search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Soup"

    • ரசத்தில் பல்வேறு வெரைட்டிகள் உள்ளது.
    • இன்று வாழை இலை ரசம் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    சிறிய பிஞ்சி வாழை இலை - 1

    தக்காளி - 1

    காய்ந்த மிளகாய் - 3

    சீரகம் - ஒரு தேக்கரண்டி

    மிளகு - ஒரு தேக்கரண்டி

    புளி - எலுமிச்சை அளவு

    பூண்டு - 8 பல்

    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

    உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை - தேவையான அளவு

    எண்ணெய் - 1 தேக்கரண்டி

    கடுகு, பெருங்காயம், வெந்தயம் - தாளிக்க

    செய்முறை

    வாழை இலையை நன்றாக கழுவிய பின்னர் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளியை துண்டுகளாக வெட்டிகெள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இளம் வாழை இலை, பூண்டு, மிளகு , சீரகம், தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயம், வெந்தயம் சேர்த்து தாளித்த பின்னர் அரைத்த மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். மசாலா நன்கு வதங்கியதும் அதில் புளிக்கரைசல் ,உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து லேசாக கொதிக்க ஆரம்பித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    சூடான சுவையான ஆரோக்கியமான வாழை இலை ரசம் ரெடி.

    இதனை சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம் அல்லது சூப் போன்றும் குடிக்கலாம்.காய்ச்சல், சளி உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல மருந்தாகும்.

    • தினமும் கேழ்வரகை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.
    • கேழ்வரகில் சத்தான பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு மாவு - 3 ஸ்பூன்,

    தண்ணீர் - 4 கப்,

    கேரட் - 1

    பசலை கீரை - அரை கப்

    பச்சை பட்டாணி - கால் கப்

    காலிஃப்ளவர் - சிறிதளவு

    துருவிய கோஸ் - கால் கப்

    பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்

    சோயா பீன்ஸ் - கால் கப்

    பீன்ஸ் - கால் கப்

    எலுமிச்சை பழம் - பாதி

    உப்பு - தேவைக்கு

    மிளகு தூள் - தேவைக்கு

    கொத்தமல்லி தழை - சிறிதளவு

    நெய் - 1 ஸ்பூன்

    செய்முறை

    * கடாயில் நெய் ஊற்றி சூடானதும் கேழ்வரகு மாவை போட்டு வறுத்து கொள்ளவும்.

    * பீன்ஸ், கேரட், பசலைக்கீரை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * காலிஃப்ளவரை சிறிய பூக்களாக உதிர்த்து வைக்கவும்.

    * கேழ்வரகு மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் நெய், பீன்ஸ், கேரட், பசலைக்கீரை, காலிஃப்ளவர், சோயா பீன்ஸ், துருவிய கோஸ், பச்சை பட்டாணி, உப்பு சேர்த்து மிதமான தீயில் 12 நிமிடம் கொதிக்க விடவும்.

    * அடுத்து அதில் நறுக்கிய பூண்டை சேர்த்து கொதிக்கவிடவும்.

    * கரைத்த வைத்த கேழ்வரகு கரைசலை ஊற்றி(கட்டி விழக்கூடாது) நன்றாக கலக்கி விடவும். அதை 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

    * அடுத்து அதில் மிளகுத்தூள், கொத்தமல்லி தழை, எலுமிச்சை சாறு சேர்த்து 1 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.

    * இப்போது சூப்பரான கேழ்வரகு - காய்கறி சூப் ரெடி.

    * விருப்பான எல்லா காய்கறிகளையும் இதில் சேர்த்து கொள்ளலாம்.

    • காய்கறிகள், சிக்கன் சேர்த்து செய்யும் சூப் உடலுக்கு நன்மை அளிக்கிறது.
    • இன்று இந்த சூப் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - கால் கிலோ

    வெங்காயம் - 1

    காளான் – 1 கப்

    கேரட் – 3

    பீன்ஸ் - 3

    கோஸ் - சிறிய துண்டு

    தனி மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி

    பெருஞ்சீரகம், இஞ்சி, பூண்டு,மிளகு தூள், கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு

    வெண்ணெய் - 2 டீஸ்பூன்

    செய்முறை :

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி வேகவைத்து கொள்ளவும்.

    பெருஞ்சீரகம், இஞ்சி, பூண்டை கொரகொரப்பாக தட்டி வைக்கவும்.

    கொத்தமல்லி, வெங்காயம், கேரட், பீன்ஸ், கோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காளானை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு உருகியதும் தட்டி வைத்த பெருஞ்சீரகம், இஞ்சி, பூண்டை போட்டு வதக்கிய பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் காய்கறிகள், காளான் சேர்த்து வதக்கவும்.

    இதற்கு தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள் சேர்த்து சிக்கன் வேக வைத்த நீரை ஊற்றி காய்கறிகளை வேக விடவும்.

    இப்போது வேக வைத்த சிக்கனை சேர்த்து கொள்வதோடு உப்பு மற்றும் மிளகு சேர்த்து வதக்க வேண்டும்.

    காய்கறிகள் மற்றும் சிக்கன் வெந்துள்ளதா? என சரிபார்த்துவிட்டு சிக்கன் வெஜிடபிள் சூப்பை பரிமாறலாம்.

    • காய்ச்சல், உடல் வலியால் அவதிப்படுபவர்கள் இந்த ரசத்தை குடிக்கலாம்.
    • இந்த ரசத்தை சூப்பாகவும் குடிக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    நல்லி எலும்பு - கால் கிலோ

    வெங்காயம் - 2

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்

    மிளகு தூள் - 1/2 ஸ்பூன்

    சீரகப் பொடி - 1/2 ஸ்பூன்

    மஞ்சள் - 1/4 ஸ்பூன்

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    தாளிக்க :

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்

    கொத்தமல்லி - கையளவு.

    மிளகு - தேவைக்கு ஏற்ப

    செய்முறை

    நல்லி எலும்பை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் நன்கு சுத்தம் செய்யப்பட்ட ஆட்டுக்காலை போட்டு தண்ணீர் ஊற்றி அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, சிறிது கொத்தமல்லி தழை, மிளகு தூள், வெங்காயம், சீரகப் பொடி, மஞ்சள் சேர்த்து நன்குக் கலந்து குக்கரை மூடி அடுப்பில் குறைவான தீயில் 30 நிமிடங்கள் வேக வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

    பின் வேக வைத்த மட்டன் தண்ணீரை ஊற்றவும்.

    இறுதியாக மிளகு தூள், கொத்தமல்லி தழை தூவி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

    இப்போது காரசாரமான நல்லி எலும்பு ரசம் தயார்.

    • மலேசிய நாட்டில் பிரபலமாக இருக்கும் நூடுல்ஸ் சூப் வகை 'லக்சா லீமக்'.
    • இதை சைவம் மற்றும் அசைவம் என இரண்டு விதமாக தயாரிக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கேரட் - 50 கிராம்

    புரோக்கோலி - 50 கிராம்

    சிகப்பு குடைமிளகாய் - 50 கிராம்

    காளான் - 50 கிராம்

    டோபு - 50 கிராம்

    நூடுல்ஸ் - 100 கிராம்

    எண்ணெய் - தேவையான அளவு

    தேங்காய்ப்பால் - 1 கப்

    வெல்லம் - 1 தேக்கரண்டி

    அரைப்பதற்கு:

    பாதாம் பருப்பு - 12

    மிளகாய் வற்றல் (தண்ணீரில் ஊறவைத்தது) - 10

    மிளகாய் வற்றல் (உலர்ந்தது) - 2

    வெங்காயம் - 1

    பூண்டு - 2 பல்

    இஞ்சி - சிறிய துண்டு

    தனியா - 1 டீஸ்பூன்

    எலுமிச்சைப் புல் - சிறிதளவு

    மஞ்சள்தூள் - 1 சிட்டிகை

    செய்முறை:

    காய்கறிகள் அனைத்தையும் நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.

    நூடுல்ஸை வேகவைத்து தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.

    பாதாம் பருப்பை பத்து நிமிடங்கள் வெந்நீரில் ஊற வைக்கவும்.

    மிக்சியில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, தனியா, ஊறவைக்காத மிளகாய் வற்றல், சிறிது எலுமிச்சைப் புல், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் ஊறவைத்த பாதாம் மற்றும் மிளகாய் வற்றலும் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து, 3 தேக்கரண்டி சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் அரைத்து வைத்திருக்கும் விழுதினைப் போட்டு 15 நிமிடங்கள் நன்றாகக் கிளறவும்.

    இந்தக் கலவை தொக்கு பதத்திற்கு வந்து, எண்ணெய் பிரியும் நிலையில் தண்ணீர் ஊற்றி உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

    பின்னர் ஒரு கப் தேங்காய்ப் பால் ஊற்றிக் கலந்து சிறிது நேரம் ஆறவிடவும்.

    மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, காளான் மற்றும் டோபுவை போட்டு வறுத்துக்கொள்ளவும்.

    பின்னர் அதே எண்ணெய்யில் மற்ற காய்கறிகளை வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி 3 நிமிடங்கள் மட்டும் வேகவைத்து வடிகட்டி எடுக்கவும்.

    பரிமாறும் முறை:

    ஒரு கிண்ணத்தில் மசாலா கலந்த கலவையை ஊற்றி, வேகவைத்த நூடுல்ஸை சேர்க்கவும்.

    அதன் மேல் வேகவைத்த காய்கறிகள், வறுத்த காளான் மற்றும் டோபு சேர்த்து பரிமாறவும்.

    • உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் .
    • சளி, இருமல், காய்ச்சலை குணமாக்கும்.

    தேவையான பொருட்கள் :

    தூதுவளை இலைகள் - 10.

    பூண்டு - 5 பல்,

    தோல் சீவி துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்,

    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா - தலா கைப்பிடியளவு

    உப்பு, மிளகுத்தூள் தேவைக்கு, துளசி இலைகள் - சிறிதளவு,

    எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,

    தோலுரித்த சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கவும்).

    செய்முறை:

    வாணலியில் தூதுவளை இலைகள், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா, வெங்காயம், துளசி இலைகள், தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்கு கொதிக்க விடவும்.

    பிறகு இறக்கி வடிகட்டி மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து சூடாக பருகவும்.

    • ஆட்டு கறியில் பல வகையான உணவுகளை செய்யலாம்.
    • இன்று ஆட்டுக் குடலில் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    ஆட்டுக் குடல் - அரை கிலோ

    சின்ன வெங்காயம் - 150 கிராம்

    தக்காளி - 100 கிராம்

    சீரகம், மிளகுத்தூள் - தலா 2 டீஸ்பூன்

    மஞ்சள்த்தூள் - சிறிதளவு

    இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்

    உப்பு, எண்ணெய்,

    தண்ணீர் - தேவைக்கேற்ப

    கொத்தமல்லி இலை - சிறிதளவு

    இஞ்சி - சிறிய துண்டு

    பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்

    செய்முறை

    முதலில், குடலை நன்றாக வாசனை வராத அளவு கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுத்து இஞ்சி, பெருஞ்சீரகத்தை தட்டி வைக்கவும்.

    மிளகு சீரகத்தை பொடித்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டி வைத்த பெருஞ்சீரகம் இஞ்சியை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்த வதக்கவும்.

    தக்காளி சற்று வதங்கியதும் கழுவிய குடல், மஞ்சள் தூள், பொடித்த மிளகு சீரகம் 1 டீஸ்பூன், உப்பு போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 15 விசில் போட்டு இறக்கவும்.

    விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து மேலும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.

    கடைசியாக சிறிது கொத்தமல்லி, மீதமுள்ள மிளகுத்தூள் சேர்த்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான ஆட்டுக் குடல் சூப் ரெடி

    • சூப் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
    • இன்று சிக்கன் சூப் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - 300 கிராம்

    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

    தண்ணீர் - 2 கப்

    அரைப்பதற்கு...

    சின்ன வெங்காயம் - 10

    கொத்தமல்லி - 1/4 கப்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    மிளகு - 1/2 டீஸ்பூன்

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்

    ஏலக்காய் - 1

    சீரகம் - 1/2 டீஸ்பூன்

    கறிவேறிப்பிலை - சிறிது

    பெரிய வெங்காயம் - 1 சின்ன வெங்காயம்

    செய்முறை:

    * முதலில் சிக்கனை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

    * பின் அரைப்பதற்கு கொடுத்துள்ள சின்ன வெங்காயம், கொத்தமல்லி, மிளகு, சீரகத்தைப் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஏலக்காய், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

    * பிறகு வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து லேசான பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

    * அடுத்து அதில் கழுவி வைத்துள்ள சிக்கன் துண்டுகள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

    * பின் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை குறைந்தது 3-5 நிமிடம் வதக்க வேண்டும்.

    * பின்பு தேவையான அளவு நீர், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கினால், சுவையான சிக்கன் சூப் தயார்.

    • தூதுவளை கீரையை நெயில் வதக்கித் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் நெஞ்சு சளி நீங்கும்.
    • ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள் கட்டாயம் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    தேவையான பொருட்கள் :

    தூதுவளை இலைகள் - 10.

    பூண்டு - 5 பல்,

    தோல் சீவி துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்,

    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா - தலா கைப்பிடியளவு

    உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கு,

    துளசி இலைகள் - சிறிதளவு,

    எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,

    தோலுரித்த சின்ன வெங்காயம் - 10.

    செய்முறை:

    சின்ன வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் தூதுவளை இலைகள், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா, வெங்காயம், துளசி இலைகள், தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

    பிறகு இறக்கி வடிகட்டி மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து சூடாக பருகவும்.

    • வீட்டில் வடித்த சாதம் வைத்தும் சூப் தயாரிக்கலாம்.
    • இந்த சூப்பை செய்வதும் மிகவும் எளிது.

    தேவையான பொருட்கள் :

    சாதம் வடித்த தண்ணீர், காய்கறி வேக வைத்த தண்ணீர் - தலா ஒரு கப்,

    எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,

    உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கு.

    செய்முறை:

    சாதம் வடித்த தண்ணீர் கிடைக்கா விட்டால் சாதத்துடன் தண்ணீர் விட்டு மிக்சியில் அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.

    அதனுடன் காய்கறி வேக வைத்த தண்ணீர், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி எலுமிச்சைச் சாறு கலந்து பருகலாம்.

    • முருங்கைக் கீரை ரசத்தை சூப் போன்றும் குடிக்கலாம்.
    • சூப் பிடிக்காதவர்கள் இப்படி ரசம் போன்று செய்து அருந்தலாம்.

    தேவையான பொருட்கள் :

    முருங்கைக் கீரை (ஆய்ந்தது) - கால் கப்,

    எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,

    தக்காளி - ஒன்று,

    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,

    உப்பு - தேவைக்கேற்ப.

    அரைத்துக்கொள்ள:

    வெந்தயம், சீரகம் - தலா அரை டீஸ்பூன்,

    பச்சை மிளகாய் - ஒன்று,

    பூண்டு - 2 பல்,

    கறிவேப்பிலை - ஒரு டேபிள்ஸ்பூன்,

    தனியா - ஒரு டீஸ்பூன்.

    தாளிக்க:

    கடுகு - ஒரு டீஸ்பூன்,

    எண்ணெய் - சிறிதளவு,

    காய்ந்த மிளகாய் - ஒன்று,

    கட்டிப் பெருங்காயம் - சிறிதளவு.

    செய்முறை:

    தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கீரையுடன் அரை கப் நீர் விட்டு வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்.

    அரைக்கக் கொடுத்துள்ளவற்றை, சிறிதளவு நீர் விட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களைப் போட்டு தாளித்த பின்னர் அரைத்த விழுது, நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    தக்காளி வதங்கியதும் முருங்கைக் கீரையை வேகவைத்த நீருடன் சேர்த்து கொதிக்கவிடவும் (தண்ணீர் அளவு போதவில்லை என்றால், சேர்த்துக்கொள்ளலாம்).

    இறக்கும்போது எலுமிச்சைச் சாறு பிழிந்து இறக்கவும்.

    சூப்பரான முருங்கைக் கீரை ரசம் ரெடி.

    • தினமும் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
    • இன்று சிக்கன், நூடுல்ஸ் சேர்த்து சூப் செய்முறை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    நூடுல்ஸ் - அரை பாக்கெட்

    சிக்கன் - அரை கிலோ

    கேரட் - 1

    உப்பு - தேவையான அளவு

    மிளகு பொடி - தேவையான அளவு

    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

    ஸ்பிரிங் ஆனியன் - 3

    பூண்டு - 5 பற்கள்

    வெங்காயம் - 1

    கொத்தமல்லி - கையளவு

    செய்முறை

    சிக்கனை நன்கு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    நூடுல்ஸை தனியாக வேக வைத்து கொள்ளவும்.

    வெங்காயம், ஸ்பிரிங் ஆனியன், கொத்தமல்லி, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் மூன்று கிளாஸ் தண்ணீர் சேர்த்து அதில் சிக்கன் துண்டுகளைச் சேர்த்து, அதோடு காய்கறிகளையும், உப்பு சேர்த்து குக்கரை மூடி 6 விசில் வரும் வரைக் காத்திருந்து அணைத்துவிடவும்.

    விசில் போனதும் குக்கர் மூடியை திறந்து வேக வைத்த நூடுல்ஸ், மிளகு தூள் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

    கடைசியாக கொத்தமல்லி, ஸ்பிரிங் ஆனியன் தூவி பரிமாறவும்.

    இப்போது சூப்பரான சிக்கன் நூடுல்ஸ் சூப் ரெடி.

    ×