என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
நெல்லை மாநகர ஊர்காவல் படைக்கு 8-ந்தேதி ஆட்கள் தேர்வு
- நெல்லையில் ஊர்காவல் படைக்கு 46 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- இத்தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நெல்லை:
நெல்ைல மாநகர போலீஸ் கமிஷனர் அவிநாஷ் குமார் உத்தரவுப்படி, மாநகர ஊர்காவல் படையில் புதிதாக ஊர்காவல் படையினர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வருகிற 6-ந்தேதி (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை இந்த தேர்வு நடக்கிறது. 39 ஆண்கள், 7 பெண்கள் என மொத்தம் 46 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இத்தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயதுக்கு குறையாமலும் 50 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.மாநகர எல்லைக்குள் குடியிருக்க வேண்டும்.
தேர்வுக்கு வருபவர்கள் கலர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2, கல்வி தகுதிச் சான்று (அசல் மற்றும் ஒரு சான்றொப்பமிட்ட நகல்), ஆதார் அட்டை (அசல் மற்றும் ஒரு சான்றொப்பமிட்ட நகல்), இருப்பிட சான்று (அசல் மற்றும் ஒரு சான்றொப்பமிட்ட நகல்) ஆகியவற்றுடன் ஆயுதப்படை மைதானத்திற்கு நேரில் வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்