search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "programme"

    • மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சி நடைபெற்றது
    • மாவட்ட உதவி திட்ட அலுவலர் பங்கேற்றார்

    பெரம்பலூர்:

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உள்ளடக்கிய கல்வித் திட்டக்கூறின் கீழ் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டது.

    பெரம்பலூர் ரோவர் மேல்நிலை பள்ளியில் வட்டார வளமையம் சார்பில் நடந்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான போட்டியை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தொடங்கிவைத்தார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுப்ரமணியன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவகி, கல்வி ஒருங்கிணைப் பாளர்கள் பாரதிதாசன், சுப்ரமணியன், ஆசிரியர் பயிற்றுநர் ரமேஷ் ஆகியோர் பேசினர். குழு நடனம், திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சு , நடனம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது.

    இதில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சிறப்பாசிரியர்கள் துர்கா, ரூபி, மரகதம் ஆகியோர் முன்னின்று போட்டிகளை நடத்தினர். முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் செல்வராஜ் வரவேற்றார். முடிவில் சிறப்பாசிரியர் துர்கா நன்றி கூறினார்.

    இதே போல் அம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள பகல் நேர பாதுகாப்பு மையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை கயல்விழி தலைமையிலும், ஆசிரியர் பயிற்றுநர் குணசேகரன் முன்னிலையிலும், எசனை அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள பகல் நேர பாதுகாப்பு மையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் தங்கவேல் தலைமையிலும், ஆசிரியர் பயிற்றுநர்கள் கலைவாணன், ஜனனி ஆகியோர் முன்னிலையி லும்,பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள பகல் நேர பாதுகாப்பு மையத்தில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுப்ரமணியன் தலைமையிலும்,

    பள்ளியின் தலைமையாசிரியை திருமலைச்செல்வி முன்னிலையிலும் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது, ஏற்பாடுகளை சிறப்பாசிரியர்கள் ராணிபரிமளா, மகேஸ்வரி மற்றும் தனவேல் ஆகியோர் செய்திருந்தனர்.

    • வீர வணக்க நிகழ்ச்சி நடந்தது
    • விசிக தெற்கு ஒன்றிய சார்பில்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் விசிக தெற்கு ஒன்றிய சார்பாக மாவீரர் தினத்தை முன்னிட்டு வீர வணக்க நிகழ்ச்சி மற்றும் ஒன்றிய கலந்தாய் கூட்டம் வானதிரையின் பட்டினம் கிராமத்தில் ஒன்றிய செயலாளர் முத்து கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக மாவட்ட அமைப்பாளர் செ.க. குமார் வரவேற்று பேசினார். இந்த கூட்டத்திற்கு முன்னிலையாளர்களாக மஞ்சுளா இளங்கோவன், மகளிர் அணி ஒன்றிய செயலாளர் பூமா கொளஞ்சியப்பன், ஒன்றிய துணை செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர் சி. பி. ராஜா கொடியேற்றி சிறப்புரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் லோகநாதன் தலைமையில் சட்ட நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட விசிகவினர் கலந்து கொண்டனர்.

    • அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது
    • தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில்

    கரூர்:

    கரூர் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் "அரசியலமைப்பு தினம்" உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டினை இறையாண்மையும், சமநலச்சமுதாயமும், சமயச்சார்பின்மையும், மக்களாட்சி முறை யையும் பேணி பாதுகாக்க வேண்டும் என உறுதி ெமாழி எடுத்துக் கொண்டனர்.

    மேற்படி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் செயல் இயக்குனர் எஸ்விஆர் கிருஷ்ணன் (இயக்கம்), பொது மேலாளர்கள் நாகராஜன், (சக்தி), கலைச்செல்வன் (மனித வளம்) மற்றும் துணை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர்தலைமையில் காகித நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு அரசமைப்பு தினம் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

    • நெகிழி ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
    • ஒருமுறை பயன்படுத்தப்படும்

    திருச்சி

    திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் ஆணைக்கிணங்க காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியினை முற்றிலும் நெகிழியில்லா பேரூராட்சியாக உருவாக்கும் பொருட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புவி வெப்பமயமாதல் ஆகியவற்றைத் தடுக்க, மறு சுழற்சிக்கு வழியில்லாத ஒருமுறைபய ன்படுத்தப்படும் நெகிழி ஒழிப்புத் திட்டத்தினை முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி ந.தியாகராஜன் துவக்கி வைத்தார்.

    மேலும் பொதுமக்களிடம் நெகிழி பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதனை தவிர்த்து மஞ்சள் பையினை பயன்படுத்துவது குறித்தும் விளக்கி கூறினார். பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பேரூராட்சி அலுவலகத்திலிருந்து பேருந்து நிலையம் வரை நெகிழியினால் ஏற்படும் தீமைகள், அதனை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்துவது குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    சுவர்களில் ஸ்டிக்கர் ஒட்டியும், விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது. இப்பேரணியில் ஆட்டோ மூலம் நெகிழி பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களான உணவு பொருட்கள் கட்ட பயன்படுத்தப்படும் நெகிழித்தாள் உறை, உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், தெர்மாகோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட தட்டுகள், பிளாஸ்டிக், மெழுகு பூசப்பட்ட கப்புகள்,

    பிளாஸ்டிக் குவளைகள், நீர் நிரப்ப பயன்படும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் உறுஞ்சு குழாய்கள், பிளாஸ்டிக் பைகள் (எந்த அளவிலும், எந்த தடிமனாகும் இருப்பினும்), பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், பிளாஸ்டிக் கொடிகள், நெய்யாத பிளாஸ்டிக் பைகள் ஆகியவை தவிர்த்து மஞ்சள் பையினை கையில் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

    பொதுமக்களை துணிப்பைகளை பயன்படுத்த ஊக்குவிப்பதற்கு பொதுமக்களுக்கு வழங்குவதற்காக 25,000 துணிப்பைகள் வழங்க வேண்டி இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரோட்டேரியன் பப்ளிக் இமேஜ் டிஸ்பிளே சேர்மன் டாக்டர்.கே.சீனிவாசன் இடம் செயல் அலுவலரால் கோரப்பட்டது. இந்நிகழ்ச்சியில்

    காட்டுப்புத்தூர் பேரூராட்சி செயல்அலுவலர் ச.சாகுல் அமீது தலைமை தாங்கினார்.

    காட்டுப்புத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் சு.சங்கீதாசுரேஷ் மற்றும்  துணைத்தலைவர் சி.சுதாசிவசெல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தினார். பேரூராட்சி

    மன்ற உறுப்பினர்கள் சிவஜோதி, பானுமதி, அன்னபூரணி, காயத்திரி, கருணாகரன்,மணிவேல், விஜயா, ராஜ்குமார், தொட்டியம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர்

    பி.தங்கவேல், காட்டுப்புத்தூர் பேரூர் கழக செயலாளர் கே.டி.செல்வராஜ்,தொட்டியம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கிருஷ்ணவேணி, பேரூராட்சி முன்னாள்துணைத்தலைவர் சிவசெல்வராஜ், தி.மு.க. கட்சி நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன்,ராம்குமார், வேல்முருகன், துவகுலசு மற்றும் நிர்வாகிகள், பேரூராட்சி அலுவலகபணியாளர்கள், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள்கலந்துகொண்டனர்.

    • சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது

    கரூர்

    கரூர் பசுபதிபாளையம் நகர்மன்ற நடுநிலைப்பள்ளியில் கடந்த 19-ந்தேதி முதல் வருகிற 25-ந்தேதி வரை கரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு முகாமில் நேற்று பள்ளி மாணவிகளுக்கான சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை விஜயராணி தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் உமா மகேஸ்வரி வரவேற்றார். பசுபதிபாளையம் நகர்மன்ற நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மதன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான பாக்கியம் கலந்து கொண்டு, மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு குறித்து சிறப்புரையாற்றினார். முடிவில் உதவி திட்ட அலுவலர் சத்யபாமா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்."

    • ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வடபழனி என்றழைக்கப்படும் தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா கடந்த 27-ந் தேதி தொடங்கியது.நேற்று கந்தசஷ்டி விழாவினையொட்டி கோவிலில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, தண்டாயுதபாணி சுவாமிகளுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு நறுமண பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது கோவில் முன்பு உள்ள வீதியில் சுப்பிரமணியர் சூரனை வதம் செய்தார்.

    தொடர்ந்து மலைக்கோவிலில் இருந்து சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை ஆகிய சுவாமிகள் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு வந்தடைந்தனர்.

    அதனை தொடர்ந்து ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி கோவில் கொடி மரம் அருகே சுப்பிரமணியர், வள்ளி,தெய்வானை ஆகிய சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    இதில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்தனூர், பெரகம்பி, மாவலிங்கை, பொம்மனப்பாடி, சத்திரமனை, வேலூர், குரூர், நாட்டார்மங்கலம், சீதேவிமங்கலம், பாடாலூர், இரூர், ஆலத்தூர்கேட், நாரணமங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஹேமாவதி, தக்கார் வேல்முருகன், எழுத்தர் தண்டபாணி தேசிங்கன், கந்தசஷ்டி விழாக்குழுத் தலைவர்,செ யலாளர்,பொருளாளர், உள்ளிட்ட விழாக்குழுவினர் செய்திருந்தனர். மேலும் இன்று (செவ்வாய்க்கிழமை) விடையாற்றி உற்சவத்துடன் கந்தசஷ்டி பெருவிழா நிறைவு பெற்றது.

    • வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
    • சாலை விதிமுறைகள் குறித்து

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில், மாவட்ட துணை கண்காணிப்பாளர் கலை கதிரவன் அறிவுறுத்த–லின் படி,

    உடையார்பாளையம் உட்பட்ட பகுதிகளில் அரசு அறிவித்துள்ள சாலை விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கான புதிய உயர்த்தப்பட்ட அபராத தொகை மற்றும் சாலை விதிமுறைகள் குறித்து உடையார்பாளை–யம் காவல் உதவிஆய்வாளர் திருவேங்கடம் தலைமையி–லான போலீசார் மற்றும் பயிற்சி உதவி ஆய்வாளர் பெனடிக்

    சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி, விழிப்பு–ணர்வு நிகழ்ச்சியை நடத்தி–னர்.

    இதில் 50 க்கு மேற்பட்ட வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர்.

    • பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடந்தது
    • அரசுப் பள்ளியில் நடந்தது

    பெரம்பலூா் :

    பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி உத்தரவின்படி, மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் இரா. பாண்டியன் தலைமையில், நத்தக்காடு கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளிடம் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    காவல் ஆய்வாளா் விஜயலெட்சுமி, சிறப்பு உதவி ஆய்வாளா் மருதமுத்து ஆகியோா், போதைப்பொருள்கள் உபயோகிப்பதன் விளைவுகள், அதன் பாதிப்புகள், போதைப் பொருளுக்கு அடிமையாவதால் அவா்களைச் சாா்ந்துள்ளவா்கள் எந்தெந்த வழிகளில் பாதிக்கப்படுகின்றனா் என்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திய காவல் துறையினா், காவல் நிலையங்களில் செயல்படும் பெண்கள் உதவி மைய இலவச தொலைபேசி எண் 181, குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண், பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 குறித்தும், காவல் உதவி செயலி குறித்தும் விளக்கம் அளித்தனா். 

    • திருமங்கலம் அருகே கூட்டுறவு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • மத்திய கூட்டுறவு வங்கி கள மேலாளர் கதிரவன் திட்ட உரையாற்றினார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைவர் முத்துராஜா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அன்னக்கொடி முன்னிலை வகித்தார். கூட்டுறவு சார்பதிவாளர் சீனியப்பா சிறப்புரையாற்றினார். மத்திய கூட்டுறவு வங்கி கள மேலாளர் கதிரவன் திட்ட உரையாற்றினார்.

    இதில் 46 பயனாளிகளுக்கு ஆடு, மாடு பராமரிப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்டிக்கடை மற்றும் விவசாய கடன் என மொத்தம் ரூ.5 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டது. சங்க செயலாளர் பெருமாள்சாமி வரவேற்றார். எழுத்தர் பால்பாண்டி நன்றி கூறினார்.

    • பி.எஸ்.ஆர்.கல்லூரியில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்தும் நடத்தப்பட்டது.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி, வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்த நிகழ்ச்சி நடந்தது.

    கல்லூரி தாலாளர் சோலை சாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேஷ்வரி-அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, வெம்பக்கோட்டை வட்டாட்சியர் ரங்கராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், துணை தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் டீன் மாரிச்சாமி மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதற்காக ஏற்பாடுகளை பேராசிரியர் துர்கை ஈஸ்வரன் செய்திருந்தார். பேராசிரியை ராஜலட்சுமி நன்றி கூறினார்.

    • பிளஸ்-2 மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் தாமு பங்கேற்றார்.
    • மாணவ-மாணவிகள் சமூக வலைதளங்களில் நேரத்தை வீணடிக்காமல் படிப்பில் அக்கறை காட்ட வேண்டும்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் சார்பில் பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி ''எதிர்காலம்? மேற்படிப்பிற்கான பயணம்...'' என்ற தலைப்பில் கல்லூரி கலையரங்கத்தில் நடந்தது. பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம் வரவேற்றார். டீன் மாரிசாமி உள்பட பலர் பேசினர்.

    சிறப்பு விருந்தினராக சினிமா நடிகரும், பலகுரல் கலைஞர் மற்றும் அப்துல்கலாமின் சீடருமான தாமு கலந்து கொண்டார். இவர் 2021-ம் ஆண்டிற்கான சிறந்த கல்வி சேவைக்கான தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    விழாவில் நடிகர் தாமு பேசியதாவது:-

    முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசிய இதே கல்லூரி மேடையில் பேசுவதை பெருமையாக கருதுகிறேன். மாணவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த லட்சியத்தை விதைக்க வேண்டும். அந்த லட்சியத்தை அடைவதற்கான அறிவை தேட ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது ஆகும்.

    ஆசிரியர்கள் 2-வது பெற்றோர்கள். அவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். மாணவ-மாணவிகள் சமூக வலைதளங்களில் நேரத்தை வீணடிக்காமல் படிப்பில் அக்கறை காட்ட வேண்டும். ஆன்லைன் கேம்ஸ், வீடியோ கேம்ஸ் போன்றவைகளில் கவனம் செலுத்தக்கூடாது.

    உலக அரங்கில் இந்தியாவை வல்லரசாக்கும் அதீத சக்தி இன்றைய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கையில்தான் உள்ளது. ''கனவு காணுங்கள்'' என்ற அப்துல்கலாமின் வார்த்தைகளை நனவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பி.எஸ்.ஆர்.ஆர். பொறியியல் கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியன், பி.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியில் கல்லூரி முதல்வர் சுந்தரராஜ், கல்வி இயக்குநர் கோபால்சாமி, பி.எஸ்.ஆர். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் திருப்பரங்கிரிராஜன், பி.எஸ்.ஆர். கல்வியல் கல்லூரி முதல்வர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், அனைத்து கல்லூரிகளின் பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர். விழாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். சயின்ஸ் மற்றும் ஹூமானிட்டிஸ் துறைத்தலைவர் ஸ்ரீராம் நன்றி கூறினார்.

    • தொழில்நெறி விழிப்புணர்வு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது
    • கலெக்டர் ரமண சரஸ்வதி தகவல்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் அனுசரித்தல் தொடர்பாக அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தின் வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் 11.07.2022 முதல் 15.07.2022 வரை தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் தொடர்பாக பல்வேறு சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.

    11.07.2022 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாலை 2.30 மணியளவில் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடக்கிறது.

    12.07.2022 அன்று மகளிருக்கான தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காலை 11.00 மணியளவில் அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 13.07.2022 அன்று மூன்றாம் பாலினத்தவருக்கான தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்திலும் நடைபெறுகிறது.

    14.07.2022 அன்று அமைப்புசாரா உடலுழைப்புத் தொழிலாளர்களது முன்கற்றல் திறனை அங்கீகரித்தல் மற்றும் பயிற்சியளித்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்திலும், 15.07.2022 அன்று அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காலை 11.00 மணியளவில் அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திலும் நடைபெறவுள்ளது.

    எனவே, மேற்கண்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×