search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Angelo Mathews"

    • ஹெல்மெட் பிரச்சினையால் தான் உடனடியாக தன்னால் பேட்டிங் செய்ய இயலாமல் போய் விட்டது என்று மேத்யூஸ் சொன்னதை நடுவர்கள் ஏற்கவில்லை.
    • வங்காளதேச கேப்டனும் அப்பீலை வாபஸ் பெற மறுத்து விட்டார்.

    லண்டன்:

    உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கடந்த 6-ந் தேதி டெல்லியில் நடந்த லீக் ஆட்டத்தில் வங்காளதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் இலங்கை வீரர் மேத்யூசுக்கு வழங்கப்பட்ட வினோதமான 'அவுட்' சர்ச்சையை கிளப்பியது. சமரவிக்ரமா ஆட்டம் இழந்ததும் களம் புகுந்த மேத்யூஸ் தனது 'ஹெல்மெட்'டில் வார் அறுந்து விட்டதால் மாற்று 'ஹெல்மெட்' கொண்டு வரும்படி வெளியில் இருந்த சக வீரரை அழைத்தார்.

    இதனால் அவர் பேட் செய்ய காலதாமதமாகி விட்டதாகவும், 'டைம்டு அவுட்'டின் படி விக்கெட் வீழந்ததாக அறிவிக்கும்படியும் வங்காளதேச கேப்டன் ஷகிப் அல்-ஹசன் நடுவர்களிடம் முறையிட்டார். உலகக் கோப்பை போட்டி விதிமுறைப்படி ஒரு வீரர் 'அவுட்' ஆனால் அடுத்த பேட்ஸ்மேன் 2 நிமிடத்துக்குள் பேட்டிங் செய்ய தயாராக இருக்க வேண்டும். அந்த விதியை மேத்யூஸ் மீறி விட்டதாக கூறி நடுவர்கள் அவருக்கு 'அவுட் 'வழங்கினர்.

    ஹெல்மெட் பிரச்சினையால் தான் உடனடியாக தன்னால் பேட்டிங் செய்ய இயலாமல் போய் விட்டது என்று மேத்யூஸ் சொன்னதை நடுவர்கள் ஏற்கவில்லை. வங்காளதேச கேப்டனும் அப்பீலை வாபஸ் பெற மறுத்து விட்டார். சர்வதேச கிரிக்கெட்டில் 'டைம்டு அவுட்' முறையில் ஆட்டமிழந்த முதல் வீரர் மேத்யூஸ் தான். மேத்யூசுக்கு அவுட் வழங்கியது சரி தான் என்று ஒரு தரப்பினரும், சரியில்லை என்று ஒரு சிலரும் கருத்து தெரிவித்தனர்.

    இந்த நிலையில் கிரிக்கெட் ஆட்டத்துக்கான விதிமுறையை வகுக்கும் மெரில்போன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.) மேத்யூஸ் 'அவுட்' சர்ச்சை குறித்து நேற்று விளக்கம் அளித்துள்ளது. அதில், 'இலங்கை வீரர் மேத்யூசுக்கு நடுவர்கள் 'டைம்டு அவுட்' வழங்கிய தீர்ப்பு சரியானதாகும்.

    ஹெல்மெட் வார் அறுந்தது குறித்து மேத்யூஸ் நடுவர்களுடன் கலந்து ஆலோசிக்கவில்லை. அது குறித்து அவர் நடுவர்களிடம் எதுவும் சொல்லாமல் மாற்று ஹெல்மெட் கொண்டு வரும்படி சக வீரர்களுக்கு சைகை காட்டியிருக்கிறார். நடந்ததை நடுவர்களிடம் விளக்கி அதனை சரி செய்ய நேரம் கேட்டு இருந்தால் அவர்கள் ஹெல்மெட்டை மாற்ற அனுமதித்திருக்கக்கூடும். அத்துடன் டைம்டு அவுட்டுக்கான சாத்தியக்கூற்றில் இருந்தும் தப்பித்து இருக்கலாம்.

    பேட்டிங் செய்வதில் ஏற்பட்ட காலதாமத நேரத்தை நிறுத்தி வைக்கும்படி மேத்யூஸ் கேட்காததாலும், 2 நிமிடம் கடந்து விட்டதாக எதிரணியால் அப்பீல் செய்யப்பட்டதாலும் அவருக்கு நடுவர்கள் அவுட் வழங்கியது சரியானதாகும். நடுவர்கள் ஆட்ட விதிமுறையின்படியே நடவடிக்கை எடுத்துள்ளனர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஷாகிப்-அல்-ஹசன் மீதும் வங்காளதேச அணி மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்தேன்.
    • நீங்கள் அனைவரும் வெற்றி பெற விளையாடுங்கள். அது விதிகளுக்குள் இருந்தால் பிரச்சினை இல்லை.

    உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று டெல்லியில் நடந்த போட்டியில் இலங்கையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசம் தோற்கடித்தது. இப்போட்டியில் இலங்கை வீரர் மேத்யூஸ் 'டைம் அவுட்' முறையில் அவுட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

    2023-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கான விதிப்படி ஒரு வீரர் ஆட்டமிழந்தால் அடுத்து வரும் பேட்ஸ்மேன் 2 நிமிடங்களுக்குள் பந்தை எதிர் கொள்ள வேண்டும். மேத்யூஸ் உடனடியாக மைதானத்துக்கு வந்தாலும் பந்தை எதிர்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது. அவரது ஹெல்மெட்டில் பிரச்சினை இருந்ததால் மாற்று ஹெல்மெட் கொண்டு வரும்படி மற்ற இலங்கை வீரர்களிடம் கூறினார்.

    இதில் தாமதம் ஏற்பட்டதால் வங்காளதேச கேப்டன் ஷாகிப்-அல்-ஹசன், நடுவர்களிடம் அதை சுட்டிகாட்டி டைம் அவுட் கேட்டார். இதையடுத்து மேத்யூசுக்கு டைம் அவுட் கொடுக்கப்பட்டது. இதனால் அவர் அதிருப்தியுடன் வெளியேறினார்.

    வங்காளதேச அணி விளையாடிய விதம் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.

    ஷாகிப்-அல்-ஹசன் மற்றும் வங்காளதேச அணியின் செயல் வெளிப்படையாக அவமானகரமானது. பீல்டிங்குக்கு இடையூறு அல்லது பந்து வீசுவதற்கு முன்பே கிரீசைவிட்டு நான் வெளியேறி இருந்து அவுட் கொடுத்திருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. நான் இரண்டு நிமிடங்களில் களத்தில் இருந்தேன். நான் கிரீசில் இருந்தபோதுதான் எனது ஹெல்மெட் உடைந்தது. அதை நடுவர்களும் பார்த்தனர். அப்போது எனக்கு 5 வினாடிகள் இருந்தன.

    நான் ஹெல்மெட்டை காட்டிய பிறகு வங்காளதேச அணியினர் மேல்முறையீடு செய்ததாக நடுவர்கள் கூறினார்கள்.

    எனது இரண்டு நிமிடங்கள் முடிவடையாததால், பொது அறிவு எங்கே என்று கேட்டேன். இதை விளக்குவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. எனது 15 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு அணியோ அல்லது வீரரோ இவ்வளவு கீழ்நிலையில் இருப்பதை பார்த்ததில்லை. துரதிருஷ்டவசமாக ஹெல்மெட்டின் பட்டை உடைந்தது. அந்த சமயத்தில் இதுபோன்று (டைம் அவுட்) வேறு அணியும் செய்யும் என்று நான் நினைக்கவில்லை. எனது உபகரணம் செயலிழந்தது. இது ஒரு பாதுகாப்பு பிரச்சினை. ஹெல்மெட் இல்லாமல் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாது.

    ஷாகிப்-அல்-ஹசன் மீதும் வங்காளதேச அணி மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்தேன். நீங்கள் அனைவரும் வெற்றி பெற விளையாடுங்கள். அது விதிகளுக்குள் இருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் நான் இரண்டு நிமிடங்களுக்குள் களத்தில் இருந்தேன். அதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. விக்கெட் வீழ்ந்ததில் இருந்து நான் கிரீசுக்குள் நுழையும் வரையும் எனது ஹெல்மெட் உடைந்த பிறகு இன்னும் 5 வினாடிகள் மீதி இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதேபோல் நடுவர்கள் மீது இலங்கை கேப்டன் குசல் மெண்டிஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார். 146 ஆண்டு கால சர்வ தேச கிரிக்கெட் வரலாற்றில் டைம் அவுட் முறையில் அவுட் ஆன முதல் வீரர் மேத்யூஸ் ஆவார்.

    • 3 நிமிடத்திற்குள் களத்திற்குள் வந்து முதல் பந்தை எதிர் கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.
    • ஆனால் அவர் களத்திற்குள் வந்து உடனே ஹெல்மெட் பிரச்சனை காரணமாக வேறு ஹெல்மெட் கேட்டார்.

    50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கை - வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி டெல்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. 5 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்த இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணி 135 ரன்கள் இருந்த போது சமீரா அவுட் ஆனார். அடுத்த வீரராக மேத்யூஸ் களமிறங்கினார்.

    3 நிமிடத்திற்குள் களத்திற்குள் வந்து முதல் பந்தை எதிர் கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும். ஆனால் அவர் களத்திற்குள் வந்து உடனே ஹெல்மெட் பிரச்சனை காரணமாக வேறு ஹெல்மெட் கேட்டார். அந்த ஹெல்மெட் வருவதற்கு காலதாமதம் ஆனதால் நடுவர் அவுட் கொடுத்தார்.

    மேத்யூஸ் இது குறித்து நடுவர் மற்றும் வங்காளதேச அணியின் கேப்டன் சகிப் அல் ஹசன் ஆகியோரிடம் முறையிட்டார். ஆனால் இருவரும் விதிப்படி அவுட் என கூறினர். இதனால் மிகுந்த ஏமாற்றத்துடன் மேத்யூஸ் வெளியேறினார்.

    இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் டைம் அவுட் முறையில் அவுட் ஆன முதல் வீரரானார் மேத்யூஸ்.

    • நியூசிலாந்துக்கு எதிரான முதல் நாள் ஆட்டத்தில் மேத்யூஸ் 47 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏஞ்சலோ மேத்யூஸ் 7000 ரன்களை எடுத்துள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த மூன்றாவது வீரர் என்ற இலங்கையின் சனத் ஜெயசூர்யாவின் சாதனையை ஏஞ்சலோ மேத்யூஸ் முறியடித்துள்ளார்.

    இலங்கை கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்குமான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் இடம் பெற்றிருந்த ஏஞ்சலோ மேத்யூஸ் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இந்நிலையில் இலங்கை அணியின் ஜாம்பவானான சனத் ஜெயசூர்யாவின் சாதனையை மேத்யூஸ் முறியடித்துள்ளார்.


    ஜெயசூர்யா 110 டெஸ்டில் 6973 ரன்கள் எடுத்த நிலையில், மேத்யூஸ் 101 டெஸ்டில் 7000 ரன்கள் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த மூன்றாவது இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    ஏஞ்சலோ மேத்யூஸ் 13 சதம், 38 அரைசதங்களை அடித்துள்ளார். இந்தப் பட்டியலில் குமார் சங்ககரா (12,400) முதலிடத்திலும், ஜெயவர்த்தனே (11,814) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

    • இந்தியாவின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சமீபத்தில் 100 டெஸ்ட் போட்டிக்கான பட்டியலில் இணைந்தார்.
    • இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மேத்யூஸ் 6.876 ரன்கள் எடுத்துள்ளார்.

    கல்லே:

    பாகிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

    இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கல்லேவில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூசுக்கு இது 100-வது டெஸ்ட் போட்டி ஆகும். இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மேத்யூஸ் 6.876 ரன்கள் எடுத்துள்ளார்.

    இதையடுத்து, போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, ஏஞ்சலோ மேத்யூசுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

    மஹேலா ஜெயவர்த்தனே (149), குமார் சங்கக்கரா (134), முத்தையா முரளீதரன் (132), சமிந்தா வாஸ் (111), சனத் ஜெயசூர்யா (110) ஆகியோர் 100க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகள் விளையாடி உள்ளனர்.

    • முதல் டெஸ்ட் போட்டியின் போது மேத்யூஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
    • இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜூலை 8-ந் தேதி தொடங்குகிறது.

    ஆஸ்திரேலியா அணிகள் மூன்று வடிவிலான தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கை சென்று விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

    முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜூலை 8-ந் தேதி தொடங்குகிறது.

    பிரவீன் ஜெயவிக்ரமா

    இந்நிலையில் மேலும் ஒரு இலங்கை வீரருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியின் போது மேத்யூஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரை தொடர்ந்து இடது கை சுழற்பந்து வீச்சாளரான பிரவீன் ஜெயவிக்ரமாவுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

    • முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.
    • இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜூலை 8-ந் தேதி தொடங்குகிறது.

    இலங்கை அணி ஆஸ்திரேலியாவுடன் மூன்று வடிவிலான தொடர்களில் விளையாடி வருகிறது. டி20 தொடரை ஆஸ்திரேலியா அணியும் ஒருநாள் தொடரை இலங்கை அணியும் கைப்பற்றினர். இதனையடுத்து முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜூலை 8-ந் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் முதல் டெஸ்டில் விளையாடிய இலங்கை அணி வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் அவருக்கு லேசான கொரோனா அறிகுறி இருந்ததால் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு பதிலாக பெர்னாண்டோ அணியில் சேர்க்கப்பட்டார். இரண்டாவது இன்னிங்சில் பெர்னாண்டோ 12 மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆசிய கோப்பை படுதோல்வியால் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மேத்யூஸ், அணியில் இருந்தும் நீக்கம் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. #SLvENG #Mathews
    ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. ‘பி’ பிரிவில் இடம்பிடித்திருந்த இலங்கை அணி வங்காள தேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்து தொடக்க சுற்றிலேயே வெளியேறியது.

    படுதோல்வியால் இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் அதிரடியாக கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.



    அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரவில்லை என்றாலும், இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணியில் இடம்பிடிக்கும் வீரர்கள் பட்டியல் விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு விளையாட்டுத்துறை மந்திரி அனுமதி அளிக்க வேண்டும்.

    இந்த பட்டியலில் மேத்யூஸ் பெயர் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரின்போது மேத்யூஸ் காயம் அடைந்தார். அதன்பின் சர்வதேச அணிக்கு திரும்பிய பின்னர் பந்து வீசவில்லை. பேட்டிங் மட்டுமே செய்து வருகிறார்.

    பெரும்பாலான போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது தசைப்பிடிப்பு காரணமாக மேத்யூஸ் அவதிப்பட்டுள்ளார். இதனால் அணி நிர்வாகம் மேத்யூஸை யோ-யோ டெஸ்ட் பரிசோதனையில் பாஸ் ஆக வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மேத்யூஸ் இங்கிலாந்து தொடரில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
    ஆசிய கோப்பை போட்டியின் தொடக்கத்திலேயே வெளியேறியது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிப்பதாக இலங்கை அணி கேப்டன் மேத்யூஸ் தெரிவித்துள்ளார். #AsiaCup2018 #AFGvSL
    அபுதாபி:

    இந்தியா உள்பட 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய், அபுதாபியில் நடைபெற்று வருகிறது.

    அபுதாபியில் நேற்று நடந்த 3-வது ‘லீக்’ ஆட்டத்தில் இலங்கை அணி 91 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோற்று போட்டியில் இருந்து வெளியேறியது.

    இது குறித்து இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் கூறியதாவது:-

    ஆசிய கோப்பை போட்டியின் தொடக்கத்திலேயே வெளியேறியது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. அணியின் ஒட்டுமொத்த செயல்பாடு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    முதல் ஆட்டத்தில் 150 ரன்னுக்கு குறைவாக எடுத்தோம். இந்த ஆட்டத்தில் 158 ரன் வரை தான் எடுத்தோம். ஆப்கானிஸ்தான் மிகவும் அபாரமாக விளையாடி எங்களை வெளியேற்றி விட்டது. அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


    எங்களது தொடக்கம் சிறப்பாக இருந்தது. ஆனால் மிடில் ஆர்டர் வரிசை மீண்டும் சொதப்பி விட்டது. பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. பீல்டிங்கிலும் முன்னேற்றம் இருந்தது. ஆனால் பேட்டிங் தான் மிகவும் மோசமாக இருந்தது.

    எங்கள் அணி வீரர்களுக்கு நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பது தெரியவில்லை. இரண்டு ஆட்டத்திலும் 160 ரன் கூட எடுக்க முடியாமல் போனது வருத்தத்தை ஏற்படுத்தியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வெற்றி குறித்து ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஆப்கான் கூறும்போது, ‘ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் திட்டமிட்டு விளையாடினார்கள். அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களுக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

    ‘பி’ பிரிவில் இருந்து வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு முன்னேறி உள்ளன. இரு அணிகள் மோதும் ஆட்டம் வருகிற 20-ந் தேதி நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி அந்த பிரிவில் முதலிடத்தை பிடிக்கும். #AsiaCup2018 #AFGvSL #Mathews
    ×