search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "srivilliputhur"

    ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே காவல் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இரண்டு போலீசார் படுகாயம் அடைந்தனர். #BombBlast #PoliceInjured
    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகில் உள்ளது மம்சாபுரம் காவல் நிலையம். நேற்று முன்தினம் ரோந்து சென்ற போலீசார் 7 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர். அவற்றை காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.

    இந்நிலையில், மம்சாபுரம் காவல் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கும் பணி இன்று நடைபெற்றது.

    அப்போது அதில் இரு நாட்டு வெடிகுண்டுகள் திடீரென வெடித்தன. இதில் காவல் நிலையத்தில் இருந்த 2 போலீசாருக்கு படுகாயம் ஏற்பட்டது.

    காவலர்கள் தேவதாஸ் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் மேல் சிகிச்சைக்க்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    காவல் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து போலீசார் காயமடைந்தது அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #BombBlast #PoliceInjured
    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இன்று வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற விபத்துக்களில் 2 பேர் பலியானார்கள்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    மதுரை ஜெய்ஹிந்து புரத்தைச் சேர்ந்தவர் மாயாண்டி (வயது19). இவர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலைய பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இன்று காலை மாயாண்டி, தனது நண்பர்கள் சுந்தர், கல்யாணப்பெருமாள் ஆகியோருடன் ஒரே மோட் டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்- செண்பகதோப்பு சாலையில் மறவமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

    படுகாயம் அடைந்த மாயாண்டி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். உயிருக்கு போராடிய சுந்தர், கல்யாணப்பெருமாளை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் 2 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    விபத்து குறித்து மம்சாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் வைரமுத்து (29), டிராக்டர் டிரைவர். இவர் இன்று காலை திருவண்ணாமலைக்கு டிராக்டரில் சென்றார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த வைரமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக மாடியில் இருந்து குதித்து போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மாரநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் சுகுமாறன் (வயது29).

    சிறப்பு காவல்படை போலீஸ்காரரான இவர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மொட்டமலை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.

    குடும்ப பிரச்சனை காரணமாக சுகுமாறன் கடந்த சில வாரங்களாகவே விரக்தியுடன் காணப்பட் டார். யாருடனும் சரிவர பேசவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று பணியை முடித்து வீட்டுக்கு வந்த சுகுமாறன் திடீரென்று வீட்டு மாடியில் இருந்து குதித்தார். படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராஜபாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு நிலைமை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுகுமாறன் இறந்தார்.

    இதுகுறித்து வன்னியம் பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ×