search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pushkaram"

    மகா புஷ்கர விழாவின் 7-வது நாளான இன்று தாமிரபரணியின் படித்துறைகள், தீர்த்தக்கட்டங்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
    குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும்போது அந்தந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குரு பெயர்ச்சி ஆனதையடுத்து விருச்சிக ராசிக்குரிய நதியான தாமிரபரணியில் புஷ்கர விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த புஷ்கர விழா 144 ஆண்டுக்கு ஒருமுறை வந்துள்ளதால் மகா புஷ்கரமாகும்.

    தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

    மகா புஷ்கர விழாவின் 7-வது நாளான இன்று தாமிரபரணியின் படித்துறைகள், தீர்த்தக்கட்டங்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தீர்த்தக்கட்டங்களில் ஆன்மீக அமைப்புகள் சார்பாக சிறப்பு வேள்விகள் நடைபெற்றன. மாலையில் தாமிரபரணிக்கு மகா ஆரத்தி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டார்கள்.

    பாபநாசம் சித்தர்கள் கோட்டம் சார்பாக அங்குள்ள திரிநதி சங்கம தீர்த்தத்தில் தாமிரபரணி புஷ்கர விழாவில் இன்று காலை சிறப்பு வேள்வி நடந்தது. மாலையில் பஞ்சபூத மேடையில் 16 வகையான தீபங்கள், 5 வகை உபச்சாரங்களுடன் தமிழ் ஆகம விதிப்படி சிவனடியார்களால் மகா ஆராத்தி நடத்தப்படுகிறது.

    அகில பாரதிய துறவியர்கள் சங்கம் சார்பாக பாபநாசத்தில் நடந்துவரும் புஷ்கர விழாவில் இன்று காலை சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து அங்குள்ள சேனைத்தலைவர் திருமண மண்டபத்தில் கைவல்ய நவநீத சிறப்பு மாநாடு நடைபெற்றது.



    காஞ்சி சங்கர மடம் சார்பாக திருப்புடைமருதூரில் நடந்துவரும் புஷ்கர விழாவில் இன்று காலை துர்கா ஹோமம் நடந்தது. நெல்லை குறுக்குத்துறையில் புஷ்கரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டபத்தில் இன்று காலை நிருசிம்ஹ ஹோமம் நடந்தது.

    அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் உள்ள யாகசாலையில் இன்றும் பல்வேறு யாகங்கள் நடைபெற்றன. வண்ணார்பேட்டை குட்டத்துறை படித்துறையில் தீர்த்தவாரி பெருவிழாவை முன்னிட்டு தாமிரபரணிக்கு வழிபாடுகள் நடந்தன.

    முறப்பநாடு கைலாசநாதர் கோவில் முன்புள்ள தாமிரபரணிக்கு இன்று காலை சிறப்பு வழிபாடுகள் நடந்தன. திரளான பக்தர்கள் ஆற்றில் நீராடி வழிபட்டார்கள்.

    ஸ்ரீவைகுண்டத்தில் உடலில் ஏற்பட்டுள்ள சகல வியாதிகளை குணப்படுத்தவும், மனநிம்மதிக்கான ஸ்ரீதன்வந்திரி ஹோமம் நடைபெற்றது.

    மகா புஷ்கர விழாவை முன்னிட்டு தாமிரபரணி கரையோர கோவில்களுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக பாபநாசம் கோவில், அம்பை கோவில்கள், சேரன்மகாதேவி, அத்தாளநல்லூர், திருப்புடைமருதூர், கரிசூழ்ந்தமங்கலம், நெல்லையப்பர் கோவில், நவ கைலாய கோவில்கள், நவ திருப்பதி கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அனைத்து இடங்களிலும் வெளி மாநில பக்தர்களும் அதிகளவில் குவிந்துள்ளார்கள். அவர்கள் சாமி தரிசனம் செய்து சிறிய கேன்களில் தாமிரபரணி தீர்த்தம் எடுத்து செல்கிறார்கள்.
    பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தாமிரபரணி ஆற்றின் புகழ், இந்தியா முழுவதும் பரவி இருந்தது என்பதே அந்த நதியின் பெருமைக்கு தக்க சான்றாக இருக்கிறது.
    வற்றாத ஜீவநதிகளில் ஒன்றான தாமிரபரணி ஆற்றின் பிறப்பிடம், மேற்குத் தொடர்ச்சி மலை மீது முண்டந்துறை காட்டுப்பகுதியில் உள்ள பூங்குளம் என்ற இடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து 1,725 மீட்டர் உயரத்தில் பிறந்து, வங்கக்கடலை நோக்கி ஓடி வரும் தாமிரபரணி, வழியில் பல நதிகளைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டு வந்து, புன்னக்காயல் என்ற இடத்தில் வங்கக்கடலில் சங்கமம் ஆகிறது.

    அடர்ந்த காட்டுப் பகுதியான முண்டந்துறையில் பல ஆயிரம் ஆண்டுகளாக படிந்து இருக்கும் செடி, கொடிகளின் எச்சங்களும், மண்ணும் பஞ்சு மெத்தை போன்ற அமைப்பைப் பெற்று இருப்பதால், தென் மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் அங்கு பெய்யும் மழை நீர் முழுவதையும் அந்த இடம் அப்படியே உள்வாங்கிக் கொண்டு, மழை அல்லாத காலங்களில் சிறுகச் சிறுக வெளிவிடும் போது அது, தாமிரபரணி ஆறாக உருவாகி, ஆண்டு முழுவதும் வற்றாமல் ஓடி வருகிறது. தமிழ் நாட்டிலேயே உருவாகி, தமிழ் நாட்டிலேயே கடலில் கலக்கிறது என்ற பெருமை பெற்ற ஒரே நதி தாமிரபரணி.

    மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கும் இந்த நதி, திருநெல்வேலி மாவட்டத்தில் 60 சதவீதம் அளவிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் 40 சதவீதம் அளவிலுமாக மொத்தம் 125 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, தனது ஓட்டத்தை அந்த இரு மாவட்டங்களுக்குள் அடக்கிக் கொள்கிறது. தாமிரபரணியின் புகழ் வரலாறு, பல பக்கங்களைக் கொண்டது. ‘தாமிரபரணி மகாத்மியம்’ என்று தனியாக ஒரு நூல் உருவாகும் அளவுக்கு அதன் பெருமைகள் ஏராளமாக நிரம்பிக் கிடக்கின்றன. தாமிரபரணியின் பிறப்பிடம், அமைந்துள்ள மலை மீது அமர்ந்துதான் அகஸ்திய முனிவர் தமிழ் மொழியை உருவாக்கினார் என்று புராணங் கள் கூறுகின்றன.

    இப்போது உள்ளது போன்ற தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தாமிரபரணி ஆற்றின் புகழ், இந்தியா முழுவதும் பரவி இருந்தது என்பதே அந்த நதியின் பெருமைக்கு தக்க சான்றாக இருக்கிறது. மகாபாரத இதிகாசம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அந்த மகாபாரதத்திலேயே தாமிரபரணியின் புகழ் பாடப்பட்டு இருக்கிறது. அந்தக் காலத்திலேயே தாமிரபரணி நதியின் புகழ், இந்தியா முழுவதும் பரவி இருந்தது என்பதைத்தெரிந்து கொள்ளலாம்.

    மகாபாரத இதிகாசம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்பதிலும், அந்தக் காலத்திலேயே தாமிரபரணி ஆறு புகழ் பெற்று விளங்கியதால் தான் மகாபாரதத்தில் அது பற்றி பேசப்பட்டு இருக்கிறது என்பதிலும் சிறிதும் சந்தேகம் இல்லை. பழங்கால தமிழ் இலக்கியங்களில் ‘பொருநை’ என்ற பெயரில், தாமிரபரணி ஆற்றின் புகழ் பல இடங்களில் பாடப்பட்டு இருக்கிறது. மாமன்னர் அசோகரின் பாறைக் கல்வெட்டுக் களிலும் தாமிரபரணி ஆறு இடம்பிடித்து இருக்கிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, வெளிநாட்டினர் பலர், இந்தியாவின் புகழ் மிக்க வரலாறு பற்றிக் கேள்விப்பட்டு, அதனை நேரில் பார்க்க இங்கே வந்து சுற்றுப்பயணம் செய்து, தாங்கள் கண்டவற்றை ஆவணமாகப் பதிவு செய்து இருக்கிறார்கள்.

    அவ்வாறு வந்தவர்களில் கி.மு. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹொரோட்டஸ், பிளினி ஆகியோரின் குறிப்புகளிலும் தாமிரபரணி கூறப்படுகிறது. கி.பி. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிளாடியஸ் தாலமி, தனது ‘ஜியாக்ரபி’ என்ற புத்தகத்தின் 7-ம் பாகம் முதல் அத்தியாயத்தில் தாமிரபரணி ஆறு பற்றியும், கொற்கை நகர் பற்றியும் குறிப்பிட்டு இருக்கிறார். தாமிரபரணி ஆறும், அந்த நதிக்கரையில் இருந்த புகழ்மிக்க நாகரிகமும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் இவைபோல ஏராளம் இருக்கின்றன.

    பாண தீர்த்த மகிமை

    சிவபெருமான் திரி புராசுரர்களை சம்ஹாரம் செய்தபோது, விஷ்ணு பாணமாக இருந்தார். அசுரர்களை சம்ஹாரம் செய்தபிறகும் பாணத் தின் வெம்மை தணியாமல் தகித்தபடியே இருந்தது. எனவே, சிவமூர்த்தி அந்த பாணத்தை கலம்பகர்த்த தடாகத்தில் வைத்துவிட்டார். அகத்தியர் திருவுள்ளமுவந்து விடையளிக்கத் தோன்றிய தாமிரபரணி கலம்பகர்த்த தடாகத்தில் வெள்ளமெனப் பாய்ந்து பாணத்தின் வெம் மையைத் தணிவித்தாள். எனவே, இந்த பாணதீர்த்தத்தில் நீராடுபவர்களுக்கு விஷ்ணு மூர்த்தியின் அனுக்கிரஹம் கிடைக்கும் என்று ஹயக்கிரீவர் திருவாய்மொழியாக தாமிரபரணி மஹாத்மியத்தில் கூறப்பட்டு இருக்கிறது.
    ராமர் தனது பாணத்தினை விட்டு ஒரு கிணறு தோண்டினார். அந்த தீர்த்தம் “ஜடாயு தீர்த்தம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் செய்த பாவங்கள் அழிந்து விடும் என்பது ஐதீகம்.
    தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் ராமருக்கு வழிப்பாட்டு தலங்கள் அமைந்துள்ளன. ராவணன், சீதையை சிறையெடுத்து சென்ற போது பட்சிகளின் அரசன் ஜடாயு போர் செய்து இறந்த இடம் நெல்லை அருகே அருகன் குளத்தில் உள்ளது.

    சீதா தேவியை ராவணன் சூழ்ச்சியால் சிறை பிடித்து கடத்திச் சென்ற போது ஜடாயுணும் பறவை ராவணனை வழி மறித்து போரிட்டது. ராவணன் சிவபெருமானிடம் தவம் செய்து பெற்ற தெய்வ வாளால் ஜடாயுவின் இறக்கையை வெட்டி வீழ்த்தினார்.

    ஜடாயு தரையில் விழுந்து குற்றுயிரும் குலை உயிருமாய் நடந்த கதையை கூறினார். பின் தனக்கு மகன் ஸ்தானத்தில் இருந்து ராமர்தான் திதி செய்ய வேண்டும் என்று கேட்டு உயிர் விட்டார்.

    உடனே ராமர் தனது பாணத்தினை விட்டு ஒரு கிணறு தோண்டினார். அந்த தீர்த்தம் “ஜடாயு தீர்த்தம்” என்று அழைக்கப்படுகிறது. அந்த தீர்த்தத்தை கொண்டு ஜடாயுவுக்கு ராமர் தர்ப்பணம் செய்தார்.

    இதன் அருகே ராமன் பெயரை கொண்ட ராம தீர்த்தம், சிவபெருமான் பெயரை கொண்ட சிவதீர்த்தம் உள்ளது. இந்த மூன்று தீர்த்தத்தில் யார் நீராடல் செய்கிறார்களோ, அவர்களுக்கு நூறு பிறவிகளில் செய்த பாவங்களும் அழிந்து விடுகிறது என்பது ஐதீகம்.

    இங்கு ஒரு மண்டபம் உள்ளது. இந்த இடத்தில் இருந்து தான் ராமர் ஜடாயுவின் பிண்டத்தினை கரைத்ததாக கூறப்படுகிறது. இந்த தீர்த்தத்தினை எடுத்து சென்று வீட்டில் பூஜைக்கு பயன்படுத்தியும், தங்கள் தொழில் நிறுவனத்தில் தெளித்தும் மக்கள் நற்கதி பெற்று வருகின்றனர். நோய், சூனியம், தீராத வலி மற்றும் பித்ரு கடன் கழிக்க இந்த ஆலயம் வந்து வழிபடுவது பலன்களைத் தரும்.

    இந்த ஆலயம் நெல்லை சந்திப்பில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தாழையூத்து பைபாசில் தாமிரபரணியை கடக்கும் பாலம் அருகே உள்ளது. நெல்லை சந்திப்பில் இருந்து மினி பஸ், சேர் ஆட்டோ வசதிகள் உள்ளன.

    தாமிரபரணி மகா புஷ்கர விழாவையொட்டி தாமிரபரணியில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் புனித நீராடினர். சீவலப்பேரியில் தீப ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டது.
    குரு பகவான் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்ததையொட்டி விருச்சிக ராசிக்கு உரிய தாமிரபரணி ஆற்றுக்கு மகா புஷ்கர விழா நடைபெற்று வருகிறது. 144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் விழா என்பதால் பக்தர்கள் தினமும் தாமிரபரணி ஆற்றில் கூட்டம், கூட்டமாக வந்து புனித நீராடி செல்கின்றனர்.

    நேற்று 5-வது நாளிலும் ஏராளமான பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் பல்வேறு இடங்களில் புனித நீராடி, ஆற்றுக்கு தீப ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

    இந்த நிலையில் பாபநாசத்தில் தமிழ்நாடு ஐயப்ப சேவா சமாஜத்தை சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் நேற்று அதிகாலையில் குவிந்தனர். அவர்கள் ஐயப்ப சுவாமி சிலைக்கு பூஜைகள் நடத்தி தாமிரபரணி ஆற்றில் நீராட்டு நடத்தினர். ஐயப்ப சுவாமி சிலையுடன் ஏராளமான ஐயப்ப பக்தர் கள் அங்கு புனித நீராடினர்.

    பின்னர் பாபநாசத்தில் நடைபெற்ற மாநாட்டுக்கு ஐயப்ப பக்தர்கள் புறப்பட்டு சென்றனர். இதேபோல் பாரதீய ஜனதா கட்சி மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் நேற்று பாபநாசம் ஆற்றில் புனித நீராடி விளக்கு ஏற்றியும், ஆரத்தி எடுத்தும் வழிபட்டனர்.

    நெல்லை அருகே சீவலப்பேரியில் தாமிரபரணி அன்னைக்கு தீப ஆரத்தி நடந்ததையும், இதில் பங்கேற்ற பக்தர்களையும் படத்தில் காணலாம்.

    நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டப படித்துறையில் ஏராளமான பக்தர்கள் வரிசையாக வந்து நீராடினர். அங்குள்ள தைப்பூச மண்டபத்தில் மறைந்த காஞ்சி ஜெயேந்திர சரசுவதி சுவாமி ஆசி வழங்குவது போல் மெழுகு சிலை வைக்கப்பட்டிருந்தது. அதனை பக்தர் கள் வணங்கி சென்றனர்.

    குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறையில் நேற்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். மேலும் அவர்கள் கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு, குறுக்குத்துறை மேட்டில் நடைபெற்ற யாகசாலை பூஜையிலும் கலந்து கொண்டனர்.

    இதேபோல் அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் அருகில் உள்ள ஜடாயு துறை மற்றும் மணிமூர்த்தீசுவரம் உச்சிஷ்ட கணபதி கோவில் முன்பும் பக்தர்கள் புனித நீராடினர். சிந்துபூந்துறை சிப்தபுஷ்ப தீர்த்த கட்டத்திலும் ஏராளமானோர் புனித நீராடி தாமிரபரணி அன்னையை வணங்கினார்கள்.

    பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரி துர்க்காம்பிகை கோவிலில் நேற்று காலை வைரவ ஹோமமும், வடுகு பூஜையும் நடைபெற்றது. பின்னர் கோவிலில் இருந்து ஊர்வலமாக பக்தர் கள் தாமிரபரணி ஆற்றுக்கு வந்தனர். அங்கு கும்பம் வைத்து சிறப்பு பூஜை நடத்தினர்.

    அதைத்தொடர்ந்து தாமிரபரணி ஆற்றுக்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் 7 சிவாச்சாரியார்கள் தலைமையில் சிறப்பு தீப ஆரத்தி எடுக்கப்பட்டது. பின்னர் ஆற்றில் தீபம் ஏற்றி விடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் திரண்டு வழிபாடு நடத்தினர்.
    புனித நதியில் நீராடுவதற்கென்று தர்ம சாஸ்திரம் சில விதிகளை வகுத்து வைத்திருக்கிறது. அவைகளைக் கடைப் பிடித்தால் நிச்சயம் நல்ல பலன்கள் கிட்டும்.
    12 நாட்களிலும் தொடர்ந்து நீராடுவது இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளிலும் நீராடுவதற்குச் சமம். புனித நதியில் நீராடுவதற்கென்று தர்ம சாஸ்திரம் சில விதிகளை வகுத்து வைத்திருக்கிறது. அவைகளைக் கடைப் பிடித்தால் நிச்சயம் நல்ல பலன்கள் கிட்டும். அவைகளை வரிசையாகப் பார்ப்போம்.

    1.  சூரிய உதயத்திற்கு முன் நான்கு நாழிகைகள் (96 நிமிடம்) அருணோதய காலமாகும். அப்பொழுது நீராடுவது சிறப்பானது என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது காலை 4.24 மணி முதல் 6.00 மணி வரையில் நீராடுவது சிறப்பு என்று சொல்லப்பட்டு உள்ளது.

    2.  இந்த 96 நிமிடத்திலும் காலை 4.24 முணி முதல் 5.12 மணி வரையிலான 48 நிமிட காலம் மிகச் சிறப்பு என்று சொல்லப்பட்டுள்ளது. 4.24 மணி முதல் 5.12 மணி வரை உள்ள இரண்டு நாழிகைகள் “பிரம்ம முகூர்த்தம்” என்று சொல்லப்படும். இதை பிரசாந்தவேளை என்பர். மனித மனம் அலைபாயாமல் பரிசுத்தமாக இருக்கும் வேளை இது. பிரகிருதியிலே இயற்கையிலேயே பகவானால் பிரத்தியேகமாக செய்து வைத்தது பிரம்ம முகூர்த்தம் ஆகும். இந்த வேளையில் 15 நிமிடம் தியானம் செய்தால், மற்ற வேளையில் இரண்டு மணி நேரம் தியானம் செய்ததற்குச் சமமாகும். இந்த பிரம்ம முகூர்த்தத்தில் நீராடுவது ஒரு தனி ஆனந்தம். ஏன்? நம் உள்ளத்தில் கடவுள் பக்தி மேலோங்கி இருக்கும் வேளை இது.

    3.  குழந்தைகள், வியாதியினால் பீடிக்கப்பட்டவர்கள், வயது ஆனவர்கள் சமயத்திற்குத் தகுந்தவாறு பகலில் நீராடலாம். ராகு காலத்தைத் தவிர்க்கவும்.

    4.  புண்ணிய நதிகளில் நீராடப் போகிறவர்கள் குடை பிடித்துக் கொண்டோ, செருப்பு அணிந்து கொண்டோ செல்லக் கூடாது. கார், வேன், இருசக்கர வாகனங்களில் போய் நதிக்கரையில் இறங்கக் கூடாது. நடந்து செல்ல வேண்டும். குடை பிடித்துக் கொண்டு சென்றால் தீர்த்தத்தில் நீராடிய பலனில் கால் பங்கும், செருப்பணிந்து சென்றால் அரைப்பங்கு பலமும், வண்டி வாகனங்களில் சென்றால் முழு பலமும் நசித்து விடுகிறது. நோயாளியாக இருந்தால் குதிரை வண்டியில் போகலாம். மாட்டு வண்டியில் போகக் கூடாது.

    5.  நதிக்கரையில் உள்ள மண்ணை எடுத்துத் தன் உடம்பில் பூசிக்கொண்டு நதியை வணங்கி மெல்ல அதனுள் இறங்க வேண்டும். புண்ணிய நதிகளில் நீச்சலடித்து குளிக்கக் கூடாது. நீச்சலடிப்பதன் மூலம் நதியைக் காலால் உதைக்க நேரிடும். நதியை உதைக்கலாமா? இது பாபச் செயல் அல்லவா?

    6.  தூய்மையான வெண்ணிற ஆடை உடுத்திக் கொண்டே நீராட வேண்டும். ஒற்றை வஸ்திரத்தோடு நீராடக்கூடாது. இடுப்பில் ஒரு துண்டை கட்டிக் கொள்ள வேண்டும்.

    7.  சிகப்பு, கருப்பு, நீல நிறத் துணி, தலைப்பு இல்லாத வஸ்திரம், ஈரமான வஸ்திரம் இவைகளை ஒரு பொழுதும் உடுத்திக் கொண்டு நீராடக் கூடாது. ஓரத்தில் நீலக் கரை, கருப்புக்கரை போட்ட வஸ்திரமும் உடுத்திக் கொள்ளக் கூடாது. கைலிகள், லுங்கிகள் உடுத்தக் கூடாது.

    8.  அரைஞாண் கயிறு (இடுப்புக் கயிறு) இல்லாமல் ஆண்கள் நீராடக் கூடாது. அப்படிச் செய்பவன் நதியில் நீராடிய புண்ணிய பலனைப் பெற மாட்டான்.

    9.  அரை ஞாண் கயிற்றில் கச்சம் கட்டிக் கொண்டும் நீராடக் கூடாது. இது வஸ்திரம் தரிக்காதவருக்குச் சமம். இதனாலும் புண்ணிய பலன் கிட்டாமற் போய் விடும்.

    10.  நதியின் பிரவாகத்திற்கு (ஓட்டத்திற்கு) எதிர்முகமாக நின்றே நீராட வேண்டும். முதுகைக் காட்டக் கூடாது. இது பாபமாகும்.

    11.  புனித நீராடல் முதலிய சகல காரியங்களிலும் நாராயணனை அவசியம் தியானம் செய்ய வேண்டும். நீரில் நின்று கொண்டு மனதில் வேறு எண்ணம் இல்லாமல் “ஹரி, ஹரி” என்று சொல்லிக் கொண்டு மூன்று முறை நன்கு மூழ்கி எழ வேண்டும். லக்ஷ்மி சூக்தம் தெரிந்தவர்கள் அதைக் கூறலாம். வலது கையால் நீரை எடுத்து மூன்று முறை அருந்த வேண்டும்.

    12.  நீண்ட தலைமுடி கொண்ட ஆண்களும், பெண்களும் தலைமுடியை முன்புறம் போட்டுக் கொண்டு நீராட வேண்டும். பின்புறம் போடக் கூடாது. தலைமுடியில் உள்ள நீர் முன்புறமாக விழுந்தால் அது கங்கை தீர்த்தத்திற்குச் சமமாகும். பின்புறம் விழுந்தால் அது கள்ளுக்குச் சமமாகும். ஆகையால் முன்புறமாக குனிந்து கொண்டு தலைமுடியில் உள்ள நீரை பூமியில் விழச் செய்ய வேண்டும்.

    13.  நதியில் நீராடும் போது எச்சிலைக் காறி உமிழ்வதும், அதில் சிறுநீர் கழிப்பதும் பாபச் செயலாகும்.

    14.  நதியினுள் ஈரத்துணிகளைப் பிழியக் கூடாது. கரைக்கு வந்தே பிழிய வேண்டும்.

    15.  நீரிலிருந்து வெளியே வந்து தலைமயிரை கையால் உதறக் கூடாது. தலைமயிரில் உள்ள நீர், வஸ்திர நீர் பிறர் மேல் படக் கூடாது. இது எவர் மீது படுகிறதோ அவரிடம் உள்ள செல்வமெல்லாம் தொலைந்து தரித்திரராகி விடுவார்.

    16.  நீராடி முடித்தவுடன், காய்ந்த வஸ்திரத்தை மேலே சுற்றிக் கொண்டு ஈர வஸ்திரத்தைக் கீழாக விட வேண்டும். மேலாக எடுத்துப் போடக் கூடாது.

    17. நெற்றியில் திருநீறோ அல்லது கோபி சந்தனமோ பூசிக் கொண்டு மீண்டும் ஒரு முறை நதியை வணங்க வேண்டும்.
    தாமிரபரணியில் சிந்துபூந்துறை என்று சொல்லப்படுகின்ற தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வோர் அல்லது அதைப் பானம் செய்வோர் தடையின்றி மோட்சத்தைப் பெறுகின்றனர்.
    1. பூலோகத்திலிருக்கின்ற எவ்விதமான புண்ணியத் தீர்த்தங்களும் ஸ்ரீதாமிரபரணியின் ஒரு திவலையின் பதினாறில் ஒரு பாகத்திற்கும் இணையில்லாததே.

    2. பெரியோர்கள் மற்ற சாதாரண நதிகளைத் தீர்த்தம் என்று கூறலாம். ஆனால் அவற்றிலும் தாமிரபரணி என்ற எண்ணத்தைச் செலுத்தி தியானம் செய்தாலோ, நீராடினாலோ, இம்மகாநதியின் புண்ணியம் கிடைக்கும்.

    3. சம்சாரம் என்ற சமுத்திரத்தைத் தாண்ட விரும்புபவர்கள், அவனுடைய உயிர் நிலைகாலத்தில் ஒருமுறையாவது தாமிரபரணி மகாநதியில் ஸ்நானம் செய்ய வேண்டும்.

    4. தாமிரபரணியில் சிந்துபூந்துறை என்று சொல்லப்படுகின்ற தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வோர் அல்லது அதைப் பானம் செய்வோர் தடையின்றி மோட்சத்தைப் பெறுகின்றனர்.

    5. சூரியன் சிம்மராசியில் வரும்போதெல்லாம், அகத்திய மாமுனியானவர் சகலமான தேவர்களோடும், முனிகளோடும், சித்த சிரோமணிகளோடும் மலய பர்வதத்தின் அடிவாரத்திலிருக்கின்ற நகாரணியம் தலத்திரத்திற்கு வந்து, சிறந்த மேன்மை பெறுவதற்காக மனதை அடக்கி பூஜை செய்து வருகின்றார்.

    6. ஆத்மஞானம் பெற விரும்புவோர் ஒருமுறையாவது புண்ணியமான ஸ்ரீதாமிரபரணியில் ஸ்நானம் செய்து கோஷ்டீசுவரரைப் பூஜை செய்ய வேண்டும்.

    7. தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற நான்கையும் விரும்புவோர் மகாபாவத்தைத் தொலைக்கின்ற பாபவிநாசத்தில் ஸ்நானம் செய்ய வேண்டும்.

    8. தாமிரபரணியில் உள்ள சாலா தீர்த்தம், தீபதீர்த்தம், கஜேந்திரமோட்ச தீர்த்தம், புடார்ச்சுன தீர்த்தம், துர்க்கா தீர்த்தம், பைரவ தீர்த்தம், சோம தீர்த்தம், வியாச தீர்த்தம், ரோமச தீர்த்தம், ஜோதிர்வன தீர்த்தம், சாயா தீர்த்தம், மந்திர தீர்த்தம், நான்கு அக்னி தீர்த்தங்கள், ஷிப்தபுஷ்ப தீர்த்தம், ராமதீர்த்தம், விஷ்ணுவன தீர்த்தம், கலச தீர்த்தம், ஸ்ரீபுர தீர்த்தம், ஸோமாரண்ய தீர்த்தம், சங்கம தீர்த்தம் ஆகிய இவை புராணங்களில் முக்கியத் தீர்த்தங்களாகக் கூறப்பட்டிருக்கின்றன.

    9. பிராணாயாமம், பஞ்சகவ்யம், சூட்சுமணை என்ற நாடியில் பிராணவாயுவை ஏற்றித் தவம் செய்தல், பிராஜாபத்யம், மலையிலிருந்து விழுதல், அக்னிப் பிரவேசம் ஆகிய பெருஞ்செயல்களால் மானிடர் பெறக்கூடிய பயனை தாமிரபரணி நதியில் ஒருமுறை ஸ்நானம் செய்வதன் மூலம் பெற முடியும்.

    10. ஸ்ரீதாமிரபரணி தேவியானவள் பூமிக்கு வாழ்வளிக்க வந்தவள். இல்லற வாழ்க்கையைச் சிறப்பித்து வழங்குபவள். முக்திக்கு முத்தானவள் என்று வீரசேன மகாராஜனுக்கு சங்கமா முனிவர் கூறியுள்ளார்.

    11. தாமிரபரணி பிறந்த நாளான வைகாசி விசாகம் அன்று குபேரன் இந்த ஆற்றில் மூழ்கிதான் குபேர பேறு பெற்றான் என்று புராணங்கள் கூறுகின்றன.

    12. கங்கை நதி தன் பாப அழுக்கை போக்க மார்கழி மாதம் தோறும் தாமிரபரணியில் வந்து அடைக்கலம் ஆகி விடுவாள். ஆகவே மார்கழி மாதம் தாமிரபரணியில் எந்த இடத்தில் நீராடினாலும் கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும்.

    13. சேர்ந்த பூ மங்கலத்தில் தாமிரபரணி நதியின் சங்கு முகத்தில் நீராடி கடலரசனும் அகத்திய பெருமானும் ரோமரிஷியும் நீராடி நற்கதியடைந்தனர்.

    14. தசரதனுக்கு ராமபிரான் தாமிரபரணியின் பாணதீர்த்தத்தில்தான் தர்ப்பணம் செய்தார். எனவே தாமிரபரணியில் ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசையில் லட்சக்கணக்கானவர்கள் நீராடி நலம் பெறுகிறார்கள்.

    15. தாமிரபரணி வங்க கடலில் சேரும் சங்குமுகத்தில் நீராடினால் தங்களது பாவம் போய் விடும். முன்னோர்களுக்கு தர்பணம் செய்ய பாணதீர்த்தம் போலவே சங்கு முகமும் ஒரு சிறந்த இடமாகும்.



    16. தாமிரபரணியில் மிக முக்கிய தீர்த்தமாக கருதப்படுவது பாணதீர்த்தம், பாபநாச தீர்த்தம், ஊர்காட்டில் உள்ள கோடிஸ்வர தீர்த்தம், திருப்புடைமருதூரில் உள்ள சுரேந்திரமோட்ச தீர்த்தம், திருநெல்வேலியில் சிந்துபூந்துறை தீர்த்தம் மற்றும் சங்குமுக தீர்த்தம் போன்ற தீர்த்தமாகும்.

    17. தாமிரபரணி நதி வங்க கடலில் கலக்கும் இடத்தில் சங்கு தீர்த்தம் இருப்பதால் இந்த தீர்த்தத்தில் வந்து தீர்த்தம் எடுத்து கோவிலுக்கு கும்பாபிசேகம் நடத்தினால் மிகவும் நல்லது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நிறைய ஆலயங்களுக்கு திருவிழா, கொடை விழா நடக்கும் போது இந்த தீர்த்தத்தில் இருந்துதான் தீர்த்தம் எடுத்து செல்கிறார்கள்.

    18. தாமிரபரணி ஆற்றில் ஒருமுறை நீராடினால் ஒரு லட்சம் தடவை காயத்திரி மந்திரம் ஜெபித்த புண்ணியம் கிடைக்கும் என்ற ஐதீகம் உள்ளது.

    19. தாமிரபரணி புஷ்கரத்தை முன்னிட்டு ஸ்ரீதாமிரபரணி சிலை உருவாக்கப்பட்டுள்ளது. சிருங்கேரி ஐகத்குரு பாரதி தீர்த்தர் பூஜை செய்து கொடுத்துள்ள இந்த சிலைக்கு புஷ்கரம் நடக்கும் 12 நாட்களும் சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    20. தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரில் தாமிரசத்தும், மூலிகைகளும் அதிகம் உள்ளன. இதனால்தான் தாமிரபரணியில் நீராடினால் நோய்கள் குணமாகிறது.

    21. தாமிரபரணி நதிக்கரையில் நவ கைலாயமும், நவ திருப்பதிகளும் உள்ளன. தமிழ்நாட்டில் வேறு எந்த நதிக்கும் இத்தகைய சிறப்பு இல்லை.

    22. ஆழ்வார் திருநகரியில் இருக்கும் நம்மாழ்வார் திருமேனி தாமிரபரணி புனித நீரால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    23. தாமிரபரணி ஆறு கடல் மட்டத்தில் இருந்து சுமார் 6 ஆயிரம் அடி உயர பொதிகை மலையில் தோன்றுவது குறிப்பிடத்தக்கது.

    24. தமிழ்நாட்டில் காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, தாமிரபரணி ஆகிய ஐந்தும் முக்கிய நதிகளாகும். இதில் தமிழ்நாட்டிலேயே தோன்றி, தமிழ் நாட்டிலேயே கடலில் சங்கமிக்கும் ஒரே நதி தாமிரபரணி நதிதான்.

    25. தாமிரபரணிக்கு பச்சையாறு, மணிமுத்தாறு, குற்றாலம் அமைந்துள்ள சித்தாறு, ராமநதி, கடனாநதி, உப்பாறு ஆகிய உபநதிகள் உள்ளன. தாமிரபரணியிலும், உப நதிகளிலும் 37 அணைக்கட்டுகள், 7 நீர்த்தேக்கங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் எந்த ஒரு நதியிலும் இந்த அளவுக்கு அணைக்கட்டுகள் கிடையாது.

    26. தாமிரபரணி நீர் பிடிப்புப் பகுதிகளில் ஆண்டுக்கு 1082 மி.மீ. மழை பெய்கிறது. இதில் 50 சதவீதம் கடலில் கலந்து வீணாகிறது.

    27. தாமிரபரணி பல இடங்களில் மிக அகலமாக உள்ளது. சீவலப் பேரியில்தான் மிக அகலமாய் உள்ளது.

    28. தாமிரபரணியில் பரிகாரம் என்ற பெயரில் உடுத்தியுள்ள துணிகளை போட்டு விடாதீர்கள். அது குடும்பத்துக்கு தேவை இல்லாத தோஷங்களை ஏற்படுத்தி விடும்.

    29. தாமிரபரணி தண்ணீர் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். கடனா நதி பகுதியில் கரும்பாக இனிக்கும். சித்தாறு பகுதியில் குளிர்ச்சியாக இருக்கும். முறப்பநாடுக்கு பிறகு பளீர் வெள்ளை நிறமாக மாறி விடும்.

    30. தாமிரபரணி நதியில் காலை வைப்பதற்கு முன்பு, ‘‘தாயே உன்னைப் போற்றுகிறேன், என் பாவங்களைப் போக்கு’’ என்று கூறி வணங்கியபடி இறங்க வேண்டும். புனித நீராடும் போது குல தெய்வத்தை நினைத்து மானசீக வழிபாடு செய்து நீராட வேண்டும். காயத்ரி மந்திரம் உள்ளிட்ட மந்திரங்களை சொல்லி புனித நீராடுவது அதிக பலன்களை அள்ளித் தரும்.
    நெல்லை தாமிரபரணியில் மகாபுஷ்கர விழா தொடங்கியுள்ளது. இனி தாமிரபரணி நதியின் மகிமையையும், அது பிறந்த வரலாற்றையும் காணலாம்.
    குருபகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி, 11.-10-.2018 அன்று இரவு 7.17 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதாவது தாமிரபரணி நதியில் குருபகவான் பிரவேசிக்கிறார். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு புண்ணிய நதியில் நீராடக் கூடாது என்பதால், 12-10-2018 (வெள்ளி) அன்று காலை தாமிரபரணி புஷ்கர விழா நெல்லையில் தொடங்கியுள்ளது.

    கி.பி. 1874-ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த ஆண்டு “மஹா புஷ்கரம்” என்ற மகோன்னத நிலையை, பெரும் மகிமையை தாமிரபரணி நதி அடையவிருக்கிறது. ‘மஹா’ என்றால் ‘பெரிய’ என்று பொருள். அகில ரூபமாக விளங்கும் இறைவனின் சொரூபமாகவே இந்நதி மாறி விடுகின்ற காலம் இது.

    இதனால் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள மண்ணும் மகா பவித்திரம் (தூய்மை) ஆகிறது. அதை நெற்றியில் பூசிக் கொள்வதாலேயே கங்கையில் நீராடிய பலன் கிடைக்கிறது. தாமிரபரணியிலிருந்து வீசும் காற்று தன் தேகத்தில் படுவதாலேயே ஆத்மா புனிதமடைகிறது. இனி தாமிரபரணி நதியின் மகிமையையும், அது பிறந்த வரலாற்றையும் காணலாம்.

    சிவபெருமானால் உருவாக்கப்பட்ட நதி :

    சிவபெருமான், பார்வதி தேவியாரைக் கைலாய மலையில் திருமணம் செய்த பொழுது, தேவர் முதலியோர் வடதிசையில் வந்து குவிந்ததால் தென்திசை உயர்ந்தது. இதை சமப்படுத்த எண்ணிய சிவபெருமான் அகத்திய முனிவரை அழைத்து, “தென்நாடு செல்க” எனக் கட்டளையிட்டார். அக்கட்டளைக்கு அடிபணிந்த அகத்தியர் சிவபெருமானிடம், “அது தமிழ்நாடு. தமிழ் பாஷை தமக்குத் தெரியாது. ஆகவே அதை எமக்கு சொல்லித் தருக” எனக் கேட்டனர்.

    உடனே சிவபெருமான் அகத்தியரை தம் அருகில் அமர வைத்து அவருக்கு தமிழ் மொழியைக் கற்பித்தார் என்று கந்த புராணம் கூறுகிறது. தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டு பொதிகை மலையில் வந்து அமர்ந்தார் அகத்தியர். சூரியபகவான் அவர் முன் தோன்றி தமிழ் இலக்கணங்களையெல்லாம் கற்றுக் கொடுத்தார். முருகப் பெருமானும் அவ்வப்போது அகத்தியர் முன் தோன்றி தமிழ் மொழியின் பல சிறப்புக் கூறுகளை உபதேசித்ததாக கந்த புராணம் சொல்கிறது.

    முதல் தமிழ்ச் சங்கத்தை நிறுவி அதன் முதல்வராய் இருந்து தமிழை வளர்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டார் அகத்தியர். பொதிகை மலையில் தங்கி அகத்தியரால் இயற்றப்பட்ட எழுத்துச் சொற்பொருள், யாப்பு, அணி முதலிய அடங்கிய இலக்கணத் தமிழ் நூல் “அகத்தியம்” எனப்படும். கலியுகத்திற்கு 4573 வருடங்களுக்கு முன் பிறந்தவர் அகத்தியர். கி.மு. 7673-ம் ஆண்டு கும்ப மாதத்தில் (மாசி மாதத்தில்) கும்ப ராசியில், கும்ப லக்னத்தில், ஒரு கும்பத்தில் பிறந்தவர் அகத்தியர். எனவே, இவருக்கு ‘கும்பமுனி’ என்ற பெயர் ஏற்பட்டது.

    அகத்தியரின் காலத்தை வைத்துப் பார்க்கும் போது அவரால் இயற்றப்பட்ட ‘அகத்தியம்’ என்ற தமிழ் இலக்கண நூல் 9600 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனத் தெரிய வருகிறது. அகத்தியர் பொதிகை மலையில் தங்கி தமிழ்ப்பணி செய்யும் போது சிவபெருமான் அவர் முன் தோன்றி “உனக்கு இங்கே என்ன வேண்டும்? கேள். தருகிறேன்” என்றார்.

    “எனக்கு நீராட நதி ஒன்று வேண்டும்” என்றார் அகத்தியர். உடனே, பொதிகை மலையில் நதி ஒன்றை உருவாக்கி அதை அவருக்கே தானமாகக் கொடுத்தார் சிவபெருமான். இந்நதி உருவான போது, அது தாம்பிர வர்ணத்தில் இருந்ததால் அதற்கு ‘தாம்பிர வர்ணி’ என்று பெயர் சூட்டினார் ஈசனார். காலப் போக்கில் அது தாமிரபரணி என்று மாற்றம் பெற்றது.

    தாமிரபரணியின் உற்பத்தி ஸ்தானம் பாண தீர்த்தம் எனப்படும். இது பொதிகை மலையில் உள்ளது. இதை அடைவது மிகக் கடினம். 1730 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக 125 கி.மீட்டர் தூரம் பயணம் செய்து தூத்துக்குடிக்கும் திருச்செந்தூருக்கும் இடையே புன்னைக்காயல் என்ற இடத்தில் வங்கக்கடலில் சங்கமமாகிறது தாமிரபரணி.

    வற்றாத ஜீவ நதியாக வருடம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும் இந்நதிக்கரையில் உள்ள திருநெல்வேலியில் தான் நடராஜப் பெருமானின் நாட்டிய சபைகளுள் ஒன்றான “தாமிரசபை” அமைந்துள்ளது.இந்நதிக்கரையில் ஏராளமான திருக்கோயில்கள் உள்ளன. ‘நவகைலாயம்’ என்று புகழ் பெற்ற ஒன்பது கைலாயங்கள் இந்நதிக்கரையில் உள்ளன. நவதிருப்பதி என்று புகழ் பெற்ற ஒன்பது வைணவ தலங்களும், தாமிரபரணி நதிக்கரையின் அருகிலேயே அமைந்துள்ளன.

    சைவமும், வைணவமும் ஞான சுகங்களை பிறப்பிக்கும் இடமாக தாமிரபரணி நதிக்கரை விளங்குகிறது. இத்தகைய புனித நதியான தாமிரபரணி நதியில் படைப்புக் கடவுளான பிரம்மனின் புஷ்கரம் வரும் 12-10-2018 அன்று முதல் கலந்து கரைந்து போகவிருக்கிறது. இதன் மூலம் தெய்வீகமான இன்னியல்பு தாமிரபரணிக்கு அதிகரிக்கவிருக்கிறது. புதிய புனிதம் ஒன்று அதற்கு வந்து சேரவிருக்கிறது.

    12-10-2018 முதல் 23-10-2018 வரை மஹா புஷ்கரம் என்ற பெயரோடு முற்றிலும் புனித நிலையில் 12 நாட்கள் பரமானந்த சொரூபமாய் நிலைத்திருக்கவிருக்கிறது தாமிரபரணி. பரம புண்ணியமயமாகும் இந்நதியில், எல்லாவற்றின் ஆத்மாவாகவும் விளங்குகின்ற பிரம்ம தேவர் அமர்ந்து அந்த நதியைத் தன்மயமாக்கிக் கொண்டு சகல ஜனங்களுக்கும் நன்மை உண்டாகும் பொருட்டு அருள்பாலிக்கின்றார்.

    இந்த தீர்த்தத்தில் பிரம்மாவோடு விஷ்ணுவும், ருத்திரரும் சகல தேவர்களுடன் வசிக்கிறார்கள். இந்த புஷ்கர தீர்த்தத்தில் (தாமிரபரணியில்) பலகோடி தீர்த்தங்கள் சங்கமமாகின்றன. அதனால் சகல தீர்த்தங்களிலும் நீராடிய பலனை இந்த புஷ்கர தீர்த்தமே அளிக்கிறது. புஷ்கர தீர்த்த ஸ்நானம் செய்பவரை அவருடைய பித்ருக்கள் எல்லோரும் மற்றும் தேவர்களும் வாழ்த்துகிறார்கள்.

    ஏனென்றால் அது பித்ருக்களுக்கும் மோட்சம் அளித்து தேவ கணங்களுக்கும் பிரீதி, சந்தோஷம் அளிக்கிறது.இதனால் தரித்திரம் நீங்கி சிறப்பான பலன்களை அடைய முடியும். மந்திரதந்திரங்கள், பில்லி, சூனியம், ஏவல் போன்ற தோஷங்கள் உங்களை நெருங்காது.



    சரி, இந்த 12 நாள் நீராடல் என்ற கணக்கு எப்படி வந்தது?


    ஜோதிட சாஸ்திரப்படி ராசிகள் மொத்தம் 12. ஒவ்வொரு ராசிக்கு ஒரு நாள் வீதம் 12 ராசிக்காரர்களுக்கு 12 நாள் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதன் விபரம் வருமாறு:-

    வ.எண்.  - தேதி -  கிழமை ராசி

    1.    12.10.2018     (வெள்ளி)     விருச்சிகம்
    2.    13.10.2018 (சனி)     தனுசு
    3.    14.10.2018 (ஞாயிறு)     மகரம்
    4.    15.10.2018 (திங்கள்)     கும்பம்
    5.    16.10.2018     (செவ்வாய்) மீனம்
    6.    17.10.2018 (புதன்)     மேஷம்
    7.    18.10.2018     (வியாழன்) ரிஷபம்
    8.    19.10.2018     (வெள்ளி)     மிதுனம்
    9.    20.10.2018 (சனி)     கடகம்
    10.    21.10.2018 (ஞாயிறு)     சிம்மம்
    11.    22.10.2018 (திங்கள்)     கன்னி
    12.    23.10.2018 (செவ்வாய்) துலாம்

    ஒவ்வொருவரும் தமது ஜென்ம ராசிக்குரிய தேதி, கிழமையில் நீராடுவதால் முழுப்பலன் கிட்டும்.குடும்பத்தலைவரோடு தொலை தூரத்திலிருந்து நீராட வருகின்றவர்கள் குடும்பத் தலைவரின் (தந்தையின்) ஜென்ம ராசி எதுவோ அந்த ராசிக்குரிய நாள், கிழமையில் நீராடினாலே போதும். அது குடும்பம் முழுவதும் பிரகாசத்தைக் கொண்டு வரும்.

    மலர் தூவி வழிபடுதல் :

    நல்ல மனதுக்குப் புறச்சின்னமாய் அமைந்திருப்பது மலர். அதனிடத்துப் புதுமையும், எழிலும், மணமும் திகழ்ந்து கொண்டிருக்கின்றன. மனது என்றென்றும் மலர் போன்று இருத்தல் வேண்டும். அத்தகைய மனதைக் கடவுளிடத்து ஒப்படைப்பதற்கு அறிகுறியாகக் கையால் மலரை எடுத்துக் கடவுளுக்குத் தூவுகிறோம். அச்செயல் இறைவனுக்கு மிகவும் பிடித்த செயல் ஆகிறது.

    தாமிரபரணி நதியில் நீராடி முடித்தவுடன் குருபகவானுக்கு உகந்த மஞ்சள் நிற மலர்களை நதியில் விடுவதும், மஞ்சள் துண்டுகளைப் போடுவதும், மஞ்சள் தூளைக் கொட்டுவதும் சிறந்த செயலாகும். பொருள் வசதி கொண்டோர் தங்கக் காசுகளை நதி நீரில் விடலாம். தாமிரபரணி நதிக்கு கற்பூர ஆரத்தி எடுத்து பூஜை செய்வது சிறப்பு.

    சிரார்த்தம் (திதி) கொடுத்தல் :

    “புஷ்கரம் எனும் புனித நதிக்கரையில் செய்யப்பட்ட சிரார்த்தம், ஜபம், ஹோமம், தபசுகள் அட்சயமான (அழிவற்ற) பலனைக் கொடுக்கின்றன” என்று வியாச முனிவர் கூறுகின்றார். இங்கே திதி கொடுப்பது காசி, கயாவில் கொடுப்பதற்குச் சமம். இங்கே பிண்ட தானம் செய்பவர் தனது பித்ருக்கள் அனைவருக்கும் திருப்தியளித்தவர் ஆகிறார். அவருடைய பித்ருக்கள் பிரளய காலம் வரையிலுமே மிகவும் திருப்தியுடன் இருப்பார்கள். இங்கே பித்ரு காரியம் செய்பவர் தனது மூதாதையர் அனைவரும் விமோசனம் அடைவதற்கு வழி செய்தவராவார்.

    நதிக்கரையில் பித்ரு காரியம் செய்பவர்கள் ஒரு சிறிய துணிப் பந்தல் அமைத்து அதனடியில் அமர்ந்து இதைச் செய்ய வேண்டும். வெட்ட வெளியில் செய்யக்கூடாது என்பது தர்ம சாஸ்திர விதி.


     
    தாமிரபரணியில் எங்கே நீராடலாம்? :

    தாமிரபரணி நதிக்கரை யில் பாபநாசம் முதல் புன்னைக்காயல் (முகத்துவாரம்) வரை மொத்தம் 143 படித்துறைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது.
    இதில் எந்த படித்துறையில் வேண்டுமானாலும் நீராடலாம்; திதி கொடுக்கலாம்; தானம் செய்யலாம் என்றாலும் நவகைலாயம் அமைந்துள்ள ஒன்பது சிவ திருத்தலங்களில் நீராடுவது அதிக மகிமை உடையதாகும்.

    நடராஜமூர்த்தியின் ஐந்து நாட்டிய சபைகளுள் ஒன்றான “தாமிரசபை” அமைந்துள்ள திருநெல்வேலி தாமிரபரணி நதி “பிரம்ம தீர்த்தம்” எனப்படும். ஆகவே, திருநெல்வேலி நகர் முழுமையும் உள்ள தாமிரபரணி நதியில் நீராடுவதும் அதிகமான நற்பலனைத்தரும். ஆலயம் உள்ள தலத்தில் ஓடும் நதி அதிக சுபகரமானதாகும். அது அதிக சுகத்தையும் மங்களத்தையும் கொடுக்கும். ஆகவே ஆலயம் உள்ள இடங்களில் நீராடுவது நல்லது.

    யாகம் நடத்துதல் :

    உலக மக்கள் நலன் கருதி புஷ்கர தீர்த்தக் கரையில் 12 நாட்களும் யாகம் நடத்த வேண்டும் என்று பத்மபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.தாமிரபரணி நதி பாய்கின்ற ஊர்களில் வசிக்கின்ற மக்கள் எல்லாம் ஒன்று கூடி யாகம் நடத்தினால் ஊர் செழிக்கும், ஒற்றுமை மேலோங்கும் என்று சொல்லப்பட்டு உள்ளது. ஒவ்வொரு ராசிக்காரர்கள் ஒன்று கூடி நிதி திரட்டி இந்த யாகத்தை நடத்தி நன்மை பெறலாம்.

    12-10-2018 அன்று விருச்சிக ராசிக்காரர்களும், அதன் பின்னர் தனுசு, மகரம், கும்பம், மீனம், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம் ஆகிய ராசிக்காரர்களும் என வரிசையாக 12 நாட்கள் யாகம் நடத்தலாம். ‘புஷ்கர்’ என்றால் தாமரை. பிரம்மாவின் கையிலிருந்து தாமரை ரசாதலத்தின் மேல் விழுந்ததின் காரணமாக புஷ்கர தீர்த்தம் உண்டாயிற்று என்று பத்ம புராணம் கூறுகிறது. பிரம்மம் என்று சொல்லப்படுகின்ற பரம்பொருளே யாகங்களுக்கு தலைவரான சாஸ்வதப் பிரபு ஆவார்.

    யாகங்களை நாம் நடத்துவதன் மூலம் பிரம்மன் முதலான அனைத்து கடவுளர்களும் அந்த யாகங்களில் தோன்றி நம்மை ஆசீர்வதிக்கின்றனர்.
    அந்தக் காரணத்தினால் இவ்விடத்தில் சிரத்தையோடு வேத பாடங்களை உச்சரிப்பவர்களும், விதிமுறைப்படி மந்திரங்களை உச்சரிப்பவர்களும் குரு பகவானின் கிருபையால் பல நன்மைகளை அடைவார்கள்.

    ஆன்மிக சொற்பொழிவுகள், பக்திக் கச்சேரிகள், கர்நாடக இசை நிகழ்ச்சிகள், வில்லிசை, நாதஸ்வர கச்சேரிகள், நாட்டியாஞ்சலிகள் என நாளும் ஒரு பக்தி நிகழ்ச்சி நடத்தி அன்னை தாமிரபரணியிடம் சிரத்தை, பக்தி, விசுவாசம் கொண்டு அத்யாத்மிக அன்போடு உங்களை பரிபூரணமாக்கி ஒருவிதமான கசப்பும் இல்லாமல் ஊர் முழுக்க ஒற்றுமையோடும் வளமோடும் ஆயுள் ஆரோக்கியத்தோடும் வாழப் பிரார்த்திக்க வேண்டும்.

    பஜனை, தியானம் :

    இறைவன் ஆட்சி புரியும் உன்னதமான தாமிரபரணி நதிக் கரையில் விடியற்காலை சாத்வீகமான நேரத்தில் பிரார்த்தனை, தியானம், காயத்ரி ஜபம், பிராணாயாமம், பஜனை, ஜபம், நாம சங்கீர்த்தனம் இவைகளைச் செய்வதால் சாந்தி, ஆனந்தம், விவேகம், வைராக்கியம் எல்லாம் கிடைக்கும். பிரம்ம முகூர்த்தத்தில் 15 நிமிடம் தியானம் செய்தால் வேறு காலத்தில் இரண்டு மணி நேரம் தியானம் செய்ததற்கு சமமாகும்.

    எல்லா மொழிகள் பேசும் மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சாதுக்கள், ஞானிகள், தபஸ்விகள், ஆன்மீகப் பெரியவர்கள் இந்த விழாவில் பங்கேற்கவிருக்கிறார்கள். வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானோர் இங்கு வருகை தர விருப்பம் கொண்டு அதற்கான செயல்களில் ஈடுபட்டு இருக்கிறார்கள். தாமிரபரணி நதி தீரம் இப்போதே தீபங்களால் சுடரொளியுடன் பிரகாசிக்கத் தொடங்கி விட்டது.

    144 ஆண்டுகளுக்குப் பிறகு புனித நீராடும் நல்லதோர் வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது. இனி 2162 ஆம் ஆண்டில்தான் இந்தப் பெரும் பாக்கியம் நமக்குக் கிட்டும். எந்த ஒரு காரியத்தை எடுத்துக் கொண்டாலும் அதை மனப் பூர்வமாகச் செய்தால் பகவான் அதற்குப் பரிபூரணமாக அனுக்கிரகம் புரிவார்.

    இந்த நதி நீராடல், சிரார்த்தம், தானம் இவைகளை மனப் பூர்வமாகச் செய்து ஒவ்வொருவரும் பேரானந்தத்தையும், தெய்வீக சாந்தியையும், வாழ்வில் வெற்றியையும் அடைய வேண்டும். மண்ணையும் மனிதனையும் வளமாக்கும் அன்னை தாமிரபரணியின் அருள் எப்பொழுதும் உங்கள் மேல் இருக்கட்டும்.

    புஷ்கர புண்ணிய காலத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா, தேவர்கள், ரிஷிகள் போன்றோர் தாமிரபரணி நதியில் வாசம் செய்வதால் இந்த புண்ணிய காலங்களில் நதியில் நீராடுவதால் மூன்றரை கோடி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்த பலனும், அன்னதானம், வஸ்திரதானம் போன்ற பல தானங்களை செய்தால் பன்மடங்கு பலனையும் தரும், இந்த மகா புஷ்கரமானது எல்லா ராசிக்கும் உகந்தது என்றும், இந்த குருப்பெயர்ச்சியின்போது மேஷம், மிதுனம், கன்னி, விருச்சிகம், தனுசு, மீனம் ராசிக்காரர்கள் பரிகாரம் செய்வது மிகவும் அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    புஷ்கர காலங்களில் தானங்கள் செய்வது சிறந்த பரிகாரம் ஆகும். பித்ருக்களுக்கு தர்பணம், திதி முதலிய சடங்குகள் செய்து முன்னோர்களை வழிபட்டால் பிதிர்சாபம் நீங்கி வாழ்க்கையில் சகல நன்மைகளும் கிடைக்கப்பெறுவார்கள்.

    தாமிரபரணி மகாத்மியம் :

    வட இந்தியாவில் உள்ள கங்கை, யமுனை, சரையூ போன்ற நதிகளுக்கு ஈடாக தென்னிந்தியாவில் தாமிரபரணி மிகவும் பிரசித்தி பெற்றது. இதன் பெருமையை உணர்ந்த வேத வியாசர் தனது மகனாகிய சுக பிரம்ம ரிஷிக்கு தாமிரபரணியின் பெருமையை உபதேசம் செய்தார். அந்த உபதேச நூல்தான் ஸ்ரீதாமிரபரணி மகாத்மியம்.

    தாமிரபரணியில் கல்கி அவதாரம் :


    தாமிரபரணி நதிக்கரையில்தான், தசாவதாரத்தில் நிறைவான அவதாரமான கல்கி அவதாரம் நிகழப்போவதாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது.
    தாமிரபரணி கடலில் சங்கமிக்கும் முகத்துவாரத்தில் உலகத்திலேயே மிக அரிதான விலை உயர்ந்த முத்துக்கள் விளைந்ததாக இலக்கியங்களும் வரலாறும் பேசுகின்றன. தொன்மை வாய்ந்த இந்தத் தாமிரபரணி நதியானது, கடல்கோள் நிகழ்வதற்கு முன்னதாக இன்றைய இலங்கை வரை சென்று செழுமை சேர்த்திருக்கிறது. இதுபற்றிய குறிப்புகள் வரலாற்று நூல்களிலும், இலக்கியங்களிலும் நிறையவே காணப்படுகின்றன.

    தாமிரபரணி பொதிகை மலையில் இருந்து சமவெளி பகுதியில் பாயும் முதல் இடமான பாபநாசத்தில் சித்தர்கள் கோட்டம் ஒருங்கிணைப்பில் தமிழ் ஆகம முறைப்படி 16 வகை தீப ஆராதனைகள் தாமிரபரணிக்கு வழிபாடு செய்ய உள்ளனர்.  மேலும் அகத்தியர் மாமுனிவரின் 10 அடி உயர திரு உருவச் சிலை விழா மேடை அருகே வைக்க பட உள்ளது.

    -எட்டயபுரம் க. கோபிகிருஷ்ணன் (ஜோதிடர்)
    செல்: 98407 67760



    தாமிரபரணி மகா புஷ்கர விழாவையொட்டி ஆற்று படித்துறைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
    தாமிரபரணி மகா புஷ்கர விழா 144 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 11-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தாமிரபரணி ஆற்றில் உள்ள தீர்த்தக்கட்டங்களில் புனிதநீராடி வருகின்றனர். தாமிரபரணி ஆற்றுக்கு தீப ஆரத்தி எடுத்து வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது. இதில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பங்கேற்ற வண்ணம் உள்ளனர்.

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. வெளியூர்களில் இருந்து நெல்லைக்கு வந்த ரெயில்கள், பஸ்களில் ஏராளமான மக்கள் வந்தனர். இதுதவிர கார், வேன்களிலும் ஏராளமானோர் வந்தனர்.

    நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டபம், குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோவில் படித்துறை, மேலநத்தம் அக்னிதீர்த்த கட்டம், சிந்துபூந்துறை சப்ததீர்த்த கட்டம், வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் படித்துறை, எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை அருகில் உள்ள ஜடாயு துறை, மணிமூர்த்தீசுவரம் உச்சிஷ்ட கணபதி கோவில் படித்துறை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    சேரன்மாதேவியில் தாமிரபரணிக்கு ஆரத்தி பூஜை நடந்தபோது எடுத்த படம்.

    இதுதவிர பலர் ஆற்றில் பரவலாக அனைத்து இடங்களிலும் குளித்தனர். தாமிரபரணி ஆற்றில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காட்சி அளித்தது. ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவு மக்கள் வந்திருந்தனர்.

    கூட்ட நெரிசல் காரணமாக தாமிரபரணி ஆற்றில் பாதுகாப்பு நடவடிக்கையாக தண்ணீர் திறப்பு அளவு குறைக்கப்பட்டது. தைப்பூச மண்டப படித்துறையில் நேற்று காலை வேத பாராயணம், ஹோமங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து பன்னிரு திருமுறை பாராயணம் நடைபெற்றது.

    மேலதிருவேங்கடநாதபுரம் தாமிரபரணி ஆற்றில் உள்ள சீனிவாச தீர்த்த கட்டத்தில் நேற்று அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இங்கு பக்தர்கள் புனிதநீராடி சீனிவாச பெருமாள் கோவிலில் தரிசனம் செய்தனர்.

    தாமிரபரணி ஆற்றில் உள்ள தீர்த்தகட்டங்கள் பகுதியில் நேற்று கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
    பாபநாசத்தில் உள்ள 28-வது தீர்த்தக் கட்டமான திரிநதி சங்கம தீர்த்தத்தில் தாமிரவருணி மஹா புஷ்கர தீப ஆரத்தி பெருவிழா அக்டோபர் 4 முதல் 22 வரை நடைபெறுகிறது.
    பாபநாசத்தில் உள்ள 28-வது தீர்த்தக் கட்டமான திரிநதி சங்கம தீர்த்தத்தில் தாமிரவருணி மஹா புஷ்கர தீப ஆரத்தி பெருவிழா அக்டோபர் 4 முதல் 22 வரை நடைபெறுகிறது. சித்தர்கள் கோட்டம், பாபநாசம், விக்கிரமசிங்கபுரம் ஊர் பொதுமக்கள் சார்பில் இந்த புஷ்கர விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில் சிவனடியார்களை கொண்டு தமிழ் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறும்.

    வரும் அக்டோபர் 3-ந்தேதி இரவு பொதிகை மலையில் வசிக்கும் காணிக்கார சமூகத்தினர் நடத்தும் சாத்துப்பட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 4-ந்தேதி தாமிரவருணிக்கு தீப ஆரத்தி விழா, கால்கோள் விழா ஆகியவை அனைத்து சமுதாயத் தலைவர்கள், ஊர் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

    மேலும் காலை 8 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு ஆகியவையும், காலை 10.30 மணிக்கு தாமிரவருணி நதியின் உற்பத்தி வரலாறு பற்றிய ஓவியக் கண்காட்சியும் நடைபெறுகிறது. காலை 11.30 மணிக்கு 28-வது தீர்த்தக் கட்டமான திரிநதி சங்கம தீர்த்த பகுதியில் பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். மாலை 6 மணிக்கு தாமிரவருணி சகஸ்ரநாம பாராயண வழிபாடும், தீப ஆரத்தியும் நடைபெறுகிறது.

    அக்டோபர் 5-ந்தேதி காலை 10.30 மணிக்கு திருவாசகம் முற்றோதுதல், 6-ந் தேதி காலை 10.30 மணிக்கு தேவாரம் முற்றோதுதல், 7-ந்தேதி மாலை 5 மணிக்கு ஆதிபராசக்தி மன்றம் சார்பில் தீப வழிபாடு, 8-ந்தேதி பிற்பகல் 3.30 மணிக்கு விக்கிரமசிங்கபுரம் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் நடத்தும் ஐயப்பன் வழிபாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    9-ந்தேதி காலை 10.30 மணிக்கு அருட்பா பாராயணம், 10-ந் தேதி காலை 10.30 மணிக்கு தாமிரவருணி நதி பற்றிய கவியரங்கம், ஓவியப் போட்டி, மாலை 6 மணிக்கு ராமபூதத்தான் தெய்வீக கருத்தரங்கம் ஆகியவை நடைபெறுகிறது. அக்டோபர் 11-ந்தேதி காலை 7.30 மணியளவில் புனித தீர்த்தமான கல்யாண தீர்த்தத்தில் இருந்து அடியார்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் தீர்த்த கலசங்களுடன் ஊர்வலமாக வந்து நதிக்கு வழிபாடு தொடங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அன்றைய தினம் மாலை 6.15 மணியளவில் பஞ்சபூத மேடையில் 16 வகை தீபங்கள், 5 வகை உபச்சாரங்களுடன் தமிழ் ஆகம விதிப்படி சிவனடியார்களால் மகா ஆரத்தி நிகழ்ச்சி நடைபெறும். இதை மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தொடங்கி வைக் கவுள்ளார்.

    12-ந்தேதி நடைபெறும் தீப ஆரத்தி பெருவிழாவில் தமிழக அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களும், 13-ந்தேதி நடைபெறும் தீப ஆரத்தி விழாவில் நீதியரசர்கள் மற்றும் வக்கீல்களும், 14-ந்தேதி நடைபெறும் தீப ஆரத்தி விழாவில் உலக தமிழ் வர்த்தக குழுவினரும், 15-ந்தேதி நடைபெறும் தீப ஆரத்தி விழாவில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரும் பங்கேற்கிறார்கள்.

    16-ந்தேதி நடைபெறும் விழாவில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், 17-ந்தேதி நடைபெறும் விழாவில் இந்து முன்னணி பிரதிநிதிகள் என ஒவ்வொரு நாளிலும் பல்வேறு தரப்பினர் பங்கேற்கிறார்கள். புஷ்கர விழாவை சிறப்பாக நடத்துவதற்காக 400 தன்னார்வத் தொண்டர்களை நியமித்திருக்கிறோம். இவர்கள் 27 குழுவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களில் 25--க்கும் மேற்பட்டவர்கள், பல்வேறு மாநிலத்தவர்க ளுக்கு உதவும் வகையில் பல மொழிகளை பேசக்கூடியவர்கள். இதுதவிர சாதுக்கள், பொதுமக்கள் என அனைவரையும் தங்க வைப்பதற்காக 13 திருமண மண்டபங்களை தயார் நிலையில் வைத்துள்ளனர். அந்த மண்டபங்களில் கூடுதல் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    தாமிரபரணியில் நெய் தீப ஆரத்தி மட்டுமே நடைபெறும். பூஜைக்காக பூக்கள் பயன்படுத்தப்பட மாட்டாது. அதனால் நதி மாசடைய வாய்ப்பில்லை என்கின்றனர் விழா குழுவினர்.
    தாமிரபரணி படித்துறை தீர்த்தக்கட்டங்கள் அனைத்திலும் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. விழாவின் நிறைவுநாளான 24-ந்தேதி 5,004 திருவிளக்கு பூஜை நடக்கிறது.
    தாமிரபரணி ஆற்றில் சுவாமிக்கு தீர்த்தவாரி நடைபெறக் கூடிய படித்துறைகள் அனைத்தும் தீர்த்தக்கட்டம் என்று அழைக்கப்படுகின்றன. இந்த தீர்த்தக்கட்டங்கள் அனைத்திலும் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. தாமிரபரணி ஆற்றில் 149 தீர்த்தக்கட்டங்கள் உள்ளன.

    தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு முதல் புன்னக்காயல் வரை பாய்ந்து ஓடும் தாமிரபரணி ஆற்றில் படித்துறைகளில் பூஜைகள் நடக்கிறது. முறப்பநாடு, ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ஏரல், முக்காணி, ஆத்தூர், சேர்ந்தப்பூமங்கலம் ஆகிய இடங்களில் புஷ்கர விழா பூஜைகள் நடக்கிறது.

    இந்த படித்துறைகளில் அந்தந்த ஊர் மக்கள் சார்பில் தினமும் புஷ்கர பூஜைகள், சிறிய அளவிலான ஹோமங்கள் நடத்தப்படுகிறது. தினமும் மாலையில் தாமிரபரணி நதிக்கு ஆரத்தி எடுக்கும் நதி ஆராதனை நிகழ்ச்சி நடக்கிறது.

    முறப்பநாட்டில் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் அமிர்த மிருத்ஞ்சய ஹோமம் நடக்கிறது. பிரமாண்டமான அதிருத்ர பெருவேள்வி நடக்கிறது. மக்கள் தாமிரபரணிக்கு விளக்கு ஏற்றி ஆராதனை செய்யும் வகையில் தீபலட்சுமி பூஜை நடக்கிறது. இதில் மக்கள் தீபங்களை ஏற்றி ஆராதனை செய்யலாம். விழாவின் நிறைவுநாளான 24-ந்தேதி 5,004 திருவிளக்கு பூஜை நடக்கிறது.

    ‘மகா புஷ்கரம்’ என்பது 144 ஆண்டுகளுக்கு (12 x 12 = 144) ஒரு முறை கொண்டாடப்படும் மிகப்பெரிய திருவிழாவாகும்.
    (12-10-2018 முதல் 23-10-2018 வரை)

    ‘புஷ்கரம்’ என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவின் புனித நதிகளில் கொண்டாடப்படும் ஒரு திருவிழா, கும்பமேளா. ‘மகா புஷ்கரம்’ என்பது 144 ஆண்டுகளுக்கு (12 x 12 = 144) ஒரு முறை கொண்டாடப்படும் மிகப்பெரிய திருவிழாவாகும்.

    விழா பிறந்த கதை

    படைப்புக்கடவுளான பிரம்மாவின் கமண்டலத்தில் உள்ள நீருக்கு ‘புஷ்கரம்’ என்று பெயர். எப்பேர்ப்பட்ட கொடிய பாவத்தையும் போக்கும் சக்தி இந்த புனித நீருக்கு உண்டு. நவக்கிரகங்களில் அதிக சுபத்தன்மை கொண்டவர் குரு பகவான். இவருக்கு ஈடான சுபத்தன்மை வேறு எந்த கிரகத்திற்கும் கிடையாது.
    பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ண பகவான் “புரோகிதர்களுள் நான் பிருஹஸ்பதி” என்று குறிப்பிடுகிறார்.

    குரு பகவானுக்கு பிருஹஸ்பதி என்ற ஒரு பெயர் உண்டு. கிருஷ்ண பகவான் குரு பகவானைத் தம் ‘சொரூபம்’ என்கிறார். அதாவது ‘நானே குரு’ என்கிறார் கிருஷ்ணர். இத்தகைய சிறப்பு பெற்ற குருபகவானின் அதிதேவதை என்ற அந்தஸ்து பிரம்மாவுக்கு உண்டு.

    பிரம்மாவின் புத்திரர் ஆங்கிரச முனிவர். இந்த ஆங்கிரசரின் புத்திரர் குரு பகவான். ஆக பிரம்மாவின் பேரப்பிள்ளையே குரு பகவான்.

    குருபகவானின் தவம்

    பிரம்மாவின் கையில் உள்ள புஷ்கரத்தைப் பெற வேண்டி அவரை நோக்கி கடுந்தவம் செய்தார் குருபகவான். இந்த தவத்தை மெச்சிய பிரம்மன், அவரது விருப்பப்படியே தன்னிடமுள்ள புஷ்கரத்தை அவருக்கு வரமாக அளிக்க ஒப்புக் கொண்டார். ஆனால், அந்த புஷ்கரமோ பிரம்மனைப் பிரிந்து குருவுடன் செல்ல விரும்பவில்லை.

    பிரம்மன் ஏற்படுத்திய சமாதான உடன்பாட்டின் படி குருபகவான் மேஷராசி முதல் மீனராசி வரை உள்ள 12 ராசிகளிலும் இருக்கும் போது ஒவ்வொரு ராசிக்கும் உகந்த ஒவ்வொரு புண்ணிய நதியிலும் ‘புஷ்கரம்’ தங்கி இருப்பதென முடிவு ஏற்பட்டது. அதன்படி, பின்வரும் பன்னிரெண்டு ராசிகளுக்குரிய நதிகளில் குருபகவானின் சஞ்சார காலங்களில் புஷ்கரம் தங்கியிருக்கும்.

    ராசி    -  நதி
    மேஷம்    -  கங்கை
    ரிஷபம்    - நர்மதை
    மிதுனம்    -- சரஸ்வதி
    கடகம்    - யமுனை
    சிம்மம்    - கோதாவரி
    கன்னி    - கிருஷ்ணா
    துலாம்    - காவிரி
    விருச்சிகம் - தாமிரபரணி
    தனுசு    - சிந்து
    மகரம்    - துங்கபத்ரா
    கும்பம்    - பிரம்மநதி
    மீனம்    - பிரணீதா

    குரு பகவான் எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ அந்த ராசிக்குரிய நதியில் பிரம்ம புஷ்கரம் தங்கியிருக்கும். அப்போது, பிரம்மா, விஷ்ணு, சிவன் தமது தேவியருடன் அந்த நதியில் தங்கியிருப்பர். இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள் மற்றும் நதி தேவதைகளும் அந்த நதியில் தங்கியிருப்பர்.
    தாமிரபரணி புஷ்கரம் நடக்கும் 12 நாட்களும் புனித நீராடல் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு தானங்கள் செய்வதும் முக்கியமானதாகும்.
    தாமிரபரணி புஷ்கரம் நடக்கும் 12 நாட்களும் புனித நீராடல் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு தானங்கள் செய்வதும் முக்கியமானதாகும். இந்த 12 நாட்களும் இயன்ற அளவு தானம் செய்வது மிகவும் நல்லது. இயலாதவர்கள் இந்த 12 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் தங்களால் முடிந்த தானத்தை செய்யலாம்.

    யாருக்கு தானம் வேண்டும்? எங்கு தானம் செய்ய வேண்டும்? என்ன தானம் செய்ய வேண்டும்? எப்போது தானம் செய்ய வேண்டும்? எத்தனைப் பேருக்கு தானம் செய்ய வேண்டும்? என்பன போன்ற கேள்விகள் பெரும்பாலானவர்களுக்கு மனதில் எழக் கூடும்.

    கவலையே வேண்டாம்... ... உங்கள் சக்திக்கேற்ப, நீங்கள் என்ன பொருட்களை தானம் கொடுக்க முடியுமோ, அதை கொடுங்கள் போதும். உங்களால் 100 பேருக்கு அன்னதானம் செய்ய முடியுமா? செய்யுங்கள். நீங்கள் ஒரு முறை செய்யும் தானம், பல மடங்கு பெருகுவதாக ஐதீகம்.

    தாமிரபரணி புஷ்கரம் விழாவில் கலந்து கொள்ள தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் பயன்பெறும் வகையில் உங்கள் தானம் இருக்கலாம்.

    செருப்பு, குடை போன்றவை கொடுக்கலாம். ஆடைகள் வாங்கிக் கொடுக்கலாம். பழம், பிஸ்கட், தண்ணீர் வாங்கிக் கொடுக்கலாம். புஷ்கரம் நாட்களில் பெரும்பாலானவர்கள் தாமிரபரணி கரையோரங்களில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உள்ளனர். தானம் கொடுப்பவர்கள், அதற்குரிய பொருட்களை வாங்கி தானமாக கொடுக்கலாம். பித்ருக்களின் ஆசி உங்களுக்கு நிரம்பக் கிடைக்கும்.

    12-ந்தேதி முதல் 23-ந் தேதி வரை ஒவ்வொரு நாளும் என்னென்ன தானம் செய்யலாம் என்று பொதுவாக விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.

    அதன் விபரம் வருமாறு:-12.10.18 (முதல் நாள்) தங்கம், வெள்ளி, தானியங்கள், பூமி ஆகியவற்றை தானமாக வழங்கலாம். 13.10.18 (2-ம் நாள்) வஸ்திரம் (துணி), உப்பு, மாடு, ரத்தினம். 14.10.18 (3-ம் நாள்) வெல்லம், காய்கறிகள், குதிரை, பழங்கள், வண்டி. 15.10.18 (4-ம் நாள்) நெய், எண்ணெய், தேன், பால். 16.10.18 (5-ம் நாள்) எருமை, காளை. 17.10.18 (6-ம் நாள்) கற்பூரம், கஸ்தூரி, சந்தனம், வாசனை திரவியங்கள். 18.10.18 (7-ம் நாள்) வீடு, மனை, நாற்காலி, கிழங்கு, இஞ்சி. 19.10.18 (8-ம் நாள்) சந்தனக்கட்டை, பூக்கள். 20.10.18 (9-ம் நாள்) மஞ்சள். 21.10.18 (10-ம் நாள்) புத்தக தானம். 22.10.18 (11-ம் நாள்) யானை, குதிரை. 23.10.18 (12-ம் நாள்) எள், ஷோடசதானங்கள் ஆகியவற்றை வழங்கலாம்.

    புண்ணிய தீர்த்தத்தில் நீராடி திதி கொடுத்து முடித்த பிறகு ஏழைகளுக்கு உணவு படைத்து உபசாரம் செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது.
    பரம ஏழைகளுக்கு அளிக்கும் தானம் அசுவமேத யாகத்திற்குச் சமமான பலனைத் தரும். நாம் செய்யும் தானமே நமக்கு பரம நண்பனாம். இந்த உலகத்தில் அன்னத்தை விட அதிகமான மகிமை பொருந்திய பொருள் வேறு எதுவுமே கிடையாது.

    சகல லோகமும் அன்னத்தின் மேல் தான் நிலை நிற்கின்றன. அதனால் தான் உயிர் வாழ்கின்றன. அதன் மகிமைக்கு அளவே கிடையாது. அன்னத்தை விட சிறந்ததொரு தானமும் உலகத்தில் கிடையவே கிடையாது. அன்னதானம் செய்பவன் ஞானியாக இருந்தாலும் மூடனாக இருந்தாலும், பக்தியுடையவனாக இருந்தாலும், பகவானைப் பற்றி நினைக்காதவனாகவே இருந்தாலும் அவன் சகல பாவங்களிலிருந்தும் விமோசனம் பெறுகின்றான். ஏழைகளுக்கு சேலை, வேஷ்டி, துண்டு, ஆயத்த ஆடைகள் என ஆடைகளைத்தானம் செய்வது உயர்ந்த பலனைத்தரும்.

    விளக்குதானம் செய்யலாம். இது பிரம் மஹத்தி தோஷம் முதலான தோஷங்களைப்போக்கும். குற்றங்குறைகள் இல்லாத நல்ல பசுவைத் தானம் செய்வது பரம புண்ணியத்தைத்தரும். வெண்ணிறம், பொன்னிறம், வெளுப்பும், மஞ்சளும் கலந்த நிறம் உள்ள பசுக்களைத் தானம் செய்ய வேண் டும். கறுப்பு நிற பசுக்களை தானம் செய்யக் கூடாது. கொம்பு வளைந்த பசுக்களையும் தானம் செய்யக் கூடாது.
    ×