்காவின் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல பொருட்களை வாங்குவதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்" என்று தெரிவித்தார்.

    இன்று பாராளுமன்றம் தொடங்கிய நிலையில், அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் இட்டனர்.

    அவையின் மையப்பகுதிக்கு சென்று எதிர்க்கட்சியினர் முழக்கமிட்ட நிலையில் இருக்கைக்கு செல்ல சபாநாயகர் அறிவுறுத்தினார்.

    இதையடுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடும் அமளியால் மக்களவை மதியம் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

    • வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.
    • அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் நேற்று தொலைபேசியில் பேசியுள்ளனர்.

    இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.

    பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதையாலும், அவரது வேண்டுகோளின் படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

    இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.

    அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் அவர்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள்.

    கூடுதலாக, அமெரிக்காவின் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல பொருட்களை வாங்குவதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

    இந்தியாவுடனான எங்களது அற்புதமான உறவு வரும் காலங்களில் இன்னும் வலுவாக இருக்கும். பிரதமர் மோடியும் நானும் காரியங்களைச் சாதிக்கும் மனிதர்கள்" என்று தெரிவித்தார்.

    இதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், " "எனது இனிய நண்பர் அதிபர் டிரம்ப் உடன் பேசியது மகிழ்ச்சி.

    Made in India திட்டத்தின் கீழ் தயாராகும் பொருட்களுக்கான வரி 18%-ஆகக் குறைக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற NDA நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்த உடன்படிக்கைக்காக பிரதமர் மோடிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் நன்றி தெரிவித்தனர். அப்போது பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து எம்.பி.க்கள் மரியாதை செலுத்தினர்.

    • இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.
    • இந்த அற்புதமான அறிவிப்பிற்காக 140 கோடி இந்திய மக்கள் சார்பாக அதிபர் டிரம்ப் அவர்களுக்குப் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் தொலைபேசியில் பேசியுள்ளனர்.

    இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.

    பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதையாலும், அவரது வேண்டுகோளின் படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

    இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.

    அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் அவர்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள்.

    கூடுதலாக, அமெரிக்காவின் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல பொருட்களை வாங்குவதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

    இந்தியாவுடனான எங்களது அற்புதமான உறவு வரும் காலங்களில் இன்னும் வலுவாக இருக்கும். பிரதமர் மோடியும் நானும் காரியங்களைச் சாதிக்கும் மனிதர்கள்" என்று தெரிவித்தார்.

    இதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், " "எனது இனிய நண்பர் அதிபர் டிரம்ப் உடன் பேசியது மகிழ்ச்சி.

    Made in India திட்டத்தின் கீழ் தயாராகும் பொருட்களுக்கான வரி 18%-ஆகக் குறைக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.

    இந்த அற்புதமான அறிவிப்பிற்காக 140 கோடி இந்திய மக்கள் சார்பாக அதிபர் டிரம்ப் அவர்களுக்குப் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளும், மிகப்பெரிய ஜனநாயக நாடுகளும் இணைந்து செயல்படும்போது, அது நமது மக்களுக்குப் பயனளிப்பதோடு, இருதரப்பு ஒத்துழைப்பிற்கான அபரிமிதமான வாய்ப்புகளையும் உருவாக்குகிறது.

    உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழுமைக்கு அதிபர் டிரம்ப் அவர்களின் தலைமை மிகவும் அவசியமானது. அமைதிக்கான அவரது முயற்சிகளுக்கு இந்தியா தனது முழு ஆதரவை வழங்குகிறது.

    எங்களது கூட்டாண்மையை முன்னெப்போதும் இல்லாத உயரத்திற்குக் கொண்டு செல்ல அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலோடு காத்திருக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார். 

    ×