search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Qualcomm"

    குவால்காம் நிறுவனம் வர்த்தக ரீதியிலான உலகின் முதல் 5ஜி மொபைல் பிராசஸரான, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 அறிமுகம் செய்தது. #Qualcomm



    ஸ்னாப்டிராகன் தொழில்நுட்ப மாநாட்டில் குவால்காம் நிறுவனம் உலகின் வர்த்தர ரீதியிலான முதல் 5ஜி மொபைல் பிராசஸரை அறிமுகம் செய்துள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 என அழைக்கப்படும் இந்த பிராசஸர் 2019ம் ஆண்டின் துவக்கத்தில் வெளியாகும் மொபைல் சாதனங்களில் 5ஜி வசதியை வழங்கும்.

    ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் உடன் ஸ்னாப்டிராகன் X50 5ஜி மோடெம் மற்றும் குவால்காம் QTM052 எம்.எம். வேவ் ஆன்டெனா மாட்யூல்கள் மற்றும் இதர சிக்னல் உபகரணங்களுடன் இணைக்கப்படுகிறது. இதனால் மொபைல் போன் வடிவமைப்பாளர்கள் புதிய சாதனங்களை வடிவமைக்க அதிக வாய்ப்புகளை வழங்குவதோடு, 5ஜி சேவையை 6 ஜிகாஹெர்ட்ஸ்-க்கும் குறைவான எம்.எம். வேவ் பேன்ட்களை வழங்குகிறது.



    அமெரிக்கா, ஐரோப்பியா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் 5ஜி சேவை 2019 ஆண்டின் துவக்கத்தில் வழங்கப்பட இருக்கிறது. 2020 மற்றும் 2021 ஆண்டு வாக்கில் இந்தியா மற்றும் லத்தின் அமெரிக்காவில் 5ஜி சேவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எம்.எம். வேவ் வசதி மற்றும் 6 ஜிகாஹெர்ட்ஸ்-க்கும் குறைந்த வர்த்தக ரீதியில் உலகின் முதல் 5ஜி மொபைல் பிராசஸர் ஸ்னாப்டிராகன் 855 என குவால்காம் தெரிவித்துள்ளது. 



    இதுதவிர புது ஸ்னாப்டிராகன் 855 பிராசஸரில் 4ம் தலைமுறை ஆன்-டிவைஸ் ஏ.ஐ. என்ஜின், முந்தைய தலைமுறை மொபைல் பிராசஸரை விட மும்மடங்கு சிறப்பான ஏ.ஐ. செயல்திறன், ட்ரூ 4K HDR வீடியோ பதிவு செய்யும் வசதி, 3டி சோனிக் செனசார், உலகின் முதல் வர்த்தக ரீதியிலான அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் வசதி கொண்டிருக்கிறது.

    குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் 7 நானோமீட்டர் ஃபேப்ரிகேஷன் மூலம் உருவாகி இருக்கிறது. இந்த பிராசஸர் உலகின் முதல் கம்ப்யூட்டர் விஷன் ஐ.எஸ்.பி. வழங்கப்பட்டு இருப்பதால், புகைப்படம் மற்றும் வீடியோக்களை அதிக தரத்தில் படமாக்கும் வசதி கொண்டிருக்கிறது. #Qualcomm #Snapdragon855
    குவால்காம் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் பிராசஸர் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Snapdragon



    குவால்காம் நிறுவனத்தின் அதிநவீன ஃபிளாக்ஷிப் பிராசஸர் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஆண்டு தொழில்நுட்ப மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குவால்காம் நிறுவனம் தனது ஆண்டு தொழில்நுட்ப மாநாட்டிற்கான அழைப்பிதழ்களை அனுப்பி வருவதாக கூறப்படுகிறது.

    இவ்விழா டிசம்பர் 4ம் தேதி ஹவாயில் நடைபெற இருக்கிறது. இதே விழாவில் குவால்காம் நிறுவனம் தனது ஸ்னாப்டிராகன் 8150 பிராசஸரை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பிராசஸர் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஸ்னாப்டிராகன் 845 பிராசஸரின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் ஆகும்.

    ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் கடந்த ஆணஅடு நடைபெற்ற ஸ்னாப்டிராகன் தொழில்நுட்ப மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்னாப்டிராகன் 8150 சிப் உடன் அட்ரினோ 640 வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் புதிய பிராசஸர் 'ஸ்னாப்டிராகன் 8XX' என்ற வகையில் பெயரிடப்படும் என கூறப்பட்டது.



    புதிய பிராசஸர் ஸ்னாப்டிராகன் 855 என்றும் அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய பிராசஸர் கொண்டு வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 மாடல் இருக்கும் என்றும், இது சில காலத்திற்கு சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு மட்டும் பிரத்யேகமாக வழங்க்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    குவால்காம் உருவாக்கி இருக்கும் புதிய பிராசஸர் முந்தைய ஸ்னாப்டிராகன் 845 விட 30 சதவிகிதம் வேகமாக இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குவால்காம் மாநாட்டின் கரு முதல் 5ஜி அனுபவத்திற்கு தயாராகுகங்கள் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் புதிய பிராசஸரில் 5ஜி நெட்வொர்க் சப்போர்ட் இருக்கும் என்பது உறுதியாகி இருக்கிறது.

    குவால்காம் தொழில்நுட்ப மாநாடு டிசம்பர் 4ம் தேதி துவங்கி 6ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 
    ஆப்பிள் நிறுவனம் தனக்கென சொந்தமாக பிராசஸர்களை உருவாக்கும் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறது. #Apple



    ஆப்பிள் நிறுவனம் தனக்கென சொந்தமாக பிராசஸர் மற்றும் வயர்லெஸ் உபகரணங்களை உற்பத்தி செய்யும் நோக்கில் தீவிரமாக பொறியாளர்களை பணியமர்த்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி எதிர்கால ஐபோன் மாடல்களுக்கான சிப்செட்களை உற்பத்தி செய்ய குவால்காம் நிறுவனத்திற்கு வாய்ப்பு குறையலாம்.

    சான் டெய்கோவில் பணியாற்ற இந்த மாதத்தில் மட்டும் ஆப்பிள் நிறுவனம் பத்து வேலைவாய்ப்பு தகவல்களை பதிவிட்டுள்ளது. அதன்படி பிராசஸர் வடிவமைப்பிற்கென தெற்கு கலிபோர்னியாவில் ஆப்பிள் நிறுவனம் வெளிப்படையாக ஆட்களை தேர்வு செய்திருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

    ஆப்பிள் விளம்பரங்களின் படி பொறியாளர்கள் அந்நிறுவனத்தின் சிப் உபகரணங்கள், ஆப்பிள் நியூரல் என்ஜின் செயற்கை நுண்ணறிவு பிராசஸர் மற்றும் வயர்லெஸ் சிப்செட்களில் பணியாற்றும் திறன் கொண்டிருக்க வேண்டி இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.



    வயர்லெஸ் உபகரணங்களில் உருவாக்க வன்பொருள் மற்றும் மென்பொருள் பொறியாளர்களை பணியமர்த்த முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. பெரும்பாலான பகுதிகளில் ஆப்பிள் சிப் வடிவமைப்பாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஐபோன்களில் வழங்க வெவ்வேறு உபகரணங்களை அதிகளவு உற்பத்தி செய்ய இருக்கிறது. 

    இதன் மூலம் போட்டி நிறுவனங்களின் சாதனங்களை விட ஆப்பிள் ஃபிளாக்ஷிப் சாதனங்களை வித்தியாசப்படுத்த முடியும் என்பதோடு ஆப்பிள் செலவினங்களை குறைக்க முடியும் என கூறப்படுகிறது. இதுவரை ஆப்பிள் நிறுவனம் தனது ஏர்பாட்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச் மாடல்களில் வயர்லெஸ் சிப்களை வழங்கி இருக்கிறது. எனினும் ஐபோன்களில் சொந்தமாக வயர்லெஸ் சிஸ்டம்களை உற்பத்தி செய்ததில்லை.

    ஆப்பிள் பணியமர்த்த இருக்கும் பொறியாளர்கள் எல்.டி.இ. மற்றும் ப்ளூடூத் போன்ற ப்ரோடோகால்களில் அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. ஐபோன் மாடல்களில் வழங்கப்படும் வயர்லெஸ் உபகரணங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகிறது. இதனால் ஆப்பிள் வயர்லெஸ் உபகரணங்களுக்காக குவால்காம் நிறுவனத்தை அதிகம் நம்பியிருந்தது, பின் இன்டெல் நிறுவனத்தை நாடி இருக்கிறது.
    குவால்காம் நிறுவனம் 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பங்களுக்கான வசதி கொண்ட ஸ்மார்ட்போன் கான்செப்ட் மாடலை இந்திய மொபைல் காங்கிரஸ் 2018 விழாவில் அறிமுகம் செய்தது. #qualcomm



    மொபைல் போன் சிப்செட் உருவாக்கும் குவால்காம் நிறுவனம் 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பங்களை சப்போர்ட் செய்யும் ஸ்மார்ட்போன் ப்ரோடோடைப் மாடலை இந்தியா மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது.

    வட அமெரிக்கா மற்றும் கொரியாவில் 2019ம் ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் 5ஜி தொழில்நுட்பம் வணிக ரீதியில் வழங்கப்பட இருக்கிறது. 5ஜி தொழில்நுட்பம் அதிவேக இணைய வேகத்தை சீராக வழங்குகிறது. 

    “4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பத்தை இயக்கும் வசதி கொண்ட கான்செப்ட் ஸ்மார்ட்போன் வடிவம் இது. இந்த ஸ்மார்ட்போன் மில்லிமீட்டர் வேவ் பேன்ட்கள் மற்றும் சப் 6 ஜிகாஹெர்ட்ஸ் பேன்ட்களை சப்போர்ட் செய்யும். 

    இதுபோன்ற வசதி கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்கள் 2019ம் ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகமாக இருக்கின்றன,” என குவால்காம் டெக்னாலஜிஸ் நிறுவன மூத்த துணை தலைவர் துர்கா மல்லாடி தெரிவித்தார். 



    “இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்கள் அதிக பிரபலமானவையாக இருக்கின்றன. இங்கு சாதனம் மற்றும் உள்கட்டமைப்புகள் என இரண்டும் தயார் நிலையில் இருக்கும். அந்த வகையில் இந்திய நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் கிடைக்கும் போது இந்தியாவில் 5ஜி சேவை சீராக வெளியிடப்படும்,” என அவர் மேலும் தெரிவித்தார்.

    பொதுவாக புதிய தொழில்நுட்பங்களை நிறுவனங்கள் முதலில் பிரீமியம் சாதனங்களில் வழங்கி, அதன்பின் விலை குறைந்த சாதனங்களுக்கு பயன்பாட்டிற்கு வழங்கப்படும். இதன் பின் புதிய தொழில்நுட்பம் வெகுஜன மக்களிடையே அதிக வரவேற்பை பெறும்.

    “தற்சமயம் இந்த தொழில்நுட்பம் ஆரம்ப காலக்கட்டத்தில் தான் உள்ளது. இதற்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதும், நிறுவனங்கள் இதனை வெளியிட துவங்குவர், இதற்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளது,” என அவர் தெரிவித்தார்.
    சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பெயர் மற்றும் புதிய குவால்காம் சிப்செட் விவரங்கள் தெரியவந்துள்ளது. #smartphone #WINNER



    சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனிற்கான ஆன்ட்ராய்டு பை ஃபர்ம்வேர் லீக் ஆகியுள்ளது. இதில் வெளிவர இருக்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8150 சிப்செட் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் குறியீட்டு பெயர் தெரியவந்துள்ளது.

    அதன்படி சாம்சங் நிறுவனத்தின் முதல் மடிக்ககூடிய ஸ்மார்ட்போன் வின்னர் என அழைக்கப்படுகிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் குறித்து சாம்சங் ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில், இதன் வெளியீட்டு தேதி மட்டுமே ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த ஸ்மார்ட்போனின் சில சிறப்பம்சங்கள் வெளியாகி இருக்கிறது. 

    அந்த வகையில் மடிக்கக்கூடிய சாம்சங் ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா செட்டப், OLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் சாம்சங்கின் வின்னர் ஸ்மார்ட்போனின் ப்ரோடோடைப் இந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் ரகசிய அரங்கில் சிலருக்கு மட்டும் காண்பிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.



    ப்ரோடோடைப் சானத்தில் 3.5 இன்ச் அளவுகளில் மூன்று OLED பேனல்களை கொண்டிருக்கிறது. இதில் இரண்டு பேனல்களை இணைத்தால் ஸ்மார்ட்போன் திறந்த நிலையில் 7.0 இன்ச் ஸ்கிரீன் உருவாகிறது, இதன் மூன்றாவது பேனல் வெளிப்புறம் இருக்கிறது. ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் பார்க்க கேலக்ஸி நோட் 8 போன்று காட்சியளிக்கிறது. முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டது.

    ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சார்ந்து அதிகப்படியான விவரங்கள் வெளியாகாத நிலையில், இதன் விலை 2000 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. ஸ்மார்ட்போனின் பெயர் வின்னர் எல்.டி.இ. என்றிருப்பதால், இதில் எக்சைனோஸ் சிப்செட் கொண்டிருக்கிறது. இதன் குவால்காம் ஸ்னாப்டிராகன் வேரியன்ட் வின்னர் கியூ.எல்.டி.இ. என பெயரிடப்பட்டு இருக்கும். அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போனில் எக்சோனோஸ் 9810 அல்லது எக்சைனோஸ் 9820 பிராசஸர் கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதே தரவுகளில் வெளியிடப்படாத குவால்காம் ஸ்னாப்டிராகன் 8150 சிப்செட் சார்ந்த விவரங்களும் இடம்பெற்று இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 855 பிராசஸரின் விளம்பர பெயர் தான் ஸ்னாப்டிராகன் 8150 என ஏற்கனவே தகவல்கள் வெளியானது. மேலும் ஸ்னாப்டிராகன் 8150 சிப்செட் பிரத்யேக NPU கொண்ட முதல் குவால்காம் பிராசஸராக இருக்கும் என கூறப்பட்டது.
    ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் ஸ்மார்ட்வாட்ச் சாதனங்களுக்கென பிரத்யேக ஸ்னாப்டிராகன் பிராசஸர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #SnapdragonWear3100



    குவால்காம் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்னாப்டிராகன் வியர் 3100 பிராசஸர் ஸ்மார்ட்வாட்ச்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

    அல்ட்ரா-லோ பவர் சிஸ்டம் சார்ந்த வடிவமைப்பு அதிக நேர பேட்டரி பேக்கப் வழங்குவதோடு, தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் அதிக இன்டராக்ஷன்களை வழங்குகிறது. ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்வாட்ச் சாதனங்களில் சிப் சீராக வேலை செய்ய, கூகுள் நிறுவனத்தின் இணைந்து பணிகளை மேற்கொண்டு வருவதாக குவால்காம் தெரிவித்துள்ளது.

    மேலும் ஃபாஸில் குழுமம், லூயிஸ் வியூட்டன் மற்றும் மான்ட்பிளாக் உள்ளிட்ட நிறுவனங்களின் ஸ்மார்ட்வாட்ச்களில் தனது சிப்கள் வழங்கப்பட இருப்பதை குவால்காம் உறுதி செய்துள்ளது.



    குவால்காம் புதிதாக அறிமுகம் செய்திருக்கும் ஸ்னாப்டிராகன் வியர் 3100 பிராசஸரில் குவாட்கோர் ஏ7 பிராசஸர்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட டி.எஸ்.பி., அல்ட்ரா-லோ பவர் கோ-பிராசஸர் QCC1110 உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்த கோ-பிராசஸர் மிகவும் சிறியதாகவும், குறைந்தளவு மின்சாரம் பயன்படுத்த ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ளது.

    இத்துடன் பல்வேறு அதிநவீன அம்சங்கள் நிறைந்திருக்கும் வியர் 3100 பிராசஸரில் புதிய டி.எஸ்.பி. ஃபிரேம்வொர்க் சப்போர்ட் வழங்கப்பட்டு இருப்பதால் அடுத்த தலைமுறை சென்சார் பிராசஸிங் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும். புதிய வியரபிள் பவர் மேனேஜ்மென்ட் சப்-சிஸ்டம் வழங்கபப்ட்டுள்ளதால் குறைந்த மின்சாரம் மற்றும் அதிக இன்டகிரேஷன் உள்ளிட்டவற்றை சப்போர்ட் செய்யும்.



    ஸ்னாப்டிராகன் வியர் 3100 (MSM8909w / APQ8009w) சிறப்பம்சங்கள்:

    - அதிகபட்சம் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ARM கார்டெக்ஸ் ஏ7 பிராசஸர்
    - QCC1110 கோ-பிராசஸர் மேம்படுத்தப்பட்ட ஆம்பியன்ட் மற்றும் பிரத்யேக ஸ்போர்ட் மற்றும் வழக்கமான வாட்ச் மோட்களை சப்போர்ட் செய்கிறது. பிரசாஸருடன் இணைந்தும் தனியாகவும் இயங்கும்.
    - அட்ரினோ 304 GPU: OpenGL ES 3.0, அணியக்கூடிய சாதனங்களில் ஆப்டிமைஸ் செய்யப்பட்ட பவர்
    - 400 MHz LPDDR3, eMMC 4.5, இது 4×4 மற்றும் 8×8 போன்ற அமைப்புகளில் சப்போர்ட் செய்யும்
    - அதிகபட்சம் 640x480 டிஸ்ப்ளேவினை 60fps, கொண்டுள்ளது. அணியக்கூடிய சாதனங்களுக்கு என ஆப்டிமைஸ் செய்யப்பட்டுள்ளது, MIPI மற்றும் SPI சப்போர்ட்
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் X5 LTE மோடெம், அதிகபட்சம் 1 Gbpsடவுன்லோடு வேரம் மற்றும் to 150 Mbps வேகத்தில் அப்லோடு செய்யும் வசதி
    - WCN3620 – லோ-பவர் வைபை மற்றும் ப்ளூடூத், அணியக்கூடிய சாதனங்களுக்கு என ஆப்டிமைஸ் செய்யப்பட்டுள்ளது 802.11b/g/n (2.4GHz), குவால்காம் லொகேஷன் தொழில்நுட்பம், யுஎஸ்பி 3.0, ப்ளூடூத் 4.1 + ப்ளூடூத் லோ எனெர்ஜி, இன்டகிரேட்டெட் என்.எஃப்.சி. மற்றும் NXP சப்போர்ட்
    - குவால்காம் நாய்ஸ் மற்றும் எக்கோ கான்செலேஷன், குவால்காம் வாய்ஸ் சூட், குவால்காம் வாய்ஸ் ஆக்டிவேஷன், குவால்காம் அகௌஸ்டிக் ஆடியோ கோடெக் மற்றும் ஸ்பீக்கர் ஆம்ப்ளிஃபையர்
    - ஜென் 8C சாட்டிலைட்: ஜென் 8C சாட்டிலைட்: ஜி.பி.எஸ்., க்ளோனஸ், பெய்டௌ, கலீலியோ, டெரெஸ்ட்ரியல்: வை-பை, செல்லுலார், PDR3.0

    ஸ்னாப்டிராகன் வியர் 3100 பிராசஸர் ப்ளூடூத், வைபை மற்றும் ஜிபிஎஸ் வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்ச் சாதனங்களில் வேலை செய்யும்படி மூன்று வேரியன்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் வியர் 3100 பிராசஸர் கொண்டு இயங்கும் முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடல் 2018 நான்காவது காலாண்டில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் குவால்காம் நிறுவனம் மீது ஆப்பிள் வழக்கு பதிவு செய்துள்ளது.


     


    குவால்காம் நிறுவனம் மீது ஆப்பிள் வழக்கு பதிவு செய்துள்ளது. அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் குவால்காமின் நான்கு காப்புரிமைகளை ரத்து செய்யக்கோரி ஆப்பிள் பதிவு செய்திருக்கும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    நான்கு காப்புரிமைகளிலும் ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிராக குவால்காம் கடந்த ஆண்டு வாதிட்டது குறிப்பிடத்தக்கது. காப்புரிமைகளில் புதிய அம்சங்கள் இல்லாததால், குவால்காம் பதிவு செய்திருக்கும் நான்கு காப்புரிமைகளையும் ரத்து செய்ய வேண்டும் என ஆப்பிள் தெரிவித்திருக்கிறது.

    தானாக ஃபோக்கஸ் செய்யும் டிஜிட்டல் கேமரா, மொபைல் போன் மற்றும் டிஜிட்டல் அசிஸ்டன்ட் போன்று இயங்கும் சாதனம், டச் சென்சிட்டிவ் டிஸ்ப்ளேக்கள் மற்றும் சர்கியூட் மெமரி உள்ளிட்டவற்றுக்கு காப்புரிமை கோரப்பட்டுள்ளது. நீதிமன்றங்களை விட காப்புரிமை அலுவலகங்கள் வேகமாக இயங்கும் என்பதால், இந்த விவகாரத்தில் விரைவில் தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வழக்கின் அடுத்தக்கட்டமாக ஆப்பிள் மனுக்களை மறுசீராய்வு செய்து காப்புரிமை சோதனைக்கு பின் குவால்காம் தரப்பு வாதங்கள் பெறப்பட வேண்டும். மறுசீராய்வுக்கு பின் தீர்ப்பு வெளியிடப்படும்.  

    முன்னதாக சர்வதேச வர்த்தக ஆணையம் குவால்காமின் காப்புரிமைகளை ஆப்பிள் மீறுவதாக அறிவித்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    புகைப்படம்: நன்றி PIXABAY
    கம்யூடெக்ஸ் 2018 நிகழ்வில் குவால்காம் நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்னாப்டிராகன் 850 பிராசஸரை அறிமுகம் செய்துள்ளது. #Windows10 #Snapdragon850
    தைபே:

    தாய்வான் நாட்டு தலைநகரில் நடைபெறும் கம்ப்யூடெக்ஸ் 2018 நிகழ்வில் குவால்காம் நிறுவனம் ஸ்னாப்டிராகன் 850 மொபைல் சிப்செட்-ஐ அறிமுகம் செய்தது. விண்டோஸ் 10 சாதனங்களுக்கான உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய பிராசஸர் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என குவால்காம் தெரிவித்துள்ளது.

    10என்எம் சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கும் ஸ்னாப்டிராகன் 850 சிப்செட் க்ரியோ 385 சிபுயு மற்றும் 8 கோர்களையும் அதிகபட்சம் 2.95 ஜிகாஹெர்ட்ஸ் கிளாக் வேகம் கொண்டிருக்கிறது. இந்த சிப்செட் செயல்திறன் வேகத்தை 30 சதவிகிதம் வரை அதிகரித்தும், பேட்டரி திறனை 20 சசதவிகிதம் வரை அதிகரித்தும், 20 சதவிகித வேகமான ஜிகாபிட் எல்டிஇ வேகம் வழங்குகிறது. 

    புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 850 சிப்செட் அதிக ஃபிடிலிட்டி பில்ட்-இன் ஆடியோ, விர்ச்சுவல் சரவுன்டு சவுன்டு,  aptX ஹெச்டி சப்போர்ட் கொண்டுள்ளது. இத்துடன் அல்ட்ரா ஹெச்டி தரத்தில் அதிக துல்லியமான தரவுகளை பிளேபேக் செய்யவும், 4K வீடியோ பதிவு செய்யும் வசதி உள்ளிட்டவற்றை வழங்குகிறது.



    செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லெர்னிங் தொழில்நுட்பங்களுக்கு பெரும்பாலான நிறுவனங்கள் முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், குவால்காம் தனது புதிய பிராசஸரில் இதற்கான வசதியை வழங்குகிறது. இத்துடன் மைக்ரோசாஃப்ட் மெஷின் லெர்னிங் எஸ்டிகே சேவையை பயன்படுத்த டெவலப்பர்களுக்கு வழி செய்கிறது.  

    ஸ்னாப்டிராகன் 850 பிராசஸரில் குவால்காம் நிறுவனம் ஸ்மார்ட்போன் உதிரி பாகங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு புதிய அமைப்புகள் மூலம் மெல்லிய மற்றும் அதிநவீன வடிவமைப்புகளுக்கு வழி செய்கிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 850 சிப்செட் கொண்டு இயங்கும் விண்டோஸ் 10 சாதனங்கள் வரும் மாதங்களில் சந்தையில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஹெச்பி, அசுஸ் மற்றும் இதர நிறுவனங்கள் முதற்கட்ட ஆல்வேஸ் கனெக்ட்டெட் கணினிகளை வெளியிட்ட நிலையில், குவால்காம் ஸ்னாப்டிராகன் 850 கொண்டு வெளியாகும் சாதனங்களை எந்த நிறுவனங்கள் வெளியிடும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
    ஃபேஸ்புக் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் இணைந்து நகர்ப்புறகளில் அதிவேக வைபை வழங்க புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருக்கின்றன.
    கலிஃபோர்னியா:

    உலகம் முழுக்க இன்டர்நெட் வசதியை கட்டமைக்க ஃபேஸ்புக் பல்வேறு வழிமுறைகளை செயல்படுத்த ஆய்வுகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் டெராகிராஃப் எனும் புதிய தொழில்நுட்பத்தை ஃபேஸ்புக் சமீபத்தில் அறிமுகம் செய்தது. 

    ஃபேஸ்புக் அறிமுகம் செய்த டெராகிராஃப் தொழில்நுட்பம் மில்லிமிட்டர்-வேவ்லென்த் 60 ஜிகாஹெர்ட்ஸ் வயர்லெஸ் அமைப்பு ஆகும். இது வழக்கமான வயர்லெஸ் தொழில்நுட்பத்தை விட அதிவேக இணைய வசதியை பாய்ச்சும். இந்த தொழில்நுட்பம் நகர்ப்புற பகுதிகளில் கட்டிடங்களை கடந்தும் அதிவேக இணைய வசதியை சீராக வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    டெராகிராஃப் ப்ரோடோடைப்

    அதிவேக இணைய வசதியை வழங்கும் புதிய தொழில்நுட்பத்தை குவால்காம் நிறுவனம் தனது சிப்செட்களில் பொருத்த இருக்கிறது. இதன் மூலம் 60 ஜிகாஹெர்ட்ஸ் பிராட்காஸ்ட் உபகரணங்களை உற்பத்தியாளர்கள் உருவாக்க முடியும். ஃபேஸ்புக் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் இணைந்து புதிய தொழில்நுட்பத்துக்கான சோதனைகளை 2019-ம் ஆண்டின் மத்தியில் துவங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

    ஃபேஸ்புக் மற்றும் குவால்காம் நிறுவனங்களின் தொழில்நுட்பம் 802.11ay WLAN தரத்தில் 60 ஜிகாஹெர்ட்ஸ் அதிர்வலையை பயன்படுத்தி அதிகபட்சம் 300 முதல் 500 மீட்டர் தூரம் வரை நொடிக்கு 20 முதல் 40 ஜிபி வரையிலான வேகத்தை வழங்கும். எனினும் பெரிய ஆன்டெனா, சேனல் பான்டிங் போன்ற பல்வேறு அம்சங்களை பயன்படுத்தி இணைய பரப்பளவு மற்றும் வேகத்தை அதிகரிக்க ஃபேஸ்புக் மற்றும் குவால்காம் சார்பில் திட்டமிடப்பட்டு வருகிறது.


    டெராகிராஃப் நெட்வொர்க்

    புதிய தொழில்நுட்பம் நகர்ப்புறங்களில் இருக்கும் இடையூறுகளை கடந்து அதிக பயனர்களுக்கு இணைய வசதியை குறைந்த கட்டணத்தில் வழங்க முடியும் என ஃபேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெராகிராஃப் சோதனை செய்யப்பட்ட இருக்கும் இடம் குறித்து இருநிறுவனங்கள் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. 

    எனினும் சான் ஜோஸ் நகரில் டெராகிராஃப் தொழில்நுட்பம் சோதனை செய்யப்படலாம் என ஃபேஸ்புக் ஏற்கனவே வெளியிட்ட தகவல்களில் தெரிவிக்கப்பட்டது. ஃபைபர் தொழில்நுட்பத்துக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய தொழில்நுட்பம் நகர்ப்புறங்களில் அதிவேக இணைய வசதியை வழங்கும்.

    புகைப்படங்கள்: நன்றி ஃபேஸ்புக், பிக்சாபே
    ×