search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Race"

    • கிரிக்கெட், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
    • போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஊட்டியில் சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட திறந்தவெளி மைதானத்தில் கடந்த 6-ந் தேதி முதல் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கும் கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, ஓட்டப்பந்தயம், கிரிக்கெட், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

    மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட திறந்தவெளி மைதானத்தில் காது கேளாதோா் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

    இதில், ஓட்டப்பந்தய போட்டிகளில் மாற்றுத் திறனாளிகள் ஆா்வத்துடன் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தியது பாா்ப்போரை பரவசப்படுத்தியது. இந்தப் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.

    • ஜனவரி 17-ந் தேதி எல்கை பந்தயத்தை உறுதியாக நடத்த வேண்டும்.
    • 24 பேர் கொண்ட விழாக்குழு அமைக்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் தினத்தன்று 8 ஊராட்சிகள் சார்பில் மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் நடைபெறுவது வழக்கம்.

    பாரம்பரியமாக நடைபெற்று வந்த இந்த பந்தயம் கடந்த 3 ஆண்டுகளாக தடைப்பட்டிருந்த நிலையில் வருகிற ஜனவரி-17 காணும் பொங்கல் தினத்தன்று நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் திருக்கடையூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு திருக்கடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் முன்னிலை வகித்தார். டி.சிம்சன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் ஜனவரி-17 ந்தேதி எல்கை பந்தயத்தை உறுதியாக நடத்துவது, பந்தயத்தை நிர்வாகிகள், விழா குழுவினர் மற்றும் திருக்கடையூர், டி.மணல்மேடு, பிள்ளை பெருமாள்நல்லூர், மாணிக்கப்பங்கு, காழியப்பநல்லூர், கிள்ளியூர், தில்லையாடி, ஆகிய 7 ஊராட்சிகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர்கள் இணைந்து சிறப்பாக நடத்துவது, விழாவிற்கு தமிழக அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகளை அழைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முன்னதாக கூட்டத்தில் எல்கை பந்தயம் நடத்துவதற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்த விஜயகுமார் தலைமையில் 24 பேர் கொண்ட விழா குழு அமைக்கப்பட்டது.கூட்டத்தில் அனைத்துக்கட்சி பிரமுகர்கள், குதிரை, மாடு உரிமையாளர்கள், ஜாக்கிகள் கலந்துக்கொண்டனர்.

    • மொராய்ஸ்சிட்டி மாரத்தான் ஓட்ட பந்தயத்தில் 2,500 பங்கேற்றனர்
    • போதையில்லா மாநகரமாக உருவாக்குவதை வலியுறுத்தி

    திருச்சி

    திருச்சியை போதையில்லா மாநகரமாக உருவாக்குவதை வலியுறுத்தி மாரத்தான் போட்டி இன்று நடத்தப்பட்டது. திருச்சி மொராய் ஸ்சிட்டி திருச்சி மாநகர காவல் துறை இணைந்து நடத்திய இந்த மாரத்தான் போட்டி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜோசப் கல்லூரியில் இன்று காலை தொடங்கியது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் என இரு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது.

    திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர் சுரேஷ்குமார் போட்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மொராய்ஸ்சிட்டி உரிமையாளர்லெரொன் மொராய்ஸ், ஜோசப் கல்லூரி முதல்வர் ஆரோக்கியசாமி சேவியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போட்டியில் 2,500 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ஜோசப் கல்லூரியில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம் மேலபுலிவார்டு ரோடு, மரக்கடை, மதுரை ரோடு, பாலக்கரை, மேலப்புதூர், தலைமை தபால் நிலையம், கல்லுக்குழி ரயில்வே மேம்பாலம், டிவிஎஸ் டோல்கேட், சுப்பிரமணியபுரம், விமான நிலையம் வழியாக 10 கிலோமீட்டர் தூரத்தை கடந்து மொராய்ஸ் சிட்டியை சென்றடைந்தது.மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.15,000 , 2ம் பரிசாக 10 ஆயிரம் , 3ம் பரிசாக 5 ஆயிரம் வழங்கப்பட்டது.

    • 68 மாணவர்கள் வருவாய் மாவட்ட போட்டியில் கலந்து கொண்டனர்.
    • சீர்காழி ரெயில் நிலையத்திலிருந்து வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

    சீர்காழி:

    தரங்கம்பாடி தாலுகா, பொறையார் காட்டுசேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு திடலில் நடைபெற்று முடிந்த மயிலாடுதுறை வருவாய் மாவட்டத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டனர்.

    இப்போட்டிகளில் 100 மீ ஓட்டப்போட்டி, 200 மீ ஓட்டப்போட்டி, 400 மீ ஓட்டப்போட்டி, 100 மீ தட ஓட்டம், 400 மீ தடை ஓட்டம், நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல் குண்டு எரிதல், வட்டு எறிதல் , ஈட்டி எறிதல், கோலூன்றி தாண்டுதல், 100 மீ அஞ்சல் ஓட்ட போட்டி, 400 மீ ஓட்ட போட்டி, ஆகிய அனைத்துப் போட்டிகளிலும் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 14 வயது உட்பட்ட பிரிவு, 17 வயது உட்பட்ட பிரிவு, 19 வயது உட்பட்ட பிரிவு மாணவர்கள் இப்பள்ளியிலிருந்து குறுவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 68 மாணவர்கள் வருவாய் மாவட்ட போட்டியில் கலந்து கொண்டனர்.

    இவ்வீரர்களிலிருந்து 24 மாணவ மாணவிகள் திருவண்ணாமலையில் நடைபெறக்கூடிய தமிழக அரசின் பள்ளிக்க ல்வித்துறை சார்பில் 63வது குடியரசு தின மாநில தடகள போட்டிகள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள செயற்கை இழையிலான நவீன விளையாட்டு மைதானத்தில் நடைபெறக்கூடிய போட்டியில் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    குறிப்பாக இப்பள்ளியைச் சார்ந்த கிருத்திகா, பவித்ரா, ஜெனிஷா, நிஷாந்தி, கிருத்திகா, அஜய் குமார், சக்திவேல், பென்னி ஆகிய மாணவர்கள் மூன்று போட்டிக்கு மேலாக வெற்றி பெற்று, பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர்.

    இந்த மாணவர்களை பயிற்றுவித்த உடற்கல்வி இயக்குனர் முரளிதரன், மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் முரளி, மார்கண்டன், சக்திவேல், ஹரிஹரன், ராகேஷ் ஆகியோர்களை பள்ளியின் முன்னாள் செயலர் பாலசுப்பிரமணிய முதலியார், பள்ளியின் செயலர் இராமகிருஷ்ண முதலியார், பள்ளியின் குழு தலைவர் சொக்கலிங்கம், பள்ளி தலைமையா சிரியர் அறிவுடை நம்பி சீர்காழி புகைவண்டி நிலையத்திலிருந்து வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.

    மாணவர்களை உதவி தலைமை ஆசிரியர்கள் துளசிரங்கன், வரதராஜன் மற்றும் பள்ளியைச் சார்ந்த இருபால் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்களுக்கு மட்டும் ஆட்கள் தேர்வு நடைபெறும்.
    • தொடர்ந்து 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் நடத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 35 பணியிடங்களுக்கு (34 ஆண் மற்றும் 1 பெண்) தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட வர்களுக்கு மட்டும் ஆட்கள் தேர்வு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன.

    அதன்படி இன்று தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா அறிவுறுத்தலின்பேரில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெ ற்றது.

    இதற்கு ஏ.டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, ஊர்க்காவல் படை துணை மண்டலத் தளபதி டாக்டர் மங்களேஸ்வரி, ஊர்க்காவல் படை ஏரியா கமாண்டர் சுரேஷ், ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கி ஆட்கள் தேர்வு நடத்தினர்.

    இத்தேர்வில் தஞ்சாவூர், கும்பகோணம். பட்டுக்கோட்டை பகுதிகளை சேர்ந்த 324 ஆண்கள், 1 பெண் என மொத்தம் 325 பேர் கலந்து கொண்டனர்.

    அவர்களின் சான்றி தழ்கள் சரிபார்க்கப்பட்டன.

    இதையடுத்து உயரம், மா ர்பளவு சரிபார்க்கப்பட்டது.

    தொடர்ந்து 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் நடத்தப்பட்டது.

    இந்த தேர்வுகள் அனை த்தும் முடிந்த பின்னர் இதிலிருந்து 35 பேர் ஊர் காவல் படைக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    தேர்வு செய்யப்படும் ஊர் காவல் படையினர் போலீசாருடன் இணைந்து பணியாற்றுவர்.

    • சிங்கம்புணரியில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 51 ஜோடி மாடுகள் கலந்துகொண்டன.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இருந்து திருப்பத்தூர் சாலையில் இளங்கோ தேவர் நினைவு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இதில் சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 51 ஜோடி மாடுகள் கலந்துகொண்டன.

    பெரிய மாடு 19 ஜோடிகள் ஒரு பிரிவாகவும் சிறிய மாடு 32 ஜோடிகள் 2 பிரிவுகளாகவும் மொத்தம் 3 பந்தயங்களாக நடத்தப்பட்டன.

    பெரிய மாடு பந்தய எல்லையாக சிங்கம்புணரியில் இருந்து சிலநீர்பட்டி பாலம் வரை 8 மைல் தூரமும், சிறிய மாடு பந்தய எல்லையாக சிங்கம்புணரியில் இருந்து எஸ்.வி.மங்கலம் வரை 6 மைல் தூரமும் நிர்ணம் செய்யப்பட்டு இருந்தது.

    எல்லையை நோக்கி பெரிய மற்றும சிறிய மாடுகள் சீறிப்பாய்ந்து சென்றன. பந்தயத்தை சிங்கம்புணரி, காளாப்பூர், எஸ்.வி.மங்கலம் பொதுமக்கள் அதிகாலையிலேயே சாலையின் இருபுறமும் நின்று கண்டு ரசித்தனர்.

    பந்தயத்தில் வெற்றிபெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு இளங்கோ தேவர் நினைவுகுழு மற்றும் வண்டிபந்தய இளைஞர்கள் குழு சார்பில் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

    பெரிய மாடுகளுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ. 12ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.9 ஆயிரம், 4-ம் பரிசாக ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டது.

    சின்ன மாடு பந்தயத்தில் 2 பிரிவுகளாக பந்தயம் நடந்த காரணத்தால் முதல் பரிசு ரூ. 12 ஆயிரத்தை 2 பேருக்கும், 2-ம் பரிசு ரூ.9ஆயிரம் 2 பேருக்கும், 3-ம் பரிசு ரூ.6 ஆயிரம் 2 பேருக்கும், 4-ம் பரிசு ரூ.4 ஆயிரம் 2 பேருக்கும் என மொத்தம் 12 பேருக்கு வழங்கப்பட்டது.

    • மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடு களை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். கீழச்சேவல் பட்டி போலீசார் பாது காப்பு ஏற்பாடுகளை செய்தி ருந்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்ட திருப்பத்தூர் தாலுகா அருகே உள்ள விராமதி ஊராட்சியில் கோவில் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பந்தையை மாடுகளுடன் சாரதிகளும் பங்கேற்றனர். இதில் பெரிய மாடு, நடுமாடு, சிறிய மாடு, பந்தயம் என 3 பந்தயமாக விராமதியிலிருந்து நெடுமறம் ஊர் எல்லை வரை சென்று திரும்ப வேண்டும் என விழா குழு கமிட்டியிணரால் நிர்ணயம் செய்யப்பட்டது.

    3 கட்டங்களாக நடத்த ப்பட்ட எல்கை பந்தயத்தில் பெரிய மாடுகள் பங்கேற்ற போட்டியில் முதல் பரிசினை நல்லாங்குடி அமராவதி புதூர் முத்தையா சேர்வை, வேலு கிருஷ்ணன் அம்பலம் ஆகியோர் பெற்றனர்.2-ம் பரிசை கானாடுகாத்தான் ஆர்.எஸ். கோழி கடையும், 3-ம் பரிசை பாஸ்கரன் மகேஸ்வரியும் ,4-ம் பரிசை மாவூர் ஏஆர்.ராமச்சந்திரன் பெற்றனர்.

    நடுமாடு முதல் பரிசு பரளி யாழினி பெரிய கருப்பன், 2-ம் பரிசு நல்லாங்குடி அமராவதி புதூர் வேலுகிருஷ்ணன் அம்பலம், முத்தையா சேர்வை, 3-ம் பரிசு நெய் வாசல் சாத்தி க்கோட்டை பெரியசாமி கருப்பையா சேர்வை, 4-ம் பரிசு காரைக்குடி மகிழ்மித்திரன் ஆகியோர் பெற்றனர். சின்ன மாடு பந்தயத்தில் முதல் பரிசு நல்லாம்பட்டி ஆர்விபி நித்திஷ் மங்கை, 2-ம் பரிசு ஓனாங்குடி எல்லா புகழும் இறைவனுக்கே அப்துல்லா, ஆர்.ஆர். சின்னம்மாள் வளையவயல், 3-ம் பரிசு கம்பம் வக்கீல் போது ராஜா, கூடலூர் அச்சரம் பட்டி மாதவ கோனார், நான்காம் பரிசு பில்லமங்கலம் வாசுதேவன் ஆகியோர் பெற்றனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். கீழச்சேவல் பட்டி போலீசார் பாது காப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • மாடு, குதிரை வண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது
    • சந்தனக்காப்பு உற்சவத்தை முன்னிட்டு

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா எட்டியத்தளி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீரமுனி ஆண்டவர் ஆலயத்தில் ஆண்டுதோறும் சந்தனக்காப்பு உற்சவத்தை முன்னிட்டு மாட்டு வண்டி குதிரை வண்டி எல்கை பந்தையம் நடைபெறுவது வழக்கம்.

    நேற்று நடைபெற்ற மாட்டுவண்டி, குதிரைவண்டி எல்கை பந்தையத்தில் சென்னை, கோவை, ஈரோடு, திருச்சி, தஞ்சை, சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 43 ஜோடி மாடுகள் மற்றும் 36 குதிரைகள் கலந்து கொண்டன.

    மூன்று பிரிவுகளாக நடைபெற்ற எல்கை பந்தையத்தில் நடுமாடு பிரிவில் 16 ஜோடிகளும், பூஞ்சிட்டு மாடு பிரிவில் 27 ஜோடி மாடுகளும், நடு குதிரை பிரிவில் 36 குதிரைகளும் பந்தையத்தில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. பந்தையத்தில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பிடித்த மாடு மற்றும் குதிரைகளுக்கு ரூ.2 லட்சம் ரொக்கப்பணமும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.

    மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு, சிறப்பு பரிசு மற்றும் கேடயங்கள் கொடுத்து கெளரவிக்கப்பட்டது. பந்தையத்தைக்கான அப்பகுதியைச் சுற்றியுள்ள ஏராளமான ரசிகர்கள், பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டிருந்து கண்டு ரசித்தனர்.

    • தேவகோட்டை அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • 2 பிரிவுகளாக தேவகோட்டை- புதுவயல் சாலையில் நடைபெற்றது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே தாழையூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி முளைப்பாரி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்.

    அதேபோல் இந்த ஆண்டும் நடந்த ஆடி திருவிழாவில் அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று தினமும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு முளைக்கொட்டுதல் நடந்தது. நேற்று காலை கூத்தாடி முத்துபெரியநாயகி கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து இரவு முளைப்பாரி ஊர்வலம் அம்மன் கோவிலில் வந்தடைந்தது. இரவு கலைநிகழ்ச்சி நடந்தது. ஆடி திருவிழாவையொட்டி இன்று காலை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. 2 பிரிவுகளாக தேவகோட்டை- புதுவயல் சாலையில் நடைபெற்றது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 25 மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில் முதலாவதாக தேவகோட்டை பிரசாத் மொபைல், 2-வதாக நல்லாங்குடி முத்தையா சேர்வை, 3-வதாக கல்லூரணி பாலாஜி, 4-வதாக சாத்தம்பத்தி சரவணன் மாடுகள் வெற்றி பெற்றன.சின்ன மாட்டுவண்டி பந்தயத்தில் முதலாவது காரைக்குடி கருப்பண்ண சேர்வை, 2-வதாக சாத்திக்கோட்டை கருப்பையா சேர்வை, 3-வதாக கண்டதேவி மருதுபிரதர்ஸ், 4-வதாக மயிலாடுவயல் செல்வராஜ் எஸ்.பி.பட்டணம் உமர் மாடுகள் வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற மாடுகளுக்கு மாலை, வேட்டி, துண்டுகள், ரொக்க பரிசுகள், வெற்றி கோப்பைகளும் வழங்கப்பட்டன. இந்த பந்தயத்தை சாலையின் இருபுறமும் திரளான பொதுமக்கள் கூடி நின்று கண்டுகளித்தனர்.

    • அம்பையில் மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது
    • பந்தயம் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்தது

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பையில் மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு இடங்களில் இருந்து மாட்டுவண்டி வீரர்கள் கலந்துகொண்டனர்.

    அம்பையில் உள்ள ஒரு பள்ளியில் தொடங்கி, காக்கநல்லூர் விலக்கு வரை மொத்தம் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்த இந்த பந்தயத்தில் நடுக்கல்லூர் வேதக்கோவில் தெருவை சேர்ந்த மகாராஜன் (வயது 42) என்ற வீரரும் கலந்து கொண்டு வரிசையில் நின்றார்.

    பந்தயம் தொடங்கிய சிறிது தூரத்திலேயே மகாராஜனின் மாட்டு வண்டி நிலைதடுமாறியது. இதில் அவர் கீழே விழுந்தார். கண் இமைக்கும் நேரத்தில் பின்னால் தறிக்கட்டு ஓடிய காளைகள் அவர் மீது ஏறி ஓடியது. உடனே அவரை மீட்டு அம்பை மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ×