search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மறைந்த பாடகர் சித்து மூஸ் வாலாவின் பெற்றோருக்கு ஆண் குழந்தை பிறந்தது
    X

    மறைந்த பாடகர் சித்து மூஸ் வாலாவின் பெற்றோருக்கு ஆண் குழந்தை பிறந்தது

    • ஒரே மகனான சித்து மூஸ்வாலாவின் திடீர் மரணம் அவர்களை வெகுவாக பாதித்தது.
    • செயற்கை கருவுறுதல் முறையில் அவர் கருவுற்றிருக்கிறார்.

    புகழ்பெற்ற பஞ்சாப் பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ் வாலா, அங்குள்ள மன்சா மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு மே 29-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். கனடாவைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவர் கோல்டி பிரார் இந்த கொலை சம்பவத்துக்கு பொறுப்பேற்றாா். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    58 வயதான சரண் சிங்கின் ஒரே மகனான சித்து மூஸ்வாலாவின் திடீர் மரணம் அவர்களை வெகுவாக பாதித்தது. ஆதலால் தனது மகனின் நினைவாக ஒரு குழந்தை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் செயற்கை கருவுறுதல் முறையில் அவர் கருவுற்றிருக்கிறார் என்று கூறப்பட்டது.

    மேலும் அவர் மார்ச் மாதம் அவர் குழந்தையை பெற்றெடுப்பார் எனவும் கூறப்பட்டது.

    இந்நிலையில், பாடகர் சித்து மூஸ் வாலாவிவன் பெற்றோருக்கு 2வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

    Next Story
    ×