search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SLvSA"

    கொழும்பில் நடைபெற்ற 2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் சதம் அடித்து 25 வருட சாதனையை சமன் செய்துள்ளார் டி ப்ரூயின். #SLvSA
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் கொழும்பில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி 199 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முதலில் களம் இறங்கிய இலங்கை 338 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 124 ரன்னில் சுருண்டது. 2-வது இன்னிங்சில் இலங்கை 275 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

    இதனால் தென்ஆப்பிரிக்கா அணிக்கு 490 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இலங்கை. கடினமாக இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா விரைவாக 5 விக்கெட்டுக்களை இழந்தது. 6-வது விக்கெட்டுக்கு டி ப்ரூயின் உடன் பவுமா ஜோடி சேர்ந்தார்.



    இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது பவுமா 63 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் டி ப்ரூயின் சிறப்பாக விளையாடி 101 ரன்கள் அடித்தார். இதன்மூலம் ஆசியக் கண்டத்தில் 4-வது இன்னிங்சில் சதம் அடித்த 2-வது தென்ஆப்பிரிக்கா வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இதற்கு முன் ஒரு டெஸ்டின் கடைசி இன்னிங்சில், அதாவது நான்காவது இன்னிங்சில் 1993-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதன்பின் தற்போது 28 வருடத்திற்குப் பிறகு ப்ரூயின் சதம் அடித்துள்ளார். 2004-ல் ஸ்மித் 74 ரன்களும், தற்போது பவுமா 63 ரன்களும் அடித்துள்ளனர்.
    கொழும்பில் நடைபெற்று வந்த 2-வது டெஸ்டில் இலங்கை 199 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென்ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது. #SLvSA
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் கடந்த 20-ந்தேதி கொழும்பு தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 338 ரன்கள் குவித்தது. மகாராஜ் 9 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 124 ரன்னில் சுருண்டது. தில்ருவான் பெரேரா 4 விக்கெட்டும், அகிலா தனஞ்ஜெயா 5 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 214 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

    ஒட்டுமொத்தமாக 489 ரன்கள் முன்னிலைப் பெற்றதால், தென்ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 490 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

    இமாலய ஸ்கோரை சேஸிங் செய்யும் நோக்கத்தில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்திருந்தது. டி ப்ரூயின் 45 ரன்னுடனும், பவுமா 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்னும் ஐந்து விக்கெட்டுக்கள் மட்டுமே கைவசம் இருப்பதால், 4-வது நாள் ஆட்டத்தில் விரைவில் ஆல்அவுட் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இன்றைய 4-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் ப்ரூயின், பவுமா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ப்ரூயின் அரைசதம் அடித்தார்.



    இந்த ஜோடி ஹெராத், தில்ருவான் பெரேரா, தனஞ்ஜெயா சுழற்பந்தை நேர்த்தியாக எதிர்கொண்டது. இதனால் இலங்கை வீரர்கள் விரக்தியடைந்தது. மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன் இந்த ஜோடி பிரிந்தது.

    பவுமா 63 ரன்கள் எடுத்த நிலையில் ஹெராத் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டி காக் 8 ரன்னில் எல்பிடபிள்யூ மூலம் வெளியேறினார். அத்துடன் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. 7 விக்கெட் வீழ்ந்ததால் இலங்கை வெற்றியை நோக்கி சென்றது.

    மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. சிறப்பாக விளையாடிய டி ப்ரூயின் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 101 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரபாடா 18 ரன்னிலும், ஸ்டெய்ன் 6 ரன்னிலும் வெளியேற தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 290 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.



    இதனால் தென்ஆப்பிரிக்கா 199 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹெராத் 6 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை 2-0 என கைப்பற்றி தென்ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது. இலங்கை தொடக்க பேட்ஸ்மேன் கருணாரத்னே ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். 
    கொழும்பு டெஸ்டில் 9 விக்கெட் வீழ்த்தி ஒரே இன்னிங்சில் அதிக விக்கெட் வீழ்த்திய 2-வது தென்ஆப்பிரிக்கா வீரர் என்ற பெருமையை பெற்றார் மகாராஜ். #SLvSA
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் கொழும்பில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இலங்கை 338 ரன்கள் குவித்தது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் தென்ஆப்பிரிக்கா இடது கை சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகாராஜ் அசத்தினார். அவர் 9 விக்கெட்டுக்களை அள்ளினார். 5-வது விக்கெட்டாக வீழ்ந்த ரோஷன் சில்வாவை மட்டும் ரபடா வீசினார்.

    ஒரே இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதன் மூலம் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 2-வது இடம்பிடித்ததுடன், 2-வது தென்ஆப்பிரிக்கா வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.



    இதற்கு முன் தென்ஆப்பிரிக்காவின் ஹக் டெய்பீல்டு 1957-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஜோகன்னஸ்பர்க்கில் 9 விக்கெட் வீழ்த்திருந்தார். அதன்பின் 61 ஆண்டுகள் கழித்து மகாராஜ் 9 விக்கெட் வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா வீரர் பட்டியலில் முதல் இடத்தை டெய்பீல்டு உடன் பகிர்ந்துள்ளார்.



    இங்கிலாந்தின் ஜிம் லேக்கர், இந்தியாவின் அனில் கும்ப்ளே ஆகியோர் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளனார். ஜிம் லேக்கர் அதேபோட்டியில் மற்றொரு இன்னிங்சில் 9 விக்கெட் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    கொழும்பில் நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்டில் இலங்கை அணி 365 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது. #SLvSA #Karunaratne
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இலங்கை, முதல்நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் சேர்த்தது.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய இலங்கை 338 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் மகாராஜ் அதிகபட்சமாக 9 விக்கெட்டுக்கள் அள்ளினார்.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. அகிலா தனஞ்ஜெயா (5 விக்கெட்), தில்ருவான் பெரேரா (4) ஆகியோரின் சுழலில் சிக்கி தென்ஆப்பிரிக்கா 124 ரன்னில் சுருண்டது.

    214 ரன்கள் முன்னிலைப் பெற்றாலும் பாலோ-ஆன் கொடுக்காமல் இலங்கை தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சில் அசைரதம் அடித்த தொடக்க வீரர்களான குணதிலகா, கருணாரத்னே ஆகியோர் 2-வது இன்னிங்சிலும் அரைசதம் அடித்தனர்.

    குணதிலகா 61 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டி சில்வா ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய குசால் மெண்டிஸ் 18 ரன்னில் வெளியேறினார்.


    குணதிலகா

    4-வது விக்கெட்டுக்கு கருணாரத்னே உடன் ஜோடி சேர்ந்த மேத்யூஸ் 2-வது நாள் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டார். இலங்கை அணி 2-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளது.

    ஒட்டுமொத்தமாக இலங்கை அணி 365 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. நாளைய 3-வது நாளில் எவ்வளவு பேட்டிங் செய்ய இயலுமோ, அவ்வளவு நேரம் பேட்டிங் செய்யும். சுழற்பந்து வீச்சுக்க சாதகமான இந்த ஆடுகளத்தில் தென்ஆப்பிரிக்கா 300 ரன்களுக்கு மேல் எடுப்பது இயலாத காரியம். இதனால் தென்ஆப்பிரிக்கா ஒயிட்வாஷ் ஆகிறது. #Gunathilaka #Karunaratne
    கொழும்பில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா பெரேரா, தனஞ்ஜெயா சுழற்பந்து வீச்சில் சிக்கி 124 ரன்னில் சுருண்டது. #SLvSA
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் கொழும்பில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. தென்ஆப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர் மகாராஜ் நேர்த்தியாக பந்து வீசி 8 விக்கெட் வீழ்த்தவும், அதேநேரத்தில் இலங்கையின் குணதிலகா (57), கருணாரத்னே (53), டி சில்வா (60) ஆகியோர் அரைசதம் அடிக்கவும் இலங்கை நேற்றைய முதல் நாளில் 9 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்திருந்தது. தனஞ்ஜெயா 16 ரன்களுடனும், ஹெராத் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஹெராத், தனஞ்ஜெயா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஹெராத் 35 ரன்னில் அவுட் ஆக, தனஞ்ஜெயா 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க இலங்கை அணி 338 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் மகாராஜ் 9 விக்கெட் வீழத்தி அசத்தினார்.



    பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. தனஞ்ஜெயா, தில்ருவான் பெரேரா ஆகியோரின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியால் தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்பிக் கொண்டே இருந்தனர். கேப்டன் டு பிளிசிஸ் மட்டும் தாக்குப்பிடித்து 48 ரன்கள் எடுத்தார். விக்கெட் கீப்பர் டி காக் 32 ரன்கள் சேர்க்க 34.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த தென்ஆப்பிரிக்கா 124 ரன்னில் சுருண்டது. தனஞ்ஜெயா 5 விக்கெட்டும், தில்ருவான் பெரேரா 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    காலேயில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 126 ரன்னிலும், 73 ரன்னிலும் தென்ஆப்பிரக்கா சுருண்டது. தற்போது 124 ரன்னில் சுருண்டுள்ளது.
    கொழும்பில் இன்று தொடங்கிய தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2-வது டெஸ்டில் இலங்கை முதல்நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்துள்ளது. #SLvSA
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் இன்று கொழும்பில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் குணதிலகா, கருணாரத்னே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் ரபாடா, ஸ்டெயின், லுங்கி நிகிடி ஆகியோரின் வேகப்பந்து வீச்சு பெரிய அளவில எடுபடவில்லை. இதனால் இருவரும் சிறப்பாக விளைாடி அரைசதம் அடித்தனர்.



    இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்தது. குணதிலகா 57 ரன்னிலும், கருணாரத்னே 53 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த தனஞ்ஜெயா டி சில்வா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து 60 ரன்கள் அடித்தார்.



    மற்ற வீரர்களை நிலைத்து நின்று விளையாட விடாமல் மகாராஜ் சீரான இடைவெளியில் விக்கெட்டை வீழ்த்திக் கொண்டே இருந்தார்.



    இலங்கை அணி 86 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல்நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. அகில தனஞ்ஜெயா 16 ரன்னுடனும், ஹெராத் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். மகாராஜ் 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். #KeshavMaharaj #DanushkaGunathilaka #DimuthKarunaratne #DhananjayadeSilva
    தென்ஆப்பிரிக்கா அணியின் ரிஸ்ட் சுழற்பந்து வீச்சாளரான ஷாம்சி குடும்பச் சூழ்நிலை காரணமாக இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். #SLvSA
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ந்தேதி தொடங்கிய காலே டெஸ்டில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டி இரண்டரை நாளிலேயே முடிவடைந்தது.

    சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் 2015-ம் ஆண்டிற்குப் பிறகு தென்ஆப்பிரிக்கா அணி இரண்டு முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. மகாராஜ் உடன் இடது கை ரிஸ்ட் ஸ்பின்னரான ஷாம்சி இடம் பிடித்திருந்தார். இவர் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார்.



    20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கும் 2-வது டெஸ்டிற்கான ஆடுகளமும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானதாக அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஷாம்சி இடம்பிடிப்பது உறுதியாக இருந்தது. இந்நிலையில் குடும்பச் சூழ்நிலை காரணமாக ஷாம்சி அவசரமாக தென்ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார. அவர் எப்போது இலங்கை திரும்புவார் என்று தெரிவிக்கப்படவில்லை.

    ஒருவேளை போட்டிக்கு முன் அவர் இலங்கை திரும்பாவிடில், புதுமுக வீரர் ஷான் வோன் பெர்க்கிற்கு இடம் கிடைக்கும்.
    காலேயில் நடைபெற்று வந்த முதல் டெஸ்டில் சுழற்பந்து வீச்சால் தென்ஆப்பிரிக்காவை 278 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை. #SLvSA #Perera
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நேற்றுமுன்தினம் (12-ந்தேதி) தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை கருணாரத்னேயின் (158 அவுட்இல்லை) அபார சதத்தால் 287 ரன்கள் குவித்தது.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. டு பிளிசிஸை (49) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 126 ரன்னில் சுருண்டது. இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 161 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 161 ரன்கள் முன்னிலையுடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.

    முதல் இன்னிங்சில் சதம் அடித்த கருணாரத்னே 2-வது இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடினார். அவர் 60 ரன்கள் எடுத்தார். இவரது அரைசதத்தால் இலங்கை அணி நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்திருந்தது.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது தென்ஆப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளரான மகாராஜ் சிறப்பாக பந்து வீச இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 190 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், மகாராஜ் 4 விக்கெட்டும் கைப்பற்றினார்.

    ஒட்டுமொத்தமாக இலங்கை அணி 351 ரன்கள் அதிகம் பெற்றிருந்தது. இதனால் 352 ரன்கள் வெற்றி இலக்காக தென்ஆப்பிரிக்கா அணிக்கு நிர்ணயித்தது இலங்கை.



    காலே மைதானத்தில் 352 ரன்கள் என்பது இமாலய இலக்காகும். இந்த இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்கா அணி களம் இறங்கியது. ஆனால் தில்ருவான், ஹெராத் சுழற்பந்து வீச்சில் சிக்கி தென்ஆப்பிரிக்கா 73 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் இலங்கை 278 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தில்ருவான் 6 விக்கெட்டும், ஹெராத் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கொழும்பில் 20-ந்தேதி தொடங்குகிறது.
    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்டின் 2-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 272 ரன்கள் முன்னிலைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது. #SLvSA
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை கருணாரத்னேயின் (158 அவுட்இல்லை) அபார சதத்தால் 287 ரன்கள் குவித்தது. பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 4 ரன்கள் எடுத்திருந்து.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. டு பிளிசிஸை (49) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 126 ரன்னில் சுருண்டது. இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 161 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 161 ரன்கள் முன்னிலையுடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.

    குணதிலகா, கருணாரத்னே தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். குணதிலகா 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்சில் சதம் அடித்த கருணாரத்னே 2-வது இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடினார். அவர் 60 ரன்கள் எடுத்தார். அதன்பின் வந்த டி சில்வா 9 ரன்னிலும், மெண்டிஸ் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 5-வது விக்கெட்டுக்கு மேத்யூஸ் உடன் ஏஆர்எஸ் சில்வா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-ம் நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.



    மேத்யூஸ் 14 ரன்னுடனும் சில்வா 10 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். 2-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை இலங்கை 272 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இன்னும் மூன்று நாட்கள் இருப்பதால் இலங்கை அணி முடிந்த அளவிற்கு விளையாடிவிட்டு, தென்ஆப்பிரிக்காவை சேஸிங் செய்ய வைக்கும்.

    காலே மைதானத்தில் நான்காவது இன்னிங்சில் 200 ரன்களுக்கு மேல் எடுப்பது இயலாத காரியம். இதனால் இலங்கையின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
    காலேயில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா இலங்கையின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 126 சுருண்டது. #SLvSA
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் காலேயில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த டெஸ்டில் இலங்கை டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. கருணாரத்னே தனிஒருவராக நின்று 158 ரன்கள் சேர்க்க இலங்கை அணி 287 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 4 விக்கெட்டும், ஷாம்சி 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக டீன் எல்கர் மற்றும் மார்கிராம் ஆகியோர் களம் இறங்கினார்கள். மார்கிராம் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 1 விக்கெட் இழப்பிற்கு நான்கு ரன்கள் எடுத்திருந்தது. டீன் எல்கர் 4 ரன்னுடனும், மகாராஜ் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இலங்கையின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தென்ஆப்பிரிக்கா அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது.



    டீன் எல்கர் (8), மகாராஜ் (3), அம்லா (15), பவுமா (17), டி காக் (3) சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா 51 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்து திணறியது. 7-வது விக்கெட்டுக்கு டு பிளிசிஸ் உடன் பிலாண்டர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நீண்ட நேரம் தாக்குப்பிடித்தது.

    தென்ஆப்பிரிக்கா அணியின் ஸ்கோர் 115 ரன்னாக இருக்கும்போது பிலாண்டர் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் டு பிளிசிஸ் 49 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



    கடைசி விக்கெட்டாக ஸ்டெயின் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா 54.3 ஓவர்களில் 126 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இலங்கை அணி தரப்பில் தில்ருவான் பெரேரா 4 விக்கெட்டும், லக்மல் 3 விக்கெட்டும், ஹெராத் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இலங்கை அணி முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்காவை விட 161 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. 161 முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்டில் கருணாரத்னே சதத்தால் இலங்கை அணி 287 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. #SLvSA #Rabada
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் காலேயில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்றாலும் தென்ஆப்பிரிக்கா ஸ்டெயின், ரபாடா, பிலாண்டர் ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளருடன் களம் இறங்கியது. இவர்களுடன் மகாராஜ், ஷாம்சி ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளரும் தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்திருந்தனர்.

    இலங்கை அணியின் குணதிலகே, கருணார்னே ஆகியோர் தொடக்க வீரர்களாக கறங்கினார்கள். குணதிலகே 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டி சில்வா 11 ரன்னிலும், மெண்டிஸ் 24 ரன்னிலும் வெளியேறினார். ரபாடாவின் அச்சுறுத்தலான பந்து வீச்சை எதிர்கொள்ள இலங்கை பேட்ஸ்மேன்கள் திணறினார்கள்.

    அதன்பின் வந்த மேத்யூஸ் 1 ரன்னிலும், ஏஆர்எஸ் சில்வா டக்அவுட்டிலும் வெளியேற, இலங்கை அணி திணறியது. ஆனால், மற்றொரு தொடக்க வீரரான கருணாரத்னே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்து சதம் அடித்தார். அவர் சதம் அடித்தாலும் இலங்கை அணியின் ஸ்கோர் உயர்ந்தபாடில்லை.


    4 விக்கெட் கைப்பற்றிய ரபாடா

    கடைநிலை பேட்ஸ்மேன்களை வைத்துக் கொண்டு ரன்கள் குவிக்க முயற்சி செய்தார். கடைசி விக்கெட்டுக்கு களம் இறங்கிய சண்டகன் 25 ரன்னில ஆட்டமிழக்க இலங்கை அணி முதல் இன்னிங்சில் 78.4 ஓவர்கள் தாக்குப்பிடித்து 287 ரன்னில் ஆல்அவுட் ஆனது. கருணாரத்னே 222 பந்துகள் சந்தித்து 13 பவுண்டரி, 1 சிக்சருடன் 158 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவர் சண்டகன் உடன் இணைந்து கடைசி விக்கெட்டுக்கு 63 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக காலே ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார். ஷாம்சி 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக ஹெராத் அறிவித்துள்ளார். #SLvSA
    இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தற்போதைய முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருப்பவர் ரங்கணா ஹெராத். 40 வயதாகும் இவர் 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 1999-ம் ஆண்டு இலங்கை டெஸ்ட் அணியில் அறிமுகமான இவர், முரளீதரனால் அதிக போட்டிகளில் பங்கேற்க இயலவில்லை.

    முரளீதரன் ஓய்வு பெற்றதும் இலங்கை அணியின் முன்னணி வீரராக திகழ்ந்து வருகிறார். 71 ஒருநாள் மற்றும் 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஹெராத் 2015-ல் ஒருநாள் போட்டியிலும் இருந்தும், 2016-ல் டி20 போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

    தற்போது தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக இலங்கை இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன்பின் நவம்பர் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகளில் விளையாடுகிறது. அத்துடன் சர்வதேச போட்டிகளை முடித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.



    இதுகுறித்து ரங்கணா ஹெராத் கூறுகையில் ‘‘இந்த வருட இறுதியில் நடக்க இருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர் என்னுடைய கடைசி தொடராக இருக்கலாம். நாளை தொடங்கும் தென்ஆப்பிரிக்கா தொடருக்குப்பின் இங்கிலாந்து தொடருக்கு சுமார் மூன்று மாதங்கள் இருக்கிறது. தற்போது நான் எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டி வருகிறேன்.

    கிரிக்கெட்டிற்கு வரும் ஒவ்வொரு வீரரும் அவர்களது ஆட்டத்தை நிறுத்தியாக வேண்டியதற்கான நேரம் வரும். அதற்கான நேரம் எனக்கு வந்து விட்டதாக கருதுகிறேன்’’ என்றார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஹெராத் டெஸ்ட் போட்டியில் 418 விக்கெட்டுக்கள் குவித்துள்ளார்.
    ×