search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    மேத்யூசை தொடர்ந்து மேலும் ஒரு இலங்கை வீரருக்கு கொரோனா பாதிப்பு
    X

    மேத்யூசை தொடர்ந்து மேலும் ஒரு இலங்கை வீரருக்கு கொரோனா பாதிப்பு

    • முதல் டெஸ்ட் போட்டியின் போது மேத்யூஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
    • இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜூலை 8-ந் தேதி தொடங்குகிறது.

    ஆஸ்திரேலியா அணிகள் மூன்று வடிவிலான தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கை சென்று விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

    முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜூலை 8-ந் தேதி தொடங்குகிறது.

    பிரவீன் ஜெயவிக்ரமா

    இந்நிலையில் மேலும் ஒரு இலங்கை வீரருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியின் போது மேத்யூஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரை தொடர்ந்து இடது கை சுழற்பந்து வீச்சாளரான பிரவீன் ஜெயவிக்ரமாவுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

    Next Story
    ×