search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டப் பந்தயம்"

    • மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.
    • நீளம் தாண்டுதல் போட்டியில் மூன்றாம் இடமும் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு முதல் அமைச்சர் கோப்பைக்காண விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது பிரிவினர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.

    அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான போட்டியில் பகண்டை கூட்டு ரோடு போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் சூர்யா கலந்து கொண்டார். இவர் 1500 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் முதலிடமும், 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இரண்டாம் இடமும், குண்டு எறிதல் போட்டியில் மூன்றாம் இடமும், நீளம் தாண்டுதல் போட்டியில் மூன்றாம் இடமும் பெற்று வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற பகண்டை கூட்டு ரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யாவிற்கு போலீசார் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • கிரிக்கெட், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
    • போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஊட்டியில் சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட திறந்தவெளி மைதானத்தில் கடந்த 6-ந் தேதி முதல் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கும் கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, ஓட்டப்பந்தயம், கிரிக்கெட், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

    மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட திறந்தவெளி மைதானத்தில் காது கேளாதோா் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

    இதில், ஓட்டப்பந்தய போட்டிகளில் மாற்றுத் திறனாளிகள் ஆா்வத்துடன் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தியது பாா்ப்போரை பரவசப்படுத்தியது. இந்தப் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.

    ×