என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Soup"
- இதர கீரைகளைவிட இதில் அதிகளவு புரதச்சத்தும், மற்ற சத்துகளும் அடங்கியுள்ளன.
- முருங்கைக் கீரையில் மற்ற தாவர உணவுகளில் இருப்பதைவிட 25 மடங்கு இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
தேவையான பொருட்கள் :
முருங்கைக்கீரை - ஒரு கப்,
பாசிப்பருப்பு - 5 டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
நெய், மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,
வெங்காயம் -1,
பூண்டு பல் - 4,
தோல் சீவிய இஞ்சி - சிறிதளவு,
பச்சை மிளகாய் - 2,
உப்பு - தேவைக்கு.
செய்முறை:
வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
குக்கரில் பாசிப்பருப்பு, கீரை, சீரகம், வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், இரண்டு கப் தண்ணீர் ஊற்றி மூடி 4 விசில் விட்டு இறக்கவும்.
விசில் போனவுடன் குக்கரை திறந்து பருப்பு கலவையை நன்கு மசிக்கவும்.
வாணலியில் நெய் விட்டு உருகியதும் பருப்பு, முருங்கைக்கீரை சாற்றை ஊற்றவும்.
இதனுடன் ஒரு கப் தண்ணீர், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி பருகலாம்.
சத்தான முருங்கைக் கீரை சூப் ரெடி.
- சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
- தற்போதைய சூழ்நிலையில் நாட்டுக்கோழி சூப் குடிப்பது நல்லது.
தேவையான பொருட்கள்:
நாட்டுக்கோழி - 1/4 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 1/4 கப்
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1/2 இன்ச்
ஏலக்காய் - 1
கிராம்பு - 1
கறிவேப்பிலை - சிறிது
அரைப்பதற்கு...
மல்லி விதைகள் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 3
தண்ணீர் - சிறிது
செய்முறை:
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாகநறுக்கி கொள்ளவும்.
மிக்சியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, சிறிது நீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
நாட்டுக்கோழியையும் நன்கு நீரில் கழுவிக் கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து தாளித்த பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, பின் வெங்காயம் மற்றும் சிறிது உப்பு தூவி, பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின்பு தக்காளியைப் போட்டு நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.
அடுத்து கழுவி வைத்துள்ள நாட்டுக் கோழி, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து 3 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.
பின் அரைத்து வைத்துள்ள மல்லி, சீரக பேஸ்ட்டை சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி, உப்பு சுவை பார்த்து, குக்கரை மூடி 5-6 விசில் விட்டு இறக்கவும்.
குக்கரில் உள்ள விசில் போனாலும், குக்கரைத் திறந்து கொத்தமல்லியைத் தூவினால், சுவையான நாட்டுக்கோழி சூப் தயார்!
- தினமும் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
- காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு அரிசி காய்கறி சூப் செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்
புழுங்கலரிசி – 1 டேபிள் ஸ்பூன்,
ஏதாவது கலந்த காய்கறிகள் – 1/4 கப்
இஞ்சி பூண்டு விழுது – 1/4 டீஸ்பூன்,
வெங்காயம் – 1,
தக்காளி – 1,
புதினா, கொத்தமல்லித்தழை – சிறிது,
தேங்காய்ப்பால் – 1/2 கப்,
வெண்ணெய் – 2 டீஸ்பூன் + எண்ணெய் – 1 டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் – 1 சிட்டிகை,
உப்பு – தேவைக்கு.
செய்முறை
அரிசியை நன்றாக கழுவி ஊற வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
குக்கரில் வெண்ணெய் + எண்ணெயை ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கிய பின்னர் கரம் மசாலாத்தூள், வெங்காயம், தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை போட்டு வதக்கவும்.
வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
இத்துடன் ஊற வைத்த அரிசியை போட்டு நன்றாக வதக்கி 3 கப் தண்ணீர், உப்பு போட்டு கொதித்ததும் குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கவும்.
விசில் போனதும் குக்கர் மூடியை திறந்து தேங்காய்ப்பால் சேர்த்து அடுப்பில் வைத்து கொதி வரும் முன் இறக்கி பரிமாறவும்.
இப்போது சத்தான சுவையான அரிசி காய்கறி சூப் ரெடி.
அகத்திக்கீரை - அரை கட்டு,
தக்காளி - 2,
சின்ன வெங்காயம் - 10,
சீரகம் - 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
தேங்காய்ப்பால் - 200 கிராம்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
அரிசி கழுவின நீர் - 200 மில்லி,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
அகத்திக்கீரையை நன்றாகச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
பின்னர் அகத்திக்கீரை, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
கீரை வெந்தபின் அரிசி கழுவின நீர்விட்டு ஒரு கொதிவந்தவுடன் தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கவும்.
ராஜ்மா - 1/4 கப்,
வெங்காயம் - 1,
தக்காளி - 1,
பூண்டு - 3 பல்,
பிரிஞ்சி இலை - 1,
வெண்ணெய் - 1 டீஸ்பூன்,
ஃப்ரெஷ் கிரீம் - 1 டேபிள்ஸ்பூன் (தேவைப்பட்டால்),
உப்பு - தேவையான அளவு,
செய்முறை :
ராஜ்மாவை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்கவும்.
தக்காளி, வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் வெண்ணெய் சேர்த்து, பிரிஞ்சி இலை, பூண்டைப் போட்டு வதக்கவும்.
அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கிய பின்னர் ஊற வைத்த ராஜ்மா, 2 கப் தண்ணீர் சேர்த்து 7 விசில் வரும் வரை வேக விடவும்.
விசில் போனவுடன் ராஜ்மாவை ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதில் தேவையான தண்ணீர் சேர்த்து, உப்பு, மிளகுத் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து 2 கொதி வந்ததும், ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து சூடாகப் பரிமாறவும். ஃப்ரெஷ் கிரீமுக்கு பதிலாக 2 டேபிள்ஸ்பூன் பால் சேர்த்தும் கொதிக்க விடலாம்.
சத்தான சுவையான ராஜ்மா சூப் ரெடி.
புதினா - கால் கப்,
இஞ்சி - ஓர் அங்குலத் துண்டு,
மோர் - 3 கப்,
கடுகு, ஓமம் - தலா ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய் - தாளிக்கத் தேவையான அளவு,
கொத்தமல்லி - சிறிதளவு,
செய்முறை :
புதினாவை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சியை தோல் சீவி, சிறிதளவு நீர் விட்டு அரைத்து, வடிகட்டி, சாறு எடுத்துக்கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் சுத்தம் செய்த புதினாவை போட்டு வதக்கி ஆறவைத்து மிக்ஸியில் போட்டு சிறிது நீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
அதனுடன் மோர், உப்பு, ஓமம், பெருங்காயத்தூள், இஞ்சிச் சாறு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் அரைத்த வைத்த கலவையை ஊற்றி கொதி வரும் முன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான புதினா - இஞ்சி ரசம் ரெடி.
பெரிய நெல்லிக்காய் - 5,
பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
துவரம்பருப்பு வேகவைத்த நீர் - ஒரு கப்
பொடி செய்ய:
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
கட்டிப் பெருங்காயம் - சிறிதளவு,
தனியா - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
நெய் - சிறிதளவு.
தாளிக்க:
செய்முறை:
பொடி செய்யக் கொடுத்துள்ளவற்றை, சிறிதளவு நெய்யில் வறுத்து ஆறவைத்து பொடித்து கொள்ளவும்.
நெல்லிக்காயை கொட்டை நீக்கி துருவிக்கொள்ளவும்.
துருவிய நெல்லிக்காயுடன் நறுக்கிய இஞ்சியை சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்த பின்னர் பருப்பு வேகவைத்த நீர் விட்டு… வறுத்து அரைத்த பொடி, நெல்லி - இஞ்சி விழுது சேர்த்து, உப்பு போட்டு ஒரு கொதிவிட்டு கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும் (விருப்பப்பட்டால், இறக்கிய பிறகு எலுமிச்சைச் சாறு ஒரு டேபிள்ஸ்பூன் சேர்க்கலாம்.)
நன்றாகக் கழுவி, துருவிய காலிஃப்ளவர் - ஒரு கப்,
காலிஃப்ளவர் தண்டு - அரை கப் (பொடியாக நறுக்கியது),
பால் - ஒரு கப்,
மிளகுத்தூள் - சிறிதளவு,
கோதுமை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,
பெரிய வெங்காயம் - ஒன்று,
பூண்டு - 5 பல்,
நெய் அல்லது வெண்ணெய் - தேவையான அளவு,
செய்முறை:
வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
காலிஃப்ளவர் தண்டு, பூண்டு, வெங்காயத்தை மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
கடாயில் சிறிதளவு நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்து, துருவிய காலிஃப்ளவரை போட்டு வதக்கவும்.
அடுத்து அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் புரட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
கடாயில் நெய் அல்லது வெண்ணெய் விட்டு, அரைத்த விழுதை சேர்த்துப் புரட்டி, கோதுமை மாவை போட்டுக் கிளறவும்.
2 நிமிடங்கள் கழித்து ஒரு கப் நீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.
கொதிக்க ஆரம்பித்தவுடன் வதக்கி வைத்துள்ள காலிஃப்ளவர் கலவையை இதில் சேர்த்துக் கொதிக்கவிட்டு, பால் சேர்த்துக் கிளறி, அடுப்பை அணைக்கவும்.
விருப்பப்பட்டால், சூப்பை கப்பில் ஊற்றிய பின், சிறிதளவு மிளகுத்தூள் தூவிக்கொள்ளலாம்.
நண்டு - 250 கிராம்.
கொத்தமல்லி - சிறிதளவு
அரைக்க…
சாம்பார் வெங்காயம் - 1,
தக்காளி - 2,
பச்சைமிளகாய் - 3,
பூண்டு - 4 பல்,
இஞ்சி - சிறிது,
நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.
தாளிக்க:
கடுகு, மிளகு, சீரகம், சோம்பு - தலா 1/2 டீஸ்பூன்,
செய்முறை:
நண்டை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் அரைக்க கொடுத்த பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு வதக்கி அரைத்து கொள்ளவும்.
மண்சட்டியில் அரைத்த விழுது, சிறிது தண்ணீர், நண்டு சேர்த்து, உப்பு போட்டு 10 நிமிடம் வேகவிடவும்.
நண்டு நன்றாக வெந்ததும் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களைபோட்டு தாளித்து நண்டு ரசத்தில் கொட்டி கலந்து இறக்கவும்.
கொத்தமல்லி தூவி சூடாக சூப் போல் பரிமாறலாம் அல்லது சாதத்துடனும் பரிமாறலாம்.
நறுக்கிய கொத்தமல்லித்தழை - அரை கப்
தண்ணீர் - தேவைக்கு
துருவிய எலுமிச்சை தோல் - 1 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய முட்டைக்கோஸ் - கால் கப்
நறுக்கிய பேபி கார்ன் - 1
பட்டாணி - சிறிதளவு
கேரட், மிளகாய் - 1
உப்பு - தேவைக்கு
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
செய்முறை :
ப.மிளகாய், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி துருவிய எலுமிச்சை தோல், மிளகாய், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை போட்டு கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். வடிகட்டிய தண்ணீரை வாணலியில் ஊற்றி அதனுடன் கேரட், முட்டைக்கோஸ், பட்டாணி, பேபி கார்ன் ஆகியவற்றை கொட்டி வேக வைக்கவும்.
ஓரளவு வந்ததும் அதனுடன் உப்பு, மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து பருகவும்.
பார்லி - 1/2 கப்
எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம்
கேரட் - 1
ப்ரோக்கோலி - சிறிதளவு
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 4 பல்லு
இஞ்சி - 1/2 இன்சி
பச்சை மிளகாய் - 1
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ப்ரோக்கோலியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
கேரட்டை வட்டமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கொத்தமல்லி, இஞ்சி, ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பார்லியை நன்றாக சுத்தம் செய்து போதுமான அளவில் தண்ணீர் ஊற்றி நன்றாக அவித்து கொள்ளவும்.
காடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும வெங்காயம், பூண்டு, இஞ்சி, ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில், சிக்கனை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
அடுத்து அதில் கேரட், ப்ரோக்கோலியை சேர்த்து வதக்கவும்.
காய்கள், சிக்கல் வெந்ததும் அதில், வேகவைத்த பார்லியை தண்ணீருடன் ஊற்றி உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
பச்சை சுண்டைக்காய் - 50 கிராம்,
வேக வைத்த பாசிப்பருப்பு தண்ணீர் - ஒரு கப்,
தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று,
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - ஒன்று,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
மிளகு - சீரகப்பொடி,
செய்முறை :
தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பச்சை சுண்டைக்காயை நன்கு கழுவி, பின்னர் நசுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அனைத்தும் நன்றாக வதங்கியதும் நசுக்கிய சுண்டைக்காயை போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு நன்கு வேகவிடவும்.
பிறகு, உப்பு, பாசிப்பருப்பு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி, மிளகு, சீரகப்பொடி, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி பரிமாறவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்