search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "surprise inspection"

    • 28 மின்னணு தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றனர்.

    கோவை,

    தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் உத்தரவின்பேரில், சென்னை சட்ட முறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி சாந்தி அறிவுறுத்தலின்படி கோவை கூடுதல் தொழிலாளர் துறை ஆணையாளர் குமரன் வழிகாட்டுதலின்படி, கோவை தொழிலாளர் இணை ஆணையாளர் லீலாவதி அறிவுரையின்பேரில் கோவை தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் (அமலாக்கம்) தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், முத்திரை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கோவை பூ மார்க்கெட், தியாகி குமரன் மார்க்கெட்டில் உள்ள பூ, பழம் மற்றும் காய்கறி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் 28 மின்னணு தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படும். வணிகர்கள் முத்திரையிடாமல் பயன்படுத்தி வைத்துள்ள எடையளவுகளை சம்பந்தப்பட்ட முத்திரை ஆய்வாளர் அலுவலகங்களுக்கு சென்று முத்திரையிட்டு கொள்ள வேண்டும்.

    பயன்படுத்த முடியாத எடையளவுகளை மாற்றி புதிய எடையளவுகளை பயன்படுத்த வேண்டும். மேலும் எடையளவுகளை உரிய காலத்தில் மறு முத்திரையிட வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றனர்.

    • உணவகங்கள், டிபன் கடைகள் தாபாக்களில் தரமற்ற முறையில் உணவு வழங்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • தாபாக்கள், சைவ மற்றும் அசைவ உணவகங்கள், டிபன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள உணவகங்கள், டிபன் கடைகள் தாபாக்களில் தரமற்ற முறையில் உணவு வழங்கப்படுவதாக நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அருணுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், பரமத்தி வேலூர் உணவு பாதுகாப்பு அலுவலர் சிங்கரவேலு தலை மையிலான குழுவி னர், பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் தாபாக்கள், சைவ மற்றும் அசைவ உணவகங்கள், டிபன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது உணவகத்தில் வைத்திருந்த இறைச்சி, சமையல் எண்ணைய் மற்றும் உணவுப் பொருட்களை ஆய்வு செய்தனர். பின்னர் அங்கிருந்த உணவு மாதிரி களை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். உணவுப் பொருட்கள் தயாரிக்க தரமற்ற பொருட்களை பயன்படுத்துவது கண்டறி யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்ததுடன், இது தொடர்பாக உணவகங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது:-

    இங்கு செயல்படும் தாபாக்கள், டிபன் கடை கள் அனைத்திலும் மது அருந்த அனுமதியும், மது விற்பனையும் நடைபெறு கிறது. வெளி மாநில மதுபானங்கள் அதிக அளவில் விற்கப்படுகிறது. இதனால் மது பிரியர்கள் விரும்பி தாபாக்களுக்கு செல்கின்றனர்.

    தீபாவளி அன்று தாபாக்களில் விற்பனை செய்த உணவு பொருட்கள் தரமற்றதாக இருந்ததால் சிலர் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் இந்த ஆய்வு நடைபெற்றது. இதேபோன்று தியேட்டர்களில் வழங்கப்ப டும் திண்பண்டங்களும் சுகாதாரமற்று இருக்கிறது. எனவே தியேட்டர்களிலும் அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர். 

    • நாமக்கல் மாவட்டம் கருமகவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.
    • ஆசிரியர்கள் எடுக்கும் பாடங்கள் விபரம் குறித்தும், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் வருகை பதிவு குறித்தும் தலைமை ஆசிரியரிடம் கேட்டு கலெக்டர் ஆய்வு செய்தார்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள, கருமகவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின் போது, பள்ளியில் அனைத்து வகுப்பறைகளுக்கும் சென்று மாணவ, மாணவிகளின் வருகைப்பதிவேடுகளை கலெக்டர் பார்வையிட்டார்.

    மேலும், பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை குறித்தும், ஆசிரியர்கள் எடுக்கும் பாடங்கள் விபரம் குறித்தும், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் வருகை பதிவு குறித்தும் தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார்.

    மேலும் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராமல் உள்ள மாணவர்களின் விவரங்கள் குறித்து கேட்டு, அந்த மாணவர்களின் பெற்றோரிடம் வகுப்பாசி–ரியர்கள் பேசினார்களா என்றும், ஏன் அவர்கள் வரவில்லை என்றும், அவர்களை பள்ளிக்கு வர எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவரம் கேட்டார். பள்ளிக்கு வராத மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்கள் தொடர்ந்து பள்ளிaக்கு வர தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

    பின்னர், கருமகவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை நேரில் பார்வையிட்டு, அங்கன்வாடி மையத்தில் பரமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும், குழந்தைகளின் வருகை எண்ணிக்கை குறித்து அங்கன்வாடி பணியாளர்களிடம் கேட்டறிந்தார். மேலும், அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுடன் கலந்துரையாடி கல்வி தரத்தை ஆய்வு செய்தார்.

    அதனைத்தொடர்ந்து உயர்நிலை பள்ளி சத்துணவு கூடத்தில் மாணவ, மாணவிகளுக்கு வழங்க சமைக்கப்பட்ட சத்துணவினை கலெக்டர் சாப்பிட்டு ருசி பார்த்தார். மேலும் சத்துணவு மையத்தில் உணவுப் பொருட்கள் இருப்பு குறித்த பதிவேடுகளை பார்வையிட்டு உணவு பொருட்களின் அளவு மற்றும் முட்டைகளின் எண்ணிக்கையை சரிபார்த்தார்.

    பின்னர், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம், வரகூராம்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நில ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பல்வேறு சான்றுகள் கோரி விண்ணப்பிக்கும் போது விரைந்து ஆவணங்கள் சரிப்பார்க்கப்பட்டு ஒப்புதல் அளிக்க வேண்டுமென கிராம நிர்வாக அலுவலருக்கு அறிவுறுத்தினார். மேலும், வரகூராம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    முன்னதாக திருச்செங்கோடு வட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் வாழ்வாதார சேவை மைய அலுவலகத்தை திறந்து வைத்து, மகளிர் சுயஉதவி குழுவினரின் உற்பத்தி பொருட்களை பார்வையிட்டார். ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிரிஜா, டேவிட் அமல்ராஜ் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×