search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காப்புரிமை"

    • கதை திருட்டு செய்து நடித்த காரணத்தினால் புகார் அளித்ததன் பேரில் அவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து அப்பகு தியில் பரபரப்பு ஏற்பட்டது.
    • இசை நாடகத்தில் முதல் முறையாக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாடகம் காளி காத்த கருப்புசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள அய்யலூர் சங்கரதாஸ் சாமிகளின் நாடக நடிகர்கள் சங்கம் சார்பாக எழுதி அமைக்கப்பட்ட காளி காத்த கருப்புசாமி என்னும் நாடகத்திற்கு காப்புரிமை வழங்கப்பட்ட நிலையில் சம்பந்தமில்லாத வேறு நபர்கள் நாடகத்தை கதை திருட்டு செய்து நடித்த காரணத்தினால் புகார் அளித்ததன் பேரில் அவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து அப்பகு தியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இசை நாடகத்தின் சார்பில் பல்வேறு நாடகங்கள் திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, கரூர், மண ப்பாறை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் நடை பெறுவது வழக்கம்.அதே போல் புராண கதைகளில் ஒன்றான காளி காத்த கருப்புசாமி என்னும் நாடகம் ஆசிரியர் முனி யராஜன் கைவண்ணத்தில் இயற்றி எழுதப்பட்டது. இந்த நாடகத்தினைஅய்யலூர் சங்கரதாஸ் சுவாமிகள் நாடக நடிகர் சங்கம் சார்பாக அனுமதி பெறப்பட்டு அந்த நாடகத்திற்கு முழுமையான மத்திய அரசு காப்புரிமை பெறப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றது.

    ஆனால் இந்த நாடகத்தினை அய்யலூரை சேர்ந்த சில நடிகர்கள் கதை திருட்டு செய்து நாடகத்தை கொச்சை ப்படுத்தி தவறாக நடித்து வந்தனர். இதை எதிர்த்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தபோது இது தங்களது நாடகம் என்று வாதிட்டு வந்தனர். இதனையடுத்து மத்திய அரசால் பெறப்பட்ட காப்புரிமை சான்றிதழை வடமதுரைபோலீஸ் இ ன்ஸ்பெக்டரிடம்காட்டி சம்மந்த ப்பட்ட குழுவினர் புகார் அளித்தனர்.

    சங்கர தாஸ் சுவாமிகளின் நாடக நடிகர் சங்கத்திற்கு உரிமம் பெற்ற இந்த நாடகத்தினை எந்த ஒரு இடத்திலும் பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர். எதிர்தரப்பினர் இனி இந்த நாடகத்தினை நாங்கள் நடத்த மாட்டோம் என்று வாக்குறுதி அளித்து எழுத்து மூலமாக சமர்ப்பித்துச் சென்றனர்.

    இசை நாடகத்தில் முதல் முறையாக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாடகம் காளி காத்த கருப்புசாமி என்பது குறிப்பிடத்தக்கது. என்று சங்கரதாஸ் சுவாமிகள் நாடக நடிகர்கள் சங்க தலை வர் சாமி தெரிவித்துள்ளார்.

    • தடுப்பூசிக்கான சந்தை 10 பில்லியன் டாலருக்கு மேல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது
    • இந்நோய் அறிகுறிகளை விரைவில் கவனிக்காமல் விட்டால் உயிருக்கு ஆபத்தாக முடியும்

    நுரையீரல் மற்றும் சுவாச பாதையில் தொற்று நோயை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய ஒரு நுண்கிருமி ஆர்எஸ்வி (RSV) வைரஸ்.

    இந்த வைரஸ் நோய் தொற்று பொதுவாக லேசான குளிர் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். ஆனால் விரைவில் கவனிக்காமல் விட்டால் உயிருக்கு ஆபத்தாக முடியும்.

    எனவே இதன் தாக்குதலிலிருந்து மனிதர்களை காக்க ஒரு தடுப்பூசியை கண்டு பிடிக்க உலகெங்கிலும் உள்ள முன்னணி மருந்து நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. இந்த தடுப்பூசிக்கான சந்தை 10 பில்லியன் டாலருக்கு மேல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    லண்டனை மையமாக கொண்டு இயங்கும் பன்னாட்டு பிரிட்டன் மருந்து நிறுவனம் க்ளாக்ஸோ ஸ்மித்க்லைன் (GSK). இந்நிறுவனம் இந்த நோய்க்கு எதிராக அரெக்ஸ்வி எனும் தடுப்பூசியை சந்தைக்கு அறிமுகப்படுத்த அனுமதி பெற்று விட்டது.

    இந்நிலையில், நேற்று அமெரிக்காவில் உள்ள டெலாவேர் மாநில நீதிமன்றத்தில், அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியை மையமாக கொண்டு செயல்படும் அமெரிக்க பன்னாட்டு முன்னணி மருந்து நிறுவனமான ஃபைசர் மீது காப்புரிமை வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது.

    ஃபைசர் நிறுவனத்தின் அப்ரிஸ்வோ (Abrysvo) தடுப்பூசியில் பயன்படுத்தப்படும் ஒரு மூலக்கூறு, ஜிஎஸ்கே நிறுவனத்தின் 4 காப்புரிமைககளை மீறுவதாக ஜிஎஸ்கே குற்றம் சாட்டியுள்ளது.

    "ஃபைசர் நிறுவனம் தெரிந்தே அப்ரிஸ்வோ தடுப்பூசியில் எங்களுக்கு உரிமையுள்ள கண்டுபிடிப்புகளை அனுமதியின்றி பயன்படுத்துகிறது. எங்கள் தடுப்பூசியான அரெக்ஸ்வி (Arexvy), ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு 7 வருடங்களுக்கு முன்பே வளர்ச்சியில் இருந்தது. இவ்விவகாரத்தில் ஒரு நீதி விசாரணை நடத்த வேண்டும் என கேட்கிறோம். காப்புரிமை மீறலின் விளைவாக நாங்கள் இழந்த லாபங்கள் மற்றும் ராயல்டிகள் உட்பட பண நஷ்டத்திற்கும் ஈடு வேண்டும். மேலும் ஃபைசர் நிறுவனம் அதன் தடுப்பூசியை அமெரிக்காவில் தயாரித்து விற்பனை செய்வதிலிருந்து தடுக்க வேண்டும். அறிவுசார் சொத்து பாதுகாப்புகள்தான் நிறுவனங்களின் புதுமையான ஆராய்ச்சி நோக்கங்களுக்கு அடிப்படை. எங்கள் தடுப்பூசியான அரெக்ஸ்வியை அறிமுகப்படுத்துவது தடையின்றி நடைபெற வேண்டும்" என ஜிஎஸ்கே தன் புகாரில் கோரியுள்ளது.

    "எங்கள் அறிவுசார் சொத்துக்களின் நிலைப்பாடுகளில் நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம். நோயாளிகளை காக்க எங்களின் புதுமையான தடுப்பூசியை கொண்டு வருவதற்கு எங்களுக்கு முழு உரிமை உள்ளது. எங்கள் நிலையை தற்காத்துக் கொள்ள நாங்கள் நீதிமன்றத்தில் போராடுவோம்" என ஃபைசர் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    ×