search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sidhu Moosewala"

    ஆம் ஆத்மியின் மலிவான அரசியல் காரணமாக பஞ்சாப் மக்கள் ஒரு மகத்தான பாடகரை இழந்து விட்டனர் என பஞ்சாப் பா.ஜ.க. தலைவர் தெரிவித்தார்.
    சண்டிகர்:

    பஞ்சாப் மாநில அரசு சிக்கன நடவடிக்கையாக காங்கிரசைச் சேர்ந்த பாடகர் சித்து மூஸ்வாலா உள்பட 434 முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பை சமீபத்தில் நீக்கியது. பாதுகாப்பு நீக்கப்பட்ட அடுத்த தினத்தில் பாடகர் சித்து மூஸ்வாலா துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

    இந்நிலையில், மீண்டும் விஐபிகளுக்கு பாதுகாப்பு அளிக்க மாநில அரசு முடிவு செய்து உள்ளது. வரும் 7-ம் தேதி முதல் 434 விஐபிகளுக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
    பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
    சண்டிகர்:

    பஞ்சாப் மாநில பிரபல பாடகரும் காங்கிரஸ் பிரமுகருமான சித்து மூஸ்வாலா நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பை ஆம் ஆத்மி அரசு திரும்ப பெற்ற மறுநாள் அவரை கொலை செய்துள்ளனர்.  இச்சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

    பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி செய்யும் தார்மீக அதிகாரத்தை இழந்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.

    இந்நிலையில், பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா மரணம் குறித்து சிபிஐ மற்றும் தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என அவரது தந்தை பால்கவுர் சிங் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார்.

    அவரது கோரிக்கையை முதல்வர் பகந்த் மான் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பாடகல் சித்து மூஸ் வாலாவின் பாதுகாப்பை குறைப்பது தொடர்பான முடிவு குறித்து விசாரணை நடத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விசாரணைக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என கூறி உள்ள அவர், குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என்றார்.
    சித்து மூஸ்வாலா கொலையில் தொடர்புடையவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
    சண்டிகர்:

    பஞ்சாப் மாநில பிரபல பாடகர்  சித்து மூஸ்வாலா கடந்த டிசம்பர் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சட்டசபைத் தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு அவர் தோல்வி அடைந்தார். பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2 நாட்களுக்கு முன்பு மூஸ்வாலா உள்பட 424 பேருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. 

    இந்நிலையில் நேற்று மான்சா மாவட்டத்தில் அவர் காரில் சென்ற போது சுற்றி வளைத்த மர்ம கும்பல் துப்பாக்கியால் பலமுறை சுட்டது. இதில் அந்த காரில் இருந்த மூவர் படுகாயம் அடைந்த நிலையில் சித்து மூஸ்வாலா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார். 

    இந்த கொலைக்கு கனடாவைச் சேர்ந்த கேங்ஸ்டர் கும்பல் மற்றும் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ள காவல்துறை டிஜிபி வி.கே.பாவ்ரா, தெரிவித்துள்ளார். 

    சித்து மூஸ்வாலாவுக்கு 4 கமாண்டோக்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்ததாகவும், அதில் 2 கமாண்டோக்கள் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதாகவும், அவர் கூறியுள்ளார்.  

    நேற்று காரில் அவர் பயணம் செய்தபோது மீதம் இருந்த 2 கமாண்டோக்களை உடன் அழைத்துச் செல்லவில்லை என்றும் டிஜிபி வி.கே.பாவ்ரா குறிப்பிட்டுள்ளார்.

    இதனிடையே, பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி செய்யும் தார்மீக அதிகாரத்தை இழந்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, ஆம்ஆத்மி ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.

    நம்பிக்கைக்குரிய காங்கிரஸ் தலைவரும், திறமையான கலைஞருமான சித்து மூஸ்வாலா கொலையால் தாம் மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்து உள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.  

    உலகம் முழுவதும் உள்ள அவரது அன்புக்குரியவர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கல்கள் என்றும் ராகுல் கூறியுள்ளார்.

    இந்நிலையில், சித்து மூஸ்வாலா கொலையில் தொடர்புடையே குற்றவாளிகள்  மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும், ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.


    பாடகர் சித்து மூஸ்வாலாவுக்கு அரசு வழங்கிய பாதுகாப்பு நேற்று வாபஸ் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தில் பிரபல பாடகராக இருந்து வருபவர் சித்து மூஸ்வாலா. காங்கிரஸ் கட்சியில் கடந்த டிசம்பர் மாதம் இணைந்தார்.

    இந்நிலையில், மான்சா மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது சித்து மூஸ்வாலா மர்ம கும்பலால் சுடப்பட்டார். இதில் அவரும், அவருடன் இருந்த 3பேரும் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியில் சித்து மூஸ்வாலா இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    பட்டப் பகலில் பிரபல பாடகர் சுட்டுக் கொல்லப்பட்டது பஞ்சாப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×