என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dhananjaya De Silva"

    • தனஞ்சய டி சில்வா தேசிய அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
    • இதுவரை 51 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பத்து சதங்களையும், 13 அரைசதங்களையும் அடித்துள்ளார்.

    ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் சுற்றுப்பயணங்களுக்கு முன்னதாக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு வெவ்வேறு கேப்டன்களை இலங்கை கிரிக்கெட் தலைமை தேர்வாளர் உபுல் தரங்கா அறிவித்துள்ளார். 32 வயதான பேட்டிங் ஆல்ரவுண்டர் தனஞ்சய டி சில்வா டெஸ்ட் கேப்டனாகவும், 28 வயதான குசல் மெண்டிஸ், ஒருநாள் கிரிக்கெட் அணியை தலைமை தாங்க நியமிக்கப்பட்டனர். 26 வயதான வனிது ஹசரங்க, டி20 அணியை வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் உபுல் தரங்கா அறிவித்தபடி, தனஞ்சய டி சில்வா இலங்கை டெஸ்ட் அணிக்கு பொறுப்பேற்க உள்ளார். அவர் டெஸ்ட் கேப்டனாக திமுத் கருணாரத்னவுக்குப் பதிலாக, டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்கும் 18-வது வீரர். பிப்ரவரி 6-ஆம் தேதி தொடங்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியுடன் அவரது கேப்டன் பதவியை தொடங்க இருக்கிறார்.

    தனஞ்சய டி சில்வா தேசிய அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இதுவரை 51 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பத்து சதங்களையும், 13 அரைசதங்களையும் அடித்துள்ளார். 3 அணிகளுக்கும் ஒரே கேப்டனாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன், ஆனால் தற்போது எங்களிடம் உள்ள வீரர்களால் அதைச் செய்ய முடியவில்லை" என்று தலைமை தேர்வாளர் உபுல் தரங்கா கூறியுள்ளார்.

    • இலங்கை அணியின் கேப்டனாக தனஞ்செயா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
    • ஓஷதா பெர்னாண்டோ மீண்டும் இலங்கை அணியில் இடம் பிடித்துள்ளார்.

    நியூசிலாந்து அணி இலங்கை அணியில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 18-ந் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தனஞ்செயா டி சில்வா தலைமையில் இந்த அணி களமிறங்குகிறது.

    ஓஷதா பெர்னாண்டோ மீண்டும் இலங்கை அணியில் இடம் பிடித்துள்ளார். நிஷான் மதுஷ்காவுக்கு அணியில் வாய்ப்பு வழங்கபடவில்லை.

    இலங்கை அணி விவரம்:-

    தனஞ்சய டி சில்வா (கேப்டன்), திமுத் கருணாரத்னே, பதும் நிசங்கா, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமால், கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, ஓஷதா பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, லஹிரு குமாரா, பிரபாத் ஜயசூரியா, ரமேஷ் மெண்டிஸ், ஜெப்ரி வான்டர்சே, மிலன் ரத்நாயக்க.

    • டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறும் திறன் எங்களிடம் உள்ளது.
    • எங்கள் வீரர்கள் தற்போது சிறப்பாக செயல்படுகின்றனர்.

    இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 305 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இதைத்தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 340 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன்பின் 35 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடிய இலங்கை அணி 2-வது இன்னிங்ஸில் 309 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது.

    இதனால் நியூசிலாந்து அணிக்கு 275 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இலங்கை அணியின் அபார பந்து வீச்சில் திணறிய நியூசிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் நியூசிலாந்து அணி 211 ரன்களில் சுருண்டது. இதன்மூலம் இலங்கை அணி 63 ரன்கள் வித்தியாசத்தியில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.

    நியூசிலாந்து தொடருக்கு முன்பு இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் இங்கிலாந்து 2 -1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவிய இலங்கை அணி கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று அசத்தியது.

    இந்நிலையில் இங்கிலாந்து மண்ணில் அவர்களை வீழ்த்தியதில் இருந்து மன உறுதி உயர்ந்துள்ளதாக இலங்கை அணியின் கேப்டன் தனஞ்செயா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்தில் பெற்ற வெற்றி எங்களது மன உறுதியை உயர்த்தியுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறும் திறன் எங்களிடம் உள்ளது. எங்கள் வீரர்கள் தற்போது சிறப்பாக செயல்படுகின்றனர்.

    பெரிய பார்ட்னர்ஷிப்கள் எப்போதுமே கலேவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற உதவுகின்றன. ஆனால் எங்களின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் நாங்கள் இன்னும் முன்னேற வேண்டும். ஏனெனில் எங்கள் கீழ் வரிசை பேட்டிங் மிகக் குறைந்த சராசரியாக இருக்கிறது.

    என்று தனஞ்செயா தெரிவித்துள்ளார்.

    கொழும்பில் இன்று தொடங்கிய தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2-வது டெஸ்டில் இலங்கை முதல்நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்துள்ளது. #SLvSA
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் இன்று கொழும்பில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் குணதிலகா, கருணாரத்னே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் ரபாடா, ஸ்டெயின், லுங்கி நிகிடி ஆகியோரின் வேகப்பந்து வீச்சு பெரிய அளவில எடுபடவில்லை. இதனால் இருவரும் சிறப்பாக விளைாடி அரைசதம் அடித்தனர்.



    இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்தது. குணதிலகா 57 ரன்னிலும், கருணாரத்னே 53 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த தனஞ்ஜெயா டி சில்வா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து 60 ரன்கள் அடித்தார்.



    மற்ற வீரர்களை நிலைத்து நின்று விளையாட விடாமல் மகாராஜ் சீரான இடைவெளியில் விக்கெட்டை வீழ்த்திக் கொண்டே இருந்தார்.



    இலங்கை அணி 86 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல்நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. அகில தனஞ்ஜெயா 16 ரன்னுடனும், ஹெராத் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். மகாராஜ் 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். #KeshavMaharaj #DanushkaGunathilaka #DimuthKarunaratne #DhananjayadeSilva
    ×