என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Roja"
- தமிழில் 90களில் பிரபலமான நடிகையாக வலம் வந்த ரோஜா.
- இவர் தற்போது ஒரு ஏழை மாணவியின் கனவை நனவாக்க உதவியுள்ளார்.
சூரியன், உழைப்பாளி, வீரா, மக்கள் ஆட்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் ரோஜா. இவர் 90களில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தார். தற்போது ஆந்திர மாநிலம், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் கொரோனா காலத்தில் தாய், தந்தை என இரண்டு பேரையும் இழந்து வறுமையில் வாடிய தனது தொகுதியை சேர்ந்த புஷ்பா என்ற மாணவியை தத்தெடுத்து கொண்டார். அந்த மாணவியின் கல்வி செலவை முழுவதும் தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்திருந்தார்.
மாணவி புஷ்பா தனது பள்ளி படிப்பை முடித்துவிட்டு நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து, திருப்பதியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் கூறியதாவது, "மருத்துவ வசதி இல்லாமல் என் தாய், தந்தையர் இறந்ததைப் போன்று எந்தக் குழந்தைக்கும் அது போன்று ஒரு நிகழ்வு ஏற்படாமல், வருங்காலத்தில் என்னால் முடிந்த அனைத்து மருத்துவ உதவிகளையும் என்னைப் போன்ற குழந்தைகளுக்கு இலவசமாக கொடுப்பதே என் லட்சியம்" என்றார்.
- ஆந்திராவில் காதலனை நம்பி செல்லும் பெண்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும்.
- முதலில் காதலிப்பவரின் பின்னணி குறித்து முழுமையாக தெரிந்து கொண்ட பின்னரே காதலியுங்கள்.
திருப்பதி:
திருப்பதியில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் உலக நன்மைக்காக மகா சண்டி யாகம் நடந்தது. இதில் அமைச்சர் ரோஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் காதல் வலையில் விழுந்து மோசம் போகக்கூடாது.
ஆந்திராவில் காதலனை நம்பி செல்லும் பெண்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும்.
முதலில் காதலிப்பவரின் பின்னணி குறித்து முழுமையாக தெரிந்து கொண்ட பின்னரே காதலியுங்கள்.
தொழில்நுட்பம் பெருகிவரும் இந்த காலகட்டத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என விரும்பத்தகாத சம்பவங்களும் நடந்து வருகிறது.
நமக்கு நாமே தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா.
- தற்போது இவரின் மகள் அன்ஷு மாலிகா கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ரோஜா. பின்னர் குணசித்திர நடிகையாகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று இருக்கிறார். தற்போது ஆந்திர சுற்றுலாத்துறை மந்திரியாக இருக்கும் ரோஜா, மந்திரியானதும் நடிப்புக்கு முழுக்கு போட்டு ஒதுங்கினார்.
தற்போது நடிகை ரோஜா தனது மகள் அன்ஷு மாலிகாவை கதாநாயகியாக அறிமுகம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். தனது மகள் அன்ஷு மாலிகாவை நடிகையாக்க தானே நடிப்பு பயிற்சி அளித்து வருவதாக கூறப்படுகிறது. ரோஜாவின் கணவரும், பிரபல இயக்குனருமான செல்வமணியும் அன்ஷு மாலிகாவுக்கு நடிப்பு பயிற்சி அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே தமிழ், தெலுங்கு தயாரிப்பாளர்கள் அன்ஷுவை கதாநாயகியாக நடிக்க வைக்க தன்னை அணுகியதாக ரோஜா தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் உள்ள பிரபல திரைப்பட கல்லூரியில் படிக்க அன்ஷு மாலிகாவுக்கு இடம் கிடைத்துள்ளதாகவும், அங்கு சென்று நடிப்பு, இயக்குனர், திரைக்கதை எழுதுதல் போன்ற பயிற்சிகளை எடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. படிப்பை முடித்து நாடு திரும்பியதும் அன்ஷு கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- பிரதமர் நரேந்திர மோடி வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார்.
- நடிகையும் ஆந்திர மந்திரியுமான ரோஜா பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
ஆந்திரப்பிரதேச மாநிலம் பீமாவரத்தில், விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி 30 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசு திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் முடிவில் பிரதமர் மோடி புறப்பட்டு செல்லும்போது நடிகையும் ஆந்திர மந்திரியுமான ரோஜா, பிரதமரிடம் செல்ஃபி எடுக்க அனுமதி கேட்டு அவருடன் செல்பி எடுத்துக்கொண்டார்.
செல்ஃபி புகைப்படம்
அப்போது ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி உடனிருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிரஞ்சீவியும் கலந்து கொண்டார். ரோஜா அவருடனும் செல்ஃபி எடுத்துக் கொண்டார். ரோஜாவின் இந்த செல்ஃபி புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஆந்திரா சட்டமன்றத்தில் தன்னையும், தனது மனைவியையும் அவதூறு செய்துவிட்டதாக கூறி இனி முதல்வராக மட்டுமே சட்டமன்றத்தில் அடி எடுத்து வைப்பேன் என சபதம் செய்துவிட்டு சந்திரபாபுநாயுடு சட்டமன்றத்தை விட்டு வெளியேறினார். பின்னர் நிருபர்கள் கூட்டத்தில் பேசுகையில் கண்கலங்கினார்.
இதுகுறித்து நகரி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா பேசுகையில், “பெண் பாவம் பொல்லாதது. சந்திரபாபு நாயுடு ஆட்சியில் என்னை அநியாயமாக ஒரு ஆண்டு காலம் சட்டமன்றத்தில் அடி எடுத்து வைக்க விடாமல் தடை விதித்தனர். பெண் என்றும் பாராமல் என்னை அவதூறு கேலி செய்தனர். அன்று சட்டமன்றத்திற்கு வெளியே ஒரு நாள் முழுவதும் வெயிலில் காத்திருந்தேன். கண்ணீர் வடித்தேன்.
இதற்கெல்லாம் ஒருநாள் சந்திரபாபு நாயுடு பதில் சொல்ல வேண்டி வரும் என நினைத்தேன். அந்த நாள் இன்று வந்துவிட்டது. இன்னும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி இரண்டரை ஆண்டுகள் உள்ளது. அதன் பிறகும் கூட அவர் வெற்றி பெறுவது, முதல்வராவது என்பது கனவில் கூட நடக்காது. எனவே கடவுள் அவரை வாழ்நாள் முழுவதும் சட்டமன்றத்தில் அடி எடுத்து வைக்க விடாமல் செய்து விட்டார் என நினைக்கிறேன்” என தெரிவித்தார்.
ஆந்திராவில் ராயலசீமா பகுதியில் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது நகரி சட்டசபை தொகுதி. இந்த தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக நடிகை ரோஜா போட்டியிட்டார்.
இதில், ரோஜா 79,499 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் வேட்பாளர் காளி பானு பிரகாஷ் 76,818 வாக்குகள் பெற்றார். எனவே, 2,681 வாக்குகள் வித்தியாசத்தில் ரோஜா வெற்றி பெற்றார்.
அவருக்கு மின்சாரத்துறை வழங்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. நாளை நடைபெறும் அமைச்சரவை பதவியேற்பு விழாவில் ரோஜா அமைச்சராக பதவியேற்க உள்ளார்.
ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா 2-வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வெற்றி முடிவு அறிவிக்கப்பட்டதும் காளிபாக்கம் விநாயகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
நடிகை ரோஜாவை சந்தித்து தொண்டர்களும், தலைவர்களும் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் நகரி தேசம்மா தாயார் கோவிலுக்கு சென்ற ரோஜா அம்மனை தரிசித்தார். அர்ச்சகர்கள் அவருக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்தனர்.
பின்னர் ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
மாதம் ஒரு முறையாவது திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தால்தான் மனநிறைவு ஏற்படும். கடவுளின் ஆசியாலும், தொண்டர்கள், பொதுமக்களின் ஆதரவாலும் 2-வது முறையாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். இனி நல்ல காலம் பிறந்து விட்டது. ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் நல்லாட்சியை மீண்டும் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி கொண்டு வருவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்கிறார்கள். அதுவும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் இங்கு அதிகமாக இருக்கும்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த கோவிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி நாட்டில் ஏற்படப்போகும் விளைவுகளை முன்னதாகவே உணர்த்தி விடும் சக்தி கொண்டது.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா நேற்று சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு மதியம் 2 மணிக்கு வந்தார். பின்னர் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார். அப்போது அவரை பார்க்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
நடிகை ரோஜா சாமி தரிசனம் செய்து விட்டு கோவில் கொடி மரம் அருகே வந்த போது கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள், அறநிலையத்துறை ஊழியர்கள் ராஜகோபுரம் நுழைவு வாயிலை அடைத்து நின்றபடி நடிகை ரோஜாவுடன் செல்பி எடுத்து கொண்டனர்
இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிரமப்பட்டனர். தங்களது பணியை மறந்து நடிகையுடன் அர்ச்சகர்கள், அறநிலையத்துறை ஊழியர்கள் செல்பி எடுத்ததை பார்த்து பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் கோவிலுக்கு வெளியே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் நடிகை ரோஜா கூறியதாவது:-
சந்திரபாபு நாயுடு தோல்வி பயத்தால் வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார். நமது சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது பாக். ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் சந்திரபாபு நாயுடு, மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என கூறி வருகிறார். இது உயிரிழந்த ராணுவ வீரர்களை அவமானப்படுத்தும் செயல்.
கோதாவரி புஷ்கரத்தின் போது சந்திரபாபு நாயுடு தனது விளம்பரத்திற்காக நடத்திய படப்பிடிப்பின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் பலியானார்கள். அப்போது சந்திரபாபு நாயுடு ஏன் ராஜினாமா செய்யவில்லை. அவர் மீது எதற்காக வழக்கு பதிவு செய்யவில்லை.
கொண்டவீடு பகுதியில் சந்திரபாபு நாயுடு வந்து செல்வதற்காக அதிகாரிகள் ஹெலிபேட் அமைத்தனர். என்னுடைய நிலத்தில் யாரை கேட்டு ஹெலிபேட் அமைத்தீர்கள் என்று கேட்ட விவசாயி கோட்டீஸ்வரராவை போலீசார் அடித்துக் கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் சந்திரபாபு நாயுடு மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. அவருக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என பேசி வருகிறார்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் எதிரே இருந்த தொன்மை வாய்ந்த ஆயிரங்கால் மண்டபம் இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் கட்டுவதற்காக அமராவதி ஜகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆயிரங்கால் மண்டபத்தில் வெங்கடேஸ்வர சுவாமி பக்தர்களுக்கு ஆசீர்வதிப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
அப்படிப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தை சந்திரபாபு நாயுடு தனது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி இடித்து தரைமட்டமாக்கினார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அதே இடத்தில் மீண்டும ஆயிரங்கால் மண்டபம் கட்டப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #YSRCongress
ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார்.
தரிசனத்திற்கு பிறகு அவர் கூறியதாவது:- ஏழுமலையான் கோவிலுக்கு எதிரே இருந்த மிகவும் பழமை வாய்ந்த ஆயிரங்கால் மண்டபம் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இடிக்கப்பட்டது.
அத்துடன் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவிக்கு வந்த உடன் ஆயிரம் கால் மண்டபம் கட்டுவதையே முதல் பணியாக மேற்கொள்வார்.
இவ்வாறு அவர் கூறினார். #YSRCongress #Roja #Tirupati
ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நடிகை ரோஜா. இவர் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான காளிமுத்து கிருஷ்ணம்ம நாயுடுவை எதிர்த்து போட்டியிட்டு 858 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தமிழர்கள் இந்த தொகுதியில் அதிகம் வசித்தாலும் தமிழ் நடிகையான ரோஜா குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற முடிந்தது. பெண்களின் வாக்கு அதிகமாக பதிவானதும் ரோஜா வெற்றிக்கு ஒரு காரணம்.
இந்த நிலையில் 2019 சட்டசபை தேர்தலில் நடிகை ரோஜாவை எதிர்த்து ஒரு நடிகையை களமிறக்க தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்தது. அதன்படி நடிகை வாணி விஸ்வநாத்தை வேட்பாளராக தெலுங்கு தேசம் கட்சி தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நகரிக்கு வந்த நடிகை வாணி விஸ்வநாத் ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு அழைப்பின் பேரில் விரைவில்தான் தெலுங்கு தேசம் கட்சியில் இணையப் போவதாக அறிவித்தார்.
ரோஜாவுக்கு நகரியில் உள்ள எதிர்ப்புகள், பெண்கள் ஆதரவு ஆகியவைகளை தெலுங்கு தேசம் கட்சி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள தயாராகி வருகிறது. சட்டசபை தேர்தலில் நகரி தொகுதியில் 2 நடிகைகள் போட்டி போட இருப்பது முடிவாகிவிட்டது.
நகரி தொகுதியில் உள்ள புத்தூரில் அரசு மருத்துவமனை கட்டிடம் திறப்பு விழா நடந்தது. இதில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா தலைமை தாங்குவதாகவும், தெலுங்கு தேசம் கட்சி மந்திரி அமர்நாத் ரெட்டி கட்டிடத்தை திறந்து வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
விழாவில் பங்கேற்ற நடிகை ரோஜா பஞ்சாயத்து ராஜ் அலுவலகத்தில் இருந்து பாத யாத்திரையாக தொண்டர்களுடன் வந்தார். அப்போது தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் குடிபோதையில் ரகளை செய்து ரோஜாவை தாக்க முயன்றனர். தொண்டர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அரண் போல் பாதுகாத்து மேடைக்கு அழைத்து வந்தனர். பின்னர் நிகழ்ச்சிகள் பிரச்சினையின்றி நடந்தது. கட்டிட திறப்பு விழாவுக்கு ரோஜா தலைமை தாங்கினார். மந்திரி அமர்நாத் ரெட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார். மேடையில் நடிகை ரோஜாவும், மந்திரி அமர்நாத் ரெட்டியும் சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். #VaniViswanath #Roja
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்