search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sri lanka govt"

    மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை தூக்கிலிடும் வேலைக்கு ஆட்கள் தேவை என இலங்கை சிறைத்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது. #SriLankahangmen #hangmenrecruitment #MaithripalaSirisena
    கொழும்பு:

    இலங்கை நாட்டில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இனி கருணை காட்ட மாட்டோம். மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தூக்கிலிட்டு கொல்லப்படுவார்கள் என அந்நாட்டின் அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா சமீபத்தில் பாராளுமன்ற உரையின்போது தெரிவித்திருந்தார்.

    இலங்கையில் கடைசியாக கடந்த 1976-ம் ஆண்டில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் பதவிக்கு வந்த அதிபர்கள் மரண தண்டனை நிறைவேற்றுவது தொடர்பான எந்த உத்தரவிலும் கையொப்பமிடவில்லை.

    இதனால், கடந்த 42 ஆண்டுகளில் எந்த கைதியும் அங்குள்ள சிறைகளில் தூக்கிலிட்டு கொல்லப்படவில்லை. தற்போதைய நிலவரப்படி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய 48 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களில் 30 பேர் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்து வழக்காடி வருகின்றனர். 18 பேரின் உயிர்கள் அதிபரின் கையொப்பத்துக்கான உத்தரவில் ஊசலாடி வருகிறது.

    இந்நிலையில், அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா சமீபத்தில் அறிவித்திருந்ததுபோல் இலங்கை சிறைகளில் மரண தண்டனையை நிறைவேற்றும் வகையில் தூக்கிலிடும் பணியை செய்து முடிக்க யாரும் தற்போது இல்லை.

    அந்த பணியில் இருந்த ஒருவர் கடந்த 2014-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றப்பிறகு மூன்று பேர் இந்த வேலைக்காக சேர்ந்தனர். ஆனால், அவர்களும் குறுகிய காலத்துக்குள் வேலையை விட்டு நின்று விட்டனர்.

    எனவே, ஒருவேளை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா சிறையில் இருக்கும் கைதிகளில் சிலருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுமாறு திடீரென்று உத்தரவிட்டால் அந்த காரியத்தை செய்து முடிப்பதற்காக புதிய கொலையாளிகளை நியமிக்க இலங்கை சிறைத்துறை தீர்மானித்துள்ளது.

    இதுதொடர்பான அறிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் இந்த பணிக்கான இருவரை தேர்வு செய்வதற்காக இன்று (திங்கட்கிழமை) முதல் விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் அந்நாட்டின் சிறைத்துறை கமிஷனர் தனசிங்கே தெரிவித்துள்ளார். #SriLankahangmen #hangmenrecruitment #MaithripalaSirisena
    போதைப்பொருள் கடத்தல்காரர்கள், வியாபாரிகளுக்கு மரண தண்டனை விதிக்க தீர்மானித்துள்ள நிலையில் குற்றவாளிகளை தூக்கிலிட்டு கொல்ல ஆள்தேர்வில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. #Noosework #SriLankacapitalpunishment #twohangmen
    கொழும்பு:

    தீவு நாடான இலங்கையை வெள்ளையர் ஆண்டு வந்த 1815-ம் ஆண்டு வாக்கில் ஆட்சிக்கு எதிராக கலகம் செய்தவர்களுக்கு ராஜதுரோக குற்றச்சாட்டின் பேரில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 

    பின்னர், வெள்ளையர் ஆட்சியில்  சுதந்திரம் அடைந்த பிறகு 1956-ம் ஆண்டு தூக்கு தண்டனையை ரத்து செய்து அந்நாள் பிரதமர் பண்டாரா நாயகே உத்தரவிட்டார். 

    பயங்கரவாத தாக்குதலில் பண்டாரா நாயகே கொல்லப்பட்ட பிறகு 1959-ல் மீண்டும் தூக்கு தண்டனை விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்தது. பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்ட இந்த சட்டம் 2004-ம் ஆண்டு நீதிபதி சரத் அம்பேப்பிட்டியா சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று வரை உயிர்ப்புடன் உள்ளது. 

    கடந்த 1976-ம் ஆண்டில் இருந்து இதுவரை இலங்கையில் யாரும் தூக்கிலடப்படவில்லை என்றாலும் மரண தண்டனை விதிக்கப்பட்ட 356 கைதிகள் தூக்கு மர நிழலில் சிறைக்குள் இளைப்பாறி வருகின்றனர். 

    கைதிகளை தூக்கிலிடும் கொலையாளிகள் பணிஓய்வு பெற்று செல்வதால் அந்த வேலைக்கு புதிய நபர்களை தேர்வு செய்ய முடிவெடுத்த இலங்கை சிறைத் துறை கடந்த 2013-ம் ஆண்டு இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. 

    இந்த வேலைக்கு அப்போது விண்ணப்பித்த 176 பேரில் இறுதியாக 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் இருவர் நியமன உத்தரவுக்குப் பின்னர் மாதங்கள் ஆகியும் வேலைக்கு திரும்பவே இல்லை. இதனால் தேர்வுப் பட்டியலில் இருந்த மூன்றாவது தகுதியான நபரை வரவழைத்த சிறைத்துறை அதிகாரிகள் அவருக்கு ஒரு வாரம் பயிற்சி அளித்தனர். 

    தூக்கு மேடையை சுற்றிக்காட்டி தூக்கு கயிறு எவ்வாறு கழுத்தில் இறுகும் என்று விளக்கிக் கூறியபோது அதிர்ச்சி அடைந்த அந்த நபரும் "இந்த வேலை எனக்கு வேண்டாம்" என்று கூறி ஓட்டம் பிடித்தார். 
    இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், வியாபாரிகளுக்கு மரண தண்டனை விதிக்க இலங்கை தீர்மானித்துள்ள நிலையில் குற்றவாளிகளை தூக்கிலிட்டு கொல்ல ஆள்தேர்வில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது.

    இலங்கையில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும், போதைப் பொருள் கடத்தல் கும்பல்களை களையெடுக்கவும் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வகையில் போதைப் பொருள் சார்ந்த குற்றச்செயல்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க முடிவு செய்தது. 

    இந்த முடிவிற்கு இலங்கை அமைச்சரவை சமீபத்தில் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. மரண தண்டனையை நிறைவேற்றும் அரசின் முடிவுக்கு சர்வதேச பொதுமன்னிப்பு சபை மற்றும் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    இருப்பினும், அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதால், போதைப்பொருள் வழக்கில் கைதாகி, மரண தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கும் 18  குற்றவாளிகளுக்கான தண்டனையை நிறைவேற்றுவதற்கு சட்டரீதியான பணிகளை அரசு தொடங்கி உள்ளது. 

    இதனால் புதிதாக இரு கொலையாளியை தேர்வு செய்யும் முயற்சியில் இலங்கை சிறைத்துறையினர் மீண்டும் களமிறங்கியுள்ளனர்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இலங்கை சிறைத்துறை செய்தியாளர் துஷாரா உப்பில்டேனியா, 'மரண தண்டனையை நிறைவேற்ற அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து காலியாக உள்ள இந்த கொலையாளி பணிக்கு ஆள்தேர்வு நடைபெறும்’ என இன்று தெரிவித்துள்ளார்.

    அடுத்த வாரம் இதற்கான விளம்பரம் வெளியிடப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு நடைபெறும். தகுதியான நபர்கள் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #Noosework #SriLankacapitalpunishment #twohangmen
    ×