search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Punjab Singer"

    • ஒரே மகனான சித்து மூஸ்வாலாவின் திடீர் மரணம் அவர்களை வெகுவாக பாதித்தது.
    • செயற்கை கருவுறுதல் முறையில் அவர் கருவுற்றிருக்கிறார்.

    புகழ்பெற்ற பஞ்சாப் பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ் வாலா, அங்குள்ள மன்சா மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு மே 29-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். கனடாவைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவர் கோல்டி பிரார் இந்த கொலை சம்பவத்துக்கு பொறுப்பேற்றாா். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    58 வயதான சரண் சிங்கின் ஒரே மகனான சித்து மூஸ்வாலாவின் திடீர் மரணம் அவர்களை வெகுவாக பாதித்தது. ஆதலால் தனது மகனின் நினைவாக ஒரு குழந்தை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் செயற்கை கருவுறுதல் முறையில் அவர் கருவுற்றிருக்கிறார் என்று கூறப்பட்டது.

    மேலும் அவர் மார்ச் மாதம் அவர் குழந்தையை பெற்றெடுப்பார் எனவும் கூறப்பட்டது.

    இந்நிலையில், பாடகர் சித்து மூஸ் வாலாவிவன் பெற்றோருக்கு 2வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.  

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 58 வயதான சரண் சிங்கின் ஒரே மகனான சித்து மூஸ்வாலாவின் திடீர் மரணம் அவர்களை வெகுவாக பாதித்துள்ளது.
    • தனது மகனின் நினைவாக ஒரு குழந்தை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் செயற்கை கருவுறுதல் முறையில் அவர் கருவுற்றிருக்கிறார்

    மறைந்த பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவின் அம்மா சரண் சிங் கர்ப்பமாக உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. செயற்கை கருத்தரித்தல் முறையில் அவர் கர்ப்பமாகியுள்ளார். வரும் மார்ச் மாதம் அவர் குழந்தையை பெற்றெடுப்பார் என்று சொல்லப்படுகிறது.

    புகழ்பெற்ற பஞ்சாப் பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ் வாலா, அங்குள்ள மன்சா மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு மே 29-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். கனடாவைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவர் கோல்டி பிரார் இந்த கொலை சம்பவத்துக்கு பொறுப்பேற்றாா். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், 58 வயதான சரண் சிங்கின் ஒரே மகனான சித்து மூஸ்வாலாவின் திடீர் மரணம் அவர்களை வெகுவாக பாதித்துள்ளது. ஆதலால் தனது மகனின் நினைவாக ஒரு குழந்தை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் செயற்கை கருவுறுதல் முறையில் அவர் கருவுற்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

    ஆம் ஆத்மியின் மலிவான அரசியல் காரணமாக பஞ்சாப் மக்கள் ஒரு மகத்தான பாடகரை இழந்து விட்டனர் என பஞ்சாப் பா.ஜ.க. தலைவர் தெரிவித்தார்.
    சண்டிகர்:

    பஞ்சாப் மாநில அரசு சிக்கன நடவடிக்கையாக காங்கிரசைச் சேர்ந்த பாடகர் சித்து மூஸ்வாலா உள்பட 434 முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பை சமீபத்தில் நீக்கியது. பாதுகாப்பு நீக்கப்பட்ட அடுத்த தினத்தில் பாடகர் சித்து மூஸ்வாலா துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

    இந்நிலையில், மீண்டும் விஐபிகளுக்கு பாதுகாப்பு அளிக்க மாநில அரசு முடிவு செய்து உள்ளது. வரும் 7-ம் தேதி முதல் 434 விஐபிகளுக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
    சித்து மூஸ்வாலா கொலையில் தொடர்புடையவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
    சண்டிகர்:

    பஞ்சாப் மாநில பிரபல பாடகர்  சித்து மூஸ்வாலா கடந்த டிசம்பர் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சட்டசபைத் தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு அவர் தோல்வி அடைந்தார். பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2 நாட்களுக்கு முன்பு மூஸ்வாலா உள்பட 424 பேருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. 

    இந்நிலையில் நேற்று மான்சா மாவட்டத்தில் அவர் காரில் சென்ற போது சுற்றி வளைத்த மர்ம கும்பல் துப்பாக்கியால் பலமுறை சுட்டது. இதில் அந்த காரில் இருந்த மூவர் படுகாயம் அடைந்த நிலையில் சித்து மூஸ்வாலா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார். 

    இந்த கொலைக்கு கனடாவைச் சேர்ந்த கேங்ஸ்டர் கும்பல் மற்றும் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ள காவல்துறை டிஜிபி வி.கே.பாவ்ரா, தெரிவித்துள்ளார். 

    சித்து மூஸ்வாலாவுக்கு 4 கமாண்டோக்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்ததாகவும், அதில் 2 கமாண்டோக்கள் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதாகவும், அவர் கூறியுள்ளார்.  

    நேற்று காரில் அவர் பயணம் செய்தபோது மீதம் இருந்த 2 கமாண்டோக்களை உடன் அழைத்துச் செல்லவில்லை என்றும் டிஜிபி வி.கே.பாவ்ரா குறிப்பிட்டுள்ளார்.

    இதனிடையே, பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி செய்யும் தார்மீக அதிகாரத்தை இழந்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, ஆம்ஆத்மி ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.

    நம்பிக்கைக்குரிய காங்கிரஸ் தலைவரும், திறமையான கலைஞருமான சித்து மூஸ்வாலா கொலையால் தாம் மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்து உள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.  

    உலகம் முழுவதும் உள்ள அவரது அன்புக்குரியவர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கல்கள் என்றும் ராகுல் கூறியுள்ளார்.

    இந்நிலையில், சித்து மூஸ்வாலா கொலையில் தொடர்புடையே குற்றவாளிகள்  மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும், ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.


    ×