search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய"

    • கோபிசெட்டிபாளையம் இந்திய வேளாண் அறிவியல் நிலையத்தில் 3 வகையான புதிய திட்டங்களை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.
    • விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் இத்திட்டங்களை விரைவாக எடுத்துச்செல்ல பயிற்சி அளிக்கலாம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் இந்திய வேளாண் அறிவியல் நிலையத்தில் புதுமையான ஹெர்போலிவ் முறை மூலமான பயிர் பாதுகாப்பு மற்றும் காட்டு விலங்கு மேலாண்மை, கிராம அளவிலான உணவு பதப்படுத்துதல் சேவை மையம் மற்றும் மூலிகை களை கொண்டு செறிவூ ட்டப்பட்ட மக்காச்சோளம் பசுந்தீவன வங்கி ஆகிய 3 வகையான புதிய திட்டங்களை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.

    பின்னர் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்ததாவது:

    வேளாண் ஆளிள்ளா விமானம் (ட்ரோன் புராஐக்ட்) மூலம் வன விலங்கிடம் இருந்து பயிர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை முறைகளை புதுமையான ஹெர்போலிவ் என்னும் இயற்கை மருந்தினை ஆளிள்ளா விமானம் மூலம் தெளிப்பது மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளை சார்ந்து இருக்கும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் கிராம அளவிலான உணவு பதப்படுத்துதல் சேவை மையம் மற்றும் மூலிகை களை கொண்டு செறிவூ ட்டப்பட்ட மக்காச்சோளம் பசுந்தீவன வங்கி உள்ளிட்ட புதிய திட்டங்கள் புதிய முயற்சியாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    விவசாயிகள் அதிக வருமானம் ஈட்டிடும் வகையில் புதிய தொழில் முனைவோர்களாக மாறி வருகின்றனர். உழவர் உற்பத்தியாளர் குழுவில் விவசாயிகள் இணைந்து சிறந்த முறையில் மதிப்பு கூட்டப்பொருள்கள் விற்பனை செய்வதன் மூலம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்த புதிய 3 திட்டங்களுமே விவசாயிகளை சென்றடைய வேண்டும்.

    ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலமாகவும் இத்திட்டங்களை விரைவாக எடுத்துச்செல்லும் வகையில் பயிற்சி அளிக்கலாம்.

    இங்கு வருகை புரிந்துள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொதுசேவை செய்யும் பழகத்தை இளம் வயதிலேயே ஏற்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் மாணவர்கள் விவசாயம் சார்ந்த தொழிலில் தொழில் முனைவோர்களாக உருவாகிட வேண்டும்.

    இந்த புதிய முயற்சியை செயல்படுத்தவுள்ள விவசாயிகளுக்கும், மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து தாளவாடி வட்டம், கொங்கள்ளி கிராமத்தில் செறிவூட்டப்பட்ட மக்காச்சோளம் பசுந்தீ வனத்தை பயிரிட்டுள்ள விவசாயி மாதேஷ் என்பவரிடம் பசுந்தீவனம் குறித்து தொலைபேசி வீடியோ அழைப்பு மூலமாக கலந்துரையாடினார்.

    புதுமையான ஹெர்போலிவ் முறையில் தெளிக்கப்படும் வளர்ச்சி ஊக்கியின் வாசத்தின் காரணமாக காட்டு யானைகள், காட்டு பன்றிகள், மான்கள், முள்ளம்பன்றிகள், காட்டு எருமைகள். மயில்கள், முயல், எலிகள், பறவைகள், அணில், குரங்குகள் மற்றும் கிளிகள் மூலம் விலங்குகளை அழிக்காமல் விளை பயிர்கள் சேதமடைவது முற்றிலும் தடுக்கப்படுகிறது.

    பயிர்கள் நல்ல வளர்ச்சிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. பூச்சிகள் வராமல் தடுக்கிறது. பூஞ்சான்நோய்களை கட்டுப்படுத்தி நிலத்தின் சத்துக்களை அதிகப்படு த்துகிறது. மூலிகைகளை கொண்டு செறிவூட்டப்பட்ட மக்காச்சோளம் பசுந்தீவனமானது வறட்சிகாலத்தில் கால்நடை விவசாயிகளுக்கு ஏற்றவகையில் இருக்கும்.

    இதனையடுத்து 4 விவசாயிகளுக்கு செறிவூட்ட ப்பட்ட மக்காச்சோளம் பசுந்தீவன தொகுப்பு களையும், சிறப்பாக களப்பணியாற்றிய 15 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், ஊக்கத்தொகையினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் இந்திய வேளாண் நிலைய முதுநிலை ஆராய்ச்சியாளர் டாக்டர்.அழகேசன், திட்ட தலைவர்; சுதர்சன், கோபி ரோட்டரி சங்க ஆளுநர் சண்முகசுந்தரம், தலைவர் திருவேங்கடசாமி, செயலாளர் வெங்கடேஷ், சரவணன் உள்பட விவசாயிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தில் இந்திய கப்பற்படையில் 20 சதவீதம் பெண்கள் சேர்க்கப்படுகிறார்கள்
    • சேலம், நாமக்கல் மாணவிகள் பலர் விண்ணப்பித்துள்ளனர்.

    சேலம்:

    இந்திய நாட்டின் முப்படைகளான ராணுவப்படை, கப்பற்படை, விமானப் படை ஆகிய பாதுகாப்பு படைகளில் இளைஞர்கள், இளம்பெண்களை அதிக அளவில் நியமிக்க முடிவு செய்து மத்திய பா.ஜ.க. அரசு அக்னி பத் திட்டத்தை கடந்த 14-ந்தேதி முதல் அறிமுகப்படுத்தி உள்ளது.

    இந்த புதிய பணி நியமன முறையை 'டூர் ஆப் தி டூட்டி' என்று அழைக்கிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் நியமிக்கப்படும் வீரர்கள் அக்னிவீரர்கள் என அழைக்கப்படுவார்கள். மாதந்தோறும் ரூ.35 ஆயிரத்துக்கு மேல் ஊதியம், பல்வேறு சலுகைகள் வழங்கப்படும்.

    4 ஆண்டுகள் முடிவில் அவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, ரூ.10 லட்சம் (வரிப்பிடித்தம் இல்லாமல்) வழங்கப்படும். அத்துடன் பட்டப்படிப்பு படித்து முடித்தற்கான சான்றிதழும் வழங்கப்படும்.

    20 சதவீதம் பெண்கள்

    இந்த திட்டத்தில் சேர வேண்டி தமிழகத்தில் அதிக அளவில் இளம்பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக இந்திய கப்பற்படையில் பெண் மாலுமிகளும் சேர்க்கப்பட உள்ளனர். இதில் நடப்பாண்டில் 20 சதவீதம் பெண்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

    இத்திட்டத்தில் கடந்த 1-ந்தேதியில் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. பணி மற்றும் இளநிலை பட்டம் வழங்கப்படுவதால் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர்,கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த பிளஸ்-2, பட்டப்படிப்பு பயிலும் மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பிக்கின்றனர்.

    17½ வயது முதல் 23 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கடற்படையில் சேரும் முதல் பிரிவினருக்கு ஐ.என்.எஸ்.சில்கா போர்கப்பலில் ஓடிசாவில் வருகிற நவம்பர் மாதம் 21-ந்தேதி பயிற்சிகள் தொடங்குகின்றன.

    ×