search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    நெல்லை மாநகர ஊர்காவல் படைக்கு 8-ந்தேதி ஆட்கள் தேர்வு
    X

    நெல்லை மாநகர ஊர்காவல் படைக்கு 8-ந்தேதி ஆட்கள் தேர்வு

    • நெல்லையில் ஊர்காவல் படைக்கு 46 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
    • இத்தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    நெல்லை:

    நெல்ைல மாநகர போலீஸ் கமிஷனர் அவிநாஷ் குமார் உத்தரவுப்படி, மாநகர ஊர்காவல் படையில் புதிதாக ஊர்காவல் படையினர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வருகிற 6-ந்தேதி (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை இந்த தேர்வு நடக்கிறது. 39 ஆண்கள், 7 பெண்கள் என மொத்தம் 46 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    இத்தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயதுக்கு குறையாமலும் 50 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.மாநகர எல்லைக்குள் குடியிருக்க வேண்டும்.

    தேர்வுக்கு வருபவர்கள் கலர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2, கல்வி தகுதிச் சான்று (அசல் மற்றும் ஒரு சான்றொப்பமிட்ட நகல்), ஆதார் அட்டை (அசல் மற்றும் ஒரு சான்றொப்பமிட்ட நகல்), இருப்பிட சான்று (அசல் மற்றும் ஒரு சான்றொப்பமிட்ட நகல்) ஆகியவற்றுடன் ஆயுதப்படை மைதானத்திற்கு நேரில் வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×