search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sikkal singaravelan temple"

    • சிறப்புகளை கொண்டது சிக்கல் சிங்காரவேலவர் கோவில்.
    • சிக்கல் நவனீதேஸ்வரர் கோவில் என்பது இதன் மூலப்பெயர்.

    திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய 6 தலங்கள் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளாக கருதப்படுகின்றன. இந்த தலங்கள் ஒவ்வொன்றிலும் முருகப்பெருமான் திருவிளையாடல்கள் புரிந்துள்ளார். முருகனின் ஆறுபடை வீடுகளுக்கு நிகரான சிறப்புகளை கொண்டது சிக்கல் சிங்காரவேலவர் கோவில்.

    சிக்கல் சிங்காரவேலவரை தரிசித்தால் சிக்கல்கள் யாவும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. இந்த கோவில் நாகப்பட்டினம் அருகே சிக்கல் என்கிற கிராமத்தில் அமைந்துள்ளது. சிக்கல் நவனீதேஸ்வரர் கோவில் என்பது இதன் மூலப்பெயர். சிக்கல் சிங்கார வேலவர் ஆலயம் முருகப்பெருமான் திருக்கோவில்களில் மிக முக்கியமானது. இந்த கோவில் ஆச்சர்யமான அமைப்பாக முருக பெருமான் ஆலயத்தில் சிவன் மற்றும் விஷ்ணு பெருமான் இருவரும் இங்கே அமைந்து அருள் பாலிக்கின்றனர்.

    இந்த கோவிலின் தல வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. விண்ணுலகத்தில் இருக்க கூடிய காமதேனு பசு ஒருமுறை பஞ்சம் காரணமாக மாமிசம் உண்டுவிட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த சிவபெருமான் அந்த பசுவிற்கு சாபம் வழங்கினார். சாபத்தினால் மிகவும் கவலையுற்ற காமதேனு, இறைவனிடம் இறைஞ்சி சாப விமோசனம் கோரினார். மனம் இறங்கிய சிவபெருமான் பூலோகத்தில் மல்லிகை வனம் உண்டு அங்குள்ள தலத்தில் நீராடி அங்குள்ள இறைவனை வணங்கினால் சாபம் நீங்கும் என அருளினார். அதன்படியே இன்றைய சிங்காரவேலவர் கோவில் அமையப்பெற்றுள்ள இடத்தில் உள்ள குளத்தில் நீராடி சாப விமோசனம் பெற்றார் காமதேனு.

    அதன் பொருட்டு காமதேனு பசுவின் மடியில் பெருகிய பால் பாற்குளத்தை உருவாக்கியது. அதுவே இன்றும் புனிதகுளமாக கருதப்படுகிறது. வசிஸ்ட மாமுனி, அந்த பாலில் இருந்து கிடைத்த வெண்ணையை கொண்டு அங்கேயே சிவலிங்கம் வடித்து வழிபட்டார். தன்னுடைய பூஜை முடிந்த பின்பாக அந்த சிவலிங்கத்தை அவர் எடுக்க முற்பட்ட போது அது சிக்கி கொண்டு வர மறுத்தது அதன் பொருட்டே இந்த ஊருக்கு சிக்கல் என பெயர் வந்தது என்ற நம்பிக்கையும் உள்ளது.

    இங்கு ஆண்டுதோறும் கந்தசஷ்டி சூர சம்ஹார விழாவின்போது அன்னையிடமிருந்து வேல்வாங்கும் வைபவம் நடைபெறுவது சிறப்பம்சமாகும். இங்கிருந்து வாங்கிய வேலை கொண்டு திருச்செந்தூரில் சூரனை முருகப்பெருமான் வதம் செய்தார்.

    • இந்த கோவிலின் தல வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது.
    • சிக்கல் சிங்காரவேலவரை தரிசித்தால் சிக்கல்கள் யாவும் நீங்கிடும் என்பது ஐதீகம்.

    நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் எனும் ஊரில் ஸ்ரீவேல் நெடுங்கண்ணி அம்மன் சமேத ஸ்ரீநவநீதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 83- வது தலமாகும். 72 மாடக்கோவில்களில் ஒன்று மேலும், மாமன்னன் கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட 72 மாடக்கோவில்களில் ஒன்றாகும். இக்கோவிலின் ராஜகோபுரம் சுமார் 80 அடி உயரத்தில் 7 நிலைகளை கொண்டுள்ளது.

    இங்கு சிங்காரவேலவர் (முருகன்) தனி சன்னதியிலும், கோமளவல்லி தாயார் சமேத ஸ்ரீகோலவாமன பெருமாள் தனிக்கோவில் கொண்டும் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும். குழந்தைவரம் அருள்பவராக வீற்றிருக்கிறார். இங்கு முருகப்பெருமான் அம்மை, அப்பருக்கு நடுவில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அதனால், இங்கு சிங்காரவேலவர் குழந்தைவரம் அருள்பவராக வீற்றிருக்கிறார்.

    தலவிருட்சம் குடமல்லிகை. தீர்த்தம் அமிர்த தடாகம் என்றழைக்கப்படும் க்ஷீரபுஷ்குரணி (பாற்குளம்).ஸ்ரீகோலவாமனப் பெருமாள் நீராடி இத்தல இறைவனை வழிபட்ட தீர்த்தம் கயாதீர்த்தம், லட்சுமிதீர்த்தம் ஆகும். இதுபோல் சைவமும் ,வைணவமும் இணைந்த கோவில்கள் தமிழகத்தில் சில மட்டுமே உள்ளன. இக்கோவிலை பற்றி திருஞானசம்பந்தர் "மடங்கொள் வாளைகுதி கொள்ளும் மணமலர்ப் பொய்கைசூழ் திடங்கொள்

    மாமறையோரவர் மல்கிய சிக்கலுள் விடங்கொள் கண்டத்து வெண்ணெய்ப் பெருமானடி மேவிய அடைந்துவா மும்மடி யாரவர் அல்லல் அறுப்பரே" என தேவாரத்தில் பாடியுள்ளார். மேலும், இத்தல முருகனை பற்றி அருணகிரிநாதர் திருப்புகழில் 2 பாடல்கள் பாடியுள்ளார்.

    கோவிலின் தல வரலாறு

    இந்த கோவிலின் தல வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. விண்ணுலகத்தில் இருக்க கூடிய காமதேனு பசு ஒருமுறை பஞ்சம் காரணமாக மாமிசம் உண்டுவிட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த சிவபெருமான் அந்த பசுவிற்கு சாபம் வழங்கினார். சாபத்தினால் மிகவும் கவலையுற்ற காமதேனு, இறைவனிடம் இறைஞ்சி சாப விமோசனம் கோரினார். மனம் இறங்கிய சிவபெருமான் பூலோகத்தில் மல்லிகை வனம் உண்டு அங்குள்ள தலத்தில் நீராடி அங்குள்ள இறைவனை வணங்கினால் சாபம் நீங்கும் என அருளினார். அதன்படியே இன்றைய சிங்காரவேலவர் கோவில் அமையப்பெற்றுள்ள இடத்தில் உள்ள குளத்தில் நீராடி சாப விமோசனம் பெற்றார் காமதேனு.

    அதன் பொருட்டு காமதேனு பசுவின் மடியில் பெருகிய பால் பாற்குளத்தை உருவாக்கியது. அதுவே இன்றும் புனிதகுளமாக கருதப்படுகிறது. வசிஸ்ட மாமுனி, அந்த பாலில் இருந்து கிடைத்த வெண்ணையை கொண்டு அங்கேயே சிவலிங்கம் வடித்து வழிபட்டார். தன்னுடைய பூஜை முடிந்த பின்பாக அந்த சிவலிங்கத்தை அவர் எடுக்க முற்பட்ட போது அது சிக்கி கொண்டு வர மறுத்தது அதன் பொருட்டே இந்த ஊருக்கு சிக்கல் என பெயர் வந்தது என்ற நம்பிக்கையும் உள்ளது.

    சிக்கல் சிங்காரவேலவரை தரிசித்தால் சிக்கல்கள் யாவும் நீங்கிடும் என்பது ஐதீகம்.

    கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்கள்

    சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை பிரமோற்சவ விழாவும், ஐப்பசி மாதத்தில் நடைபெறும் கந்தசஷ்டி விழாவும், கார்த்திகை மாதத்தில் நடைபெறும் திருக்கார்த்திகை விழாவும் மிகவும் சிறப்புவாய்ந்ததாகும். இக்கோவிலில் தினமும் 6 கால பூஜைகள் நடைபெறும். இங்கு வேண்டிய பிரார்த்தனைகள் நிறைவேறியதும், வெண்ணெய்நாதருக்கு அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் உச்சிகால பூஜையின் போது வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.

    64 சக்தி பீடங்களில் ஒன்று

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த சிக்கல் சிங்காரவேலவர் கோவில் அம்மனின் 64 சக்தி பீடங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் அன்னை உமையவள் முருகப்பெருமானுக்கு சூரனை வதம் செய்ய சக்தி எனும் வேல் வழங்கியதால் வேல்நெடுங்கண்ணி எனும் சக்தியாயதாக்ஷியாக அருள்பாலிக்கிறாள். இங்கு மரகதலிங்கம் (மரகதவிடங்கர்) உள்ளது கூடுதல் சிறப்பாகும்.

    தரிசன நேரம்: காலை 6 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்காக நடை திறக்கப்பட்டு மதியம் 12.30 மணிக்கு நடை அடைக்கப்படும். தொடர்ந்து, மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    கோவில் அமைவிடம்

    இக்கோவிலுக்கு, வந்து தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் நாகப்பட்டினம் வந்தடைந்து, அங்கிருந்து நகர பஸ்களில் ஏறி 5 கி.மீ தூரம் உள்ள சிக்கல் என்ற ஊரில் இறங்கி கோவிலை வந்தடையலாம்.

    அல்லது, திருவாரூர் வந்தடைந்து அங்கிருந்து 18 கி.மீ தொலைவில் உள்ள சிக்கல் வந்து இறங்கி சாமி தரிசனம் செய்யலாம்.

    • யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது.
    • 108 சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை தொடங்கினர்.

    நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோவில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகளை பெற்ற இக்கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. அதன்படி கடந்த 29-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் குடமுழுக்கு விழா தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதற்காக 52 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, 108 சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை தொடங்கினர்.

    சிக்கல் ராமநாத சிவாச்சாரியார், கந்தசாமி சிவாச்சாரியார் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு யாகசாலை பூஜைகளை செய்து வருகிறார்கள்.

    தொடர்ந்து இன்று (புதன்கிழமை) குடமுழுக்கு நடக்கிறது. இதை முன்னிட்டு காலை 9 மணிக்கு மேல் புனிதநீர் அடங்கிய கடம் புறப்பாடு நடக்கிறது. பின்னர் 10.30 மணிக்குள் கோவில் விமான கலசத்துக்கு புனித நீர் ஊற்றப்படுகிறது.

    குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கடந்த 30-ந் தேதியில் இருந்து கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

    இதில் பக்தி பாடல்கள், நாதஸ்வரம், வயலின், மிருதங்கம் உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவையொட்டி 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • குடமுழுக்கன்று சிவன், முருகன், பெருமாள் ஆகியோருக்கு ஒரே மேடையில் திருக்கல்யாணம் நடக்கிறது.
    • நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோவில் அமைந்துள்ளது.

    நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தமிழ் கடவுளான முருக பெருமானின் கோவில்களில் மிக முக்கியமானது. சிக்கல் நவநீதேஸ்வரர் கோவில் என்பது இதன் மூல பெயர்.

    அதில் சிங்காரவேலவர் தனி சன்னதி அமைந்துள்ளது. கோவிலில் உள்ள சிங்காரவேலவர் அன்னை வேல்நெடுங்கண்ணி அம்மனிடம் இருந்து வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்த புராணம் கூறுகிறது.

    அம்மனிடம் இருந்து வேல் வாங்கியவுடன் சிங்காரவேலவர் மேனி எங்கும் வியர்வை சிந்தும் கண்கொள்ளா காட்சி இங்கே நிகழ்கிறது.

    இந்த அற்புத காட்சியை காண தமிழகத்திலிருந்து திரளான பக்தர்கள் கந்த சஷ்டி விழாவின்போது நடைபெறும் வேல் வாங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முருகனை மனமுருகி தரிசித்து செல்வார்கள்.

    தேவலோகத்தில் உள்ள காமதேனு பசு, தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்கிட இத்தலத்தில் தவம் செய்து சாபம் நீங்கி அருள் பெற்றதாகவும், பின்னர் தனது பாலினால் திருக்குளம் அமைத்து வழிபட்டதாகவும் கூறப்படுகிறது.

    வசிஷ்ட முனிவர் அந்த பாலில் வெண்ணையை எடுத்து சிவலிங்கம் ஆக்கி பூஜை செய்ததாகவும், பூஜை முடிந்து அதை எடுக்க முயன்ற போது பூமியிலேயே சிக்கி சிவலிங்கமாக உருபெற்றதால் இவ்வூருக்கு சிக்கல் என்றும், சாமிக்கு வெண்ணை பிரான் நவநீதேஸ்வரர் என்றும் பெயர் வரக் காரணமாகியது என்பது நம்பிக்கை ஆகும்.

    சிவன் மற்றும் பெருமாள் இருவரும் அருகருகே ஒரே ஆலயத்தில் அமைந்து அருள்பாலிப்பது இந்த கோவிலின் சிறப்பாகும். இவ்வாறு பல்வேறு சிறப்புகளை பெற்ற சிக்கல் சிங்காரவேலவர் கோவில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன.

    நவநீதேஸ்வரர், சிங்காரவேலவர், வேல் நெடுங்கண்ணி அம்மன், கோலவாமன பெருமாள் உள்ளிட்ட தனி சன்னதி, ராஜகோபுரம், திருக்கல்யாண மண்டபம் ஆகியவை புனரமைக்கப்பட்டது. ராஜகோபுரம் கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு கோபுரங்கள், விமானங்கள், உள்பிரகார மண்டபங்கள், மகா திருமண்டபம் ஆகியவை திருப்பணிகள் செய்து புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு செய்ய தயார் நிலையில் உள்ளது.

    கோவிலின் வடபுறத்தில் யாகசாலை பூஜைகள் நடத்துவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நாளை (வியாழக்கிழமை) அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து வருகிற 5- ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் குடமுழுக்கு நடக்கிறது.

    குடமுழுக்கன்று சிவன், முருகன், பெருமாள் ஆகியோருக்கு ஒரே மேடையில் திருக்கல்யாணம் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை கோவில் செயல் அலுவலர் முருகன் உள்பட இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.

    ×