மீண்டும் பிறந்த சித்து மூஸ்வாலா.. படுகொலையான பஞ்சாப் பாடகரின் கியூட் பிரதர் - முதல் புகைப்படம்!

28 வயதான சித்து மூஸ்வாலா புகழ்பெற்ற பஞ்சாப் பாடகரும் காங்கிரஸ் பிரமுகரும் ஆவார்.சித்து மூஸ்வாலாவின் தாயார் செயற்கை கருவுறுதல் முறையில் கருத்தரித்தார்.
மீண்டும் பிறந்த சித்து மூஸ்வாலா.. படுகொலையான பஞ்சாப் பாடகரின்  கியூட் பிரதர் - முதல் புகைப்படம்!
Published on

புகழ்பெற்ற பஞ்சாப் பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ் வாலா [28 வயது], அங்குள்ள மன்சா மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு மே 29-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். லாரன்ஸ் பிஸ்னோய் கும்பலுடன் தொடர்புடைய கனடாவைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவர் கோல்டி பிரார் இந்த கொலை சம்பவத்துக்கு பொறுப்பேற்றாா். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

58 வயதான சரண் சிங்கின் ஒரே மகனான சித்து மூஸ்வாலாவின் திடீர் மரணம் அவர்களை வெகுவாக பாதித்தது. ஆதலால் தனது மகனின் நினைவாக ஒரு குழந்தை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் சித்து மூஸ்வாலாவின் தாயார் செயற்கை கருவுறுதல் முறையில் கருவுற்று கடந்த மார்ச் மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

சித்து மூஸ்வாலாவின் சகோதரனான பிறந்திருக்கும் அந்த ஆண் குழந்தைக்கு சுப்தீப் சிங் சித்து என பெற்றோர் பெயரிட்டிருந்தனர். இந்நிலையில் குழந்தை சுப்தீப் சிங்கின் புடைக்கப்படத்தை பொதுவெளியில் முதல்முறையாக வெளியிட்டு பெற்றோர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

டர்பன் அணிந்த குழந்தை சுப்தீப் சிங் சித்துவை மடியில் வைத்தவாறு பெற்றோர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், முகத்தில் உள்ள குழந்தைமையை தாண்டி, அதில் தெரியும் விலைமதிப்பில்லாத பிரகாசம், நாங்கள் கண்ணீருடன் கடவுளிடம் ஒப்படைத்த எங்களின் பிரியத்துக்குரியவன் மீண்டும் சிறிய உருவத்தில் எங்களுக்கு திரும்பக்கிடைத்ததாக உணர்த்துகிறது என்று அவரது குடும்பம் தெரிவித்துள்ளது. சித்து மூஸ்வாலா தங்களுக்கு மீண்டும் மகனாகப் பிறந்ததாக அவர்கள் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com