என் மலர்

    செய்திகள்

    சுகுமாறன்
    X
    சுகுமாறன்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாடியில் இருந்து குதித்து போலீஸ்காரர் தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக மாடியில் இருந்து குதித்து போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மாரநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் சுகுமாறன் (வயது29).

    சிறப்பு காவல்படை போலீஸ்காரரான இவர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மொட்டமலை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.

    குடும்ப பிரச்சனை காரணமாக சுகுமாறன் கடந்த சில வாரங்களாகவே விரக்தியுடன் காணப்பட் டார். யாருடனும் சரிவர பேசவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று பணியை முடித்து வீட்டுக்கு வந்த சுகுமாறன் திடீரென்று வீட்டு மாடியில் இருந்து குதித்தார். படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராஜபாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு நிலைமை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுகுமாறன் இறந்தார்.

    இதுகுறித்து வன்னியம் பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    Next Story
    ×