search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "strict action"

    • நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் தை மற்றும் மாசிப் பட்டத்தில் உளுந்து, பருத்தி மற்றும் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்திட தயாராகி வருகின்றனர்.
    • விதை வாங்கும் விவசாயிகள் விதை பொட்டலத்தில் உள்ள உற்பத்தியாளர் விபர அட்டையில் குறிப்பிட்டுள்ள பயிர் ரகம், காலாவதி நாள் விபரங்களை சரிபார்த்து வாங்க வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை விதை ஆய்வு துணை இயக்கு னர் சுஜாதாபாய் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் தை மற்றும் மாசிப் பட்டத்தில் உளுந்து, பருத்தி மற்றும் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்திட தயாராகி வருகின்றனர். விதை வாங்கும் விவசாயிகள் விதை பொட்டலத்தில் உள்ள உற்பத்தியாளர் விபர அட்டையில் குறிப்பிட்டுள்ள பயிர் ரகம், காலாவதி நாள் விபரங்களை சரிபார்த்து வாங்க வேண்டும். விதை விற்பனையாளரிடமிருந்து பயிர், ரகம், குவியல் எண் விபரம் குறிப்பிட்டு விற்பனைப்பட்டியலை தவறாமல் வாங்கிட வேண்டும்.

    உளுந்து பயிரில் சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தும் முன் அவ்விதை களின் முளைப்புத்திறனை நெல்லை விதை பரிசோதனை நிலையத்தில் மாதிரி ஒன்றுக்கு ரூ.80 கட்டணம் செலுத்தி பரிசோதித்து பின் பயன்படுத்தலாம்.

    விதை விற்பனை யாளர்கள், விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று இயக்குனரின் பதிவுச் சான்று மற்றும் முளைப்புத்திறன் சான்றிதழ் பெற்ற பின்னரே பருத்தி மற்றும் இதர காய்கறி பயிர்களின் விதைகளை விற்பனை செய்திட வேண்டும். விற்பனையாளர்கள் தங்களிடமுள்ள விதை இருப்பு விபரங்களை விபரப் பலகையில் தினசரி குறிப்பிட்டு விவசாயிகள் பார்வைக்கு வைக்க வேண்டும்.

    விதை வாங்கும் விவசாயிகளுக்கு பயிர், ரகம், குவியல் எண், காலாவதி நாள் விபரம் குறிப்பிட்டு விற்பனை பட்டியல் கண்டிப்பாக வழங்கிட வேண்டும். விதைகளை முறைப்படி தனியாக காற்றோட்டமுள்ள இடத்தில் இருப்பு வைக்க வேண்டும். மேற்படி அறிவுரைகளை கடைபிடிக்காத விதை விற்பனையாளர்கள் மீது விதைச்சட்டம் 1966, விதை விதிகள் 1968 மற்றும் விதைக் கட்டுப்பாட்டு ஆணை 1983-ன் கீழ் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 200 லிட்டர் பிடிக்கக்கூடிய பிளாஸ்டிக் பேரலில் 200 லிட்டர் கள்ளச்சாராயத்தை அழித்தனர்
    • 5,200 லிட்டர் சாராய ஊரல் மற்றும் 200 லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் சம்பவ இடத்தி லேயே கொட்டி அழித்தனர்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவின்படி கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் சாராய ஊறல்களை அழிப்பது, கள்ளச்சா ராயம் காய்ச்சு பவர்கள், கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடு பவர்களை கட்டுப்படுத்த தனிப்படை அமைத்து மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படிகள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமை யில் தனிப்படை காவலர்கள் கல்வராயன் மலை பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்     அப்போது குரும்பா லூர் கிழக்கு மற்றும் மேற்கு ஓடையில் மறைத்து வைத்தி ருந்த கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 500 லிட்டர் வீதம் பிடிக்கக்கூடிய 2 பிளாஸ்டிக் பேரல்களில் 1,000 லிட்டர்மற்றும் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய பிளாஸ்டிக் பேரலில் 200 லிட்டர் கள்ளச்சாராயத்தை அழித்தனர்.

    இதேபோல் கள்ளக் குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தாரனே ஸ்வரி தலைமையில் எழுத்தூர் காட்டுப்பகுதியில் மறைத்து வைத்திருந்த கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 21 பிளாஸ்டிக் பேரல்களில் சுமார் 4,200 லிட்டர் ஆக மொத்தமாக 5,200 லிட்டர் சாராய ஊரல் மற்றும் 200 லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் சம்பவ இடத்தி லேயே கொட்டி அழித்தனர்     மேலும் குற்ற செயலில் ஈடுபட்டு தலைமறைவாகி யுள்ள குற்றவாளிகளை தனிப்படை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்ற னர். கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சா ராயம், கஞ்சா மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்  போலீஸ் சூப்பிரண்டு கல்வராயன் மலைப்பகு திக்கு நேரடியாக வந்து சாராய ஊரல்கலை அழித்த சம்பவம் அப்பகுதி போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் குற்றவாளிகள் மத்தி யில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • பராமரிக்கப்படா விட்டால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

    கோவை,

    கோவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

    அதனை தொடர்ந்து பழைய வாகனங்களை விற்பனை செய்வதிலும், வாங்குவதிலும் நடக்கும் தவறுகள் வெளிச்சத்துக்கு வந்தன.

    குறிப்பிட்ட அந்த கார் முதலில் வாங்கிய நபரிடம் இருந்து அடுத்தடுத்து 10 பேருக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தாலும் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது.

    இத்தகைய குளறுபடி நடைமுறைகளுக்கு முடிவு கட்ட திட்டமிட்ட போலீசார் காலாவதியான மற்றும் பழுதடைந்த வாகனங்களை உடைப்பதற்கு, வாங்கும் வியாபாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தை நடத்தினர்.

    இதில் வியாபாரிகள் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.

    இந்த நிலையில் பழைய வாகன வியாபாரிகள் கூட்டம் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 2-வது முறையாக நடத்தப்பட்டது.

    இதில் 100-க்கும் மேற்பட்ட பழைய வாகன வியாபாரிகள், பணிமனை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

    போக்குவரத்து துைண கமிஷனர் மதிவாணன் தலைைம தாங்கினார். கூடுதல் துணை கமிஷனர் போக்குவரத்து திட்டமிடல் சிற்றரசு, உதவி கமிஷனர் சரவணன் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் துணை கமிஷனர் மதிவாணன் பேசியதாவது:-

    பழைய வாகனங்களை வாங்குவதையும், விற்பதையும் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மட்டுமே செய்ய வேண்டும்.

    உடைப்பதற்கு வாகனங்களை வாங்கும் ஒவ்வொரு வியாபாரியும் கடை அல்லது பணிமனையில் கட்டாயம் அது குறித்த பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்.

    வாகன உரிமையாளர்களின் ஆதார் எண், அடையாள அட்டை விபரங்கள், போன் எண் ஆகியவை சேகரிக்கப்பட வேண்டும். அந்த வாகனம் சட்ட பூர்வமான வாகனமா என்று உறுதி செய்த பிறகே வாங்க வேண்டும்.

    வாகனங்கள், உதிரிபாகங்களை விற்பனை செய்யும் போது, இதே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். இந்த பதிவேடுகளை போலீசார் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்வார்கள். பதிவேடுகள் சரியான முறையில் பராமரிக்கப்படா விட்டால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சேலம் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டாக மாவட்ட காவல் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
    • சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய ஸ்ரீ அபிநவ், கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் போலீஸ் அகடாமிக்கு மாறுதல் செய்யப்பட்டார்.

    சேலம்:

    சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய ஸ்ரீ அபிநவ், கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் போலீஸ் அகடாமிக்கு மாறுதல் செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் சென்னை வண்டலூர் போலீஸ் அகடாமி துணை இயக்குனராக பணியாற்றிய டாக்டர் சிவகுமார் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார்.

    அதைத்தொடர்ந்து இன்று காலை சேலம் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டாக மாவட்ட காவல் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு ஏடிஎஸ்பிக்கள் செல்ல பாண்டியன், கென்னடி, ராஜ காளீஸ்வரன்,மாவட்டத்தில் உள்ள டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள்,நேரில் வந்து வாழ்த்து தெரிவித்த னர். அதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சிவகுமார் மாவட்டத்திலுள்ள தனிப்பிரிவு போலீசார் உடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி, குட்கா, கள்ளச்சாராயம், விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,ரவுடிகள் ஒடுக்கப்படுவார்கள்,குற்றப் பின்னணி கொண்ட ரவுடிகள் கண்காணிக்கப்ப டுவார்கள்,காவல் நிலையங்களுக்கு வரும் ஏழைகள் தரும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் குற்றவாளி களுடன் கைகோர்க்கும் காவலர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • வரி செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர்மன்ற தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • வருகின்ற வருகிற 30-ந் தேதிக்குள் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் அல்லது tnurbanepay.tn.gov.in என்ற இணையதள வாயிலாகவோ செலுத்தலாம் என்றும் கூறினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா, ஆணையாளர் செல்வராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கீழக்கரை நகர் பொது மக்களின் தேவைக்காக குடிநீர் வசதி, வடிகால் வசதி, சாலை வசதி, கழிவுநீர் சுத்தகரிப்பு, தெருவிளக்கு பராமரிப்பு போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை கீழக்கரை நகராட்சி மேற்கொண்டு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட குடி யிருப்பு கட்டிடங்கள், வணிக கட்டிடங்களின் உரிமையாளர்கள் சிலர் செலுத்த வேண்டிய வரி இனங்களை முறையாக செலுத்தப்படாத காரணத்தினால், பொதுமக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சேவைகளில் தொய்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இந்த நிதியாண்டில் முதல் அரையாண்டு முடிவடைய குறுகிய காலங்களே உள்ள நிலையில் இதுவரை சொத்து வரி, காலிமனை வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், குத்தகை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை அகற்றப்படுவதற்கான கட்டணங்கள் ஆகியவைக்கான மொத்த கேட்பு தொகை ரூ.3 கோடியே 39 லட்சத்து 37ஆயிரம். அதில் இதுவரை 45 லட்சத்து 3 ஆயிரம் மட்டுமே வசூ லிக்கப்பட்டுள்ளது.

    சிலர் செலுத்த வேண்டிய வரியினங்களை முறையாக செலுத்தப்படாத காரணத்தினால், பொதுமக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சேவைகளில் தொய்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    எனவே பொதுமக்கள் பொறுப்புணர்வோடு செயல்பட்டு தங்களது வரி இனங்களை வருகின்ற வருகிற 30-ந் தேதிக்குள் கீழக்கரை நகராட்சி அலுவலகத்திலோ அல்லது tnurbanepay.tn.gov.in என்ற இணையதள வாயிலாகவோ நிலுவையின்றி தங்களது வரிகளை செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி, ஜப்தி நடவடிக்கையினை தவிர்த்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

    • ராமநாதபுரம் நகராட்சியில் வரி செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • இந்த தகவலை நகர்மன்ற தலைவர் அறிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் கார்மேகம் கூறியதாவது:-

    ராமநாதபுரம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர்வரி, தொழில்வரி, குத்தகை பாக்கி, வாடகை போன்றவற்றை 6 மாதத்திற்கு ஒரு முறை செலுத்த வேண்டும்.அவ்வாறு செலுத்தும் பணத்தில் இருந்து தான் பொதுமக்களுக்கு தேவையான வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியும்.

    ராமநாதபுரம் நகராட்சியில் வசிக்கும் வியாபாரிகள், பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி ரூ.10.90 கோடி, தொழில் வரி ரூ.63.31 லட்சம், குடிநீர் கட்டணம் ரூ.1.72 கோடி, பாதாள சாக்கடை கட்டணம் ரூ.2.93 கோடி, கடை வாடகை மற்றும் குத்தகை ரூ.1.71 கோடி என மொத்தம் ரூ. 17.90 கோடி வரி பாக்கியை செலுத்தவில்லை.

    இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிக்கை அனுப்பப்ப ட்டுள்ளது. ராமநாதபுரம் நகராட்சிக்கு வரி நிலுவை அதிகமாக உள்ளதால் நகராட்சி பொது நிதியில் இருந்து செலவினம் மேற்கொண்டு மக்களுக்கு சேவை செய்ய முடியாத நிலை உள்ளது.

    எனவே மேற்கண்ட வரி பாக்கிகளை வருகிற 30-ந் தேதிக்குள் நகராட்சிக்கு செலுத்தி பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வரி செலுத்தாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) லட்சுமணன் உடன் இருந்தார்.

    • டி.எஸ்.பி. எச்சரிக்கை
    • விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்

    செய்யாறு புதிய டிஎஸ்பி ஆக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள வெங்கடேசன் கூறியதாவது:-

    செய்யாறு போலீஸ் உட்கோட்டத்தில் கஞ்சாவை முழுவதுமாக ஒழிப்பது தான் முதல் கடமையாக இருக்கும். இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையில் போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை போலீசார்கள் ஈடுபடுவார்கள். கஞ்சா விற்பவர்கள், மணல் கடத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்து, மணல் கடத்தும் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு அவர்களது வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் அவர்களது சொத்துகள் மீதும் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மணல் கடத்தல் குறித்து புகார் செய்தால் நானே களத்தில் இறங்கி பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறேன்.

    பஸ் நிலையம், மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே தேவையில்லாமல் நிற்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செய்யாறு டவுன் மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் இரவு நேர போலீசில் வந்து செய்வது அட்டவணை செய்து கண்காணிக்கப்படும். இவ்வாறு டிஎஸ்பி வெங்கடேசன் கூறினார்.

    • செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கள்ளக்குறிச்சி கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள்மீது கடுமையானநடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது,

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விபத்துகளை தடுக்கும் வகையில் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் போக்குவரத்துத்துறை ஆகியவைகள் பல்வேறு நடவடிக்கைக ள்மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம்அணியாமல் செல்லுதல், 4 சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணியாமல் ஓட்டுதல், முக்கியமாக கைப்பேசியில் பேசிக்கொண்டே இரண்டு சக்கர மற்றும் 4 சக்கர வாகனத்தை இயக்குவது பெரும்பாலான விபத்து க்களுக்கு காரணமாக அமைகிறது. எனவே இதனை தடுக்கும் வகையில் கைப்பேசியில் பேசிக்கொண்டு இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தை ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும்4 சக்கர வாகனங்களில் வாகன ஓட்டுநர் மட்டுமின்றி வாகனத்தில் பயணம் செய்பவர்களும் சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை உணர்ந்து, சீட் பெல்ட் அணிந்து பயணிக்க வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள்மீது கடுமையானநடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன்படி போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள்மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தை விபத்தில்லாத மாவட்டமாக உருவாக்கிட மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேசியகொடியை அவமதிப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை என கலெக்டர் எச்சரிக்கை விடுத்தள்ளார்.
    • இன்று (13-ந் தேதி) முதல் 15-ந் தேதி வரை தேசியகொடியை பறக்கவிட வேண்டும் என்று உத்தரவிட்டப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின்75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு மத்திய, மாநில அரசு உத்தரவுகளின்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகள், கட்டடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் இன்று (13-ந் தேதி) முதல் 15-ந் தேதி வரை தேசியகொடியை பறக்கவிட வேண்டும் என்று உத்தரவிட்டப்பட்டுள்ளது.

    சுதந்திர தினத்தன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி, அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் சம்பந்தப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர்கள் மட்டுமே தேசியகொடிையஏற்றி மரியாதை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பதிலாக வேறு எவரேனும் தேசியகொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் அவர்கள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்கப்படும்.

    ஊராட்சிகளில் தேசிய கொடியை ஏற்றுவது தொடர்பாக ஏதேனும் பிரச்சினை இருந்தால் விருதுநகர் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநரிடம் 7402608260 மற்றும் 04562-252765 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். தேசியகொடியை அவ மதிப்பு செய்யும் செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஸ்ரீவைகுண்டம் புதிய டி.எஸ்.பி. மாயவன் பதவியேற்றார்.
    • சட்டவிரோத குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய விசாரணை செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    செய்துங்கநல்லூர்:

    ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. வெங்கடேசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய டி.எஸ்.பி.யாக மாயவன் பதவியேற்றார்.

    அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் திருப்பூரில் பயிற்சி டிஎஸ்பி-ஆக பணியாற்றி உள்ளார். தற்போது ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி.யாக பதவியேற்றுள்ளார்.

    அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    போதை பொருள் விற்பனையை முற்றிலுமாக ஒழித்தால் குற்றங்கள் நடைபெறாது. எனவே போதைப் பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்து வசதி இல்லாத கிராமத்தில் பிறந்து அரசு பள்ளியில் படித்து தற்போது டி.எஸ்.பி.யாக பொறுப்பேற்றுள்ளேன்.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகள் வழங்கப்படும்.

    தனியார் பள்ளியில் படித்தால் மட்டுமே உயர் கல்வி பயில முடியும் அரசு வேலைவாய்ப்பினை பெற முடியும் என்ற தவறான எண்ணங்களை மாற்றி அரசு பள்ளி பயிலும் மாணவர்களும் உயர் பதவிக்கு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

    ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, ஏரல், மற்றும் கருங்குளம் தாமிரபரணி ஆற்றுப் பகுதிகளில் மணல் கடத்துபவர் மீதும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப்பொருட்களை கொட்டுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோத குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய விசாரணை செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
    • கொடுமுடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 2 கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஈரோடு:

    கள்ளக்குறிச்சியில், தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தையடுத்து அது தொடர்பாக பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் சிலர் சமூக வளைதலங்களில் வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.

    இது போன்ற வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். இதேபோல அச்சம்பவம் தொடர்பாக வாட்ஸ் -அப் மூலமாக புதிய குழுக்களை ஆரம்பித்து, மாநில அளவில் இளைஞர்களை ஒன்றிணைத்து போராட்ட ங்களில் ஈடுபட உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் கொடுமுடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 2 கைது செய்யப்பட்டுள்ளனர்.

    எனவே இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் எடுக்கப்படும் என ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில் எச்சரிக்கை விடுக்க ப்பட்டுள்ளது.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வலைதளங்களில் பொய்யான செய்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்தார்.
    • காவல்துறை மீது களங்கம் விளைவிக்கும் நோக்கத்திலோ பரப்பிவருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் இறந்துபோனது சம்மந்தமாக இறந்து போன மாணவியின் தந்தை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்வது போன்ற வீடியோ காட்சி சமூகவளைதளத்தில் பரவிவருகிறது. இது சம்மந்தமாக விசாரணை செய்த போது இந்த வீடியோ நாகப்படினம் மாவட்டம் திருக்கண்ணபுரம் காவல் சரகம் பெருநாட்டான்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் குடும்பத்தினருக்கும் அவரது பக்கத்து வீடான முனுசாமி என்பவர் குடும்பத்தினருக்கும் வேலி பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டதில் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டுள்ளது. இந்நிலையில் 14.07.2022-ந் தேதி தேவேந்திரன் என்பவர் நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தான் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென தீக்குளிக்க முயற்சித்தார்.

    அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த வீடியோ என்று தெரியவருகிறது . இந்த சம்பவத்தை வேறு விதமாக திசைதிருப்பி கனியாமூர் சக்தி பள்ளியில் இறந்து போன மாணவி ஸ்ரீமதியின் தந்தை நீதி கேட்டு தீக்குளிக்க முயற்சி செய்வது போன்று பொய்யான செய்தியை, மக்கள் மத்தியில் கிளர்ச்சியை உறுவாக்க வேண்டும் என்ற நோக்கத்திலோ அல்லது காவல்துறை மீது களங்கம் விளைவிக்கும் நோக்கத்திலோ பரப்பிவருகின்றனர். இதுபோன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

    ×