search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agricultural Sciences"

    • முகாமில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
    • ரேவதி, மற்றும் சரோஜா உதவி பேராசிரியைகள் தேவி சாந்தினி, இந்துஜா, ஆகியோர் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளை சிறப்புற வழிநடத்தினர்.

    புதுச்சேரி:

     மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் கீழ் இயங்கிவரும் வேளாண் அறிவியல் கல்லூரியின் வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை மாணவர்களுக்கான நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் கடந்த 10-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக நெட்டப்பாக்கத்தில் உள்ள ஆத்மா வேளாண் விதை உற்பத்தி பண்ணை வளாகத்தில் சிறப்பு ஒரு நாள் இயல்முறை மருத்துவம் (பிஸியோதெரபி) முகாம் நடைபெற்றது.

    இதில் மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியின் இயல்முறை மருத்துவ துறையின் பேராசிரியர் பிரபாகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கினார். முகாமில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    முகாமினை நாட்டு நலப்பணித்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர், ஏ.கே. ராவ் கெலுஸ்கர் ஒருங்கிணைத்தார். ரேவதி, மற்றும் சரோஜா உதவி பேராசிரியைகள் தேவி சாந்தினி, இந்துஜா, ஆகியோர் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளை சிறப்புற வழிநடத்தினர்.

    • கோபிசெட்டிபாளையம் இந்திய வேளாண் அறிவியல் நிலையத்தில் 3 வகையான புதிய திட்டங்களை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.
    • விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் இத்திட்டங்களை விரைவாக எடுத்துச்செல்ல பயிற்சி அளிக்கலாம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் இந்திய வேளாண் அறிவியல் நிலையத்தில் புதுமையான ஹெர்போலிவ் முறை மூலமான பயிர் பாதுகாப்பு மற்றும் காட்டு விலங்கு மேலாண்மை, கிராம அளவிலான உணவு பதப்படுத்துதல் சேவை மையம் மற்றும் மூலிகை களை கொண்டு செறிவூ ட்டப்பட்ட மக்காச்சோளம் பசுந்தீவன வங்கி ஆகிய 3 வகையான புதிய திட்டங்களை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.

    பின்னர் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்ததாவது:

    வேளாண் ஆளிள்ளா விமானம் (ட்ரோன் புராஐக்ட்) மூலம் வன விலங்கிடம் இருந்து பயிர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை முறைகளை புதுமையான ஹெர்போலிவ் என்னும் இயற்கை மருந்தினை ஆளிள்ளா விமானம் மூலம் தெளிப்பது மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளை சார்ந்து இருக்கும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் கிராம அளவிலான உணவு பதப்படுத்துதல் சேவை மையம் மற்றும் மூலிகை களை கொண்டு செறிவூ ட்டப்பட்ட மக்காச்சோளம் பசுந்தீவன வங்கி உள்ளிட்ட புதிய திட்டங்கள் புதிய முயற்சியாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    விவசாயிகள் அதிக வருமானம் ஈட்டிடும் வகையில் புதிய தொழில் முனைவோர்களாக மாறி வருகின்றனர். உழவர் உற்பத்தியாளர் குழுவில் விவசாயிகள் இணைந்து சிறந்த முறையில் மதிப்பு கூட்டப்பொருள்கள் விற்பனை செய்வதன் மூலம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்த புதிய 3 திட்டங்களுமே விவசாயிகளை சென்றடைய வேண்டும்.

    ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலமாகவும் இத்திட்டங்களை விரைவாக எடுத்துச்செல்லும் வகையில் பயிற்சி அளிக்கலாம்.

    இங்கு வருகை புரிந்துள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொதுசேவை செய்யும் பழகத்தை இளம் வயதிலேயே ஏற்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் மாணவர்கள் விவசாயம் சார்ந்த தொழிலில் தொழில் முனைவோர்களாக உருவாகிட வேண்டும்.

    இந்த புதிய முயற்சியை செயல்படுத்தவுள்ள விவசாயிகளுக்கும், மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து தாளவாடி வட்டம், கொங்கள்ளி கிராமத்தில் செறிவூட்டப்பட்ட மக்காச்சோளம் பசுந்தீ வனத்தை பயிரிட்டுள்ள விவசாயி மாதேஷ் என்பவரிடம் பசுந்தீவனம் குறித்து தொலைபேசி வீடியோ அழைப்பு மூலமாக கலந்துரையாடினார்.

    புதுமையான ஹெர்போலிவ் முறையில் தெளிக்கப்படும் வளர்ச்சி ஊக்கியின் வாசத்தின் காரணமாக காட்டு யானைகள், காட்டு பன்றிகள், மான்கள், முள்ளம்பன்றிகள், காட்டு எருமைகள். மயில்கள், முயல், எலிகள், பறவைகள், அணில், குரங்குகள் மற்றும் கிளிகள் மூலம் விலங்குகளை அழிக்காமல் விளை பயிர்கள் சேதமடைவது முற்றிலும் தடுக்கப்படுகிறது.

    பயிர்கள் நல்ல வளர்ச்சிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. பூச்சிகள் வராமல் தடுக்கிறது. பூஞ்சான்நோய்களை கட்டுப்படுத்தி நிலத்தின் சத்துக்களை அதிகப்படு த்துகிறது. மூலிகைகளை கொண்டு செறிவூட்டப்பட்ட மக்காச்சோளம் பசுந்தீவனமானது வறட்சிகாலத்தில் கால்நடை விவசாயிகளுக்கு ஏற்றவகையில் இருக்கும்.

    இதனையடுத்து 4 விவசாயிகளுக்கு செறிவூட்ட ப்பட்ட மக்காச்சோளம் பசுந்தீவன தொகுப்பு களையும், சிறப்பாக களப்பணியாற்றிய 15 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், ஊக்கத்தொகையினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் இந்திய வேளாண் நிலைய முதுநிலை ஆராய்ச்சியாளர் டாக்டர்.அழகேசன், திட்ட தலைவர்; சுதர்சன், கோபி ரோட்டரி சங்க ஆளுநர் சண்முகசுந்தரம், தலைவர் திருவேங்கடசாமி, செயலாளர் வெங்கடேஷ், சரவணன் உள்பட விவசாயிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவை தவளக்குப்பத்தில் உள்ள பாண்டிச்சேரி வேளாண் அறிவியல் கல்லூரியில் உலக விவசாயிகள் தினம், 6-ம் ஆண்டு கல்லூரி தொடக்க விழா மற்றும் மாணவர்கள் பயிற்சி பண்ணை திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
    • விழாவில் முதல்-அமைச்சர் பேசும் போது வரும் காலங்களில் மாணவர்கள் விவசாயத் துறையில் சாதனை படைத்து, ஒரு தொழில் முனைவோராக ஆக வேண்டும் என்று மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

    புதுச்சேரி:

    புதுவை தவளக்குப்பத்தில் உள்ள பாண்டிச்சேரி வேளாண் அறிவியல் கல்லூரியில் உலக விவசாயிகள் தினம், 6-ம் ஆண்டு கல்லூரி தொடக்க விழா மற்றும் மாணவர்கள் பயிற்சி பண்ணை திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம், வேளாண் துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தின் செயலாளர் டாக்டர் நாராயணசாமி வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் தாளாளர் அக்ரி கணேஷ் நோக்கு உரைஆற்றினார்.

    விழாவில் முதல்-அமைச்சர் பேசும் போது வரும் காலங்களில் மாணவர்கள் விவசாயத் துறையில் சாதனை படைத்து, ஒரு தொழில் முனைவோராக ஆக வேண்டும் என்று மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

    நிகழ்ச்சியில் காரைக்கால் பஜன் கோ வேளாண் கல்லூரியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பரிசு வழங்கினார் .

    மேலும் கல்லூரியின் முந்தைய ஆண்டு மாணவர்கள் பல்கலைக்கழகத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பரிசளித்தார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உதவி பேராசிரியர்கள் மணிகண்டன், ஜெயசவிதா மோனிகா மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர். முடிவில் கல்லூரியின் உதவி பேராசிரியர் மணிகண்டன் நன்றி கூறினார்.

    ×