search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "strict action"

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வலைதளங்களில் பொய்யான செய்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்தார்.
    • காவல்துறை மீது களங்கம் விளைவிக்கும் நோக்கத்திலோ பரப்பிவருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் இறந்துபோனது சம்மந்தமாக இறந்து போன மாணவியின் தந்தை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்வது போன்ற வீடியோ காட்சி சமூகவளைதளத்தில் பரவிவருகிறது. இது சம்மந்தமாக விசாரணை செய்த போது இந்த வீடியோ நாகப்படினம் மாவட்டம் திருக்கண்ணபுரம் காவல் சரகம் பெருநாட்டான்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் குடும்பத்தினருக்கும் அவரது பக்கத்து வீடான முனுசாமி என்பவர் குடும்பத்தினருக்கும் வேலி பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டதில் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டுள்ளது. இந்நிலையில் 14.07.2022-ந் தேதி தேவேந்திரன் என்பவர் நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தான் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென தீக்குளிக்க முயற்சித்தார்.

    அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த வீடியோ என்று தெரியவருகிறது . இந்த சம்பவத்தை வேறு விதமாக திசைதிருப்பி கனியாமூர் சக்தி பள்ளியில் இறந்து போன மாணவி ஸ்ரீமதியின் தந்தை நீதி கேட்டு தீக்குளிக்க முயற்சி செய்வது போன்று பொய்யான செய்தியை, மக்கள் மத்தியில் கிளர்ச்சியை உறுவாக்க வேண்டும் என்ற நோக்கத்திலோ அல்லது காவல்துறை மீது களங்கம் விளைவிக்கும் நோக்கத்திலோ பரப்பிவருகின்றனர். இதுபோன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

    • வட்டார போக்குவரத்துத் துறை சார்பில் சுமார் 52 பள்ளிகளைச் சார்ந்த சுமார் 250 வாகனங்கள் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
    • பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு சுமார் 15 குறைபாடு உடைய வாகனங்கள் கண்டறியப்பட்டு சரி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் - திருச்சி புறவழிச்சாலையில் தனியாருக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட திறந்தவெளி மைதானத்தில் வட்டார போக்குவரத்துத் துறை சார்பில் சுமார் 52 பள்ளிகளைச் சார்ந்த சுமார் 250 வாகனங்கள் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    சுமார் 15 வாகனங்கள் முறையாக பராமரிக்காததால் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது கூடுதல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ரவி சேகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், வட்டார போக்குவரத்து துறை அலுவலர் பிரபாகர், வட்டார போக்குவரத்து துறை ஆய்வாளர் சரவணபவன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுருளி பிரபு, உதவி அலுவலர் பிரபாகர், அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத், போக்குவரத்து துறை இன்ஸ்பெக்டர் பத்மநாபன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆய்வில் அரியலூர் மாவட்ட கலெக்டர்ர மண சரஸ்வதி தெரிவித்ததாவது:

    வாகனங்களின் பதிவு சான்று, ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம், முதலுதவி பெட்டி, அவசர வழி, தீயணைப்பு கருவி, படிக்கட்டுகள், கதவுகள், ஆவணங்கள், உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு சுமார் 15 குறைபாடு உடைய வாகனங்கள் கண்டறியப்பட்டு சரி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. குறைபாடு கண்டறியப்பட்ட வாகனங்கள் மறு ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட பின்னரே மீண்டும் இயக்க அனுமதிக்கப்படும், மேலும் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் ஓட்டுநர்கள் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்லவும், வாகனங்களை மெதுவாக இயக்குவதுடன் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும், பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்காவிட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் செல்போன் பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். #DGP #Cellphone #Police
    சென்னை:

    கடந்த ஆண்டு நவம்பர் 17-ந் தேதி அன்று போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் பிரிவுகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த சுற்றறிக்கையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தங்களது பணிநேரத்தில் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்து இருந்தார்.

    அந்த சுற்றறிக்கையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அவர்களுக்கு கீழ் பணியாற்றும் போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியின்போது செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது.

    இதன் அடிப்படையில் உயர் போலீஸ் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சமீபத்தில் சட்டசபை கூட்டம் நடந்தபோது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் செல்போனை பயன்படுத்தினார்கள்.

    செல்போனை பயன்படுத்திய 6 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்பட்டனர். பின்னர், மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு, நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.



    இதற்கிடையே, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பணி நேரங்களில் போக்குவரத்து போலீசார் செல்போனை பயன்படுத்துகிறார்கள் என்று வேதனையுடன் குறிப்பிட்டு இருந்தார்.

    செல்போனை பணி நேரங்களில் பயன்படுத்தும் போலீசார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்து விளக்கம் கேட்டிருந்தார்.

    இந்தநிலையில் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் நேற்று முன்தினம் இரவு தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் பிரிவுகளுக்கும் மீண்டும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி வைத்தார்.

    அந்த சுற்றறிக்கையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் செல்போனை தங்கள் வசம் எடுத்து செல்லக்கூடாது என்றும், அதைமீறி செயல்படும் போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அவர்களுக்கு கீழ் பணியாற்றும் போலீசாருக்கு இந்த விதிமுறை பொருந்தும். முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு, போராட்ட சம்பவங்களில் பாதுகாப்பு, திருவிழா பாதுகாப்பு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணி ஆகியவற்றில் ஈடுபடும் போலீசார் கண்டிப்பாக செல்போனை எடுத்து செல்லக்கூடாது என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #DGP #Cellphone #Police

    விதிமுறைகளை மீறி விளம்பர பேனர் வைத்தால் ஓராண்டு ஜெயில் தண்டனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. #ChennaiCorporation #Banner #Advertising
    சென்னை:

    விதிமுறைகளை மீறி விளம்பர பேனர் வைத்தால் ஓராண்டு ஜெயில் தண்டனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட மண்டலம் 1 முதல் 15 வரையுள்ள (கோட்டம் 1 முதல் 200 வரை) பகுதிகளில் தனிநபர்கள், கோவில் திருவிழா, பொது நிகழ்ச்சிகள் சம்பந்தமாகவும், அரசியல் கட்சிகள் சார்பாகவும் விளம்பர பேனர் வைக்க சட்டவிதிகளின்படி முறையாக விண்ணப்பம் அளித்து பெருநகர சென்னை மாநகராட்சியில் அனுமதி பெற வேண்டும்.

    விதிகளுக்கு மாறாகவும், அனுமதி பெறாமலும் பேனர் வைத்தால் அவை உடனடியாக அகற்றப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது ஓராண்டு ஜெயில் அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    பெருநகர சென்னை மாநகராட்சியில் அனுமதி பெற்று 6 நாட்களுக்கு மட்டுமே பேனர் வைக்க வேண்டும். 6 நாட்களுக்கு பின்பு விளம்பர அமைப்பாளர்களே அவற்றை அகற்ற வேண்டும்.

    அனுமதி வழங்கப்படும் பேனர்களின் கீழ்பகுதியில் அனுமதி வழங்கப்பட்ட எண், அனுமதி நாள், அனுமதிக்கான காலஅவகாச நாள், அச்சகத்தின் பெயர் மற்றும் அனுமதி வழங்கப்பட்ட அளவு (நீளம், அகலம்) ஆகியவற்றை தவறாது குறிப்பிட வேண்டும்.

    தவறும் பட்சத்தில் அத்தகைய விளம்பர பேனர்களும், விளம்பர தட்டிகளும் விதிமீறலாக கருதப்பட்டு, அவை உடனடியாக அகற்றப்பட்டு சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும், விளம்பர பேனர்கள் வைக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் விதிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்

    ஒவ்வொரு விண்ணப்பதாரரும் படிவம் 1-ஐ பூர்த்திசெய்து அனுமதிகோரும் நாளுக்கு 2 நாட்களுக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் தடையின்மை சான்று, அமைக்கப்பட உள்ள இடம் தனியார் கட்டிடமாகவோ, அரசு நிறுவனம் சார்ந்த கட்டிடமாகவோ இருந்தால் அவர்களிடம் இருந்து அதற்கான தடையின்மை சான்று, பேனர் வைக்கும் இடத்திற்கான வரைபடம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    ஒவ்வொரு பேனருக்கும் அனுமதி கட்டணம் ரூ.200-க்கான வரைவோலை (டி.டி.) மற்றும் காப்பீட்டு தொகை ரூ.50-க்கான வரைவோலையை (டி.டி.) ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சி என்ற பெயரில் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

    விளம்பர பேனர்கள் நடைபாதை ஓரமாக வைக்க அனுமதி வழங்கும் பட்சத்தில் இருபுற சாலையின் நடுவில் பேனர் அமைக்கக்கூடாது. 10 அடிக்கும் குறைவாக நடைபாதை இருக்கும் சாலைகளின் 2 புறங்களும் பேனர் வைக்க அனுமதி வழங்கப்படமாட்டது. நடைபாதைகளின் குறுக்காகவோ அல்லது சாலையின் குறுக்காகவோ வைக்க கூடாது. நடைபாதை அல்லது சாலைக்கு இணையாக வைக்க வேண்டும்.

    கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத்தலங்கள், ஆஸ்பத்திரிகள், கல்வெட்டுகள், சிலைகள், சுற்றுலாத்தலங்கள் மற்றும் சாலை சந்திப்பு அல்லது சாலையின் ஓரத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் பேனர் வைக்க கூடாது.

    பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி பெறப்பட்டு வைக்கப்படும் பேனர்கள் மற்றும் விளம்பர தட்டிகள் மேற்குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை தவறாமல் கடைபிடித்து வைக்க வேண்டும்.

    அனுமதி இல்லாமல், விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள் குறித்து பொதுமக்கள் 1913 என்ற எண்ணில் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #ChennaiCorporation #Banner #Advertising 
    ×