search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி வாகனங்களை முறையாக பாராமரிக்காமல் விட்டால் கடும் நடவடிக்கை - அரியலூர் கலெக்டர் எச்சரிக்கை
    X

    பள்ளி வாகனங்களை முறையாக பாராமரிக்காமல் விட்டால் கடும் நடவடிக்கை - அரியலூர் கலெக்டர் எச்சரிக்கை

    • வட்டார போக்குவரத்துத் துறை சார்பில் சுமார் 52 பள்ளிகளைச் சார்ந்த சுமார் 250 வாகனங்கள் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
    • பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு சுமார் 15 குறைபாடு உடைய வாகனங்கள் கண்டறியப்பட்டு சரி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் - திருச்சி புறவழிச்சாலையில் தனியாருக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட திறந்தவெளி மைதானத்தில் வட்டார போக்குவரத்துத் துறை சார்பில் சுமார் 52 பள்ளிகளைச் சார்ந்த சுமார் 250 வாகனங்கள் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    சுமார் 15 வாகனங்கள் முறையாக பராமரிக்காததால் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது கூடுதல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ரவி சேகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், வட்டார போக்குவரத்து துறை அலுவலர் பிரபாகர், வட்டார போக்குவரத்து துறை ஆய்வாளர் சரவணபவன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுருளி பிரபு, உதவி அலுவலர் பிரபாகர், அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத், போக்குவரத்து துறை இன்ஸ்பெக்டர் பத்மநாபன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆய்வில் அரியலூர் மாவட்ட கலெக்டர்ர மண சரஸ்வதி தெரிவித்ததாவது:

    வாகனங்களின் பதிவு சான்று, ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம், முதலுதவி பெட்டி, அவசர வழி, தீயணைப்பு கருவி, படிக்கட்டுகள், கதவுகள், ஆவணங்கள், உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு சுமார் 15 குறைபாடு உடைய வாகனங்கள் கண்டறியப்பட்டு சரி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. குறைபாடு கண்டறியப்பட்ட வாகனங்கள் மறு ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட பின்னரே மீண்டும் இயக்க அனுமதிக்கப்படும், மேலும் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் ஓட்டுநர்கள் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்லவும், வாகனங்களை மெதுவாக இயக்குவதுடன் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும், பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்காவிட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    Next Story
    ×