என் மலர்
நீங்கள் தேடியது "ஓட்டப் பந்தயம்"
- 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையை உசைன் போல்ட் படைத்தார்.
- உசைன் போல்ட் மின்னல் வீரன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.
ஜமைக்கா நாட்டை சேர்ந்த முன்னாள் பிரபல ஓட்டப் பந்தய வீரர் உசைன் போல்ட். 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையாளரான அவர் ஒலிம்பிக்கில் 8 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் 11 உலக தடகள சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றுள்ளார்.
உசைன் போல்ட், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் (9.58 வினாடிகளில்) மட்டுமில்லாமல் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் (19.19 வினாடிகள்) மற்றும் 4x100 மீட்டர் ரிலே ஓட்டப்பந்தயம் (36.84) உலக சாதனைகளைப் படைத்துள்ளார்.
உலகின் மிக வேகமாக ஓட்டப்பந்தய வீரர் என்ற பெருமையை பெற்ற உசைன் போல்ட் மின்னல் வீரன் என்று அழைக்கப்பட்டார்.
ஓட்டப்பந்தயத்தில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட உசைன் போல்டிற்கு தற்போது படிக்கட்டுகளில் ஏறுவதற்கு கூட மூச்சு வாங்குகிறது என்று வெளியான தகவல் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
39 வயதான உசைன் போல்ட்செய்தித்தாள் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்பேட்டியில், "நான் ஒரு காலத்தில் 100 மீட்டர் தூரத்தை 9.58 வினாடிகளில் ஓடினேன். ஆனால் இப்போது படிக்கட்டில் ஏறினால் கூட எனக்கு மூச்சு வாங்குகிறது. நான் உண்மையில் மீண்டும் ஓடத் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறன். நான் மீண்டும் முழுமையாக உடற்பயிற்சி செய்யத் தொடங்கும்போது, மூச்சு வாங்கும் பிரச்சனை சரி ஆகும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.
- கிரிக்கெட், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
- போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட திறந்தவெளி மைதானத்தில் கடந்த 6-ந் தேதி முதல் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கும் கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, ஓட்டப்பந்தயம், கிரிக்கெட், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட திறந்தவெளி மைதானத்தில் காது கேளாதோா் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
இதில், ஓட்டப்பந்தய போட்டிகளில் மாற்றுத் திறனாளிகள் ஆா்வத்துடன் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தியது பாா்ப்போரை பரவசப்படுத்தியது. இந்தப் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.
- மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.
- நீளம் தாண்டுதல் போட்டியில் மூன்றாம் இடமும் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு முதல் அமைச்சர் கோப்பைக்காண விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது பிரிவினர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.
அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான போட்டியில் பகண்டை கூட்டு ரோடு போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் சூர்யா கலந்து கொண்டார். இவர் 1500 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் முதலிடமும், 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இரண்டாம் இடமும், குண்டு எறிதல் போட்டியில் மூன்றாம் இடமும், நீளம் தாண்டுதல் போட்டியில் மூன்றாம் இடமும் பெற்று வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற பகண்டை கூட்டு ரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யாவிற்கு போலீசார் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.






