search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "returns"

    பிரியங்கா காந்தி அமெரிக்காவில் இருந்து டெல்லி திரும்பினார். நாளை மறுநாள் நடைபெறும் காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்கிறார். #PriyankaGandhi #Congress
    புதுடெல்லி:

    உத்தரபிரதேசத்தில் உள்ள 80 எம்.பி. தொகுதிகள் மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு மிகவும் முக்கிய பங்களிப்பாக உள்ளன.

    ஆனால் அந்த மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி செல்வாக்கை இழந்து பரிதவித்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் அந்த மாநிலத்தில் 2 தொகுதிகளில் மட்டுமே காங்கிரசால் வெற்றி பெற முடிந்தது.

    இந்த நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல்களிலும் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி அமையவில்லை. இதனால் அந்த கட்சிக்கு உத்தரபிரதேசத்தில் எதிர்பார்க்கும் அளவுக்கு வெற்றி கிடைக்குமா? என்பதில் கேள்விகுறிகள் எழுந்துள்ளது.

    இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகளில் ராகுல்காந்தி ஈடுபட்டுள்ளார். முதல் கட்டமாக அவர் தனது சகோதரி பிரியங்கா உதவியை நாடி உள்ளார். 2 வாரங்களுக்கு முன்பு பிரியங்காவை அவர் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவராக அறிவித்தார்.

    பிரியங்காவுக்கு உத்தரபிரதேச மாநிலத்தில் கிழக்கு மண்டலத்தில் உள்ள 40 தொகுதிகளின் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 40 தொகுதிகளிலும் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 3-வது, 4-வது இடங்களில்தான் வந்தது. எனவே இந்த 40 தொகுதிகளும் பிரியங்காவுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    பிரியங்கா காங்கிரஸ் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டபோது குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகருக்கு சென்று இருந்தார். கடந்த 2 வாரமாக அவர் அமெரிக்காவில் தங்கியிருந்தார்.

    இந்த நிலையில் நேற்று பிரியங்கா டெல்லி திரும்பினார். உடனடியாக அவர் சோனியாவையும், ராகுலையும் சந்தித்து பேசினார். இன்று அவர் தனது உறவினர்கள் வீட்டுக்கு சென்று வந்தார்.

    நாளை முதல் பிரியங்கா தீவிர அரசியலில் ஈடுபட தொடங்குவார் என்று தெரிய வந்தது. அவரது பிரசார பயண திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. உத்தரபிரதேசத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து காங்கிரசுக்கு ஆதரவாக மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்த பிரியங்கா அதிரடியில் இறங்குவார் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் கூட்டத்துக்கு ராகுல் காந்தி ஏற்பாடு செய்துள்ளார். இந்த கூட்டத்தில் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு காங்கிரசை தயார்படுத்தும் வகையில் முக்கிய கொள்கை முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளன. இந்த கூட்டத்தில் முதல் முறையாக பிரியங்காவும் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

    பிரியங்கா பங்கேற்கும் முதல் கட்சி நிர்வாக கூட்டம் என்பதால் வியாழக்கிழமை நடக்கும் காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது. கூட்டத்தில் பிரியங்கா தனது புதிய கருத்துக்களை வெளியிடுவார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

    பிரியங்கா வழிகாட்டுதலின் பேரில் புதிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுத்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே பிரியங்கா தனக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரபிரதேச மாநில கிழக்கு மண்டல பொறுப்பாளர் பதவியை இந்த வாரமே ஏற்க உள்ளார். அதற்கான தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. அதன் பிறகு அவர் உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர்களை அழைத்து பேச உள்ளார்.

    வருகிற 9-ந்தேதி காங்கிரஸ் மாநில தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திலும் பிரியங்கா பங்கேற்பார் என்று தெரிகிறது. தேர்தலுக்கு காங்கிரசை தயார்படுத்தும் வகையில் மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் பிரியங்கா பேசுவார் என்று தெரிய வந்துள்ளது.

    பிரியங்காவுக்கு மிக முக்கியமான வேலை ஒதுக்கி கொடுத்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேட்டி ஒன்றில் கூறி உள்ளார். அதன்படி பிரியங்கா புதுவிதமான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.

    பா.ஜனதா தலைவர்கள் அனைவருக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் பிரியங்காவின் பிரசாரம் இருக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். ஆனால் உத்தரபிரதேசத்தில் காங்கிரசுக்கு ஆதரவு திரட்டுவது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்த மாத இறுதியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் கூட உள்ளது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு காங்கிரசை தயார்படுத்துவது தொடர்பாக இறுதி வடிவம் கொடுக்கப்பட உள்ளது. அப்போது காங்கிரசுக்கு பிரியங்கா செய்ய வேண்டிய பணிகள் பற்றிய பொறுப்புகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட உள்ளது.

    ராகுல் தனியாக நின்று பிரசாரம் செய்ய முடியாமல் நெருக்கடியில் தவித்து வருகிறார். அவரது நெருக்கடியை தீர்க்கும் வகையில் பிரியங்காவின் பணிகள் அமையும் என்று கருதப்படுகிறது.

    குறிப்பாக கூட்டணி அமைக்கும் வி‌ஷயங்களில் பிரியங்காவின் பங்களிப்பு கணிசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் காங்கிரசை தவிர்த்து விட்டு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் கூட்டணி அமைத்துள்ளனர்.

    அந்த கூட்டணியில் காங்கிரசையும் இணைக்க பிரியங்கா இப்போதே முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இந்த இரு கட்சிகளையும் காங்கிரஸ் கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட்டால் நாடு தழுவிய மெகா கூட்டணிக்கு அடித்தளம் அமைத்து விடலாம் என்று பிரியங்கா கூறி வருகிறார். எனவே அவர் விரைவில் கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.

    பிரியங்கா இத்தகைய பணிகளில் இறங்குவார் என்பதால்தான் அவரை காங்கிரசின் பிரம்மாஸ்திரம் என்று சொல்கிறார்கள். ஆனால் உத்தரபிரதேசத்தில் எடுத்த உடன் அவருக்கு வெற்றி கிடைக்குமா? என்பதில் காங்கிரசாருக்கே சந்தேகம் எழுந்துள்ளது.

    உத்தரபிரதேசத்தில் 1989-ம் ஆண்டுடன் காங்கிரஸ் ஆதிக்கம் முடிந்து போனது. பிரியங்கா பிரம்மாஸ்திரத்தை வீசுவதை பொறுத்தே உத்தரபிரதேசத்தில் காங்கிரசுக்கு எத்தகைய வெற்றி கிடைக்கும் என்பது தெரிய வரும். #PriyankaGandhi #Congress
    குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூர் டைரக்டர் அரிபம் ஷியாம் சர்மா பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்ப உள்ளார். #PadmaShri #AribamSyamSharma
    இம்பால்:

    வடகிழக்கு மாநிலமான மணிப்பூரை சேர்ந்தவர் அரிபம் ஷியாம் சர்மா (83). இவர் பிரபல மணிப்பூர் சினிமா டைரக்டராகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வருகிறார்.



    இவர் மத்திய அரசு தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்ப உள்ளார். சமீபத்தில் மத்திய அரசு பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்ட மசோதா தாக்கல் செய்தது. அது மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

    இதற்கு டைரக்டர் அரிபம் ஷியாம் சர்மா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த சட்டம் அண்டை நாடுகளான வங்காள தேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2014 டிசம்பர் 31-ந்தேதிவரை இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்கு அதிவிரைவாக குடியுரிமை வழங்க வழி வகை செய்கிறது.

    இதற்கு மணிப்பூர், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இந்த விருதை திரும்ப அனுப்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    டைரக்டர் சர்மா பல தேசிய விருதுகளை பெற்று இருக்கிறார். அவருக்கு மத்திய அரசு கடந்த 2006-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. #PadmaShri #AribamSyamSharma

    வழக்குகளுக்காக தொடர்ந்து ஆஜராகி வரும் முகமது மன்சூர், பஷரத் அலிகான் ஆகிய 2 வக்கீல்களை நீதிபதியாக்கும் விவகாரத்தில் கொலிஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு மீண்டும் நிராகரித்துள்ளது. #CollegiumJudges #SupremeCourt
    புதுடெல்லி:

    உத்தரபிரதேசத்தின் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்குகளுக்காக தொடர்ந்து ஆஜராகி வரும் முகமது மன்சூர், பஷரத் அலிகான் ஆகிய 2 வக்கீல்களை அந்த கோர்ட்டின் நீதிபதிகளாக நியமிக்குமாறு மத்திய அரசுக்கு கொலிஜியம் அமைப்பு பரிந்துரைத்தது. ஆனால் அவர்கள் இருவர் மீதும் புகார்கள் இருப்பதாக கூறி அந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்கனவே திருப்பி அனுப்பியது.

    எனினும் அந்த புகார்கள் அனைத்தும் அற்பமானவையே எனக்கூறி மீண்டும் அவர்களது பெயரை கொலிஜியம் அமைப்பு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை 2½ ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போட்டிருந்த மத்திய அரசு, தற்போது மீண்டும் நிராகரித்து உள்ளது. இதுதொடர்பாக மறு ஆய்வு செய்யுமாறு கூறி, கொலிஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு திருப்பி அனுப்பி உள்ளது.

    கொலிஜியத்தில் உறுப்பினராக இருந்த சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் கடந்த வாரம் ஓய்வு பெற்ற நிலையில், புதிய உறுப்பினரை நியமித்த பின்னரே இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

    இதற்கிடையே காஷ்மீர் ஐகோர்ட்டில் நீதிபதியாக நியமிக்கக்கோரி அனுப்பி வைக்கப்பட்ட வக்கீல் நஜிர் அகமது பெய்க்கின் பெயரையும் திருப்பி அனுப்ப மத்திய அரசு முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
    டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ஹைட்ராலிக் பிரச்சினை ஏற்பட்டதால் டெல்லி விமான நிலைத்திற்கே திருப்பி விடப்பட்டு தரையிறக்கப்பட்டது. #AirIndia #HydraulicProblem
    புதுடெல்லி:

    ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் இன்று டெல்லியில் இருந்து மேற்கு வங்க மாநிலம் துர்காபூர் நோக்கி புறப்பட்டது. அதில், 128 பயணிகள் பயணம் செய்தனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.  இதனால் விமானத்தை மீண்டும் டெல்லிக்கே திருப்பினார் விமானி.

    டெல்லியில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தை தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்துக் கூறினார். இதையடுத்து டெல்லியில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு குறித்த நேரத்தில் கண்டறியப்பட்டு விமானம் தரையிறக்கப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

    விமானம் புறப்பட்ட 40 நிமிடத்தில் ஹைட்ராலிக் பிரச்சினை ஏற்பட்டதால் டெல்லிக்கே திருப்பி விடப்பட்டது. அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் கீழே இறக்கப்பட்டு மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர் என விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். #AirIndia #HydraulicProblem  #tamilnews
    ×