என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "recruitment"
- நெல்லையில் ஊர்காவல் படைக்கு 46 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- இத்தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நெல்லை:
நெல்ைல மாநகர போலீஸ் கமிஷனர் அவிநாஷ் குமார் உத்தரவுப்படி, மாநகர ஊர்காவல் படையில் புதிதாக ஊர்காவல் படையினர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வருகிற 6-ந்தேதி (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை இந்த தேர்வு நடக்கிறது. 39 ஆண்கள், 7 பெண்கள் என மொத்தம் 46 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இத்தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயதுக்கு குறையாமலும் 50 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.மாநகர எல்லைக்குள் குடியிருக்க வேண்டும்.
தேர்வுக்கு வருபவர்கள் கலர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2, கல்வி தகுதிச் சான்று (அசல் மற்றும் ஒரு சான்றொப்பமிட்ட நகல்), ஆதார் அட்டை (அசல் மற்றும் ஒரு சான்றொப்பமிட்ட நகல்), இருப்பிட சான்று (அசல் மற்றும் ஒரு சான்றொப்பமிட்ட நகல்) ஆகியவற்றுடன் ஆயுதப்படை மைதானத்திற்கு நேரில் வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தில் இந்திய கப்பற்படையில் 20 சதவீதம் பெண்கள் சேர்க்கப்படுகிறார்கள்
- சேலம், நாமக்கல் மாணவிகள் பலர் விண்ணப்பித்துள்ளனர்.
சேலம்:
இந்திய நாட்டின் முப்படைகளான ராணுவப்படை, கப்பற்படை, விமானப் படை ஆகிய பாதுகாப்பு படைகளில் இளைஞர்கள், இளம்பெண்களை அதிக அளவில் நியமிக்க முடிவு செய்து மத்திய பா.ஜ.க. அரசு அக்னி பத் திட்டத்தை கடந்த 14-ந்தேதி முதல் அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த புதிய பணி நியமன முறையை 'டூர் ஆப் தி டூட்டி' என்று அழைக்கிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் நியமிக்கப்படும் வீரர்கள் அக்னிவீரர்கள் என அழைக்கப்படுவார்கள். மாதந்தோறும் ரூ.35 ஆயிரத்துக்கு மேல் ஊதியம், பல்வேறு சலுகைகள் வழங்கப்படும்.
4 ஆண்டுகள் முடிவில் அவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, ரூ.10 லட்சம் (வரிப்பிடித்தம் இல்லாமல்) வழங்கப்படும். அத்துடன் பட்டப்படிப்பு படித்து முடித்தற்கான சான்றிதழும் வழங்கப்படும்.
20 சதவீதம் பெண்கள்
இந்த திட்டத்தில் சேர வேண்டி தமிழகத்தில் அதிக அளவில் இளம்பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக இந்திய கப்பற்படையில் பெண் மாலுமிகளும் சேர்க்கப்பட உள்ளனர். இதில் நடப்பாண்டில் 20 சதவீதம் பெண்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
இத்திட்டத்தில் கடந்த 1-ந்தேதியில் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. பணி மற்றும் இளநிலை பட்டம் வழங்கப்படுவதால் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர்,கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த பிளஸ்-2, பட்டப்படிப்பு பயிலும் மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பிக்கின்றனர்.
17½ வயது முதல் 23 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கடற்படையில் சேரும் முதல் பிரிவினருக்கு ஐ.என்.எஸ்.சில்கா போர்கப்பலில் ஓடிசாவில் வருகிற நவம்பர் மாதம் 21-ந்தேதி பயிற்சிகள் தொடங்குகின்றன.
- சேலம், நாமக்கல்லில் அக்னிபத் வீரர்கள் தேர்வுக்கு இளைஞர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர்.
- குறிப்பாக பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற, பட்டப்படிப்பு படிக்கும் இளம்பெண்கள் விமானப்படையில் சேர அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சேலம்:
இந்திய நாட்டின் முப்படைகளான ராணுவப்படை, கப்பற்படை, விமானப் படை ஆகிய பாதுகாப்பு படைகளில் சேர தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவார்கள். பொதுவாக தமிழகத்தில் இப்படைகளுக்கு ஆட்தேர்வின்போது மைதானத்தில் இளைஞர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்படும். இதனால் ஆள்சேர்ப்பு நடைபெறும் மைதானத்தின் தடுப்புச்சுவர்கள் இடிந்து விழுந்த நிகழ்வுகளும் உண்டு. அதுமட்டுமின்றி இளைஞர்களின் கூட்டத்தை ஒழுங்குப்படுத்த போலீசார் தடியடி நடத்தி கலைத்த சம்பவங்களும் உண்டு.
சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கொரோனா கால கட்டத்திற்கு முன் அடிக்கடி ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறும். இந்த முகாமில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் அலை அலையாக திரளுவார்கள். கொரோனா ெதாற்று பரவலுக்கு பிறகு கடந்த 2 ஆண்டுகளாக பாதுகாப்பு படைகளில் ஆள்சேர்ப்பு நடைபெறவில்லை.
இந்த நிலையில் ராணுவத்தில் சிறிது காலமாவது பணியாற்ற வேண்டும் என்பது பல பேருடைய லட்சிய கனவாகவே இருக்கிறது. திறமையான பல இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். ஆட்சேர்ப்பு முகாமின்போது குறைந்த எண்ணிக்கையிலேயே வீரர்கள் தேர்வு செய்யப்படுவதால் தகுதியான பல இளைஞர்கள் பாதுகாப்பு படையில் சேர முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அவர்களுடைய எண்ணங்களை நிறைவேற்றும் வகையில், துடிப்பான இளைஞர்களை பாதுகாப்பு படையில் சேர்ப்பதற்காக மத்திய பா.ஜ.க. அரசு அக்னிபத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் முப்படைகளில் ஒன்றான விமானப் படையில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கடந்த 24-ம் தேதி முதல் இணையதளம் வழியாக பெறப்படுகின்றன. அடுத்த மாதம் 5-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். இதுவரை விமானப் படைக்கு 94 ஆயிரத்து 281 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் அதிகம் பேர் விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற, பட்டப்படிப்பு படிக்கும் இளம்பெண்கள் விமானப்படையில் சேர அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக பாதுகாப்பு படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் இந்த ஆண்டு மட்டும் அக்னிபத் திட்டத்தில் வீரர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு தளர்த்தப்பட்டு 23 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
- வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அடிக்கடி விமர்சித்து வருகிறது.
- அரசின் பல்வேறுத் துறைகள் மற்றும் அமைச்சகங்களில் மிஷன் முறையில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணியில் சேர்க்கும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அடிக்கடி விமர்சித்து வருகிறது.
இந்நிலையில், அரசின் பல்வேறுத் துறைகள் மற்றும் அமைச்சகங்களில் மிஷன் முறையில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணியில் சேர்க்கும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களில் மனித வளத்தின் நிலையை மதிப்பாய்வு செய்தார். அடுத்த 1.5 ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணியமர்த்துவது அரசால் செய்யப்பட வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்