search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருணாரத்னே"

    • தண்டனையுடன் அவருக்கு 5 ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
    • கருணாரத்னே சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் கேள்வி

    இலங்கை கிரிக்கெட் வீரர் சமிகா கருணாரத்னே (வயது 26) அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஒரு ஆண்டு தடை விதித்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் வீரர்களுக்கான ஒப்பந்தத்தின் பல விதிமுறைகளை மீறியதற்காக, ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் விசாரணைக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    இருப்பினும் அவர் எந்த விதிமுறைகளை மீறினார் என்பது குறித்த தகவலை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிடவில்லை. ஆனால் சமிகா கருணாரத்னே தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் தண்டனையுடன் அவருக்கு 5 ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    இது தற்காலிக தடை என்பதால், கருணாரத்னே சர்வதேச அளவில் விளையாட அனுமதிக்கப்படுகிறார். ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடக்கவிருக்கும் உள்நாட்டு தொடருக்கான இலங்கையின் ஒருநாள் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்படுவார். கருணாரத்னே சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் கேள்வி எழுப்பியிருந்தார். எனவே, அவரது ஒப்புதலுக்குப் பிறகு இலங்கை அணி அறிவிக்கப்படும்.

    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 240 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. #engvssl #testcricket
    கொழும்பு:

    இலங்கை - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து தொடக்க நாளில் 7 விக்கெட்டுக்கு 312 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 336 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அடுத்து களம் இறங்கிய இலங்கை அணியில் குணதிலகா 18 ரன்னில் கேட்ச் ஆனார். இதன் பின்னர் 2-வது விக்கெட்டுக்கு கருணாரத்னேவும், தனஞ்ஜெயா டி சில்வாவும் கைகோர்த்து அணியை நிமிர வைத்தனர். இவர்களுக்கு அதிர்ஷ்டமும் துணை நின்றது. கருணாரத்னே 2 ரன்னிலும், டி சில்வா 42 ரன்னிலும் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பி பிழைத்தனர். இரண்டு முறையும் ஸ்லிப்பில் நின்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ‘கேட்ச்’ வாய்ப்புகளை வீணடித்தார்.

    ஒரு கட்டத்தில் இலங்கை அணி ஒரு விக்கெட்டுக்கு 173 ரன்களுடன் மிக வலுவாக இருந்தது. இந்த ஜோடி பிரிந்ததும் ஆட்டத்தின் போக்கு தலைகீழாக மாறியது. டி சில்வா 73 ரன்னிலும், கருணாரத்னே 83 ரன்னிலும் வெளியேறினார்கள். அதன் பிறகு விக்கெட்டுகள் கொத்துக் கொத்தாக சரிந்தன. அந்த அணி முதல் இன்னிங்சில் 65.5 ஓவர்களில் 240 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 

    சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் 5 விக்கெட்டுகளும், வேகப்பந்து வீச்சாளர் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். பின்னர் 96 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 3 ரன் எடுத்துள்ளது. 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும். #engvssl #testcricket
    ×