search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இளம்பெண்கள் காதலில் மோசம் போக கூடாது- அமைச்சர் ரோஜா அறிவுரை
    X

    இளம்பெண்கள் காதலில் மோசம் போக கூடாது- அமைச்சர் ரோஜா அறிவுரை

    • ஆந்திராவில் காதலனை நம்பி செல்லும் பெண்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும்.
    • முதலில் காதலிப்பவரின் பின்னணி குறித்து முழுமையாக தெரிந்து கொண்ட பின்னரே காதலியுங்கள்.

    திருப்பதி:

    திருப்பதியில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் உலக நன்மைக்காக மகா சண்டி யாகம் நடந்தது. இதில் அமைச்சர் ரோஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் காதல் வலையில் விழுந்து மோசம் போகக்கூடாது.

    ஆந்திராவில் காதலனை நம்பி செல்லும் பெண்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும்.

    முதலில் காதலிப்பவரின் பின்னணி குறித்து முழுமையாக தெரிந்து கொண்ட பின்னரே காதலியுங்கள்.

    தொழில்நுட்பம் பெருகிவரும் இந்த காலகட்டத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என விரும்பத்தகாத சம்பவங்களும் நடந்து வருகிறது.

    நமக்கு நாமே தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×