search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SLvENG"

    காலேயில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் பென் போக்ஸின் அபார சதத்தால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 342 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. #SLvENG
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடரை 3-1 என்ற கணக்கிலும், ஒரே ஒரு 20 ஓவர் போட்டி தொடரை 1-0 என்ற கணக்கிலும் இங்கிலாந்து அணி வென்றது. இதனையடுத்து இலங்கை- இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலங்கையில் உள்ள காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோரி பேர்ன்ஸ் 9 ரன்களில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து களம் இறங்கிய மொயீன் அலி ரன் எதும் எடுக்காமல் ஆட்டம் இழந்து இங்கிலாந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

    பின்னர் சீரான இடைவெளியில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்தபோதும், அறிமுக வீரரான விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் நிலைத்து நின்று விளையாடி அரைசதத்தை கடந்தார்.

    முன்னதாக இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் காலே மைதானத்தில் 100 விக்கெட்டை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றார். இந்த மைதானத்தில் அதிகபட்சமாக முரளிதரன் 111 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ரங்கனா ஹெராத்திற்கு இது கடைசி டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.



    மேலும் தொடக்க ஆட்டக்காரர் ஜென்னிங்ஸ் (46 ரன்), சாம் குர்ரான் (48 ரன்), ஜோஸ் பட்லர் (38 ரன்) ஆகியோரின் உதவியுடன் இங்கிலாந்து அணி 300 ரன்களை கடந்தது. அறிமுக வீரரான பென் போக்ஸ் முதல்நாள் ஆட்டம் முடியும்வரை ஆட்டமிழக்காமல் அணியை வழிநடத்திச் சென்றார். முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 321 ரன் சேர்த்தது. விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் 84 ரன்னுடனும், ஜேக் லீச் 14 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 2-வது ஆள் நாட்டம் தொடங்கியது. ஜோ லீச் மேலும் ஒரு ரன்கள் எடுத்த நிலையில் தில்ருவான் பெரேரா பந்தில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் உடன் தில்ருவான் ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

    மறுமுனையில் விளையாடிய பென் போக்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தனது முதல் அறிமுக டெஸ்டிலேயே சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து விளையாடிய அவர் 107 ரன்னில் ஆட்டமிழக்க இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 342 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
    இலங்கை லெவன் போர்டு லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார். #SLvENG
    இங்கிலாந்து அணி இலங்கை சென்று விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து வென்றுள்ள நிலையில், நவம்பர் 6-ந்தேதி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.

    இதற்கு முன் இங்கிலாந்து இரண்டு நாட்கள் கொண்ட இரண்டு பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது. இலங்கை போர்டு லெவன் அணிக்கெதிரான முதல் பயிற்சி ஆட்டம் கொழும்பில் நேற்று தொடங்கியது. இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்தின் பந்து வீச்சு பெரிய அளவில் எடுபடவில்லை.

    இதனால் இலங்கை முதல்நாளில் 9 விக்கெட் இழப்பிற்கு 392 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் பர்ன்ஸ் 47 ரன்கள் சேர்த்தார். ஜென்னிங்ஸ் 13 ரன்னிலும், டென்லி 25 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த கேப்டன் ஜோ ரூட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 117 பந்தில் 13 பவுண்டரிகளுடன் சதம் விளாசிய ஜோ ரூட் 100 ரன்னில் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார். பென் ஸ்டோக்ஸ் 31 ரன்கள், பட்லர் 60 ரன்கள் சேர்த்தனர். இரண்டு நாட்கள் கொண்ட ஆட்டம் என்பதால் போட்டி டிராவில் முடிகிறது. 2-வது பயிற்சி ஆட்டம் நாளை தொடங்குகிறது.
    கொழும்பில் நடைபெற்ற டி20 போட்டியில் ஜேசய் ராய் அதிரடியால் இலங்கை அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து. #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டி20 தொடர் கொழும்பில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலக்கை பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், பட்லர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பட்லர் 13 ரன்னிலும், அலெக்ஸ் ஹேல்ஸ் 4 ரன்னிலும், மோர்கன் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.



    ஆனால் தொடக்க வீரர் ஜேசன் ராய் 36 பந்தில் 4 பவுண்டரி, 6 சிக்சருடன் 69 ரன்கள் குவித்தா்ர. பென் ஸ்டோக்ஸ் 26 ரன்களும், மோயீன் அலி 27 ரன்களும், ஜோ டென்லி 20 ரன்களும் சேர்க்க இங்கிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது.

    பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் டிக்வெல்லா (3),  குசால் மெண்டிஸ் (1) சுழற்பந்து வீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.



    கேப்டன் திசாரா பெரேரா மட்டும் தாக்குப்பிடித்து 31 பந்தில் ஒரு பவுண்டரி, 6 சிக்சருடன் 57 ரன்கள் குவித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இலங்கை 20 ஓவரில் 157 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஜோ டென்லி நான்கு விக்கெட்டுக்களும், அடில் ரஷித் மூன்று விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்.

    இதனால் இங்கிலாந்து 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
    இலங்கை - இங்கிலாந்து இடையிலான 2-வது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டாலும் இங்கிலாந்து டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி 31 ரன்னில் வெற்றி பெற்றது. #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 10-ந்தேதி தம்புல்லாவில் முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது.

    இங்கிலாந்து அணி 15 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்டது. பலத்த மழை பெய்ததால் ஆட்டம் அத்துடன் வெற்றித் தோல்வியின்றி முடிவிற்கு வந்தது.

    இந்நிலையில் 2-வது ஆட்டம் தம்புல்லாவில் இன்று பகல் ஆட்டமாக நடைபெற்றது. இலங்கை அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. ஜோ ரூட் (71), மோர்கன் (92) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து 50 ஒவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் சேர்த்தது. இலங்கை அணி சார்பில் மலிங்கா 10 ஓவரில் 44 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

    பின்னர் 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. ஒல்லி ஸ்டோன் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோரின் வேகப்பந்து வீச்சால் இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இலங்கை அணி 31 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. குசால் பெரேரா 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க இலங்கை 5 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்திருந்தது.

    6-வது விக்கெட்டுக்கு தனஞ்ஜெயா டி சில்வா உடன் திசாரா பேரேரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. இலங்கை அணி 29 ஓவரில் 140 ரன்கள் அடித்திருக்கும்போது மழை பெய்தது.



    கனத்த மழை பெய்ததால் ஆட்டம் அத்துடன் முடிக்கப்பெற்று டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்பட்டது. இதில் இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முதல் ஆட்டம் மழையால் முடிவில்லாமல் போனது. ஆனால், 2-வது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட போதிலும் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இங்கிலாந்து வெற்றி என அறிவிக்கப்பட்டது.

    இரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஆட்டம் 17-ந்தேதி பல்லேகலே மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது.
    இலங்கை - இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அளித்தனர். #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று தம்புல்லாவில் தொடங்கியது. பகல்-இரவு போட்டியினான முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஜேசன் ராய் 27 பந்தில் 24 ரன்களும், பேர்ஸ்டோவ் 24 பந்தில் 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.



    அடுத்து வந்த ஜோ ரூட்டும், கேப்டன் மோர்கனும் அதிரடியை தொடங்கினார்கள். ஜோ ரூட் 28 பந்தில் 25 ரன்களும், மோர்கன் 11 பந்தில் 14 ரன்களும் அடித்திருந்த போது இங்கிலாந்து 15 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்திருந்தது.

    அப்போது கனமழை பெய்ய ஆரம்பித்தது. நீண்ட நேரம் மழை விடாததால் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தார். இதனால் முடிவின்றி முதல் ஆட்டம் முடிவுக்கு வந்ததது. மழையால் ஆட்டம் தடைபட்டதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். 2-வது போட்டி தம்புல்லாவில் நாளைமறுநாள் (13-ந்தேதி) நடக்கிறது.
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியில் ஐந்து சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்துள்ளனர். #SLvENG
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி அக்டோபர் - நவம்பரில் இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 6-ந்தேதி காலே மைதானத்தில் தொடங்குகிறது.

    இதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கவுசல் சில்வா, தில்ருவான் பெரேரா, ரங்கணா ஹெராத், மலிண்டா புஷ்பகுமாரா, லக்‌ஷ்மண் சண்டகன் ஆகிய ஐந்து சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்துள்னர். இதனால் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை முற்றிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை தயார் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. தினேஷ் சண்டிமல் (கேப்டன்), 2. திமித் கருணாரத்னே, 3. கவுசல் சில்வா, 4. குசால் மெண்டிஸ், 5. மேத்யூஸ், 6. டிக்வெல்லா, 7. தனஞ்ஜெயா டி சில்வா, 8. ரோஷன் சில்வா, 9. தில்ருவான் பெரேரா, 10. ரங்கணா ஹெராத், 11. மலிண்டா புஷ்பகுமாரா, 12. சுரங்கா லக்மல், 13. கசுன் ரஜிதா, 14. லக்‌ஷ்மண் சண்டகன், 15. லஹிரு குமாரா (உடற்தகுதி பெற்றால்).
    ஆசிய கோப்பை படுதோல்வியால் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மேத்யூஸ், அணியில் இருந்தும் நீக்கம் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. #SLvENG #Mathews
    ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. ‘பி’ பிரிவில் இடம்பிடித்திருந்த இலங்கை அணி வங்காள தேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்து தொடக்க சுற்றிலேயே வெளியேறியது.

    படுதோல்வியால் இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் அதிரடியாக கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.



    அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரவில்லை என்றாலும், இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணியில் இடம்பிடிக்கும் வீரர்கள் பட்டியல் விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு விளையாட்டுத்துறை மந்திரி அனுமதி அளிக்க வேண்டும்.

    இந்த பட்டியலில் மேத்யூஸ் பெயர் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரின்போது மேத்யூஸ் காயம் அடைந்தார். அதன்பின் சர்வதேச அணிக்கு திரும்பிய பின்னர் பந்து வீசவில்லை. பேட்டிங் மட்டுமே செய்து வருகிறார்.

    பெரும்பாலான போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது தசைப்பிடிப்பு காரணமாக மேத்யூஸ் அவதிப்பட்டுள்ளார். இதனால் அணி நிர்வாகம் மேத்யூஸை யோ-யோ டெஸ்ட் பரிசோதனையில் பாஸ் ஆக வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மேத்யூஸ் இங்கிலாந்து தொடரில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
    இலங்கைக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ் இடம்பிடித்துள்ளனர். #SLvENG
    இங்கிலாந்து அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், தொடக்க வீரரான அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் பிரிஸ்டோல் இரவு விடுதிக்கு வெளியில் வைத்து வாலிபருடன் மோதிய விவகாரத்தில், கிரிக்கெட்டிற்கு இழுக்கு ஏற்படுத்திவிட்டதாக ஒழுங்கு நடவடிக்கைக் குழு நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் இலங்கை தொடருக்கான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருவரும் இடம்பிடித்துள்ளனர்.



    இலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. மோர்கன், 2. மொயீன் அலி, 3. பேர்ஸ்டோவ், 4. ஜோஸ் பட்லர், 5. சாம் குர்ரான், 6. டாம் குர்ரான், 7. லியம் டவ்சன், 8. அலெக்ஸ் ஹேல்ஸ், 9. லியம் பிளங்கெட், 10. அடில் ரஷித், 11. ஜோ ரூட், 12. ஜேசன் ராய், 13. பென் ஸ்டோக்ஸ், 14. கிறிஸ் வோக்ஸ், 15. ஒலி ஸ்டோன், 16. மார்க் வுட்.
    இலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராட்டிற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று கெவின் பீட்டர்சன் வலியுறுத்தியுள்ளார். #SLvENG
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 4-1 என கைப்பற்றியது. அக்டோபர்- நவம்பர் மாதத்தில் இங்கிலாந்து அணி இலங்கை சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    அலஸ்டைர் குக் ஓய்வு பெற்றதால் இங்கிலாந்து அணி தொடக்க பேட்ஸ்மேனை தேட வேண்டியுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து அணி தொடக்க பேட்ஸ்மேனை இல்லாமல் திணறி வந்தது.

    இந்நிலையில் இந்தியாவிற்கு எதிராக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜென்னிங்ஸ், ஆசிய கண்டத்தில் சரியாக விளையாடாத பிராட் ஆகியோரை இலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணியில் சேர்க்கக் கூடாது என்று கெவின் பீட்டர்சன் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து கெவின் பீட்டர்சன் கூறுகையில் ‘‘433 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கும் 32 வயதான ஸ்டூவர்ட் பிராட், சொந்த மண்ணை விட்டு வெளியில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியது கிடையாது.



    கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தவில்லை. அவரை இலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கினால், நான் ஆச்சர்யம் அடைய மாட்டேன்.

    இந்தியாவிற்கு எதிராக 9 இன்னிங்சில் ஜென்னிங்ஸ் 163 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் அவரை நீக்க வேண்டும். ரோரி பர்ன்ஸ் மற்றும் ஜேசன் ராய் ஆகியோரை தொடக்க பேட்ஸ்மேன்களாக களம் இறக்க வேண்டும்’’ என்றார்.
    ×